திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறாது-கலெக்டர் தகவல்

வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது.பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறாது-கலெக்டர் தகவல்
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம், ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் கடந்த 25-ந் தேதி தொடங்கி வரும் 31-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது.

அதன்படி கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, ஈரோடு மற்றும் நம்பியூர் ஆகிய வட்டங்களில் கடந்த 25-ந் தேதி முதல் வரும் 29-ந் தேதி வரையிலும், தாளவாடி வட்டத்தில் 25-ந் தேதி அன்றும், அந்தியூர் வட்டத்தில் கடந்த 25-ந் தேதி முதல் வரும் 30-ந் தேதி வரையிலும், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் கடந்த 25-ந் தேதி முதல் வரும் 31-ந் தேதி வரையிலும் (சனி, ஞாயிறு நாட்கள் நீங்கலாக) அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

அதனால் வரும் 29-ந் தேதி (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com