search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உறுப்பினர்"

    • சிவகங்கையில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் உள்ள அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர்-சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் தலைமையில் நடந்தது.

    முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் பேசுகையில், எடப்பாடி பழனிசாமி சிவகங்கை மாவட்டத்திற்கு வந்து சென்ற பின்னர் சோதனைகளை எல்லாம் தகர்த்து பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு சிவகங்கை மாவட்டம் பெற்ற புண்ணியமாகும் . சிவகங்கை மாவட்டத்தில் 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், நாகராஜன், நகரசெயலாளர் ராஜா, ஒன்றிய செய லாளர்கள் கருணாகரன், செல்வமணி, ஸ்டீபன்அருள்சாமி, சேவிவியர்தாஸ், சிவாஜி, கோபி, ஜெகதீஸ்வரன், பாரதிராஜன், சோனைரவி.

    மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன், கூட்டுறவு சங்க தலைவர் சங்கர் ராமநாதன், தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் குழந்தை, மாவட்ட பாசறை இணை செயலாளர் மோசஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் நிர்வாகிகளுக்கு வழங்கினார்.

    • கமுதியில் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாமை காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.
    • மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் வரவேற்றார்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் பஸ் நிலையம் முன்பு நடந்தது. மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். முதுகுளத்தூர் தொகுதி பொறுப்பாளரும், மதுரை முன்னாள் மேயருமான குழந்தைவேலு, முகாமை தொடங்கி வைத்தார். கமுதி பேரூர் செயலாளர் பாலமுருகன், வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் தமிழ் செல்விபோஸ், துணைத் தலைவர் சித்ராதேவி அய்யனார், ஊராட்சி மன்ற தலைவர் காவடிமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் நடந்த புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு மாவட்டச் செயலாளர் காதர்பாட்சாமுத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.தொகுதி பொறுப்பாளர் குழந்தைவேலு தொடங்கி வைத்தார்.மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் வரவேற்றார்.

    • சிவகங்கையில் தி.மு.க. உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடந்தது.
    • இதனை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளரும் நகர்மன்ற தலைவருமான துரைஆனந்த் ஏற்பாட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    மருத்துவர் யாழினி, மாவட்ட துணை செயலாளர்கள் சேங்கைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், அயூப்கான், விஜயகுமார், துபாய்காந்தி, ராஜபாண்டி, சரவணன், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பெற்றுக்கொண்டனர்.

    • உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
    • 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நாகர் கோவில் பால் பண்ணை சந்திப்பில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் முன்னிலை வகித்தார்.

    உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்களை பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளரிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் எப்.எம்.ராஜரத்தினம், நாகர்கோவில் தொகுதி பொறுப்பாளர் விஜிலா சத்யானந்த், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகராட்சி துணைமேயர் மேரி பிரின்சிலதா, மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம், மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் ஷேக்மீரான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் சென்னை யில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது.

    3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப் பட்டு வருகிறது. ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத் திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. படுக்கை வசதிகளும் போதுமான அளவு இருப்பு உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. நாம் கொேரானா பரவலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். 2021-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப துறை ஒற்றை இலக்க எண்ணில் தான் வளர்ச்சி பெற்றிருந்தது. தற்போது அந்த இலக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது. 2023-ம் ஆண்டு 26.6 சதவீத இலக்கை எட்டி உள்ளது.

    கருணாநிதி ஆட்சியில் ஐ.டி. பிரிவில் புரட்சி இருந்து வந்த நிலையில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறியுள்ளார். தவளை சத்தம் போட்டு மழை பெய்யுமா என்பதை நீங்களே புரிந்து கொள்ள வேண்டும். மடியில் கனம் இருந்தால் மனதில் பயம் இருக்க வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நாகர்கோவில் நடந்த தோள்சீலை போராட்ட மாநாட்டில் கலந்து கொண்டார். கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார். சாதியை பிளவுபடுத்தி சிலர் கழுத்தை அறுக்க நினைக்கிறார்கள். இதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு கொள்கையும் கோட்பாடும் கிடையாது. ராகுல்காந்தி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பார்த்து ஊரே சிரிக்கிறது. முட்டாள் தனமான இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு அப்பில் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி தொகுதிக் கான உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி தென்பகராமன் புதூரில் நடந்தது.கன்னியாகுமரி தொகுதி பொறுப்பாளர் நம்பி கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை நடத்தினார். குளச்சல் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அருண் அந்த தொகு திக்குட்பட்ட பகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை நடத்தினார்.

    • தி.மு.க.வில் அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • ஜூன் 3-ந்தேதி கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம் காரைக்குடியில் உள்ள கலைஞர் பவள விழா மாளிகையில் நடைபெற்றது.மாவட்ட அவைத்தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார்.

    கூட்டுறவுத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமாகிய கே.ஆர்.பெரிய கருப்பன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    கடந்த வாரம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியபோது வருகிற ஜூன் 3-ந்தேதி கலைஞரின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது.

    வருடம் முழுவதும் நாம் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும். மேலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் சுமார் 2 கோடி வாக்குகளை பெற்றோம். நம் உறுப்பி னர்கள் ஒரு கோடி பேர் தவிர நடுநிலையாளர்கள், பொதுமக்கள் 1 கோடி பேர் நமக்கு வாக்களித்துள் ளார்கள். அந்த 1 கோடி பேரையும் நமது கழக உறுப்பினர்களாக மாற்ற வேண்டும்.

    நமது மாவட்டத்தில் சுமார் 2 இலட்சம் புதிய உறுப்பினர்களை வருகிற ஏப்ரல் 3 முதல் ஜூன் 3-ந்தேதிக்குள் அவசியம் சேர்த்தாக வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் பாராளுமன்ற தேர்த லுக்கான சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் வி.பி.ராஜன் (திருப்பத்தூர்), மருத்துவர் யாழினி (சிவகங்கை), வழக்கறிஞர் தினேஷ் (மானாமதுரை) ஆகியோர் அறிமுக உரை நிகழ்த்தினார்கள்.இதில் மாவட்ட துணை செய லாளர்கள் சேங்கை மாறன், ஜோன்ஸ்ரூசோ, மணிமுத்து, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் செந்தில் குமார், மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி, ஒன்றிய செயலாளர்கள் டாக்டர்.ஆனந்த், சின்னத் துரை, நெடுஞ்செழியன், தேவகோட்டை நகர செயலாளர் பெரி.பாலா, பொதுக்குழு உறுப்பினர்கள் அசோகன், பள்ளத்தூர் ரவி, தெய்வானை இளமாறன், ஒன்றிய துணை செயலாளர் சத்யாராஜா, நகர்மன்ற உறுப்பினர் திவ்யா காரைசக்தி, கொத்தமங்கலம் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். காரைக்குடி நகர செயலாளர் குணசேக ரன் நன்றி கூறினார்.

    • ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்
    • கலைஞர் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. தலைமை அலுவல கத்தில், மாவட்ட, மாநகர, ஒன்றிய நகர, பகுதி மற்றும் வட்ட செயலாளர்கள், அமைப்பாளர்கள் ஆலோச னைக் கூட்டம் நடைபெற் றது.கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் எப்.எம். ராஜரத்தினம் தலைமை தாங்கினார். மாவட்ட செய லாரும் மேயருமான மகேஷ் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர் களை தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார். இதன்படி, நாம் ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி ஜூன் 3-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு விழா தொடங் குவதற்குள், ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

    மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நாம் வீடு வீடாக சென்று சந்தித்தாலே போதும், ஒரு வாரத்தில் பொறுப்பாளர் கள் அவர்கள் இலக்கை எட் டிவிட முடியும். இதுபோல் 100 வாக்காளர்களுக்கு ஒரு நபர் என்ற முறையில் பூத் கமிட்டி படிவங்களை பெற்று ஏப்ரல் 5-ந்தேதிக்குள் மாநில தலைமைக்கு அனுப்பிவைக்கவேண்டும். இதற்காக பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு 16 பேரை டிக் செய்து, அதில் 8 பேரை தேர்வு செய்யலாம்.

    இதனை மேற்பார்வை செய்ய 3 பேர் குழுவை மாநில தலைமை அறிவித் துள்ளது. மேலும், யார் யார் என்கிற பட்டியலும் மாநில தலைமையே அறிவித்து பட் டியல் அனுப்பியுள்ளது. ஏப் ரல் 3-ந்தேதி நம் தலைவர் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை தொடங்கியதும், நாமும் சுறுசுறுப்பாக இந்த பணியில் ஈடுபட வேண்டும். ஜூன் 3-ந்தேதியிலிருந்து, கலைஞர் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் கலைஞரின் பெயரை உச்சரிக்க வேண்டும்.

    இதற்காக தலைவரின் உத்தரவுப்படி கட்அவுட் வைக்க கூடாது. அதற்கு பதிலாக துண்டு பிரசு ரங்கள், சுவர்விளம்பரங் கள் என மேற்கொள்ளலாம். மாவட்ட தி.மு.க. சார்பில் பட்டிமன்றம், நலத்திட்ட உத விகள் வழங்குதல், இலவச மருத்துவ முகாம்கள், மாற்று திறனாளிகளுக்கு அறுசுவை உணவுகள், கலை நிகழ்ச்சிகள், கலை போட்டிகள் போன்றவை நடத்தப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் பேசி னார். தொடர்ந்து, தொகுதி மேலிட பார்வையாளர்க ளான மாநில மகளிர் தொண்டரணி மாநில துணைசெயலாளர் விஜிலா சத்தியானந்த் (நாகர்கோ வில்), மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் அருண் (குளச்சல்), விளை யாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் நம்பி (கன்னியாகுமரி) ஆகியோர் பேசினர்.

    நிகழ்ச்சியில், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாவட்ட துணை செயலா ளர் பூதலிங்கம்பிள்ளை, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பார்த்த சாரதி, தாமரைபாரதி, சதாசிவம், ஒன்றிய செய லாளர்கள் பிராங்கி ளின், மதியழகன், பாபு, சுரேந்திர குமார், லிவிங்ஸ்டன், மாந கர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் ஜவ கர், ஷேக்மீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார்,
    • கூட்டுறவு துறையினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத்துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள் பெற்ற கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் அ.லட்சுமணன் தலைமையில் திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல குழு தலைவர் இல.பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறையின் இணை பதிவாளர் எஸ்.சீனிவாசன் வரவேற்று பேசினார், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளை சேர்ந்த 103 மகளிர் சுய குழுக்களை சேர்ந்த ஆயிரத்து 31 நபர்களுக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்திற்கான கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மொத்தம் ரூ. 5 லட்சத்து 42 ஆயிரத்து 541 மதிப்பிலான 3 நபர்களுக்கு பேட்டரி வீல் சேர், 9 நபர்களுக்கு செல்போன், 15 நபர்களுக்கு தையல் எந்திரம் என மொத்தம் 27 நபர்களுக்கு வழங்கினார்.

    முன்னதாக வெள்ளகோவில் ஒன்றியம், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சியில் சடையப்பா நகர் மற்றும் கொங்கு நகர் ஆகிய பகுதிகளில் பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நகர் மன்ற தலைவர் மு.கனியரசிமுத்துக்குமார். திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராசி கே. ஆர்.முத்துக்குமார், ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகரன், நகர செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்,வருவாய்த்துறையினர், கூட்டுறவு துறையினர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வரும் நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியை தி.மு.க. வெற்றி பெறபாடுபட வேண்டும்.
    • மயிலாடுதுறை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரப்படுத்த வேண்டும்.

    சீர்காழி;

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வைத்தார்.

    தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்துமகேந்திரன், ஜி. என்.ரவி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் வரவேற்றார். மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் கலந்து கொண்டு பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியை தி.மு.க. வெற்றி பெறபாடுபட வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர படுத்த வேண்டும் என்றார்

    கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன் ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன் மலர்விழி திருமாவளவன்,ரவிக்குமார் ரவிக்குமார் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர்கள் ஆனந்தன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜிபையர் அகமது, நிர்வாகிகள் துரைராஜன், சசிகுமார், குலோத்துங்கன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது.
    • மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு.

    சீர்காழி:

    சீர்காழியில் திமுக மேற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர்கள் பஞ்சு.குமார், செல்ல. சேது. ர விக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் முத்து.மகேந்திரன், சாமிநாதன், செயற்குழு உறுப்பினர்கள் இராம.இளங்கோவன், ஜி.என்.ரவி, மாவட்ட பொருளாளர் மகா.அலெக்சாண்டர், நகர செயலாளர் சுப்பராயன் முன்னிலை வகித்தனர். கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம். கல்யாணம், சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று பேசினார்.

    தொடர்ந்து மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டபேரவை உறுப்பினருமான நிவேதா.முருகன் பங்கேற்று, புதிதாக பொறுப்பேற்ற பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை பெற்றிருக்கவேண்டும், கட்சியில் புதிதாக அதிகளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

    20 ஒன்றியங்களுக்கும் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குவது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக பேராசிரியர் அன்பழகன் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    பின்னர் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் தங்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.இதில் மாவட்ட நிர்வாகிகள் முருகன், செல்வமுத்துக்குமார், விஜயேஸ்வரன், முத்து குபேரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    நிறைவில் திட்டை ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி நன்றிக் கூறினார்.

    • திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
    • 30-ம் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை நடத்த வேண்டும்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் அருகே ஆலங்குடியில், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்க இடைக்கமிட்டி கூட்டம் ஒன்றிய தலைவர் மருதையன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் ரவி பேசினார்.

    மாவட்ட துணை செயலாளர் ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் விளக்க உரையாற்றினர். முடிவில் மருதையன் கூட்டத்தை நிறைவு செய்தார்.

    கூட்டத்தில், வருகிற 26-ம் தேதி வெண்மணி தியாகிகள் நினைவு தினம் குறித்து திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் கருத்தரங்கில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும், வருகிற 30-ம் தேதி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை நடத்த வேண்டும்.

    மேலும் ஜனவரி 6-ம் தேதி நடைபெற இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜி.எம். முருகையன் நினைவு தினத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர்சதாசிவம் தலைமையில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதி.செல்லபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தி.மு.க. கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாகை மாவட்ட செயலாளர்கவுதமன் ஆகியோர் அறிவுறுத்தலின்படி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மலர்வண்ண ன்வழிகாட்டுதல்படி, வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய செயலாளர்சதாசிவம் தலைமையில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது .

    நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோதி.செல்லபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சோழன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சத்தியமூர்த்தி , மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தாமோதரன் , மாணவரணி துணை அமைப்பாளர் செந்தாமரைச்செல்வன், அயலக அணி துணை அமைப்பாளர் சம்பத், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் மோகனா தசமணி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கலைக்கோவன், ஒன்றிய கழக அவைத் தலைவர் ஏகாம்பரம் , மாவட்ட பிரதிநிதிசெல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் சேதுராஜன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கவியரசன், ரெத்தினசாமி மற்றும் கத்தரிப்புலம், கிளை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

    • குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டம் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
    • குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகளை தடுப்பது எப்படி?

    மதுக்கூர்:

    மதுக்கூர் சிவக்கொல்லையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை சட்டம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு பற்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் அமுதா துரை.செந்தில் தலைமை வகித்தார்.

    மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர்/ வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ராஜூ, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) செல்வேந்திரன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் வன்கொடுமைகள், கொத்தடிமை தொழிலாளர், குழந்தை திருமணம் உள்ளிட்டவைகளை தடுப்பது எப்படி? என்று அலுவலர்கள் விளக்கமளித்தனர்.

    மேலும் குழந்தைகளுக்கு ஏற்படும் தீமையை தடுப்பது எப்படி என்பது பற்றிய விழிப்புணர்வும் நடைபெற்றது. முடிவில் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சின்னப்பா நன்றி கூறினார்.

    இதில் அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதி, சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×