search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி கடன்களை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும்-கலெக்டர்
    X

    வங்கியாளர்கள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு மானிய தொகைகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    கல்வி கடன்களை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும்-கலெக்டர்

    • கல்வி கடன்களை தாமதமின்றி உடனே வழங்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
    • வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில், அனைத்து வங்கியாளர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தாட்கோ, மாவட்ட தொழில்மையம், மகளிர் திட்டம் ஆகிய துறை கள் மூலம் பெறப்பட்ட கடன் விண்ணப்பங்களை முறையாக பரிசீலனை செய்து காலதாமதமின்றி கடன் வழங்க வேண்டும் என்றும், கல்விக்கடன் விண்ணப்பங்களை நிராகரிக்காமல் எந்த வித தாமதமின்றி பரிசீலனை செய்து கடன்களை வழங்கிட வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இதில் மாவட்ட தாட்கோ அலுவலகம் மூலம் 7 பயனா ளிகளுக்கு பால் பண்ணை தொழில் புரிவதற்கும், 4 பய னாளிகளுக்கு வெள்ளாடு கள் வாங்குவதற்கும், 7 பய னாளிகளுக்கு டிராக்டர் வாங்குவதற்கும் என மொத்தம் 18 பயனாளி களுக்கு ரூ.21.8 லட்சம் மதிப்பில் சுய தொழில் புரி வதற்கான மானிய தொகைக்கான ஆணை களை கலெக்டர் வழங்கி னார்.

    கூட்டத்தில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×