என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்
- வேலூர் கோட்டை, காந்தி சிலை முன்பு நடந்தது
- கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கோட்டை, காந்தி சிலை முன்பு தி.மு.க.வின் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணிகளின் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய அரசையும், ஆளுநரையும் கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது
வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான, நந்தகுமார் தலைமை தாங்கினார்.
வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், எம்.எல்.ஏக்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, அவைத் தலைவர் முகமது சகி, மாநகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
Next Story






