search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திங்கட்கிழமை"

    • 108 சுற்றுக்கள் அரசமரத்தை அதிகாலையில் வலம் வருவது நல்லது.
    • மரத்தில் இருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்தி மிகுந்திருக்கும்.

    அமாவாசை திதியும் திங்கட்கிழமையும் சேர்ந்து வரும் நாளை அமாசோம வாரம் என்கிறது சாஸ்திரம். அந்த நாளில் அரசமரத்தை வழிபட்டு வலம் வருவது நல்ல அதிர்வுகளை உண்டாக்கும் என்று விவரிக்கின்றன ஞானநூல்கள். இதையே அஸ்வத்த பிரதட்சணம் என்கிறார்கள்.

    அமாவாசை நாளில் 108 சுற்றுக்கள் அரசமரத்தை அதிகாலை வேளையில் வலம் வரும்போது, அந்த மரத்திலிருந்து வெளியாகும் பிராண வாயுவில் சக்தி மிகுந்திருக்கும். எனவேதான், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காலை வேளையில் நீராடிவிட்டு ஈர ஆடையுடன் அரசமரத்தை வலம் வந்தால், கர்ப்பக் கோளாறுகள் நீங்கி குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், சந்திர பகவானுக்கு உரிய திங்கட்கிழமையும் சேர்ந்த நாளில் அதிகாலையில் அரசமரத்தை வழிபட்டு, மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணு ரூபினே அக்ரத: சிவ ரூபாய விருக்ஷ ராஜயதே நம: என்ற ஸ்லோகத்தைச் சொல்லி 108 முறை வலம் வரவேண்டும்.

    • திங்கள்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமான தினமாகும்.
    • சிவபெருமான் மனம் குளிர்ந்து நமக்கருள்வான் என்பது நம்பிக்கை.

    தீப வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் பூஜித்து வணங்குகின்ற மாதம் கார்த்திகை மாதம். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கார்த்திகை மாதத்தில், சோமவாரம் எனப்படும் திங்கள்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமான தினமாகும்.

    திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும். சந்திர பகவான் "மனோகாரகர்' ஆவார். மனதில் எழும் எண்ணங்களுக்கு இவரே காரண கர்த்தாவாக இருக்கிறார்.

    சந்திரனைப் பிறையென சூடிக் கொண்டிருக்கும் ஈசனுக்கு பல சிவாலயங்களில், கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

    சந்திரனுக்கு "சோமன்' என்ற பெயரும் உண்டு. அதனால் தான் சிவனுக்கு சோமநாதன், சோமேஸ்வரர், சந்திர சூடேஸ்வரர், சந்திர சேகரர் என்றெல்லாம் திருநாமங்கள் அமைந்துள்ளன.

    எட்டுவகை சங்குகள்:

    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது வெளிவந்த பதினாறு வகையான தெய்வீகப் பொருள்களில் வலம்புரி சங்கும் ஒன்று என்கிறது புராணம். இந்த சங்கே தெய்வ ஆராதனைகளில் ஒலி எழுப்பப் பயன்படுத்தப்படுகிறது. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரி சங்கு என எட்டுவகை சங்குகள் கடலில் உற்பத்தி ஆவதாகவும்,10 ஒவ்வொரு தெய்வமும் அவைகளுக்குரிய சங்குகளைக் கொண்டிருப்பதாகவும் வைகானஸ ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.

    பெரும்பாலான சங்குகளில் அதன் சுழற்சி இடப்புறம் நோக்கிக் காணப்படும். இதனை இடம்புரி சங்கு என்று கூறுவர். அபூர்வமாக சில சங்குகளில் அது வலமாக இருக்கும். அத்தகைய சங்குகளை வலம்புரி சங்கு என்பார்கள். பூஜைக்கு உகந்ததாக வலம்புரி சங்கே பெருமை பெற்றது. அந்த சங்கினால் பூஜைகள் செய்வது அளவற்ற பலன்களைத் தரவல்லது.

    மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் உள்ளது வலம்புரி சங்கு. பஞ்ச பாண்டவர்களில் தருமர் "அனந்த விஜயம்' எனும் ஒளிபொருந்திய சங்கையும், அர்ச்சுனன் "தேவதத்தம்' எனும் தேவசங்கையும், பீமன் "மகாசங்கம்' எனும் பெரிய சங்கையும், நகுலன் "சுகோஷம்' எனும் அதிர்ஷ்ட சங்கையும், சகாதேவன் "மணி புஷ்பகம்' எனும் சூட்சும சங்கையும் தாங்கி இருந்தார்கள் என்று மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சங்கு, நுண் கிருமிகளை அழிக்கும் மருத்துவ குணம் கொண்டது. வெண்மை நிற பால் சங்கை உரைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள கிருமிகள் அழிக்கப்படுவதோடு பல விதமான நோய்களும் குணமாகிறது. மேலும் தீய சக்திகளைத் தடுக்கும் குணம் உள்ளது. இதனால் தான் இன்றும் சங்கை வீட்டு வாசலில் கட்டி தொங்க விடுகின்றனர். குழந்தைகளுக்கு பால் ஊட்டுவதற்கும் சங்கைப் பயன்படுத்தி வந்தனர்.

    சங்கினை காதில் வைத்துக் கொண்டால் ஓம்கார ஒலியைக் கேட்கலாம். ஓம்கார ஸ்வரூபமான சங்கில் நாம் எந்த தேவதா மூர்த்தத்துக்கு அபிஷேகம் செய்கிறோமோ, அந்த தேவதா மூர்த்தம் தனது அருள்நிலையின் பூரண பிரகாசத்தை அடைந்து, பூஜையின் முழுமையான பலன்களை வாரி வழங்கக்கூடிய தன்மையைப் பெறும். இதன் அடிப்படையில்தான் திருக்கோயில்களில் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

    சங்காபிஷேகம் செய்வதில் பல நியமங்கள் இருக்கின்றன. 54, 60, 108 சங்குகள், 1,008 சங்குகள் என்ற எண்ணிக்கைகளில் அபிஷேகம் செய்வார்கள். சங்குகளில் புனித நீரால் அபிஷேகம் செய்ய, சிவபெருமான் மனம் குளிர்ந்து நமக்கருள்வான் என்பது நம்பிக்கை.

    • திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள்.
    • சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு.

    கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமை இன்று இந்த திங்கட்கிழமையில் சிவ ஆலயங்களுக்கு அவசியம் செல்ல வேண்டும். இந்த நாளில், சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்து வணங்கினால், மனோபலத்தையும் தெளிவையும் பெறலாம்.

    திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சிவபெருமானுக்கு ஸ்ரீசோமநாதர் எனும் திருநாமமும் உண்டு. திங்கள் என்றால் சந்திரன். சிவனாரின் தலையில் சந்திரனையும் கங்கையையும் சூடியிருப்பார்.கார்த்திகை சோமவார விரதத்தின் சிறப்பை சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லி இருக்கிறார். இந்த விரதத்தைப் போன்று வேறு எந்த விரதத்திலும் சிவபெருமான் திருப்தி அடைய மாட்டார் என்பது ஐதீகம்.

    சிவனுக்கு சங்காபிஷேகம் சோமவார நாளில் சிவனாருக்கு நடைபெறும் விசேஷ பூஜையில் கலந்து கொண்டு, சிவ தரிசனம் செய்யுங்கள். சங்காபிஷேகம் சிவாலயங்களில் நடைபெறும். சில கோயில்களில் 108 சங்காபிஷேகமும் 1008 சங்காபிஷேகமும் விமரிசையாக நடைபெறும். சங்காபிஷேகத்தில் சிவ தரிசனம் செய்தால் வாழ்வில் இழந்ததை பெறாலாம்.

    சிவனுக்கு விரதம் சோமவார விரதம் எப்படிப்பட்டது என்பதை சிவனே சொல்கிறார். சோமன் என்றால் சந்திரன், அவனுக்கு உரிய தினம் திங்கள் கிழமை. அந்தக் கிழமையை சோம வாரம் என்று குறிப்பிடுவர். பன்னிரண்டு மாதங்களில் கார்த்திகை மாத சோம வாரம் மிகச் சிறப்பானது. இந்த தினங்களில் சிவபெருமானை வழிபட்டு விரதம் இருந்தால் பெருமான் மிகவும் மகிழ்ந்து, திருப்தியடைந்து வேண்டும் வரம் எல்லாம் தந்திடுவார் என்பது முன்னோர் சொன்ன வழி. காரணம், இந்த சோம வார விரதச் சிறப்பை, சிவபெருமானே பார்வதி தேவிக்குச் சொல்லுவதாய் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

    சந்திரனுக்கு பெருமை சிவனின் ஜடாமுடியில் சந்திரன் அமர்ந்திருந்தான். இதைக் கண்ட பார்வதிக்கு ஆச்சர்யம். தன் சுவாமியின் ஜடா முடியில் சந்திரன் அமரும் பேறு எப்படி வாய்த்தது என்று ஸ்வாமி சந்திரனைத் தாங்கள் தலைமேல் வைத்துக் கொண்டாடக் காரணம் என்ன? அதற்கு அவன் செய்த பாக்கியம் என்ன? என்று பரமனிடமே கேட்டாள் பார்வதி. எனக்காக விரதம் இருந்து என்னை மகிழ்வித்தான். அதுவே காரணம் என்றார். அதற்கு பார்வதி தேவியும் மற்றும் அங்கிருந்தவர்களும் தங்களுக்கும் இந்த விரதம் குறித்துக் கூறி தாங்களும் பெருமானின் கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற வழிசெய்யக் கோரினாள்.

    சிவனுக்காக விரதம் அதன்படி, சிவபெருமானே, பார்வதி தேவிக்கும் மற்றும் அங்கே கூடியிருந்தவர்களுக்கும் இந்த விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார் என்கிறது புராணம்.திங்கட்கிழமையில் அதிகாலையில் குளித்து விரதத்தை தொடங்க வேண்டும். அந்தணரை தம்பதியாய் வரவழைத்து, அவர்களையே பார்வதி, பரமேஸ்வரனாக பாவனை செய்து அவர்களுக்கு தானம் அளித்து ஆசிர்வாதம் பெற வேண்டும். வசிஷ்டர், சோமசர்மன், தன்மவீரியன், கற்கர் ஆகியோர் இதைக் கடைபிடித்து முறையே அருந்ததி, செல்வம், நற்கதி, குழந்தைப் பேறு ஆகியவற்றைப் பெற்று மகிழ்ந்தனர்.

    • வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது.
    • பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 1432-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம், ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வட்டங்களிலும் கடந்த 25-ந் தேதி தொடங்கி வரும் 31-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது.

    அதன்படி கொடுமுடி, மொடக்குறிச்சி, பவானி, ஈரோடு மற்றும் நம்பியூர் ஆகிய வட்டங்களில் கடந்த 25-ந் தேதி முதல் வரும் 29-ந் தேதி வரையிலும், தாளவாடி வட்டத்தில் 25-ந் தேதி அன்றும், அந்தியூர் வட்டத்தில் கடந்த 25-ந் தேதி முதல் வரும் 30-ந் தேதி வரையிலும், கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் பெருந்துறை ஆகிய வட்டங்களில் கடந்த 25-ந் தேதி முதல் வரும் 31-ந் தேதி வரையிலும் (சனி, ஞாயிறு நாட்கள் நீங்கலாக) அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

    அதனால் வரும் 29-ந் தேதி (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • புஷ்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை அனைத்து தெய்வங்களுக்கும் புஷ்பா பிஷேக விழா நடை பெறுவது வழக்கம்.

    அது போல் இந்த ஆண்டுக்கான புஷ்பாபிஷேக விழா நேற்று நடந்தது. மாலை 6.30 மணிக்கு நித்திய காரிய பூஜைகள் முடிந்த பின்பு தட்சிணா மூர்த்தி, கொன்றையடி, தாணுமாலய சாமி சன்னதி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள். நவகிரக மண்ட பம், கைலாசநாதர், சாஸ்தா, ராமர் சன்னதி மற்றும் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் உட்பட அனைத்து தெய்வங்க ளுக்கும் புஷ்பாபிஷேக விழா நடந்தது.

    இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற் கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்கா ணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • திங்கள் நகர் தினசரி காய்கறிகள் வியாபாரிகள் கோரிக்கை
    • திங்கட் கிழமை மாலை 5 மணி வரை காய்கறி, பழங்கள் வியாபாரம் முடித்து வாரச்சந்தை வாசல் இரண்டும் பூட்டு போட வேண்டும்.

    கன்னியாகுமரி:

    திங்கள் நகர் தினசரி காய்கறிகள் வியாபாரிகள், திங்கள்நகர் பேரூராட்சி செயல் அலுவலர் எட்வின் ஜோஸ் மற்றும் தலைவர் சுமன் ஆகியோரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறப் பட்டுள்ளதாவது:-

    திங்கள் சந்தை வாரச்சந்தை யில் விவசாயி கள் வெள்ளிக்கிழமை தோறும் மாலை 4 மணிக்கு வாழைக்குலைகள் கொண்டு வருவார்கள். அதனை மறுநாள் காலை 6.30 மணி அளவில் விற்பனை செய்வார்கள். விற்பனை முடிந்த உடன் 10 மணி அளவில் மார்க்கெட் வாசலை மூடி விடுவார்கள். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் காய்கறி வியாபாரிகள் திங்கட் கிழமை வியாபாரம் செய்ய காய்கறிகள் கொண்டு வரு வார்கள்.

    திங்கட்கிழமை காலை 4 மணி முதல் 7 மணி வரை ஆடு, மாடு, கோழி வியாபாரம் நடக்கும் காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை காய்கறி பழங்கள் வியாபாரம் நடக்கும். அதன் பிறகு பேரூராட்சி காவலாளி 2 வாசல்களையும் பூட்டி விடுவது நடைமுறையாக இருந்தது.

    கொேரானா பாதிப்பு ஏற்பட்ட பிறகு இப்போது இரண்டு வாசல்கள் பூட்டப்படாமல் உள்ளது. இதனால் பேரூராட்சியில் வரிகட்டி செயல்படும் தினசரி சந்தை வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் மிகுந்த கடன் தொல்லையில் அவதிப்படுகிறோம்.

    ஆகையால் தினசரி வியாபாரிகள் நலன் கருதி திங்கட் கிழமை மாலை 5 மணி வரை காய்கறி, பழங்கள் வியாபாரம் முடித்து வாரச்சந்தை வாசல் இரண்டும் பூட்டு போட்டு இதற்கு முன்னர் இருந்த நடைமுறையை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×