search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்மாய்"

    • வலையங்குளம் கண்மாயில் மீன்பிடி குத்தகையை ரத்து செய்ய வேண்டும்.
    • கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    மதுரை

    மதுரை கலெக்டர் அலுவலகத்தில் வலையங் குளத்தைச் சேர்ந்த தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு பேரவை பொது செயலாளர் சிங்கராசு, தமிழ் மாநில சிவசேனா கட்சி செயல் தலைவர் தூதை செல்வம் ஆகியோர் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய கண்மாயை, அதே பகுதி யைச் சேர்ந்த 4 பேர் 2 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் இதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ4.10லட்சத்தை லஞ்சம் வாங்கிக் கொண்டு, மீன் குத்தகை ஏலம் விட்டுள்ள னர். கண்மாயில் தண்ணீர் நிறைந்துள்ளதால், மீன் களை பிடிக்க முடியவில்லை.

    அவர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை அகற்றி வருகின்றனர். ஆடு, மாடுகளை கூட தண்ணீர் குடிக்க அனுமதிப்பதில்லை. மேற்கண்ட 4 பேரும் அங்குள்ள கடைகளில் கட்டாய வசூல் செய்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு பெரிய கண்மாய் குத்தகை ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப் பட்டவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கண்மாய் நீரை திறந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
    • கண்மாயில் மராமத்து பணி செய்வதற்காக தண்ணீரை திறந்துவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இளையான்குடி

    இளையான்குடி இளையான்குடி அருகே உள்ளது குமாரக்குறிச்சி, பெருமச்சேரிகாந்தி நகர், சுந்தனேந்தல் ஆழி மதுரை, நகரகுடி அதிகரை, நெடுங்குளம் ஆகிய கிராமங்கள். இந்த கிராமங்களை சேர்ந்த நீர்ப்பாசன விவசாயிகளை பாதிக்கும் வகையில் எமனேசுவரம் கண்மாயில் இருந்த தண்ணீரை திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மிளகாய் மற்றும் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கண்மாயில் மராமத்து பணி செய்வதற்காக தண்ணீரை திறந்துவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இது ெதாடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • விவசாயம், மண்பாண்ட தொழில்களுக்கு கண்மாய்களில் இருந்து வண்டல்- களிமண் எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • கலெக்டரின் ஒப்புதலுடன் பெற்றுக் கொள்ளலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்களில் இருந்து விவசாய நில மேம்பாடு மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு வண்டல், களிமண் எடுக்க தகுதி வாய்ந்த கண்மாய்களாக தேர்வு செய்யப்பட்ட விவரப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு வெளியீடு விருதுநகர் மாவட்ட அனைத்து வட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நீர்வளத்துறை அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விளம்பரப்படுத்தப் பட்டுள்ளது.

    அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாடு பணிகளுக்கு அரசு அனுமதித்த வண்டல் மண், களிமண்ணை சிறப்பு அரசிதழில் வெளியீடு செய்யப்பட்ட கண்மாய் மற்றும் குளங்களில் இருந்து இலவசமாக எடுத்துச் செல்ல விவசாய பணி செய்யும் விவசாயிகள் தங்களுடைய நில உடைமை ஆவணங்களான பட்டா, சிட்டா, அடங்கல் ஆகிய வற்றுடன் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட சான்றிதழை இணைத்தும், மண்பாண்ட தொழில் செய்பவர்கள் மண்பாண்டத் தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற அங்கத்தினருக்குரிய சான்றிதழை இணைத்தும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை, உதவி இயக்குநரிடம் மனு செய்து தேவையான வண்டல் மண், களிமண்ணை கலெக்டரின் ஒப்புதலுடன் பெற்றுக் கொள்ளலாம்.

    விவசாய பயன்பாட்டிற்கு நஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றிற்கு 75 க.மீட்டரும், ஹெக்டேர் ஒன்றிற்கு 185 க.மீட்டருக்கு மிகாமலும், புஞ்சை நிலமாக இருந்தால் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏக்கர் ஒன்றுக்கு 90 க.மீட்டரும், ஹெக்டேர் ஒன்றிற்கு 222 க.மீட்டருக்கு மிகாமலும் வண்டல் களிமண் எடுக்க அனுமதி வழங்கப்படும். மேற்கண்ட பயன்பாட்டிற்காக அளிக்கப்படும் இலவச அனுமதியினை வணிக நோக்கத்துடன் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆக்கிரமிப்பு செய்த கண்மாயை மீட்டு தரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயப் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அருகே உள்ள கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லாம்பட்டி கிராமத்தில் 150 குடியிரு ப்புகள் உள்ளன. கிராமத்திற்கு பாத்தியப்பட்ட குலவன் கண்மாய் சுமார் 23 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.

    பருவ மழை காலங்களில் கண்மாயின் மூலம் கிடைக்கப்பெறும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் விவசாயப் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கண்மாய்க்கு அருகே இருந்து வரும் சுமார் 24 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களை 1987-ம் ஆண்டிலிருந்து 5 நபர்கள் கொண்ட கூட்டு பட்டா எங்கள் வசம் இருந்து வருவதாக அவர்களின் வாரிசுதாரர்கள் கூறி அந்நிலங்களில் உள்ள முட்செடிகளை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் நடவடிக்கையில் தற்சமயம் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கண்மாய்க்கு அருகே உள்ள நிலங்கள் அனைத்தும் கண்மாய்க்கு உட்பட்ட தாகவே இருந்து வருகிறது. எனவே இதில் தற்சமயம் தனியார் தரப்பினைச் சேர்ந்த நபர்கள் மேற்கொண்டு வரும் பணியினை நிறுத்த வேண்டும், கண்மாய்க்கு நடுவே இரு திசைகளில் இருந்து வரும் கோவில் மற்றும் மயான பகுதிக்கு செல்லும் பாதைகள் முதலியவற்றை மீட்டு தர வேண்டும்.

    அரசு நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றியதை ரத்து செய்ய வேண்டும். கண்மாய்க்கு பாத்தியப்பட்ட கலிங்கு மற்றும் கரை பகுதியை மீட்டு தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய் துறையினருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அளித்துள்ளனர். ஆனால் தற்போதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது.

    எனவே கண்மாய்க்கு அருகில் உள்ள நிலப்பகுதிகள் கிராமத்திற்கு சொந்தமானதா? அல்லது 5 பேர்கள் கொண்ட குழுவினரின் வாரிசுகளுக்கு சொந்தமானதா? என்று முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட நிர்வாகத்தி னருக்கும், வருவாய் துறையினரும் மட்டுமே உள்ள காரணத்தினால் அவர்கள் மௌனம் கலைத்தால் மட்டுமே இதற்கு முடிவு எட்டும் என்பது சமூக ஆர்வலர்க ளின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

    மேலும் இது சம்பந்தமான நீதி கிடைக்க நீதிமன்றத்தை நாடப்போவதாக கிராம மக்கள் தரப்பினர் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அபிராமம் பகுதியில் உள்ள கண்மாய்களை தூர்வார வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
    • 100-க்கும் மேற்பட்ட யூனியன் கண்மாய்களும் உள்ளன.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பகுதியில் பொதுப்பணித்துறை கண்மாய்களும், 100-க்கும் மேற்பட்ட யூனியன் கண்மாய்களும் உள்ளன. சில வருடங்களாக பருவ மழை காலங்களில் மழை பெய்யாததாலும், மழை ஒரு சில பகுதியில் குறைந்த அளவே பெய்தாலும், கண்மாய்கள், வரத்துக் கால்வாய் தூர்வாரப் படாததால் கண்மாய்களில் மழைநீர் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை நிலவு கிறது. இதனால் கண்மாய் கள், குளங்கள் வறண்டு காணப்படுகின்றன.

    இதுகுறித்து அபிராமம் பகுதி விவசாய சங்க நிர்வாகி கூறியதாவது:-

    பொதுப்பணித்துறை கண்மாய்கள் பெயரளவிற்கு தூர்வாரப்படுகிறது. ஆனால் யூனியன் கண்மாய் 30 ஆண்டு களுக்கும் மேலாக தூர்வாரப்படவில்லை. பொதுப்பணித்துறை கண்மாயை தூர்வாரினாலும் ஆழமாகவோ, கண்மாய் கரையை பலப்படுத்துவதோ கிடையாது. வரத்துக் கால் வாயில் உள்ள முள்செடி களை கூட சுத்தப்படுத்துவது கிடை யாது. இதனால் பல லட்சம் அரசு பணம் வீணாக செலவு செய்யப்படுகிறது.

    கடந்த ஆண்டு பருவமழை பெய்யாததால் நெற்பயிர்கள் பயன்தரக்கூடிய நிலையில் நெல் விவசாயம் பாதிக்கப் பட்டது. இதனால் விவசாயி களுக்கு மிகப்பெரிய பொரு ளாதார இழப்பு ஏற்பட்டது. கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடனும் வாங்கிய நிலையில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த ஆண்டு வறட்சி நிவா ரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அபிராமம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கண்மாய்கள், யூனியன் கண்மாய்கள், குளங்கள் தூர்வாரப்படாததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை போக்க போர்க் கால அடிப்படையில் கண்மாய், குளங்களை தூர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கண்மாயில் மூழ்கி 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தண்டியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு 8 வயதில் பிரீத்தி என்ற மகள் இருந்தாள்.

    இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பிரீத்தி அதே பகுதியை சேர்ந்த அன்பழகி என்ற சிறுமியுடன் தண்டியனேந்தல் கண்மாய்க்கு சென்றார். தண்ணீரை பார்த்ததும் 2 பேரும் கண்மாயில் இறங்கி விளையாடியதாக கூறப்படுகிறது.

    விளையாட்டின் மீதான ஆர்வத்தால் பிரீத்தி ஆழமான பகுதிக்கு சென்று சிக்கினாள். சிறிது நேரத்தில் மூச்சுத்திணறிய அவர் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக பிரீத்தியின் உடலை பார்த்து அவளது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. 

    • திருமங்கலம் அருகே 40 ஆண்டுகளுக்கு பின் கூடக்கோவில் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.
    • விவசாயிகள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கூடக்கோவில் பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் மீட்டர் சுற்றளவில் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் கடந்த பல ஆண்டுகளாக போதிய அளவில் நிரம்பாமல் வறண்டு காணப்பட்டது. இதனால் அந்தப்பகுதி மக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்தி வந்தனர். கண்மாயில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டது. விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக அதிசயமாக கூடக்கோவில் கண்மாய்க்கு அதிகளவில் நீர்வரத்து ஏற்பட்டது. மேலும் வைகையாற்றில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் இந்த கண்மாய்க்கு வந்தடைந்தது.

    தொடர்மழை மற்றும் வைகையாற்று தண்ணீரால் கூடக்கோவில் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் அந்தப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 1981-ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக கூடக்கோவில் கண்மாய் நிரம்பியது. அதன்பின் கண்மாய் முழுவதும் நிரம்பவில்லை. ஆனால் தற்போது பெய்த மழை காரணமாக 40 ஆண்டுகளுக்கு பின் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தனர்.

    கண்மாய் நிரம்பியதை முன்னிட்டு அந்தப்பகுதி மக்கள் பொங்கல் வைத்து கண்மாய் கலுங்கில் உள்ள கல்லை வழிபட்டனர்.

    • அபிராமம் பகுதியில் கண்மாய்-ஊரணிகள் வறண்டு கிடக்கின்றன.
    • இதனால் கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பருவமழை பொய்த்ததாலும், வைகை ஆற்று தண்ணீர் இந்த பகுதிக்கு வராததாலும் கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் கோடைகாலங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அபிராமம் அருகே உள்ள அச்சங்குளம், வல்லக்குளம், பொட்டகுளம், பாப்பனம் மற்றும் அதனை சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பருவமழையை நம்பி நெல், மிளகாய், பருத்தி, உளுந்து உட்பட்ட 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்கின்றனர்.

    இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அபிராமம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய், ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் வறண்டு காணப்படுகிறது. வைகையாறு, கிருதுமால் நதி, பரளையாறு கால்வாய்களும் மண் மேடாகவும், கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்தும் காணப்படுகிறது.

    இதனால் விவசாயம் பாதிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், தற்போது அபிராமம் பகுதியிலும், அதனை சுற்றியுள்ள பகுதியிலும் தண்ணீர் பற்றாக்குறையால் நெல், மிளகாய், பருத்தி பயிர்கள் கருகும் நிலையில் உள்ளன. மேலும் பருவமழை நேரத்தில் கண்மாய், ஊரணிகளில் தேங்கும் நீரால் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகுவதுடன், குடிநீர் பற்றாக்குறையையும் போக்கும்.

    தற்போது தண்ணீர் நிரம்பாததால் கண்மாய், ஊரணிகள் வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக கோடை காலத்தில் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. குடிநீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் பாண்டிய மன்னன் கட்டிய கண்மாயை தூர்வார வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நதி நீர் இணைப்பை செயல்படுத்தியது இங்குள்ள பெரிய கண்மாய் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரத்தில் இருந்து காரைக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது ராஜசிங்க மங்கலம். இந்த ஊர் பெயரை ஆர்.எஸ்.மங்கலம் என சுருக்கமாக அழைத்து பழகிவிட்டனர்.

    இந்த ஊரில் உள்ள கைலாச நாதர் கோவில், கலிய பெருமாள் கோவில், ராஜசிங்கப் பெருங்குளம் எனும் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் ஆகியவை புகழ் பெற்றவை. நீர் மேலாண்மையில் புகழ் பெற்ற பாண்டிய மன்னர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நதி நீர் இணைப்பை செயல்படுத்தியது இங்குள்ள பெரிய கண்மாய் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.

    20 கி.மீ தூரமுள்ள இந்த கண்மாய்க்கு ''நாரை பறக்க முடியாத-48 மடைகள் கொண்ட கண்மாய்'' என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கண்மாயில் பாசன வசதிக்காக சுமார் 1 கி.மீ தூரத்திற்குள் குறைந்தது ஓரிரு மடை வீதம் அமைய பெற்றுள்ளது.

    மற்றொரு சிறப்பு இந்த கண்மாயில் 1,205 மி.க. அடி தண்ணீரை தேக்க முடியும். சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இந்த கண்மாய் மடைகள் பெயரில் செட்டியமடை, பெருமாள் மடை, புல்லமடை, செங்கமடை என பல ஊர்கள் உள்ளன.

    இந்த கண்மாய் பாசனத்தை நம்பி ஆர்.எஸ்.மங்கலம், செட்டியமடை, பிச்சனாக்கோட்டை, ரகுநாதமடை, நெடும்பு ளிக்கோட்டை, பொட்டக்கோட்டை, பனிக்கோட்டை, புலிவீர தேவ ன்கோட்டை, இருதயாபுரம், கீழக்கோட்டை, சிலுகவயல், இரட்டையூரணி, வில்லடி வாகை, புல்லமடை, வல்லமடை மட்டுமின்றி அருகில் உள்ள 72 சிறு கண்மாய் பகுதிகளான சோழாந்தூர், வடவயல், மங்கலம், அலிந்திக்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களும் பாசன வசதி பெறுகின்றன.

    தற்போது கரைகளை பலப்படுத்தியும், மடை களை, கலுங்குகளை பராமரித்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் யானைப்பசிக்கு சோளப்பொறி கொடுத்தது போன்றது.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று சிறப்பு மிக்க ஆர்.எஸ்.மங்கலம் கண்மாயை மத்திய, மாநில அரசுகள் சிறப்பு கவனம் செலுத்தி தனியாக சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து ஆண்டுதோறும் வற்றாமல் இருக்க, மழை நீர் கடலுக்குச் செல்லாமல் சேமிக்க, தமிழகத்திலேயே அதிகமான பரப்பளவு கொண்ட இந்த கண்மாயை முழுமையாக தூர்வார வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • உசிலம்பட்டி அருகே கண்மாய்கள் ஏலத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இதையொட்டி உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் குப்பணம்பட்டி பொதுப்பணித்துறை அலு வலகத்தில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கண்மாய்கள் மீன் பிடி குத்தகை ஏலம் விடப்பட்டது.

    இதில் பொதுப்பணி த்துறை உதவி பொறியா ளர்கள் செல்லையா, கோவிந்தராஜ், பணி ஆய்வாளர் ஒச்சுக்காளை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏலம் நடத்தினர்.

    இதில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கண்மாய்கள், வாலாந்தூர் முதலைக்குளம், விண்ணகுடி உள்பட பல்வேறு கண்மாய்கள் ஏலம் விடப்பட்டது. இதில் விக்கிரமங்கலம், நடுமுதலைக்குளம், செல்லப்பன் கோட்டை கண்மாய் மற்றும் பல்வேறு கண்மாய்கள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.

    நடுமுதலைக்குளம் கண்மாய் ஏலம் நடத்தக்கூடாது என கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் வந்து ஏலத்தை நிறுத்தி வைக்க கோரியும், கண்மாய் ஏலம் நடத்தக்கூடாது எனவும், குப்பணம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.

    இதைத்தொடர்ந்து நடுமுதலைக்குளம் கண்மாய் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது.கண்மாய்கள் ஏலம் தொடர்பாக இரு தரப்பின ருக்கிடையே தகராறு ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்தனர். இதையொட்டி உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • அபிராமம் கண்மாய் நிரம்பாததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகளுக்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் வைகை பாசன பகுதிகள் அதிகமுள்ள பகுதியாகும். வைகை அணை நிரம்பியதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது.

    இதனால் ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வந்த தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து வலது, இடது பிரதான கால்வாய்கள் மூலம் 100-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.

    வைகை ஆற்றில் பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து அபிராமம் கண்மாய்க்கு செல்லும் கால்வாய் தூர் வாரப்படாததால் சுமார் 7 கி.மீட்டர் தூரத்துக்கு மேல் கருவேல மரங்கள் வளர்ந்து மண்மேடாக காட்சி அளிக்கிறது.

    கால் வாய் தூர்வாரப்படாததாலும், முட்செடிகளை அகற்றாததாலும் அபிராமம், மற்றும் அதனை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு இன்று வரை தண்ணீர் நிரம்பாத நிலை உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:-

    அபிராமம் கண்மாயை சார்ந்துள்ள விவசாயிகள் சுமார் ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களில் நெல் பயிரிட முடியாத நிலை உள்ளது.

    இந்த பகுதியில் பருவமழை குறைவாக பெய்துள்ளதால் கண்மாய்க்கு வைகை பாசனம் மூலம் நீர் கிடைத்தால் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் செழித்து நல்ல பலனை தரும். இதனால் விவசாயிகள் பயனடைவார்கள்.

    அபிராமம் பகுதி விவசாயிகள் தண்ணீரு க்காக கண்ணீருடன் ஏங்கும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு அபிராமம் பகுதி விவசாயிகளும், தன்னார்வலர்களும் கொடுத்த பணத்தால் கால்வாயை தூர்வாரி துப்புரவு பணி செய்தோம்.

    இப்போதும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை. அதேபோல் இந்த ஆண்டும் அவர்கள் அபிராமம் கண்மாய் மற்றும் வரத்துக்கால்வாய் முட்செடிகளை அகற்றவும் இல்லை. தூர்வாரவும் இல்லை.

    தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகளுக்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் நிரந்தர தீர்வுகாண பொதுப்பணி துறையினரும் கலெக்டரும் இணைந்து நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெற்குப்பையில் பெரியகண்மாய் நிரம்பியதால் கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
    • தேங்காய், பழம், வெற்றிலை வைத்து பூஜை செய்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக 3 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியது.

    இந்த கண்மாயில் இருந்து சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியவுடன் பாரம்பரிய முறைப்படி நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள கிராமத்தினர் ஒன்றுகூடி சிறிய மண் பானையில் கருப்பு-வெள்ளை பொட்டு வைத்து, பொட்டுகலயத்தை கீழத்தெருவில் உள்ள கோவிலில் வழிபாடு செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று பெரியகண்மாய் மடைபகுதி கரையில் பாரம்பரிய முறைப்படி ஊர்முக்கியஸ்தர்கள், கிராமமக்கள் ஒன்றுகூடி தேங்காய், பழம், வெற்றிலை வைத்து பூஜை செய்தனர். பின்னர் ஆழமான இடத்தில் குச்சியின் நுனிப்பகுதியில் வைக்கோல் வைத்து கட்டப்பட்டு அதன்மேல் பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியதற்கு அடையாளமாக பெண்கள் குலவையிட, வாண வேடிக்கையுடன் பொட்டுகலையம் வைக்கப்பட்டது.

    பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டி யவுடன் பாரம்ப ரிய முறைப்படி பொட்டுக்கலை யம் வைத்து வழிபாடு செய்வது இந்த ஆண்டு நல்லமழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது கிராமமக்களின் ஐதீகமாகும்.

    பெரிய கண்மாய் முழுகொள்ளவை எட்டும்போதல்லாம் திருவிழா போல் கொண்டாடி மகிழ்கிந்து வருகின்றனர். இந்த விழாவில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் ஆனந்த், உதவியாளர் முரளி, மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    ×