என் மலர்
நீங்கள் தேடியது "Eye"
- முகாமில் கண்புரை உள்ள நோயாளிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சைக்கு தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
- கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி பார்வை இழப்பு சங்கத்தின் உதவியுடன் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை,பாரத் கேஸ் விநியோகஸ்தர் வேலவன் கேஸ் நிறுவனம் மற்றும் விவேகானந்தா கேந்திரம் கோவில்பட்டி கிளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் திருச்செந்தூர் தனியார் மடத்தில் வைத்து நடைபெற்றது. சுப்புலெட்சுமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
முகாமில் கண்புரை உள்ள நோயாளிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சைக்கு தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
முகாமில் வந்திருந்த பயனாளிகளுக்கு சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளுக்கு கண் நோய் பரிசோதனை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. விவேகானந்த கேந்திர பொறுப்பாளர் பரமகுரு நன்றி கூறினார்.
- குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் மற்றும் ராஜா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
- இந்த முகாமில் 220 பேர் பங்கேற்று பயன்பெற்றனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் மற்றும் ராஜா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில் சங்க தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ முகாமை தொடக்கி வைத்தார்.
டாக்டர் கிருஷ்ணமூர்த்தி குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை இலவசமாக பார்க்கப்பட்டது.
இந்த முகாமில் 220 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். மேலும் முன்னாள் குளோபல் சேர்மன் ஈஸ்வர், முன்னாள் தலைவர்கள் மனோகர், சம்பத்குமார், சந்திரன், பன்னீர்செல்வம், தனசேகர், சண்முகம்,விஜயபிரதாப் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.