வேலைவாய்ப்பு திட்டத்தில் மானியத் தொகை மற்றும் வயது வரம்பு உயர்வு: மாவட்ட கலெக்டர் தகவல்

வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 25 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.3.75 லட்ச மாக உயர்த்தப்பட்டுள்ளது
வேலைவாய்ப்பு திட்டத்தில்  மானியத் தொகை மற்றும் வயது வரம்பு உயர்வு: மாவட்ட கலெக்டர் தகவல்
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வேலையற்ற இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது, தமிழக அரசினால் கடன், மானியம் மற்றும் வயது வரம்பு உயர்த்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் வியாபார சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு அதிகபட்சம் ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, மாநில அரசால் 25 சதவீத மானியம் அதிகபட்ச மாக ரூ.3.75 லட்ச மாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com