search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உணவு"

    • தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    • சேலம் மாவட்டத்தில் 1,418 பள்ளி களில் இந்த திட்டம் தற்போது செயல்படுத்தப்படுகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து அந்த திட்டம் மாநிலம் முழுவதும் கடந்த 25-ந் தேதி விரிவு படுத்தப்பட்டது.

    இதையொட்டி சேலம் மாவட்டத்தில் 1,418 பள்ளி களில் இந்த திட்டம் தற்போது செயல்ப டுத்தப்படுகிறது. இதன் மூலம் 1 லட்சத்து ஆயிரத்து 318 மாணவ-மாணவிகள் பயன் பெறுகிறார்கள். இதனால் இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ள னர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றி யம் நெரிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளியில் கலெக்டர் கார் மேகம் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார். மேலும் ஓமலூர் ஒன்றியம் மாங்குப்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ததுடன் ஊழி யர்களிடமும் கேட்டறிந்தார்.

    ஆணைக்கவுண்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் கார்மேகம் அந்த பகுதியில் மாணவர்க ளுடன் அமர்ந்து உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் துணை கலெக்டர் தலைமையிலான அதிகாரி கள் திடீர் ஆய்வு செய்தனர். 

    • அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • இதில் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த பழவாத்தான்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு வழங்கும் திட்டத்தை சாக்கோட்டை அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

    இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பூர்ணிமா, தாசில்தார் வெங்கடேஸ்வரன், வட்டார வளர்ச்சி ஆணையர் பூங்குழலி, பழவாத்தான்கட்டளை ஊராட்சி தலைவர் சந்திரசேகர், ஒன்றிய துணை தலைவர் கணேசன், தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது
    • அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன உணவருந்தினார்

    புதுக்கோட்டை 

    புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. புதுக்கோட்டை திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் மாணவ, மாணவிகளுடன் ஒன்றாக தரையில் அமர்ந்து உணவருந்தினார்.

    உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • காலை உணவு திட்டத்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.

    மன்னார்குடி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருக்குவளையில் உள்ள அரசு பள்ளியில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தியதை தொடர்ந்து, மன்னார்குடி அடுத்த உள்ளிக்கோட்டை அருகே சம்மட்டிக்குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையா மங்கலம் பாலு, ஒன்றிய செயலாளர்கள் முத்துவேல், சித்தேரி சிவா, இளைஞர் மாவட்ட துணை செயலாளர் முருகானந்தம், இளைஞர் அணி ஜெயகாந்தன், சிலம்பரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 70 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    ராசிபுரம்:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து வேலை நாட்களிலும் இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 70 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூ ராட்சி பகுதிகளில் உள்ள

    772 பள்ளிகளில் இத்திட்ட மானது விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் 35,544 மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

    விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம் இதன் தொடக்க விழா ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் உமா தலைமை வகித்தார். வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த னர். பின்னர் பள்ளியில் பயிலும் 42 மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 842 பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 41 ஆயிரத்து 129 மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

    இந்த நிகழச்சியில் ராசிபுரம் ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், மாவட்ட பொருளாளர் ஏ.கே.பாலசந்திரன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் அரங்கசாமி, முத்துகாளிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் அருண், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி ரவை, கோதுமை ரவை , சேமியா.
    • ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது.

    திங்கட்கிழமை-காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவை உப்புமா;

    செவ்வாய்க்கிழமை -காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி,

    புதன்கிழமை -காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா பொங்கல், வெண் பொங்கல்.

    வியாழக்கிழமை -காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா, அரிசி உப்புமா, ரவா உப்புமா, கோதுமை ரவை உப்புமா.

    வெள்ளிக்கிழமை- காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, ரவா காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி ஆகியவை மாணவர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

    ஒரு மாணவ, மாணவிக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் காலை உணவுக்கான மூலப் பொருட்களின் அளவு 50 கிராம் அரிசி ரவை, கோதுமை ரவை , சேமியா.

    மேலும், அந்தந்த இடங்களில் விளையும் சிறுதானியங்கள், சாம்பாருக்கான பருப்பு 15 கிராம் மற்றும் உள்ளூரில் கிடைக்கக்கூடிய காய்கறிகள், ஒரு வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது உள்ளூரில் கிடைக்கக்கூடிய சிறுதானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவு வழங்கப்படுகிறது.

    • தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    • அதில் சேலம் மாநகரில் 54 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படுகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் சேலம் மாநகரில் 54 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படுகிறது.

    தொடக்க விழா

    சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே உள்ள காமலா பும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை காலை இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கார்மேகம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி, ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிர மணி, ரமேஷ், என்ஜினீயர் காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்வி ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் பழனிகவுண்டர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டம் நாளை முதல் 1,418 பள்ளி களில் தொடங்கப்படுகிறது. இதனை அந்தந்த பகுதி எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைக்கிறார்கள். இதன் மூலம் 1 லட்சத்து ஆயிரத்து 318 மாணவ-மாணவிகள் பயன் பெறு வார்கள். இதனால் இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக கொல்லி மலை வட்டாரத்தில் உள்ள 41 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான 1,588 மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் முதல் அமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    தற்போது முதல்-அமைச்சரின் காலை உண வுத் திட்டம் 15 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 673 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை யிலான 27,128 மாணவ-மாணவிகளும் மற்றும் 15 பேரூராட்சிகளில் உள்ள 59 பள்ளிகளில் படிக்கும் 3,751 மாணவ-மாணவிகளும் பயன்பெறும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 773 பள்ளிகளில் 32,497 மாணவ-மாண விகள் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் பயன்பெற உள்ளனர். முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல் பாட்டிற்கான சமையல் கூடங்களின் தயார் நிலை, உணவுப்பொட்களின் வினியோகம் மற்றும் கைபேசி செயலியில் தகவல் பதிவேற்றம் செய்வது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

    முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி டவும், கண்காணித்திடவும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.உமா கூறி உள்ளார்.

    • 25 லட்சம் பேருக்கு சுடச்சுட உணவு தயாரித்து வழங்கப்படும்.
    • ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் பொது மக்களை பங்கேற்க செய்யும் வகையில் அம்மா பேரவையின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கி விளம்பர லோகோவை இரு சக்கர வாகனங்களில் பொருத்தும் நிகழ்ச்சி அம்மா பேரவை சார்பில் மதுரை புறநகர் (தெற்கு)மேற்கு ஒன்றியம் குமா ரத்தில் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் மரக்கன்றுகளை வழங்கி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி. கருப்பையா, எஸ்.எஸ். சரவணன், கே தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், தனராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமை யில் வருகிற 20-ந்தேதி நடைபெறும் மாநாடு முதலில் 25 ஏக்கரில் நடந்த திட்டமிடப் பட்டது. அதனை தொடர்ந்து 35 ஏக்கர், அதனைத் தொடர்ந்து 65 ஏக்கரில் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் 25 லட்சம் பேர் பங்கேற்கிறார்கள்.

    குறிப்பாக அவர்களுக்கு வழங்கப்படும் உணவு அவசரமாக தயாரிக்க கூடாது, சாதம் குழைவாக இருக்க வேண்டும் என்று ஒரு தாயைப் போல எங்களுக்கு அறிவுறுத்தி யுள்ளார்.

    அதேபோல் வருப வர்களுக்கு சுகாதாரம், குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட் டுள்ளது. தற்போது வாகனங்களை நிறுத்த மட்டும் 350 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்க வருகை தரும் 25 லட்சம் பேருக்கு சுடச்சுட உணவு தயாரிக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    ஆடி மாதம் என்பதால் காற்று அதிகமாக உள்ளது. அதனால் மைதானத்தில் தூசி ஏற்பட்டு தொண்டர்க ளுக்கு இடையூறு ஏற்படால் இருக்கும் வகையில் மைதானத்தில் 35 ஏக்கரில் தரையில் மேட் அமைக்கப் படுகிறது.

    மாநாட்டில் கழகத்திற்காக உழைத்த மூத்த நிர்வாகி களுக்கு பொன்னாடை அணிவித்து எடப்பாடியார் கவுரவிக்கிறார். இந்த மாநாட்டில் காலையில் மாநாட்டு பந்தலில் எடப்பாடியார் கட்சி கொடியினை ஏற்றும்போது தொண்டர் படைகள் ராணுவ சிப்பாய்கள் போல் மரியாதை அளிக்கிறார்கள்.

    ஸ்டாலின் நாட்டு மக்களுக்காக எதையும் செய்யவில்லை. ஆனால் தனது தந்தையார் புகழை பரப்புவதற்கும், கல்வெட்டு வைப்பதற்கும், தனது மகன் உதயநிதியை முதலமைச்சர் ஆக்குவதற்கும் தான் உழைத்து வருகிறார்.

    தமிழகத்தில் பள்ளிகளில் சாதி தீண்டாமை அதிகரித்து வருகிறது. இது வேதனை தரும் விஷயமாகும். மாமன்னன் படம் எடுத்த இயக்குனரை நேரில் பாராட்டுகிறார். ஆனால் நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் களையும், அதே போல் டெல்டா பகுதிகளில் பாதிப்படைந்த விவசாயி களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல முதல மைச்சருக்கு நேரமில்லை.

    சட்டமன்றத்தில் அம்மா வுக்கு நடந்த கொடுமை குறித்து எடப்பாடியார் விரிவாக வெளியிட்டுள் ளார். ஆனால் ஸ்டாலின் இதில் பச்சை பொய் பேசியிருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெற்றோர் உணவு அளிக்காமல் அறையில் பூட்டி வைத்துள்ளனர்
    • 2-வது மாடியில் இருந்து குதித்து அருகில் உள்ள கடையில் தஞ்சம் அடைந்துள்ளார்

    பசிக்கு உணவளிக்காமல் தவிக்கவிட்ட பெற்றோரிடமிருந்து தப்பிக்க ஒரு 8 வயது சிறுமி, தனது பொம்மையை கையில் பிடித்தபடி இரண்டாவது மாடியில் இருந்து குதித்தார். அதன் பின்னர் உணவுக்காக அனைவரையும் கெஞ்சியிருக்கிறாள். அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

    அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவின் அர்னால்ட்ஸ்பர்க் பகுதியில் வசித்து வருபவர்கள், ரியான் கீத் ஹார்ட்மேன் (33) மற்றும் எல்லியோ எம். ஹார்ட்மேன் (33) தம்பதியர்.

    இவர்கள் தங்களின் 8 வயது மகளுக்கு நீண்ட நாட்களாக குறித்த நேரத்தில் உணவளிக்காமல் இருந்திருக்கின்றனர். மேலும் அந்த சிறுமியை மாடியிலிருந்து கீழே வரவோ, வெளியில் செல்லவோ அனுமதிக்கவில்லை.

    இதனை பொறுத்து கொள்ள முடியாத அந்த சிறுமி, பசி தாங்க முடியாமல் தனது வீட்டின் இரண்டாம் தளத்து ஜன்னலிலிருந்து டெட்டி பியர் (Teddy Bear) பொம்மையுடன் கீழே குதித்தார். வெறும் கால்களுடன் நடந்த அச்சிறுமி அருகில் உள்ள ஃபேமிலி டாலர் கடைக்கு சென்று அங்குள்ள பணியாளர்களிடம் உண்பதற்கு ஏதேனும் உணவு கேட்டு கெஞ்சியிருக்கிறாள்.

    "என் பெற்றோருக்கு நான் தேவைப்படவில்லை. எனக்கு பசிக்கிறது. நான் சாப்பிட ஏதாவது கொடுப்பீர்களா?" என அவள் கேட்டதாக கெல்லி ஹட்சின்ஸன் எனும் அக்கடை பணியாளர் ஒருவர் கூறினார்.

    "எனக்கும் குழந்தைகள் இருக்கின்றன. அச்சிறுமி பசிக்கு உணவு கேட்டு வந்தது என் இதயத்தை உடைத்துவிட்டது. எந்த குழந்தைக்கும் 'தான் யாருக்கும் தேவைப்படவில்லை' எனும் எண்ணம் வரக்கூடாது" என்றார் சாண்ட்ரா நிக்லி எனும் இன்னொரு பணியாளர்.

    ஒரு வாரத்திற்கும் மேல் அச்சிறுமியை அறையில் வைத்து அவளின் பெற்றோர் பூட்டி வைத்து உணவு தராமல் துன்புறுத்தி வந்ததாகவும், உடன்பிறந்தவர் ஒருவர் கொடுத்த சாண்ட்விச் ஒன்றை 3 நாட்களுக்கு முன் உண்டதாகவும் அச்சிறுமி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    அந்த வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கு அலமாரிகளிலும், சமையலறையிலும் மற்றும் குளிர்சாதன பெட்டியிலும் ஒரு குடும்பத்திற்கு போதுமான அளவு உணவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிகாரிகள் போதை மருந்து சம்பந்தமான பொருட்களையும் கண்டெடுத்ததாக தெரிகிறது.

    குழந்தைகள் பாதுகாப்பு சேவை அமைப்பு, அச்சிறுமியையும் மேலும் 3 குழந்தைகளையும் தங்கள் பொறுப்பில் அழைத்து சென்றுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள தாய், தந்தை இருவரும் தலா ரூ.80 லட்சம் பிணையில் மட்டுமே வெளியே வர முடியும்.

    • திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் சரிவிகித உணவு கருத்தரங்கம் நடைபெற்றது.
    • சரிவிகித உணவின் மூலம் ஒருவர் ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடியும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சரிவிகித உணவு கருத்தரங்கம் நடைபெற்றது. பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

    ஆசிரியர்கள் தெய்வ சகாயம், பாஸ்கரன், தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர்.

    ஆசிரியர் நடராஜன் வரவேற்றார்.

    வட்டார வளமைய சிறப்பு பயிற்சி ஜானகிராமன் பேசுகையில், சமச்சீர் உணவு அல்லது சரிவிகித உணவு என்பது வயதிற்கும், செய்யும் தொழிலுக்கும் ஏற்ற வகையில் அளவிலும் குணத்திலும் தேவைக்கேற்ற உணவுப் பொருள்களைக் கொண்டதாகும்.

    இவ்வுணவு உடலுக்கு வேண்டிய கலோரிகள், புரதம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் அனைத்தையும் போதுமான அளவு கொடுத்து சிறிதளவு எதிர்பாராத தேவைக்கும் பயன்படக்கூடிய அளவில் உணவுச் சத்துக்களைக் கொடுக்கிறது.

    சரிவிகித உணவின் மூலம் ஒருவர் ஆரோக்கிய வாழ்க்கை வாழ முடியும்.

    உடலின் இயக்கங்கள் சரிவர நடைபெற்று, உடல் நலமும் நல்ல முறையில் இருக்கும் என்றார்.

    நிகழ்ச்சியில் பாரம்பரிய அரிசியில் தயாரிக்கப்பட்ட கொழுக்க ட்டைகள் மாண வர்களுக்கு வழங்கப்பட்டது.

    ஆசிரியர் பிரபாகரன் நன்றி கூறினார்.

    ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சக்கரபாணி செய்து இருந்தார்.

    ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், ஆடின் மெடோனா, அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 70க்கும் அதிகமான தன்னார்வலர் உதவியுடன் சேவை அளிக்கப்படுகிறது.
    • மாதம் ஒருமுறை மருத்துவ சேவை, ஆண்டுக்கு நான்குமுறை புத்தாடைகள் வழங்கி வருகின்றனர்.

    திருப்பூர் :

    ஆதரவற்றவர்களுக்கும், மாற்றத்திறனாளிகளுக்கும் உணவளித்து சேவையாற்றும் அட்சயபாத்திரம் அமைப்பு 2019 நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. திருப்பூரில் 15 மண்டலங்களாக பிரித்து 70க்கும் அதிகமான தன்னார்வலர் உதவியுடன் சேவை அளிக்கப்படுகிறது. ஆதரவற்றவர், முதியோர், மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்படுகிறது. மாதம் ஒருமுறை மருத்துவ சேவை, ஆண்டுக்கு நான்குமுறை புத்தாடைகள் வழங்குவது, பராமரிப்பது என சேவையாற்றி வருகின்றனர்.

    அட்சய பாத்திரம் அமைப்பின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து ஆலோசிக்க சிறப்பு கருத்தரங்கு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. மங்கலம், ஆண்டிபாளையம் பாரடைஸ் அரங்கில் அன்னம் பகிர்ந்திடு, சாய்ந்திட தோள்கொடு என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

    உலக நல வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு, அட்சயபாத்திரம் ஆலோசனை குழு தலைவர் மோகன்கார்த்திக் தலைமை வகித்தார். தலைவர் செந்தில்குமார், செயலாளர் நாகராஜன் ஆகியோர் சமூக பணிகளை விளக்கி பேசினர்.

    அறக்கட்டளையின் புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி வெளியே ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்து ஏழைகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இனி புதிய சமையல் கூடம் உருவாக்கி தரமான உணவு தயாரித்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தன்னார்வலர்கள் பங்களிப்புடன், இலவச இரவு நேர உணவு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் பொதுமக்கள், தொழிலாளர் பயன்பெறும் வகையில் குறைந்தவிலையில் மதிய உணவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • அதிநவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கி, நல்ல உணவின் மூலம் உலகை பாதுகாக்க வேண்டும்.
    • பொது சுகாதாரத்தில் உள்ள சவால்களுக்கான தீர்வுகளை கண்டறிய வேண்டும்

    தஞ்சாவூர்:

    தேசிய உணவு தொழில்நு ட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் (நிப்டெம்) தஞ்சாவூர், இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு முன்னோடி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும்.

    "உணவுத் தரநிலைகள் உயிர்களைக் காக்கும்" என்ற கருப்பொருளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், உலக உணவுப் பாதுகாப்பு நாள் அதன் வளாகத்தில் நடத்தப்பட்டது.

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

    தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா முன்னிலையில் மாணவர்க ளின் திறமைத் தேடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    அப்போது கலெக்டர் பேசும்போது :-

    ஒழுங்குமுறை அமைப்பு கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் பொது சுகாதாரத்தில் உள்ள சவால்களுக்கான தீர்வுகளை கண்டறிய வேண்டும். பாதுகாப்பற்ற உணவில் இருந்து மக்களைக் காக்க புதுமையான தொழில்நுட்பங்களைக் மாணவர்கள் கண்டறிய வேண்டும். அதிநவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கி, நல்ல உணவின் மூலம் உலகை பாதுகாக்க வேண்டும் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் லோகநாதன், நிறுவனத்தின் அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் புவனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×