search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புஷ்பாபிஷேக விழா"

    • திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    • புஷ்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்திருந்தனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை அனைத்து தெய்வங்களுக்கும் புஷ்பா பிஷேக விழா நடை பெறுவது வழக்கம்.

    அது போல் இந்த ஆண்டுக்கான புஷ்பாபிஷேக விழா நேற்று நடந்தது. மாலை 6.30 மணிக்கு நித்திய காரிய பூஜைகள் முடிந்த பின்பு தட்சிணா மூர்த்தி, கொன்றையடி, தாணுமாலய சாமி சன்னதி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள். நவகிரக மண்ட பம், கைலாசநாதர், சாஸ்தா, ராமர் சன்னதி மற்றும் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் உட்பட அனைத்து தெய்வங்க ளுக்கும் புஷ்பாபிஷேக விழா நடந்தது.

    இதில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற் கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்கா ணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    • ஆடி கடைசி திங்களையொட்டி நாளை நடக்கிறது
    • கிரேந்தி, வாடாமல்லி பூக்களை தவிர்த்து மீதமுள்ள பூக்களால் புஷ்பாபிஷேகம் நடைபெறும்.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமையையொட்டி கோவிலில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் புஷ்பாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.

    அது போல் இந்த ஆண்டுக்கான புஷ்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு கோவிலில் நடைபெறும். பூஜை முடிந்த பிறகு தட்சிணாமூர்த்தி, கொன்றையடி, தாணுமாலயன் சன்னதி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள், நவக்கிரக மண்டபம், கைலாசநாதர் சன்னதி மற்றும் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

    கிரேந்தி, வாடாமல்லி பூக்களை தவிர்த்து மீதமுள்ள பூக்களால் புஷ்பாபிஷேகம் நடைபெறும். பக்தர்கள் தங்களால் இயன்ற பூக்களை கொடுத்து புஷ்பாபிஷேகத்தை சிறப்பிக்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகர், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கோவில் கணக்கர் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×