search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Eye"

    • கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
    • அரசு அலுவலர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் நாலு கோட்டை ஊராட்சி யில் அமைந்துள்ள 7 சங்கிலி தொடர் கண்மாய்களை சின்ஜென்டா நிறுவனத்தின் நிதி உதவியுடன் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா தொண்டு நிறுவனத்தின் செயலாக்கத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டது. இதில் மடை சீரமைப்பு, கழுங்குகள் சீரமைப்பு, வரத்து வாய்க்கால் மற்றும் பாசன வாய்க்கால் தூர் வாருதல், கண்மாய் நீர் பிடிப்பு பகுதி தூர்வாருதல் மேலும் அனைத்து கண்மாய் கரையிலும் 1000 மரக்கன்று கள் நடுதல் போன்ற பணிகளை கடந்த ஆண்டு அப்போதைய கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்தார்.

    இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததையொட்டி அதன் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா ஆஜித் தலைமை தாங்கி கண்மாய்களை செயல்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    இந்த விழாவில் மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன் நாலுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண் டன், சின்ஜென்டா நிறு வன இயக்குனர் வைத்தியநாதன், தமிழ்நாடு வர்த்தக மேலாளர் ஜெயமோகன், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் முதன்மை இயக்குனர்-மேலாளர் கொண்டராதாகிருஷ்ணா, துணைத்தலைவர் கண்ணன், துணைப்பொதுமேலாளர் ஏழுமலை, திட்டமேலாளர் கார்த்திக், சமூக ஒருங்கி ணைப்பாளர் பாலமுருகன் மற்றும் அரசு அலுவலகர்கள் கிராம மக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் கண்மாய் கரைகளில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

    • இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
    • கண்ணில் விழிலென்ஸ் பொருத்தி மீண்டும் பார்வை பெற ஏற்பாடு செய்யப்பட்டது

    சோழவந்தான்

    மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர அரிமா சங்கம், வேலம்மாள் மருத்துவ கல்லூரியுடன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தியது.

    சோழவந்தான் நகர அரிமா சங்க தலைவர் லயன்ஸ் டாக்டர் எம்.வி.எம்.மருதுபாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற இம்முகாமில் அரிமா சங்க ஆளுநர் சசிகுமார் முன்னிலை வகித்தார்.

    முன்னாள் ஆளுநர் செல்லப்பாண்டி முகாமை தொடங்கி வைத்தார். இதில் சோழவந்தான் அரிமா சங்க பொருளாளர் காந்தன் மற்றும் நிர்வாகிகள், வேலம்மாள் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.

    முகாமில் கண்புரை நோயால் கண் பார்வை குறைவாக உள்ளவர்களுக்கு மற்றும் கண்பார்வை இல்லாதவர்களுக்கும் இலவசமாக கண்ணில் விழிலென்ஸ் பொருத்தி மீண்டும் பார்வை பெற ஏற்பாடு செய்யப்பட்டது.

    அரிமா சங்க முன்னாள் தலைவர் ராசி கண்ணன் நன்றி கூறினார். சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • கண்மாயில் மூழ்கி 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தண்டியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு 8 வயதில் பிரீத்தி என்ற மகள் இருந்தாள்.

    இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பிரீத்தி அதே பகுதியை சேர்ந்த அன்பழகி என்ற சிறுமியுடன் தண்டியனேந்தல் கண்மாய்க்கு சென்றார். தண்ணீரை பார்த்ததும் 2 பேரும் கண்மாயில் இறங்கி விளையாடியதாக கூறப்படுகிறது.

    விளையாட்டின் மீதான ஆர்வத்தால் பிரீத்தி ஆழமான பகுதிக்கு சென்று சிக்கினாள். சிறிது நேரத்தில் மூச்சுத்திணறிய அவர் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக பிரீத்தியின் உடலை பார்த்து அவளது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. 

    • பல்வேறு இடங்களின் வழியாக சென்று ராசாமி ராசுதாரர் மருத்துவ மனையில் பேரணி முடிவ டைந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், டாக்டர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ராசா மிராசுதாரர் மருத்துவமனை கண் பிரிவு மற்றும் லயன்ஸ் சங்கங்கள் சார்பில் கண் தானம் செய்வோம் விழிப்புணர்வு பேரணி தஞ்சை ரெயிலடியில் நடைபெற்றது.

    இந்த பேரணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடிய சைத்து தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் குந்தவை நாச்சியார் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண் தானம் செய்வோம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

    பல்வேறு இடங்களின் வழியாக சென்று ராசாமி ராசுதாரர் மருத்துவ மனையில் பேரணி முடிவ டைந்தது.

    இந்த நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க நிர்வாகிகள், டாக்டர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உத்தங்குடி கண்மாயில் விஷம் கலந்து உள்ளதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
    • இதனைப் பார்த்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரையில் உள்ள உத்தங்குடி கண்மாயில் சிறுவன் ஒருவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு குளிக்க சென்றான். அப்போது அவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இது தொடர்பாக போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    இந்த நிலையில் உத்தங்குடி கண்மாயில் மீன்கள் திடீரென செத்து மிதக்க ஆரம்பித்தன. இதனைப் பார்த்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிகாரிகள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதன் அடிப்படையில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் நல்லுசாமி, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் உஷாராணி, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஞானம் ஆகி யோர் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்த கிடந்த மீன்கள் தொடர்பாக ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஊழியர்கள் கண்மாய் தண்ணீரை பரிசோதனைக்காக, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

    உத்தங்குடி கண்மாயில் செத்து கிடந்த மீன்கள், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக இறந்து இருக்கலாம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. இருந்தபோதிலும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நீரின் பரிசோதனைக்குப் பிறகு தான், உத்தங்குடி கண்மாயில் விஷம் கலந்து உள்ளதா? அல்லது ஆக்சிஜன் குறைபாடு உள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும். உத்தங்குடி கண்மாயில் விஷம் கலந்து இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அங்கு பொது மக்கள் குளிக்கவும், குடி தண்ணீர் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    • எம்.டி. சமுதாய அறக்கட்டளை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், குழந்தைகள், முதியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை எம்.டி. சமுதாய அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தி நகரில் உள்ள சகாய பள்ளியில் கார்த்திகா விஷன் கேர் ஆப்டிக்கல்ஸ் மூலம் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், குழந்தைகள், முதியோர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் பங்கேற்றவர்க ளுக்கு கண்பார்வை சோதனை, கண் அழுத்த சோதனை, கண்புரை, நீரழிவினால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இலவசமாக பரிசோதனை செய்யப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை கார்த்திகா விஷன் கேர் ஆப்டிக்கல்ஸ் மற்றும் பள்ளி தாளாளர் ஜோசப், தலைமையாசிரியர் ரஞ்சி ரூபிணி மற்றும் எம்.டி. சமுதாய அறக்கட்டளை நிறுவனர் டாக்டர்.ஜெரினா செய்திருந்தனர்.

    • மோகனூர் அரிமா சங்கம், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.
    • இதில் சுமார் 250 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 72 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மோகனூர் அரிமா சங்கம், நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. முகாமிற்கு அரிமா சங்கத் தலைவர் பிரபாகரன் தலைமை வகித்தார். மாவட்ட துணை ஆளுநர் தமிழ்மணி, 2-ம் துணை ஆளுநர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரிமா சங்க செயலாளர் வினோத் வரவேற்றார். செயலாளர்( சேவை) சரவணன் அறிமுக உரை யாற்றினார். முகாமில் மாவட்ட கண்ணொளி திட்ட தலைவர் விஸ்வநாதன் முகாமை தொடங்கி வைத்தார். ஜி. எல்.டி. ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், மோகனூர் சுப்பிரமணியம் கல்லூரியின் சேர்மேனும் ,லியோ கிளப்ஸ் மாவட்ட தலைவருமான பழனியாண்டி, உன்னியூர் எஸ்.எஸ்.பாலிடெக்னிக் மருத்துவமனை நிர்வாக இயக்குனரும் , மாவட்ட தலைவருமான டாக்டர் செந்தில்ஆண்டவன், மோகனூர் அரிமா சங்க கண்ணொளி திட்ட தலைவர் டாக்டர் சந்திரமோகன், மாவட்ட தலைவர் ராமலிங்கம் ,மண்டல தலைவர் தனபால், வட்டாரத் தலைவர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    முகாம் முடிவில் பொருளாளர் என்ஜினியர் சக்கரவர்த்தி நன்றி கூறினார். இதில் சுமார் 250 நபர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 72 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு பெண்கள் மேல் நிலைப்பள்ளிப் பள்ளியில் இருந்து பேருந்து மூலம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

    • முகாமில் கண்புரை உள்ள நோயாளிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சைக்கு தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
    • கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி பார்வை இழப்பு சங்கத்தின் உதவியுடன் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை,பாரத் கேஸ் விநியோகஸ்தர் வேலவன் கேஸ் நிறுவனம் மற்றும் விவேகானந்தா கேந்திரம் கோவில்பட்டி கிளை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் திருச்செந்தூர் தனியார் மடத்தில் வைத்து நடைபெற்றது. சுப்புலெட்சுமி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    முகாமில் கண்புரை உள்ள நோயாளிகள் 20-க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சைக்கு தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    முகாமில் வந்திருந்த பயனாளிகளுக்கு சர்க்கரை நோய், கண் நீர் அழுத்த நோய், குழந்தைகளுக்கு கண் நோய் பரிசோதனை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து கண்ணாடிகள் இலவசமாக வழங்கப்பட்டது. விவேகானந்த கேந்திர பொறுப்பாளர் பரமகுரு நன்றி கூறினார்.

    • குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் மற்றும் ராஜா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • இந்த முகாமில் 220 பேர் பங்கேற்று பயன்பெற்றனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அபெக்ஸ் சங்கம் மற்றும் ராஜா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

    இதில் சங்க தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தேசிய தலைவர் இளங்கோ முகாமை தொடக்கி வைத்தார்.

    டாக்டர் கிருஷ்ணமூர்த்தி குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சர்க்கரை அளவு, ரத்த பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவை இலவசமாக பார்க்கப்பட்டது.

    இந்த முகாமில் 220 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். மேலும் முன்னாள் குளோபல் சேர்மன் ஈஸ்வர், முன்னாள் தலைவர்கள் மனோகர், சம்பத்குமார், சந்திரன், பன்னீர்செல்வம், தனசேகர், சண்முகம்,விஜயபிரதாப் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    • ராமநாதபுரத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • இதில் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இலவச கண் கண்ணாடியை பெற்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பி. வி.எம். அறக்கட்டளை மருத்துவ சேவை அணி சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் மற்றும் ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வழங்கிய ரூ.900 மதிப்புள்ள தைராய்டு மற்றும் சர்க்கரை இலவச ரத்த பரிசோதனை முகாம் நடந்தது.

    இலவச மருத்துவ பரிசோதனை முகாமிற்கு பி.வி.எம். அறக்கட்டளை மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் யாசர் அராபத் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் அன்வர் அலி வரவேற்றார்.

    பி.வி.எம். அறக்கட்டளை சேர்மன் அப்துல் ரசாக் அறிமுக உரை நிகழ்த்தினார். முகாமை முன்னாள் வக்பு வாரிய தலைவர் ஹைதர் அலி, ராமநாதபுரம் நகராட்சி சேர்மன் கார்மேகம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பி.வி எம். அறக்கட்டளை தலைவர் மற்றும் புதுமடம் வடக்கு தெரு ஜமாத் முன்னாள் தலைவர் பக்கீர் முகமது, பொதுச்செயலாளர் ஹமீது, திட்ட இயக்குனர் சித்தார்கோட்டை ஜமாத் முன்னாள் தலைவர் அல்தாப் உசேன் முன்னிலை வகித்தனர். செய்யது முகம்மது அறக்கட்டளை சேர்மன் சுல்தான் தொகுத்து வழங்கினார். இதில் ராமநாதபுரத்தில் முதன் முறையாக கண் பரிசோதனை செய்யப்பட்டவர்களில் கண்ணாடி தேவை என டாக்டர் பரிந்துரை செய்தவர்களுக்கு இலவசமாக கண்ணாடி வழங்கப்பட்டது.

    சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இலவச கண் கண்ணாடியை பெற்றனர். இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கண் மற்றும் தைராய்டு சர்க்கரை பரிசோதனை செய்து கொண்டனர்.

    ராமநாதபுரம் நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம், ஆசி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சேர்மன் டாக்டர் ஆசிக் அமீன், டாக்டர் புரோஸ்கான், பொட்டகவயல் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹக்கீம், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, நகராட்சி தி.மு.க.கவுன்சிலர்கள் முகமது ஜஹாங்கீர், காளி, ராமநாதன், எஸ்.டி.பி.ஐ, மாவட்ட பொருளாளர் நஜிமுதீன், சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் ராமமூர்த்தி, கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு நிர்வாகி சீனி இப்ராஹிம், பா.ம.க, மாவட்ட செயலாளர் ஹக்கீம், ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் புவனேஸ்வரன், எஸ்.டி.பி.ஐ.மாவட்ட தொண்டரணி தலைவர் சகுபர் சாதிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை பி.வி.எம் அறக்கட்டளை மருத்துவ அணி தலைவர் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் செய்திருந்தனர். முகமது கனி நன்றி கூறினார்.

    ×