search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கிராம மக்கள் எதிர்ப்பு"

    • அந்த நிலத்தின் உரிமையாளர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தை விற்பதாக கூறி கம்பி வேலி அமைத்தார்.
    • இந்நிலையில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் தாசில்தார் மற்றும் வடமதுரை இன்ஸ்பெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள புச்சம்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டி (வயது 85). இவர் வயது மூப்பின் காரணமாக இறந்து விட்டார். இவரது உடலை பக்கத்து தோட்டத்தின் வழியாக எடுத்துச் செல்ல ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த நிலத்தின் உரிமையாளர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தை விற்பதாக கூறி கம்பி வேலி அமைத்தார்.

    இதனால் அப்போதே பொதுமக்கள் கம்பி வேலியை அடித்து நொறுக்கினர். இந்நிலையில் இறந்தவர் உடலை எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததால் தாசில்தார் மற்றும் வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகனிடம் புகார் அளிக்கப்பட்டது.

    அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்ைத நடந்து கொண்டு இருந்தபோதே இறந்தவர் குடும்பத்தினர் கம்பி வேலியை தாண்டி உடலை எடுத்துச் ெசன்றனர். மேலும் அவரது உடலையும் மயானத்தில் அடக்கம் செய்தனர்.

    இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் நிலத்தின் உரிமையாளர் புகார் அளித்தால் அரசின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மதுரை பாலமேடு அருகே மத்திய சிறைச்சாலை அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • 3 வீடுகள், போர்வெல் போடப்பட்ட இடம் உள்ளிட்டவைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

    மதுரை

    மதுரை அரசரடி பகுதி யில் உள்ள மத்திய சிறைச்சாலை கடந்த 1865-ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத் தில் கட்டப்பட்டதா கும். 158 ஆண்டுகள் பழமையான இந்த சிறையில் தற்போது 1,600-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள் ளனர். இதன் வளாகத்தி லேயே செயல்படும் பெண்கள் சிறையிலும் 100-க்கும் மேற்பட்டோர் இருக்கிறார்கள்.

    மக்கள் ெதாகை அதிகரிப்புக்கு ஏற்ப பெருகும் வாகன போக்குவரத்தால் கடுமையான நெருக்கடி மதுரை நகர் பகுதியில் ஏற்படுவது தடுக்க முடியா ததாகி விட்டது. இதனால் மதுரை மத்திய சிறைச்சா லையை புறநகர் பகுதுக்கு மாற்ற வேண்டும் என்று ஒட்டுமொத்த கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

    அதன்படி தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டு மதுரை மத்திய சிறைச்சா லையை புறநகர் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்தது. அதன்படி மதுரை -திருவாதவூர் சாலையில் இடையபட்டி கிராமத்தில் மலையடிவார பகுதியில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் புதிய சிறைச்சாலை அமைக்க இடம் தேர்வானது. இங்கு சென்னை புழல் சிறைக்கு நிகரான வசதிகளுடன் ரூ.400 கோடியில் சிறை வளாகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

    ஆனால் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இடை யபட்டியில் மத்திய சிறை அமைக்கும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட் டது. பின்னர் பாலமேடு அருகில் உள்ள தெத்தூர் கிராமத்துக்கு மதுரை மத்திய சிறை வளாகத்தை கொண்டு செல்ல திட்டமிட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

    இந்தநிலையில் தெத்தூர் கிராமத்திலும் சிறை வளாகம் அமைக்க அப்பகுதியினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் தமிழக அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் சுமார் 200 ஏக்கருக்கும் மேல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானோருக்கு பட்டாவும் வழங்கப்பட்டு விட்டது.

    தற்போது அந்த இடத்தை தேர்வு செய்து சிறைச்சாலை அமைக்கப்போவதாக கூறு வது கண்டனத்திற்கு ரியது. எனவே உடனடியாக தெத் தூர் பகுதியில் மத்திய சிறை வளாகம் அமைக்கும் முயற் சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று தெத்தூர் கிராமத்துக்கு போலீஸ் படையுடன் சென்ற குழுவி னர் சிறை வளாகம் அமைய வுள்ள இடத்தில் ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி யில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி 3 வீடுகள், போர்வெல் போடப்பட்ட இடம் உள்ளிட்டவைகளில் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. மேலும் அங்கு போடப்பட்டி ருந்த கம்பி வேலிகளும் பெயர்த்து எடுக்கப்பட்டன. இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்திவிட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடு பட்டு வருகிறார்கள். மேலும் இந்த இடம் புறம்போக்கு நிலம் என்றும் போலீசார் தெரி–வித்துள்ளனர்.

    • செல்போன் டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    • செல்போன் டவரால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நிலை பாதிப்பு ஏற்படும். எனவே இதனை அமைக்க விடமாட்டாம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கசவநல்லாத்தூர்,சுந்தர கணேசன் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கடம்பத்தூர் துணை மின் நிலையம் அருகே தனியார் நிறுவனத்தினர் செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் செல்போன் டவர் அமைக்கும் பணியை இரவில் தொடர்ந்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்றுகாலை செல்போன் டவர் அமைக்கப்படும் இடத்தை முற்றுகையிட்டனர். மேலும் கடம்பத்தூர்-பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன், திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் கடம்பத்தூர் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து பணி நடந்து வருகிறது. செல்போன் டவரால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நிலை பாதிப்பு ஏற்படும். எனவே இதனை அமைக்க விடமாட்டாம். பணி தொடர்ந்தால் போராட்டம் தீவிரம் அடையும் என்றனர்.

    • 8 கல்குவாரிகளால் கிராம மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
    • குவாரி வருவதை தடுக்க நாங்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பஞ்சாட்சிபுரம் மற்றும் கோபனபள்ளி பகுதியில் புதிதாக தனியார் கல்குவாரிகள் தொடங்கப்படுவது தொடர்பாக, மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

    ஓசூர் அருகே நாகொண்டபள்ளியில் ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு , ஓசூர் ச.ப்- கலெக்டர் சரண்யா தலைமை தாங்கினார். மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

    இதில், கொரட்டகிரி, தண்டரை, அடவி சாமிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டு, "ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள 8 கல்குவாரிகளால் கிராம மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.

    குடிநீர் மாசடைந்து, ஆடுமாடுகள் கூட உயிரிழக்கும் நிலை இருந்து வருகிறது. வீடுகளில் விரிசல் ஏற்படுகின்றன. குவாரிகளுக்கு சரமாரியாக வந்து செல்லும் டிப்பர் வாகனங்களால் பள்ளி குழந்தைகளும் சாலையில் நடந்து செல்லமுடியாத நிலை உள்ளது.

    இந்த நிலையில் மேலும் ஒரு குவாரிக்கு அனுமதி வழங்கினால், நாங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை.

    குவாரி வருவதை தடுக்க நாங்கள் மிகப்பெரிய போராட்ட த்தில் ஈடுபடுவோம் என்று ஆக்ரோஷத்துடன் கூறினர். மேலும், உதவி கலெக்டரிடம் உருக்கமாக முறையிட்டு, மனு வழங்கினர். இதன் காரணமாக, அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைதொடர்ந்து, கோபனபள்ளி கிராமத்தில் அமையவுள்ள புதிய தனியார் கல்குவாரி தொடர்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில், எந்த வித எதிர்ப்புமின்றி, கோபனபள்ளி பகுதி மக்கள், புதிய கல்குவாரிக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.

    புதிய கல்குவாரிகள் தொடங்குவது தொடர்பான கிராம மக்களின் கருத்துக்களை கேட்டறிந்த சப்- கலெக்டர் சரண்யா, கிராம மக்களின் கருத்துக்கள் மற்றும் புகார்களை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரகத்துக்கு மேல் நடவடிக்கை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.

    • ஓடையில் நீர் நிலையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.
    • ஜேசிபி இயந்திரம் மூலம் வந்ததினால் அதிர்ச்சி அடைந்து ஒன்றிணைந்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்டது சென்ராயன் கொட்டாய் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் ஏலகிரி பெரிய ஏரி பகுதியில் இருந்து நாகவதி அணைக்கு நீர் செல்லக்கூடிய நீர் ஓடை உள்ளது. இந்த ஓடையில் வேடம்பள்ளம் பகுதியில் நீர் நிலையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    இதனடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நல்லம்பள்ளி தாசில்தார் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் ஆகியோர் வேடம்பள்ளம் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை அளவீடு செய்வதற்கு நேற்று சென்றனர். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் வந்ததினால் அதிர்ச்சி அடைந்து ஒன்றிணைந்தனர். அதன் பிறகு நீர்ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மட்டுமே அகற்ற வேண்டும் தனி நபர்களுக்காக சாலை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு தாசில்தார் நீர் ஓடைப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலங்களை மட்டுமே அளவீடு செய்து அகற்ற வந்துள்ளோம், சாலை போடுவதற்கு நாங்கள் வரவில்லை என கூறினார்.

    அதன் பிறகு ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்த பிறகு அதனை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் எடுக்க வேண்டாம் நாங்களே எடுத்துக் கொள்கிறோம் என ஆக்கிரமிப்பு செய்திருந்த விவசாயிகள் தெரிவித்ததால் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். மேலும் ஏலகிரியில் இருந்து ஓமல்நத்தம் பகுதி வரை இந்த நீரோடை பகுதியில் இரு புறங்களிலும் அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை அளவீடு செய்து அதற்கு தடுப்பணைகள் கட்டினால் அதிக அளவிலான தண்ணீர் தேக்கி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடியும் என அப்பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் கூறுகின்றனர். அதைத் தவிர்த்து ஒரு சில நபர்களுக்காக ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த அளவீடு பணிகள் நடப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அளவிடு பணி நடந்த இடத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூடியதால் தொப்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை
    • எதிர்ப்பால் பணிகள் நிறுத்தப்பட்டது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சி புவனேஸ்வரிபேட்டை முருகன்நகர் பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று அங்கு செல்போன் டவர் அமைப்பதற்கான ஆரம்பப்ப பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார், குடியாத்தம் ஒன்றியகுழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் அமுதாலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத்தலைவர் அஜீஸ் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என அப்பகுதி பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் அனுமதி பெற்ற பின்னரே செல் செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.

    இப்பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பு இருப்பதால் செல்போன் டவர் அமைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு செல்போன் டவர் அமைக்கும் ஆரம்ப பணிகள் நிறுத்தப்பட்டது.

    • உசிலம்பட்டி அருகே கண்மாய்கள் ஏலத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இதையொட்டி உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் குப்பணம்பட்டி பொதுப்பணித்துறை அலு வலகத்தில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள கண்மாய்கள் மீன் பிடி குத்தகை ஏலம் விடப்பட்டது.

    இதில் பொதுப்பணி த்துறை உதவி பொறியா ளர்கள் செல்லையா, கோவிந்தராஜ், பணி ஆய்வாளர் ஒச்சுக்காளை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏலம் நடத்தினர்.

    இதில் செல்லம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு கண்மாய்கள், வாலாந்தூர் முதலைக்குளம், விண்ணகுடி உள்பட பல்வேறு கண்மாய்கள் ஏலம் விடப்பட்டது. இதில் விக்கிரமங்கலம், நடுமுதலைக்குளம், செல்லப்பன் கோட்டை கண்மாய் மற்றும் பல்வேறு கண்மாய்கள் ஏலம் ரத்து செய்யப்பட்டது.

    நடுமுதலைக்குளம் கண்மாய் ஏலம் நடத்தக்கூடாது என கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் வந்து ஏலத்தை நிறுத்தி வைக்க கோரியும், கண்மாய் ஏலம் நடத்தக்கூடாது எனவும், குப்பணம்பட்டி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.

    இதைத்தொடர்ந்து நடுமுதலைக்குளம் கண்மாய் ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது.கண்மாய்கள் ஏலம் தொடர்பாக இரு தரப்பின ருக்கிடையே தகராறு ஏற்பட்டது. போலீசார் சமரசம் செய்தனர். இதையொட்டி உசிலம்பட்டி டி.எஸ்.பி. நல்லு தலைமையில் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கனிம வளங்களை வெட்டி எடுப்பதால் நீர் வளம் அனைத்தும் பாதாளத்திற்கு சென்று விட்டது.
    • 12 கிராம மக்களும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனு கொடுத்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

    தருமபுரி,

    பாலக்கோடு அடுத்த சூடனூர் பஞ்சாயத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடும் கல்குவாரிகளை தடுத்த நிறுத்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:-

    பாலக்கோடு அடுத்த சூடனூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சூடனூர், சூடனூர் காலனி, எம்ஜிஆர் நகர், சாத்தன கொட்டாய், கூலிக்கனூர், காமராஜ் நகர், எக்காண்டஅள்ளி, செட்டிப்பட்டி, நாகனூர், செட்டிப்பட்டி கூட்ரோடு, கலைஞர் நகர், உள்ளிட்ட 12 கிராமங்கள் உள்ளது.

    12 கிராமத்திலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ளனர். இங்கு வசிக்கும் பொது மக்களுக்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருவது விவசாயம்.

    இந்த விவசாயத்தை நம்பி தான் பொதுமக்களாகிய நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அனைவரது வீடுகளிலும் கால்நடைகள் உள்ளன. இந்த கால்நடைகளை அருகாமையில் உள்ள பெரிய கரடு உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு ஓட்டிச் சென்று வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறோம்.

    எங்களுக்கு வாழ்வா தாரமாக திகழும் பெரிய கரடு மற்றும் காமராஜ் நகர் பகுதியில் உள்ள மலைகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தின் கிழக்கு பகுதியான நாகனூர் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள காடுகளை அழித்து 300 அடி ஆழத்திற்கும் மேல் கனிம வளங்களை வெட்டி எடுப்பதால் நீர் வளம் அனைத்தும் பாதாளத்திற்கு சென்று விட்டது.

    பஞ்சாயத்தின் நான்கு புறங்களிலும் கனிம வளத்தை வெடிவைத்து தகர்த்து எறிவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் கிராமங்களில் புகுந்து அச்சத்தை ஏற்படுத்துவதால் பயந்து வாழ்ந்து வருகிறோம் .எனவே மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் 12 கிராமங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சூடனூர் கிராமத்தில் நான்கு புறமும் செயல்படும் கல் குவாரிகளை தடுத்து நிறுத்தி எங்கள் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லையேல் தொடர்ந்து கல் குவாரிகள் இயங்கும் பட்சத்தில் 12 கிராம மக்களும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என மனு கொடுத்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

    ×