search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்ணாவிரதம்"

    • கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது.
    • இந்த போராட்டத்தால் அரசுக்கு ரூ.1000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.

     பல்லடம்:

    கோவை, திருப்பூர் ஜவுளி உற்பத்தியாளர் கூட்டமைப்பு தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பில் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக தொழில் துறை மின்வாரிய கூட்டமைப்பு சார்பில் மின் கட்டணம் ரூ.380ஆக இருந்ததை 550 உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும் எனவும், பீக் ஹவர் நேர கட்டணம் மற்றும் சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரணம்பேட்டை பகுதியில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காததால் தமிழக தொழில் துறை மின்வாரிய கூட்டமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடந்த 25-ந்தேதி ஒருநாள் மட்டும் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் அரசுக்கு ரூ.1000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. மேலும் அடுத்த கட்ட போராட்டமாக நாளை (திங்கட்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் கோரிக்கை மனு அளிப்பது எனவும், தொடர்ந்து 16-ந்தேதி அன்று சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் எனவும் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் அஸ்வத் முருகேசன் தெரிவித்தார்.

    • சாலையோர கடைகளை, வாரச் சந்தை வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது
    • போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

     அவிநாசி

    அவிநாசி நகரப் பகுதியில் வைக்கப்படும் சாலையோர கடைகளால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அவா்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சாலையோர கடைகளை முறைப்படுத்தவும் வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துவந்தனா்.

    இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற பேரூராட்சி ஆலோசனைக் கூட்டத்தில் சாலையோர கடைகளை, வாரச் சந்தை வளாகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இடமாற்றம் செய்வது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், சாலையோர கடைகள் வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை செயல்பட்டன.

    இதனைக் கண்டித்தும், சாலையோர கடைகளை இடமாற்றம் செய்வதற்காக நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.போராட்டத்துக்கு அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா்.சங்க பொருளாளா் தனசேகரன், வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி, மாா்க்கெட் அசோசியேஷன் தலைவா் காா்த்திகேயன், மெடிக்கல் அசோசியேஷன் சங்கத் தலைவா் ஈசுவரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

    • எங்களது கோரிக்கை நிறைவேற்றப் படாமலேயே உள்ளது. தி.மு.க. அரசு அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
    • கடந்த 7 நாட்களில் இதுவரை 125 பேர் மயக்கம் அடைந்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தில் 3 ஆசிரியர் சங்கத்தினர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது போராட்டம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்கள் பணி நிரந்தரம் கோரி இன்று 7-வது நாளாக காலவரையற்ற காத்திருப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை உடனே நிறைவேற்ற கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

    இவர்களை போன்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பிலும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் பணிபுரிந்து வரும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சமஊதியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை நிறைவேற்றக்கோரி இந்த ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த சங்கத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடந்த 28-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டத் தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 4-வது நாளாக அவர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பாக அந்த சங்கத்தின் நிர்வாகி ஒருவர் கூறும்போது, கடந்த ஆட்சியின்போதும் சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் போராட்டம் நடத்தினோம்.

    அப்போது மு.க.ஸ்டாலின் நேரில் வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். நான் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    இதன்படி தேர்தல் வாக்குறுதியையும் அளித்திருந்தார். ஆனால் எங்களது கோரிக்கை நிறைவேற்றப் படாமலேயே உள்ளது. தி.மு.க. அரசு அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

    எங்களது குழந்தைகளுக்கு மட்டும் உணவு வழங்கிவிட்டு நாங்கள் பட்டினி கிடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்று அந்த சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

    ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கத்தினரும் டி.பி.ஐ. வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நல சங்கம், மற்றும் 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் இவர்களும் தொடர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடு பட்டு இப்படி 3 சங்கத்தினரும் ஒரே நேரத்தில் போராட்டம் நடத்தி வருவதால் பள்ளி கல்வித்துறை அலுவலகம் பரபரப்பாக காட்சி அளிக்கிறது.

    சாப்பிடாமல் தங்களது உடலை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் தினமும் மயக்கம் அடைந்து வருகிறார்கள். கடந்த 7 நாட்களில் இதுவரை 125 பேர் மயக்கம் அடைந்துள்ளனர்.

    இதுபோன்று மயக்கம் அடைபவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டி.பி.ஐ. வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    • சந்திரபாபு நாயுடு தனக்கு ஜாமீன் வழங்க கோரி 2 முறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
    • ஆந்திரா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியினர் அவரை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    சந்திரபாபு நாயுடு தனக்கு ஜாமீன் வழங்க கோரி 2 முறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இந்நிலையில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சந்திரபாபு நாயுடு ஜெயிலில் உண்ணாவிரதத்தை தொடங்குகிறார். அவரது மனைவி புவனேஸ்வரி ராஜமுந்திரியில் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் உண்ணாவிரதம் இருக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இதே போல் ஆந்திரா முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினரால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    அமராவதியில் சுற்றுச்சாலை சீரமைப்பு ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ் 14-வது குற்றவாளியாக சிஐடி போலீசார் சேர்த்தனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி ஆந்திர ஐகோர்ட்டில் லோகேஷ் மனு தாக்கல் செய்தார்.

    அவரது மனுவை விசாரித்த ஆந்திர கோர்ட்டு லோகேஷை கைது செய்யக்கூடாது வேண்டுமானால் 41 ஏ பிரிவின் கீழ் அவருக்கு நோட்டீஸ் வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்தனர்.

    இதையடுத்து டெல்லி அசோகா சாலையில் உள்ள தெலுங்கு தேசம் எம்.பி கல்லா ஜெயதேவி வீட்டில் இருந்த லோகேஷிடம் சிஐடி அதிகாரிகள் நேற்று மாலை நோட்டீஸ் வழங்கினார்.

    அதில் வருகிற 4-ந்தேதி காலை 10 மணிக்கு சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்து இருந்தனர்.

    • 20-ம் நாளாக போராட்டம் இன்றும் தொடர்ந்து வருகிறது
    • 6 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

    அருவங்காடு,

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு விலை வேண்டி கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் நாக்கு பெட்டா படுகர் நலசங்கம் சார்பில் கடந்த 19 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. அவர்களின் போராட்டம் 20-ம் நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் தேயிலை விவசாயிகளின் போராட்டம் தற்போது மாவட்ட அளவில் பரவி வருகிறது. இதன் ஒருபகுதியாக குன்னூர் தாலுக்காவில் படுகர் இன மக்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை ஆரூர் தலைவர் குமார் தலைமைதாங்கி தொடங்கி வைத்தார்.

    மேற்கு நாடு சீமை நல சங்கம், நாக்கு பெட்டா சங்கம், நெலிகோலு அறக்கட்டளை உள்ளிட்ட சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாகிகள் ராமன், தருமன்னன்,கேத்தி 14 ஊர் தலைவர் ரமேஷ், தேனலை ஊர் தலைவர் போஜன், கொதங்கட்டி சங்க செயலாளர் குமார், சோகத்தொரை ஊர் தலைவர் மகாலிங்கம், சக்கலட்டி ஊர் தலைவர் ராஜு, ஒடையரட்டி ஊர் தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் அர்ஜுனன், தொட்டணி ஊர் தலைவர் நாகராஜ் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    குன்னூர் உண்ணாவிரத போராட்டத்தில் கேத்தொரை, ஒடையரட்டி, சோகத்தொரை, தேனலை, தொட்டனி, சக்கலட்டி உள்ளடக்கிய 6 கிராமங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று உள்ளனர். மேலும் அவர்கள் பாரம்பரிய உடை அணிந்து பதாகைகளை கையில் ஏந்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை ஊட்டி, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் தற்போது குன்னூர் பகுதிகளுக்கு பரவியது அதிகாரிகள் மட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தேயிலை விலை வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து இடம்பெயரும் குடும்பங்கள்
    • தேயிலை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே விவசாயிகளுக்கும் நியாயம் கிடைக்கும் என்று வலியுறுத்தல்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க கோரி அங்கு உள்ள விவசாயிகள் கடந்த 1-ந்தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 12-வது நாளாக தொடர்கிறது. ஒரு நாள் ஒரு கிராமத்தினர் என்ற முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தேயிலை விலை வீழ்ச்சியால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளதாகவும், எனவே அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். அவர்கள் கூறியதாவது:-

    தர்மலிங்கம்:

    நீலகிரி தேநீருக்கு உலகஅளவில் மவுசு உண்டு. அதன் தனித்துவமான சுவை மற்றும் நறுமணம் பல்வேறு சிறப்புகளை உடையது. ஆனால் தேயிலை விலை வீழ்ச்சி காரணமாக, நீலகிரியில் உள்ள தேயிலை தோட்டங்கள் அழிந்து வருகின்றன.

    சித்ரா:

    நீலகிரி மலைகளில் விளையும் இந்திய கருப்பு தேயிலை வகை, அதிக உயரம் மற்றும் பனிமூட்டமான காலநிலை காரணமாக தனித்துவ சுவை மற்றும் நறுமணத்தை கொண்டது. இது இந்தியாவில் மிகவும் பிரபலமான தேயிலைகளில் ஒன்று. 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து நீலகிரியில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தேயிலை வாரியம் எங்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    ஹாலம்மாள்:

    பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தேயிலை பயிரிடுவதற்கு ஏற்ற இடமாக நீலகிரியை அடையாளம் கண்டனர். அங்கு கடந்த 1854-ம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் தேயிலைத் தோட்டங்களை நிறுவத் தொடங்கியது. இங்கு பல ஆண்டுகளாக தேயிலை நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு தேயிலைக்கு கொள்முதல் விலையாக ரூ.18 வழங்கினர். அதற்கும் குறைவாகவே தற்போதும் வழங்கி வருகின்றனர். விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு தேயிலை கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும்.

    ராஜம்மாள்:

    நீலகிரி தேயிலை தொழில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது. தேயிலை தொழிலை ஒழுங்குபடுத்தி ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நீலகிரி தேயிலை மலிவு விலையில் சிறந்த தரத்தை வழங்குவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்களையும் ஈர்த்து உள்ளது. எனவே இப்பகுதியில் முதலீடுகள் அதிகரித்து உள்ளது. மேலும் உள்ளூர் சமூகத்தின் பொருளாதாரமும் ஊக்கம் பெற்று உள்ளது. ஆனால் தேயிலைக்கு போதிய உற்பத்தி விலை கிடைப்பதில்லை. எங்களுக்கு தேயிலை தவிர வேறு தொழில் எதுவும் தெரியாது. சம்பந்தப்பட்ட துறையினர் தேயிலைக்கு நிரந்தர விலை அளிக்க வேண்டும்.

    எஸ்.கே.போஜன்:

    நீலகிரி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதை நம்பி 65 ஆயிரம் விவசாயிகள் உள்ளனர். பச்சை தேயிலைக்கு கடந்த 40 வருடங்களாக சரியான விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேயிலை சட்டப்பிரிவு 30ஏ-வை அமல்படுத்த வேண்டும்.

    சவுமியா:

    பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பிரதமர், மத்திய வர்த்தக மந்திரி, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டம் நடந்தது. ஆனாலும் பலனில்லை. இதனால் விவசாய சங்கத்தினர் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.33 குறைந்தபட்ச விலையாக நிர்ணயம் செய்யக்கோரி கடந்த 1-ந் தேதி முதல் நீலகிரியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம். எங்களின் பேராட்டத்துக்கு அனைத்து தரப்பு இளைஞர்களும், பெண்களும் ஆதரவு தர வேண்டும். தேயிலைக்கு நிரந்தர விலை கிடைக்க வேண்டும்.

    ஜி.எல்.ஆர்.குமார்:

    தேயிலைக்கு உரிய விலை வழங்க கோரி 400 கிராமங்களில் இருந்து 65 ஆயிரம் விவசாயிகளுடன் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறோம். எனவே எம்.பி, அமைச்சர், மாவட்ட நிர்வாகம், தேயிலை வாரிய அதிகாரிகள் கூட்டாக விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். விளைநிலங்கள் கட்டிடங்களாக மாறாமல் இருக்க, விவசாயிகள் புலம்பெயர் தொழிலாளிகளாக மாறாமல் இருக்க, தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

    ஜோகி (கக்குச்சி):

    நீதிமன்ற தீர்ப்புப்படி தேயிலை சட்டபிரிவை அமுல்படுத்த வேண்டும். ஒருசில வியாபாரிகளின் தந்திரத்தால் தேயிலை தொழிற்சா லைகளும், விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    முருகேஷ்:

    அரசு தேயிலை வாரியத்தில் 45 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் பதிவு செய்து உள்ளனர். எங்களுக்கு கடந்த 4 தலைமுறையாக பசுந்தேயிலைகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. தமிழக அரசின் கூற்றுப்படி 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேயிலை விலை வீழ்ச்சியால் வாழ்வாதாரம் இழந்து இடம்பெயர்ந்து உள்ளனர். 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே மக்கள்தொகை குறைந்து உள்ளது கவனிக்கத்தக்கது. விவசாயிகள் விளைநிலங்களை விற்று வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது. இதே நிலை நீடித்தால் தேயிலைத் தொழில் முழுவதுமாக அழிந்து விடும் அபாயம் உள்ளது. எங்களை அரசாங்கம் தான் காப்பாற்ற வேண்டும்.

    சந்திரன், (தும்பூர்):

    தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிப்பதில் தேயிலை வாரியம் தனது கடமையை தட்டிக்கழித்து வருகிறது. சாகுபடி செலவின் அடிப்படையில் நியாயமான விலை தந்தால் அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். சிறு-குறு தேயிலை விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வரை போராட தயாராக உள்ளோம்.

    மோகன், (கீழ்அணைஹட்டி):

    குறைந்தபட்ச அடிப்படை விலை நிர்ணயிக்க தேயிலை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே இந்த ஒழுங்கீனத்தை சரி செய்ய முடியும். வஞ்சிக்கப்பட்டு வரும் விவசாயிகளுக்கும் நியாயம் கிடைக்கும். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் விரைவில் தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளோம்.

    தியாகு:

    தேயிலை விவசாயிகளின் பாதிப்பு குறித்து அனைத்து தரப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்து உள்ளோம். அவர்கள் எடுக்கும் நடவடிக்கையை பொறுத்து எங்களின் போராட்டம் அமையும்.

    இவ்வாறு தேயிலை விவசாயிகள் கூறினர்.

    நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி நட்டக்கல் மட்டுமின்றி ஊட்டி பகுதியிலுள்ள இத்தலார், பாலகொலா பகுதிகளிலும் விவசாயிகள் 12-வது நாளாக தேயிலை விலை நிர்ணயம் செய்யக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

    • ஊர்வலமாக புறப்பட்டு சென்று எத்தையம்மன் கோவிலில் வழிபாடு
    • தேயிலை வர்த்தகர்களை உடனடியாக இணைக்க வாரிய அதிகாரி உறுதி

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த கோரியும், தேயிலை வாரியம் உடனடியாக 30-ஏ சட்டத்தை அமல்படுத்த கோரியும் அங்கு உள்ள விவசாயிகள் கடந்த 1-ந்தேதி முதல் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இது 11-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நாக்குபெட்டா படுகர் நல சங்கம் சார்பில் நேற்று 10-வது நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பேரகணி, தாந்தநாடு, புடியங்கி , கன்னேரிமுக்கு, அளியூர், ஒடேன், உல்லத்தட்டி ஆகிய, கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விவசாயிகள் அந்தந்த கிராமங்களில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு குலதெய்வம் எத்தையம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் அம்மனை மனமுருக வழிபட்டனர். பின்னர் மீண்டும் பேரணியாக வந்திருந்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    நீலகிரி தேயிலை விவசாயிகளின் உண்ணா விரத போராட்டத்திற்கு வந்திருந்த தேயிலை வாரிய உறுப்பினர் ராஜேஷ்சந்தர் பேசுகையில், தேயிலை தொழிற்சாலைகள் சட்டம் 30 ஏ பிரிவில் தற்போது தேயிலை விவசாயிகள் இணைக்கப்பட்டு உள்ளனர். மேலும் தேயிலை வர்த்தகர்களை உடனடியாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    இதேபோல ஊட்டியில் உள்ள குருத்துளி, தங்காடு ஆகிய பகுதிகளிலும் தேயிலை விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நீலகிரி மாவட்டத்தின் அனைத்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தேயிலை பறிக்க செல்லாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பு 2 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தளக்காவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்னர் 100 நாள் வேலை வாய்ப்பு பணி வழங்காததை கண்டித்தும், ஓராண்டாக ஊதியம் வழங் கவில்லை எனக் கூறி இரு பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதம் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தளக்காவூரைச் சேர்ந்த நாச்சன்மை என்பவர், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி தனது உறவினர்கள் பெயர்களை விதிமுறைக்கு மீறி சேர்த் துள்ளதை உயர் அதிகாரி களுக்கு தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து, அவரை ஊராட்சி மன்றத் தலைவி தமிழ்ச்செல்வி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியில் இருந்து விடுபட்ட தாக கூறப்படு கிறது. இதே போல் கடந்தாண்டு 100 நாள் வேலை வாய்ப்பு திட் டத்தில் பணித்தள பொறுப் பாளராக பணியாற்றிய லட்சுமி என்பவருக்கு ஓராண்டாக ஊதியம் வழங் காததை கண்டித்தும், இரு பெண்களும் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்து வந்த நாச்சியாபுரம் காவல்துறை யினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • பதவி உயர்வு, தேர்வு நிலை ஊதிய உயர்வு உள்ளிட்டவை வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு பொது நூலக துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து ஊர்ப்புற நூலகர்களுக்கும் தேர்தல் அறிக்கை வரிசை எண் 178ல் குறிப்பிட்டுள்ளபடி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    பதவி உயர்வு, தேர்வு நிலை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை ஊர்ப்புற நூலகர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.

    கௌரவத் தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

    செயலாளார் வெங்கடேசன், பொருளாளர் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த உண்ணாவிரத போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் மாநில செயலாளர் கோத ண்டபாணி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    உண்ணாவிரதத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    தொடர்ந்து மாலை வரை உண்ணாவிரதம் நடந்தன.

    இதில் நிர்வாகி புகழேந்தி, பொறுப்பாளர்கள் சுதா, சத்தியா, பிரபாவதி, மஞ்சுளா, கலையரசி, தனச்செல்வி மற்றும் தஞ்சை, திருவாரூர், நாகை , அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஊர்ப்புற நூலகர்கள் கலந்து கொண்டனர்.

    • போராட்டக்காரர்களுடன் போலீஸ் டி.எஸ்.பி. பேச்சுவார்த்தை
    • ஊட்டி பகுதியில் உள்ள அன்னி கொரை, இத்தலார் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடக்கிறது

    அரவேணு,

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை அமுல்படுத்த கோரியும் தேயிலை விவசாயிகள் கடந்த 1-ந்தேதி முதல் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில் நாக்கு பெட்டா படுகர் நல சங்கம் சார்பில் தொடர் உண்ணா விரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தற்போது 8-வது நாளாக இன்றும் தொடர்ந்து நடக்கிறது.

    கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் நேற்று நடந்த போ ராட்டத்திற்கு பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மேல்பிக்கட்டி ஊர் தலைவர் மகாலிங்கா கவுடர், கீழ் பிக்கட்டி ஊர் தலைவர் அண்ணாதுரை, கட்டபெட்டு ஊர் தலைவர் மடியாகவுடர், மல்லிகொரெ ஊர் தலைவர் மகாலிங்கா கவுடர், ஒன்னோரெ ஊர் தலைவர் கிருஷ்ணா கவுடர், மஞ்சிதா ஊர் தலைவர் சண்முகா கவுடர், பேரட்டி ஊர் தலைவர் காந்தி கவுடர் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். இதில் மேல்பிக்கட்டி, கீழ்பிக்கட்டி, கட்டபெட்டு, மல்லிகொரெ, ஒன்னோரெ, மஞ்சிதா, பேரட்டி ஆகிய கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அனைத்து கிராம மக்களும் படுகர் இன மக்களின் குல தெய்வ மான ஹெத்தையம்மனை வழிபட்டனர். பின்னர் அவர்கள் நட்டக்கல் போராட்ட பந்தலுக்கு வந்தனர்.

    அப்போது குன்னூர் போலீஸ் டி.எஸ்.பி குமார் போராட்ட களத்துக்கு வந்து நீங்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும் என்று கூறினார் இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. ஊட்டி பகுதியில் உள்ள அன்னி கொரை, இத்தலார் ஆகிய பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் கிராமங்களில் வசிக்கும் தேயிலை விவசாயிகள், இலை பறிக்க செல்லாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அரசுக்கு எதிராக மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தற்போது அந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

    மதுரை

    திருமங்கலம் யூனியன் அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து கூடுதல் ஆட்சியர் மோனிகாரணா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் சட்டமன்ற எதிர் கட்சி துணைத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் திருமங்கலம் ெரயில்வே மேம்பாலம் அமைக்க 110 விதியின் கீழ் அரசாணை வெளியிட்டு, அதனைத் தொடர்ந்து பூமி பூஜை நடத்தப்பட்டு, நில எடுப்பு பணி தொடங்கப் பட்டது. தற்போது அந்த திட்டம் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

    அதேபோல் புதிய பஸ் நிலையம் அமைக்க உரிய காலத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு, நில ஒப்படைப்பு பணி நடை பெற்று, டெண்டர் கோரப் பட்டது. தற்போது பழைய நிலையத்தில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போல் கட்ட திட்டமிடப்பட்டு அந்த திட்டமும் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கப்பலூர் டோல்கேட் அகற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்கள். தற்போது கூட, மத்திய அரசு சில டோல்கேட் அகற்றப்படும் அறிவித்தது. அதில் கப்பலூர் டோல்கேட்டையும் அகற்ற தமிழக அரசு வலியு றுத்த வேண்டும்.

    திருமங்கலம் தொகுதியில் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. பாராமுகம் தான் காட்டப் பட்டு வருகிறது. பலமுறை மாவட்ட நிர்வாகத்துடன் திருமங்கலம் தொகுதியின் அடிப்படை வசதி குறித்தும், கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற கோரியும், ஊராட்சிகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை கொடுத்தும் எந்த நடவ டிக்கை எடுக்கவில்லை.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை திருமங்கலம் தொகுதிகளுக்கு செய்து கொடுத்தோம். தற்போது எந்த திட்டங்களும், நிதியும் வரவில்லை.

    திருமங்கலத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள ரெயில்வே மேம்பாலம் பணி, புதிய பஸ்நிலையம் திட்டம், அதேபோல் கப்பலூர் டோல்கேட் அகற்ற மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தாமல் இருப்பதை கண்டித்து எடப்பாடி பழனிசாமி அனுமதியை பெற்று தி.மு.க. அரசை கண்டித்து மக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டத்தை நடத்து வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பங்கேற்பு
    • தமிழக முதல்அமைச்சர் நேரடியாக தலையிடும்வரை தொடர்போராட்டம் நடத்த முடிவு

    கோவை,

    தமிழ்நாடு மின்வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. இதன்ஒருபகுதியாக தொழில் துறையினருக்கான நிலைகட்டணம், பீக்ஹவர் கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதனை திரும்ப பெற வேண்டும் என தொழில் முனைவோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சிறு-குறு தொழில் முனைவோர் இணைந்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமை ப்பு ஒன்எறை உருவாக்கி உள்ளனர்.

    இந்த அமைப்பின் சார்பில் கோவை மாவட்டம் காரணம்பேட்டையில் இன்று அடையாள உண்ணா விரத போராட்டம் நடந்தது.

    இதில் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரத போராட்ட த்தில்நிலை கட்டணம் உயர்வு, பீக்ஹவர் கட்டண உயர்வு ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.இதுகுறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், ஒழுங்குமுறை ஆணையம், தமிழக அமைச்சர்களிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாகவும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. எனவே தமிழக முதல் அமைச்சர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும். அது வரை தொடர்போராட்டங்களில் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்து உள்ளார்.

    ×