search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேர்க்கை முகாம்"

    • நாளை 14-ந்தேதி (திங்கட்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற உள்ளது.
    • தொழில் பழகுநர்களுக்கான உதவித்தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப கிடைக்கும்.

    திருப்பூர்:

    பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் - தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மற்றும் மத்திய அரசின் பொது பயிற்சி இயக்ககம் இணைந்து நடத்தும் திருப்பூர் மாவட்ட அளவில் தொழில் பழகுநர்களுக்கான அப்ரண்டிஸ் சேர்க்கை முகாம் தாராபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை 14-ந்தேதி (திங்கட்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் மத்திய - மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோயம்புத்தூர் ,திருப்பூர் ,ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளனர்.

    இதில் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கிறது.

    தொழில் பழகுநர்களுக்கான உதவித்தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப கிடைக்கும். அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில்என்சிவிடி.எஸ்சிவிடி., திட்டத்தின் கீழ் தொழில் பயிற்சி பெற்றவர்கள் மற்றும் அடிப்படை பயிற்சியுடன் வேலைவாய்ப்பு பெற விருப்பமுள்ள 8,10,11மற்றும் 12-ம் வகுப்பு முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

    மேலும் விபரங்கள் அறியும் பொருட்டு பயிற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்கள், மாவட்ட உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், எண்- 115, 2வது தளம், காமாட்சியம்மன் கோவில் வீதி, பழையபேருந்து நிலையம் பின்புறம், திருப்பூர் என்ற முகவரியிலும், இம்மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை ( திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை ) ( 9499055695 ,0421-2230500, 9894783226 , 9499055700, 9499055696, 9944739810 , 9442178340 , 9842481456 ,770843777 , 9442651468) ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • சேர்மன் திவ்யா பிரபு, ஒன்றிய செயலாளர் ஜெகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய ஒன்றியங்கள் மற்றும் பேரூர்களில் அ.தி.மு.க. மகளிர் அணி, மற்றும் இளைஞர் இளம் பெண்கள் பாசறைகளுக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடந்தன. முகாமிற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.செந்தில்நாதன் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன், மாவட்ட ஊராட்சி குழு சேர்மன் பொன்மணி பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பிரபு, நகரச் செயலாளர் இப்ராஹிம்சா, திருப்பத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவமணி, துணைச் செயலாளர் சின்னையா, மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்களான சபா ராஜாமுகமது, ஆசிப் இக்பால், எம்ஜிஆர் மன்ற செயலாளர் முத்துகிருஷ்ணன், துணைச் செயலாளர் துலாவூர் பார்த்திபன், எஸ்.புதூர் சேர்மன் குமரன், ஒன்றிய செயலாளர் கருப்பையா, ராஜமாணிக்கம், துணைச் செயலாளர் கருப்பையா, சிங்கம்புணரி ஒன்றிய சேர்மன் திவ்யா பிரபு, ஒன்றிய செயலாளர் ஜெகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • சோழவந்தான் அருகே அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் மேற்குமாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் திருவேடகத்தில் நடந்தது. ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். திருவேடகம் கிளைச் செயலாளர் மணி முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சிறப்புரையாற்றி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.

    யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் தங்கப்பாண்டி, ராமலிங்கம், பேரூர் செயலாளர்கள் சோழவந்தான் முருகேசன், வாடிப்பட்டி அசோக்குமார், மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், துரை தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, மகளிரணி செயலாளர் லட்சுமி, மாவட்ட இணைச் செயலாளர் பஞ்சவர்ணம், முன்னாள் சேர்மன் முருகேசன், கவுன்சிலர்கள் கணேசன், சண்முக பாண்டியராஜா, ரேகா ராமச்சந்திரன், வசந்தி கணேசன், இளைஞரணி நகர செயலாளர் மணி, பேரூர் துணைச்செயலாளர் தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • எ.வ.வே. கம்பன் தொடங்கி வைத்தார்
    • 50 ஆயிரம் பேர் சேர்க்க வேண்டும்

    திருப்பத்தூர்,

    திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர், கந்திலி, ஒன்றியத்தில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி மாடப்பள்ளி, ப.முத்தம்பட்டி, நத்தம், ஆவநாயக்கன்பட்டி, ராஜாவூர் பகுதிகளில் நடைபெற்றது.

    சேர்க்கை படிவம்

    திருப்பத்தூர் ஒன்றிய செயலாளர் நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமை வகித்தார், ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் கே. ஏ. குணசேகரன், ஆர்.முருகேசன், கே. எஸ் ஏ.மோகன்ராஜ், முன்னிலை வகித்தனர், திருப்பத்தூர் தொகுதி பார்வையாளரும் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் எ.வ.வே.கம்பன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கினார். அவர் பேசியதாவது:-

    தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்தது கருணாநிதி, தற்போது தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 10-ம் வகுப்பு படித்து பிளஸ் 1, சேரும் மாணவிகளுக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை, 18 லட்சம் ஆரம்பக் கல்வி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு, சுய உதவிகளுக்கு குழுக்களுக்கு கடன் உதவி தொகை, நகை கடன் தள்ளுபடி 23 தொழிற்சங்கங்களை இணைத்து கட்டுமான சங்கம் உருவாக்கியது.

    திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் எஸ் ராஜேந்திரன் மாவட்ட துணைச் செயலாளர் டி. கே.மோகன், ஒன்றிய குழு தலைவர்கள் விஜியா அருணாச்சலம், திருமதி திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது.
    • சான்றிதழ் பெற்றவர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.

    ஈரோடு:

    தேசிய தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக ஈரோடு மாவட்ட அளவில் தொழில்பழகு நர்களுக்கான "பிரதம மந்திரியின் தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் ஈரோடு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 8-ந தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

    இம்முகாமில் அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று 500- க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்த 2017, 2018, 2019, 2020, 2021, மற்றும் 2022-ம் ஆண்டு அகில இந்திய தொழில் தேர்வில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் பங்கேற்று தேர்வு பெற்றவர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.

    தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலையில் முன்னுரிமை வழங்கப்படும்.

    மேலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.

    தற்போது தொழிற்பழகுநருக்கான உயர்த்தப்பட்ட உதவித்தொகை தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப வழங்கப்படும். ஐ.டி.ஐ பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் உரிய அசல் சான்றிதழ்களுடன் தொழிற்பழகுநர் முகாமில் பங்கேற்று பயன் அடையலாம்.

    மேலும் தகவலுக்கு உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஈரோடு என்ற முகவரி அல்லது 9442494266, 9443384133 எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

    • எண் 13 முதல் 20 வரைக்கு உள்ள 8-க்கு உட்பட்ட பூத் கமிட்டி மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.
    • புதிய உறுப்பினர்கள் சேர்த்து தேர்தலின் போது எவ்வாறு செயல்படுவது குறித்து பேசினர்.

    குண்டடம் :

    குண்டடத்தில் தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு குண்டடம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். ருத்ராவதி பேரூர் செயலாளர் அன்பரசு முன்னிலை வகித்து பேசினார்.

    முகாமில் ருத்ராவதி பேரூராட்சிக்கு உட்பட்ட 101 தாராபுரம் சட்டமன்ற தொகுதி பாக எண் 13 முதல் 20 வரைக்கு உள்ள 8-க்கு உட்பட்ட பூத் கமிட்டி மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. கூட்டத்தில் தாராபுரம் சட்ட மன்ற தொகுதி பார்வையாளர் கே.எம். நாகராஜன், மாவட்ட பொருளாளர் கே.எம்.முபாரக் அலி, மாவட்ட ஐ.டி. விங் பொறுப்பாளர் ஆனந்தி ஆகியோர் பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்த்து தேர்தலின் போது எவ்வாறு செயல்படுவது குறித்து பேசினர். இதில் பேரூர் வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை அருகே தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
    • திருவேடகத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் தி.மு.க. சார்பில் நடந்தது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள திருவேடகத்தில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் செயல் வீரர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர் சம்பத் முன்னிலை வகித்தார். இதில் வெங்கடேசன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றி கிளை நிர்வாகிகளிடம் உறுப்பினர் படிவங்களை வழங்கினார். ராஜா என்ற பெரியகருப்பன், கேபிள் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் வசந்தகோகிலா சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்தியபிரகாஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., பொறுப்பாளர் சம்பத் முன்னிலையில் வார்டு நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார். இதில் பேரூர் சேர்மன் ஜெயராமன், அவைதலைவர் தீர்த்தராமன், பொருளாளர் கண்ணன் பேரூர்துணை செயலாளர்கள் ஸ்டாலின், செந்தில், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, 1-வது வார்டு செயலாளர் அண்ணாதுரை, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் நகர தி.மு.க. சார்பில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் நகர திமுக சார்பில் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்றபுதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் கோட்டை தெரு பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு நகராட்சி துணைத்தலைவர் சபியுல்லா தலைமை வகித்தார், அனைவரையும் கலிபுல்லா வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக ஈரோடு இறைவன், திமுக நகர செயலாளரும் ஆவின் சேர்மன் எஸ்.ராஜேந்திரன், கலந்துகொண்டு புதிய உறுப்பினர்கள் படிவங்களை வழங்கிப் பேசினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் நகராட்சி கவுன்சிலர் அபூபக்கர், நூர் பேக், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
    • 3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நாகர் கோவில் பால் பண்ணை சந்திப்பில் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் ஜவகர் தலைமை தாங்கினார். நாகர்கோவில் மாநகராட்சி மேயரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் முன்னிலை வகித்தார்.

    உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவங்களை பகுதி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய செயலாளரிடம் அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் அவைத்தலைவர் எப்.எம்.ராஜரத்தினம், நாகர்கோவில் தொகுதி பொறுப்பாளர் விஜிலா சத்யானந்த், மாவட்ட பொருளாளர் கேட்சன், மாநகராட்சி துணைமேயர் மேரி பிரின்சிலதா, மாவட்ட துணைச் செயலாளர் பூதலிங்கம், மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர் ஷேக்மீரான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் சென்னை யில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை பணி நடைபெற்று வருகிறது.

    3 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப் பட்டு வருகிறது. ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத் திரி, தக்கலை அரசு ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. படுக்கை வசதிகளும் போதுமான அளவு இருப்பு உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. நாம் கொேரானா பரவலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். 2021-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப துறை ஒற்றை இலக்க எண்ணில் தான் வளர்ச்சி பெற்றிருந்தது. தற்போது அந்த இலக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது. 2023-ம் ஆண்டு 26.6 சதவீத இலக்கை எட்டி உள்ளது.

    கருணாநிதி ஆட்சியில் ஐ.டி. பிரிவில் புரட்சி இருந்து வந்த நிலையில் தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.

    பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறியுள்ளார். தவளை சத்தம் போட்டு மழை பெய்யுமா என்பதை நீங்களே புரிந்து கொள்ள வேண்டும். மடியில் கனம் இருந்தால் மனதில் பயம் இருக்க வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் நாகர்கோவில் நடந்த தோள்சீலை போராட்ட மாநாட்டில் கலந்து கொண்டார். கேரளாவில் நடந்த வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார். சாதியை பிளவுபடுத்தி சிலர் கழுத்தை அறுக்க நினைக்கிறார்கள். இதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு கொள்கையும் கோட்பாடும் கிடையாது. ராகுல்காந்தி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை பார்த்து ஊரே சிரிக்கிறது. முட்டாள் தனமான இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு அப்பில் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய பதவி பறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி தொகுதிக் கான உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி தென்பகராமன் புதூரில் நடந்தது.கன்னியாகுமரி தொகுதி பொறுப்பாளர் நம்பி கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை நடத்தினார். குளச்சல் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அருண் அந்த தொகு திக்குட்பட்ட பகுதியில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியை நடத்தினார்.

    • மதுரை மண்டலத்தில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவல் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மண்டலத்தில் ஐ.டி.ஐ.-ல் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.30மணி முதல் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான மண்டல அளவிலான (மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மாவட்டம்) தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் மதுரை மூன்று மாவடியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதி வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவ னங்களுக்கு தேவையான தொழில்பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    இதில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் ஐ.டி.ஐ. தேர்ச்சி சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்கலாம்.

    தொழிற்பழகுநராக தேர்வு செய்யப்படும் ஐ.டி.ஐ பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ.7 ஆயிரத்து 700 முதல் 8 ஆயிரத்து 50 வரை வழங்கப்படும்.

    தொழிற்பழகுநர் பயிற்சியின் முடிவில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழும் வழங்கப்படும்.இந்த முகாம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர் விடுதி வளாகம், மூன்று மாவடி, மதுரை என்ற முகவரியில் இயங்கி வரும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக தொலைபேசி எண்.(94990 55748, 63831 93760, 99948 97402, 86100 78848)-க்கு தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

    மேற்கண்ட தகவல் மாவட்ட திறன்பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் ேததி வரை புதிய உறுப்பினர்கள் சேர்வதற்கான முகாம் சங்க வளாகத்தில் நடக்க உள்ளது.
    • புதிய உறுப்பினர்களாக சேர்ந்து தேவைப்படும் கடனுக்குரிய கடனை மனுவை சமர்ப்பித்து கடன் பெற்று கொள்ளலாம்.

    ஊட்டி,

    நீலகிரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கீழ்க்கண்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வருகிற 28-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் ே ததி வரை புதிய உறுப்பினர்கள் சேர்வதற்கான முகாம் சங்க வளாகத்தில் நடக்க உள்ளது. இந்த முகாமில் இதுவரை உறுப்பினராக சேராமல் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது ஆதார்நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அளித்து உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

    ஜெகதளா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், ஆலட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கவரட்டி ஸ்ரீவேல்முருகன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கன்னேரி மந்தனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மூரட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், எடக்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகியவற்றில் புதிய உறுப்பினர் முகாம் நடைபெறும்.

    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்கடன், மத்திய கால கடன், கால்நடை பராமரிப்பு கடன், மாற்று திறனாளிகளுக்கான கடன், சுய உதவிக்குழு கடன் மற்றும் நகைக்கடன் வழங்கப்படுகிறது. நில உடமை தொடர்பான சிட்டா, பயிர்க்கடன் தொடர்பான தாசில்தாரின் அனுபோன சான்றிதழ் மற்றும் அடங்கல், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகியவற்றை அளித்து பயிர்க்கடன் பெற்று கொள்ளலாம். எனவே அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டு புதிய உறுப்பினர்களாக சேர்ந்து தேவைப்படும் கடனுக்குரிய கடனை மனுவை சமர்ப்பித்து கடன் பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் வருகிற 11-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
    • முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகுநர்களை தேர்வு செய்து பயன்பெறலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளி–யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் மற்றும் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, நாமக்கல் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாமக்கல் வளாகத்தில் வருகிற 11-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    அரசு, தனியார் தொழிற்– பயிற்சி நிலை–யங்க–ளில் ஐ.டி.ஐ பயின்று வெற்றிகரமாக பயிற்சியினை நிறைவு செய்து இதுநாள் வரை தொழிற்–பழகுநர் பயிற்சியினை மேற்கொள்ளாத பயிற்சியா–ளர்கள் மற்றும் பட்டய படிப்பு , பொறியியல் படிப்பு, பட்டப் படிப்பு பயின்ற–வர்கள் தங்களது கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ –-2 , ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற் சான்றிதழ் (COE தொழிற்பிரிவு சான்றிதழ்கள் உட்பட) ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்று தொழிற்பழகுநர்களாக சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்–நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற்பழகு–நர்களின் எண்ணிக்கையை நிறைவு செய்திடும் பொருட்டு உரிய நிறுவன பதாகைகளுடன் இம்முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகு நர்களை தேர்வு செய்து பயன்பெறலாம்.

    மேலும் விபரங்களை அறியும் பொருட்டு நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டி அஞ்சல் கொண்டி–செட்டிப்பட்டியில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநரை நேரிலும் மற்றும் தொலைபேசி 04286 - 290297 வாயிலாகவும் தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×