search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்ணாவிரதம்"

    • திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்பு
    • தமிழக முதல்அமைச்சர் நேரடியாக தலையிடும்வரை தொடர்போராட்டம் நடத்த முடிவு

    கோவை,

    தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதன்ஒருபகுதியாக தொழில் துறையினருக்கான நிலைகட்டணம், பீக்ஹவர் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதனை திரும்ப பெற வேண்டும் என தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறு-குறு தொழில் முனைவோர் இணைந்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமை ப்பு ஒன்எறை உருவாக்கி உள்ளனர்.

    இந்த அமைப்பின் சார்பில் கோவை மாவட்டம் காரணம்பேட்டையில் இன்று அடையாள உண்ணா விரத போராட்டம் நடந்தது.

    இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரத போராட்ட த்தில்நிலை கட்டணம் உயர்வு, பீக்ஹவர் கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.இதுகுறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், ஒழுங்குமுறை ஆணையம், தமிழக அமைச்சர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. எனவே தமிழக முதல் அமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும். அது வரை தொடர்போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.

    • தேயிலை இலைகளை காதில் தொங்க விட்டு நூதன போராட்டம்
    • ஊட்டியில் உள்ள சோலூர் கள்ளக்கொரை பகுதியிலும் உண்ணாவிரதம் நடக்கிறது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க கோரி அங்கு உள்ள விவசாயிகள் கோத்தகிரியில் நட்டக்கல் பகுதியில் கடந்த 1-ந்தேதி முதல் உண்ணாவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இங்கு தற்போது 6-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.

    கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் நேற்று 5-ம்நாள் போராட்டம் நடந்தது. பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பெத்தளா ஊர்தலைவர் கிருஷ்ணன், ஆரூர் தலைவர் முருகன், பையங்கி தலைவர் மனோகரன், குன்னியட்டி தலைவர் ராஜூ, அட்டவளை தலைவர் ஆண்டி, நரிகிரி சந்திரன் ஆகிபோர் தொடங்கி வைத்தனர்.

    5-வது நாள் உண்ணா விரத போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தேயிலை தழைகளை காதில் மாட்டிக் கொண்டும், கைகளை ஏந்தியும் போராட்ட பந்தலில் அமர்ந்து இருந்தனர்.

    ஊட்டி பகுதியில் உள்ள சோலூர் கள்ளக்கொரை பகுதியிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பெத்தளா, பையங்கி, குன்னியட்டி, அட்டவளை, நரிகிரி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் தோட்டத்தில் தேயிலை பறிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஒரசோலை பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு
    • தினமும் ஒரு கிராமம் என்ற அடிப்படையில் தொடர் போராட்டம்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் பச்சை தேயிலைக்கு உரிய விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அங்குள்ள விவசாயிகள் கடந்த 50 ஆண்டு காலமாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு உரிய விலை வழங்க வேண்டும் என கோர்ட்டும் தீர்ப்பளித்து உள்ளது. ஆனாலும் தேயிலை வாரியம் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை.

    இதனால் விவசாயிகளுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமுல்படுத்த கோரியும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பொரங்காடு சீமை படுகர் நலச்சங்கம் உள் ளிட்ட பல்வேறு அமைப்புகளின் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரத போராட்டத்துக்கு பார்பத்தி ஹால கவுடர், 19 ஊர் தலைவர் ராமா கவுடர், கைகாரு சீமை தலைவர் நஞ்சாகவுடர் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். தொடர் உண்ணாவிரத போராட்டம் என்பதால் 120 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஒவ்வொரு ஊரும் தனித்தனியாக பங்கேற்க உள்ளனர்.

    முதல்நாள் போராட்டத்தில் ஒரசோலை பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற் பட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர். இதுதவிர ஊட்டி பகுதியில் நஞ்சுநாடு, இத்தலர் ஆகிய பகுதிகளிலும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    நீலகிரியில் உண்ணாவிரத போராட்டம் காரணமாக அனைத்து கிராமங்களிலும் வசிக்கும் விவசாயிகள் தேயிலை பறிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    • சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்ட மைப்பு சார்பாக சேலம் கோர்ட்டு முன்பு இன்று காலை அடையாள உண்ணா விரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • போராட்டத்திற்கு சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

    சேலம்:

    குற்றவியல் சட்டம், தண்டனை சட்டம், சாட்சிய சட்டங்களை திருத்து வதற்கான நடவடிக்கை களில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    உண்ணாவிரதம்

    அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வக்கீல்கள் கூட்ட மைப்பு சார்பாக சேலம் கோர்ட்டு முன்பு இன்று காலை அடையாள உண்ணா விரத போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த போராட்டத்திற்கு சேலம் மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். செய லாளர் முத்தமிழ்ச் செல்வன் முன்னிலை வகித்தார். இதில் கூட்ட மைப்பின் துணைத் தலை வர்கள் மூர்த்தி, பொன்ர மணி, இமயவர்மன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சேலம் மாவட்ட வழக்க றிஞர்கள் சங்க செயலாளர் முத்தமிழ் செல்வன் கூறுகை யில், குற்றவியல் சட்டம், தண்டனை சட்டம், சாட்சிய சட்டங்களை திருத்துவதன் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இதனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கி றோம். மேலும் அந்த திருத்தத்தை கைவிடா விட்டால் தொடர் போராட் டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    • சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • தொடர்ந்து 3 நாட்கள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்த மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் வக்கீல்கள் கடந்த 2 நாட்களாக பணிகளை புறக்கணித்து ஆர்ப்பர்டத்தில் ஈடுபட்டனர்.

    இன்று 3-வது நாளாகவும் பணிகளை புறக்கணித்து ஒருங்கிணைந்த கோர்ட் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு தஞ்சாவூர் வக்கீல்கள் சங்க தலைவர் தியாக .காமராஜ் தலைமை தாங்கினார்.

    செயலாளர் சுந்தர்ராஜன், முன்னாள் தலைவர் கோ. அன்பரசன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவ சுப்பிரமணியம், முன்னாள் செயலாளர் நல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    தொடர்ந்து 3 நாட்கள் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.

    • நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. உண்ணாவிரதம் நடத்துவது நாடகம் என ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
    • முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.

    மதுரை

    மதுரையில் ஆட்டோ தொழிலாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், சந்திரயான் 3 வெற்றி பெற்றதை முன்னிட்டு கேக் வெட்டும் நிகழ்ச்சி தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் நடைபெற்றது.

    இதற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி கேக் வெட்டி இனிப்புகளை ஆட்டோ தொழிலாளர் களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    நிலவில் சந்திரயான் 1-ஐ மயில்சாமி என்ற தமிழர் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து சந்திரயான் 2-ஐ வனிதா என்ற தமிழர் அனுப்பினார். தற்போது சந்திரயான் 3-ஐ நிலவில் அனுப்பிவெற்றி பெற்றுள்ளது. அதை விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழர் வீர முத்துவேல் அனுப்பி இன்றைக்கு உலக பெருமையை தமிழகத்திற்கு கிடைக்க செய்துள்ளார்.

    நிலவின் தென் துருவம் ஆபத்தான பகுதியாகும். அதை சாதித்து காட்டியது நமக்கு பெருமையாகும் அதனைத் தொடர்ந்து புரட்சித் தமிழர் எடப்பாடி யார் இதற்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினார். தற்போது அவரின் ஆணைக்கிணங்க தற்போது கேக் வெட்டி இனிப்புகளை வழங்கப் பட்டது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த வுடன் நீட்டை ரத்து செய்யும் கையெழுத்தை போடுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது பச்சைப்பொய் பேசுகிறார் கள்.

    இதே எடப்பாடியார் காலத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு பெறவேண்டும் என்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தார். மேலும் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்று தந்தார். ஆனால் இன்றைக்கு தி.மு.க. பச்சை பொய் பேசுவதை வாழ்க்கை யாகவும், அரசியல் கடமை யாகவும் கூறிவருகிறது.

    தி.மு.க. அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. உண்ணாவிரத போராட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.

    நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி உள்ளனர், தற்போது ராகுல் பிரதமர் வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வார் என்ற ரகசியத்தை கூறுகிறார்கள். ராகுல் என்றைக்கு பிரதமராக வருவது, நீட்டை எப்போது ரத்து செய்வது. இப்படி பச்சைபொய் பேசுவது ஏமாற்று நாடகமாகும். இதில் உண்மை இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தஞ்சை கோர்ட் வளாகம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
    • கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பேரணி நடை பெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்டங்களை இந்தி மொழியில் பெயர் மாற்றம் செய்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ததை கண்டித்தும், அந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இன்று தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் முன்பு பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு தஞ்சாவூர் வக்கீல்கள் சங்க தலைவர் வக்கீல் தியாக .காமராஜ் தலைமை தாங்கினார்.

    செயலாளர் வக்கீல் சுந்தர்ரா ஜன், முன்னாள் தலைவர் வக்கீல் கோ. அன்பரசன், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் வக்கீல் சிவ சுப்பிரமணியம், முன்னாள் செயலாளர் வக்கீல் நல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், இந்தி திணிப்பை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    இதை கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை பேரணியும், நாளை மறு நாள் உண்ணாவிரதமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    • மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • நீட் ரத்து மசோதா வரும்போது வெளிநடப்பு செய்த கட்சி அ.தி.மு.க.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் தமிழக மாணவர்களிடையே நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட செயலாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டமானது மாலை 5 மணி வரை நடைபெற்றது.

    இந்தப் போராட்டத்தின் நிறைவில் பங்கேற்ற திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் , மாநிலங்களவைக்குழு உறுப்பினருமான திருச்சி சிவா கண்டன உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நீட் தேர்விற்கு துணைபோன கட்சி அ.தி.மு.க., . நீட் தேர்வை ரத்து செய்கின்ற திருத்த சட்ட மசோதா வரும்போது வெளிநடப்பு செய்த கட்சி அ.தி.மு.க. என கூறினார்.

    இதில் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக், தமிழக சுற்றுலா அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் நீட் தேர்வை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் பா.மு. முபாரக், தமிழக சுற்றுலா அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் நாக ராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

    • நீட் தேர்வு ரத்து மசோதாவிற்கு கையெழுத்திடாத கவர்னரை கண்டித்தும் உண்ணாவிரதம்.
    • கல்லூரி மாணவ- மாணவிகள், நிர்வாகிகள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவிற்கு கையெழுத்து இடாத கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க. மருத்துவர் அணி, மாணவர் அணி ,இளைஞரணி சார்பில் உண்ணாவிரத அறப்போர் நடைபெற்று வருகிறது.

    அதன்படி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு மத்திய, தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி, மாணவர் அணி, இளைஞரணி சார்பில் உண்ணாவிரத அறப்போர் நடைபெற்றது.

    இந்த உண்ணாவிரதத்தை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பேசினார்.

    எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி, மத்திய மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாதுரை எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமை தாங்கினர். தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ, தஞ்சை மாநகர செயலாளரும் மேயருமான சண். ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் அணி மாநில துணை அமைப்பாளரும் துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி வரவேற்று பேசினார்.

    இதில் கல்லூரி மாணவர்கள், மருத்துவர்கள், தி.மு.க. நிர்வாகிகள் என ஏராளமானோர் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து பேசினர். உடனே நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தினர்.

    இந்த உண்ணாவிரத அறப்போரில் விவசாய அணி அமைப்பாளர் ஜித்து, மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மாவட்ட அவைதலைவர் இறைவன், மாவட்ட துணைச் செயலாளர் கனகவள்ளி பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பகுதி செயலாளர்கள் நீலகண்டன், சதாசிவம், கார்த்தி, மேத்தா, ஒன்றிய செயலாளர்கள் முரசொலி, அருளானந்தசாமி, செல்வகுமார், செல்லகண்ண, சிவசங்கரன், உலகநாதன், செல்வராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் முகில் வேந்தன் ( மத்திய ), ராஜா ( வடக்கு), ஆதி ராஜேஷ் (தெற்கு ), துணை அமைப்பாளர்கள் செந்தமிழ் செல்வன், சுரேஷ், வெங்கடேசன், ராஜேஷ் கண்ணா, உதயநிதி, அரிதரன், மாணவரணி அமைப்பாளர் ஆசாத், மருத்துவர் அணி அமைப்பாளர் வசந்தகுமார், கவுன்சிலர் உஷா, விளையாட்டு மேம்பாட்டு மாவட்ட அமைப்பாளர் ராணிகண்ணன் மற்றும் நிர்வாகிகள், பல்வேறு துறை மருத்துவர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • வேலூர் கோட்டை, காந்தி சிலை முன்பு நடந்தது
    • கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கோட்டை, காந்தி சிலை முன்பு தி.மு.க.வின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணிகளின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது

    வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான, நந்தகுமார் தலைமை தாங்கினார்.

    வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், எம்.எல்.ஏக்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, அவைத் தலைவர் முகமது சகி, மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திருச்சியில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • திருச்சி ஜங்ஷன் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்தில் ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்பு

    திருச்சி,

    திருச்சி மத்திய, வடக்கு, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணிகளின் சார்பில் நீட் தேர்வினை ரத்துசெய்ய மறுக்கும் ஒன்றிய அரசையும், மாநில கவர்னரை கண்டித்தும் மாபெரும் உண்ணாவிரத போரட்டம் இன்று காலை 9 மணிக்கு திருச்சி ரெயில்வே ஜங்ஷன் எதிரில் காதிகிராப்ட் அலுவலகம் அருகில் தொடங்கியது. உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடக்கிறது. உண்ணா விரதத்தை மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மேற்கு மாநகர செயலாளர் அன்பழகன், கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் ஆகியோர்தொடங்கி வைத்தனர்.மாநிலங்களவை உறுப்பினர் குழு தலைவர் திருச்சி சிவா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்இதில் எம்.எல்.ஏக்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், கதிரவன், சேர்மன் துரைராஜ், அவைத்தலைவர் அம்பிகாபதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ஆனந்த் , மருத்துவர் அணி அமைப்பாளர் கண்ணன், டோல்கேட் சுப்பிரமணி, ஒன்றியச் செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, கதிர்வேல், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், நாகராஜன், இளங்கோ, பி.ஆர்.சிங்காரம், கவுன்சிலர்கள் முத்து செல்வம், கலைச் செல்வி ஜெகநாதன், ராமதாஸ், புஷ்பராஜ் மஞ்சுளாதேவி பி.ஆர்.பால சுப்பிரமணியன், கலைச்செல்வி கருப்பையா, துபேல் அஹமது, மூவேந்திரன், பந்தல் ராமு, கலந்தர் பஷீர், மகளிர் அணி தொண்டரணி அமைப்பாளர் மதனா,தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வெங்கடேஷ் குமார், மாணவரணி அமைப்பாளர் முத்து வெங்கடேஷ், மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் என்.சுரேஷ் பாபு, மாநகர இளைஞரணி அமைப்பாளர் - மு.ர.முத்து தீபக், மாநகர மாணவரணி அமைப்பாளர் - ஏ.எம். அசாருதீன் மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக, இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×