சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் புஷ்பாபிஷேக விழா

ஆடி கடைசி திங்களையொட்டி நாளை நடக்கிறதுகிரேந்தி, வாடாமல்லி பூக்களை தவிர்த்து மீதமுள்ள பூக்களால் புஷ்பாபிஷேகம் நடைபெறும்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் புஷ்பாபிஷேக விழா
Published on

கன்னியாகுமரி :

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமையையொட்டி கோவிலில் உள்ள அனைத்து சாமிகளுக்கும் புஷ்பாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம்.

அது போல் இந்த ஆண்டுக்கான புஷ்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) மாலை 6.30 மணிக்கு கோவிலில் நடைபெறும். பூஜை முடிந்த பிறகு தட்சிணாமூர்த்தி, கொன்றையடி, தாணுமாலயன் சன்னதி, திருவேங்கட விண்ணவரம் பெருமாள், நவக்கிரக மண்டபம், கைலாசநாதர் சன்னதி மற்றும் 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயர் ஆகியோருக்கும் புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

கிரேந்தி, வாடாமல்லி பூக்களை தவிர்த்து மீதமுள்ள பூக்களால் புஷ்பாபிஷேகம் நடைபெறும். பக்தர்கள் தங்களால் இயன்ற பூக்களை கொடுத்து புஷ்பாபிஷேகத்தை சிறப்பிக்குமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகர், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கோவில் கணக்கர் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com