search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்"

    • பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்ட படிவங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளனர்.
    • அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்து வேட்பாளரை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளர் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் பணியை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது.

    அதன்படி வேட்பாளர் தேர்வு தொடர்பான படிவங்கள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு, கையொப்பம் பெறப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் எடப்பாடி தரப்பினர் அறிவித்த வேட்பாளர் தென்னரசுவை வேட்பாளராக ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டு பதில் அளிக்கும்படி கூறப்பட்டிருந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் கருத்துக்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளனர்.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துடன் இன்று அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைத்திலிங்கம் கூறியதாவது:-

    வேட்பாளர் தேர்வு தொடர்பாக தமிழ் மகன் உசேன் அனுப்பியு கடிதம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. எந்த நோக்கத்திற்காக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதோ அதை அவைத்தலைவர் நிராகரித்துள்ளார். அவரது செயல் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உள்ளது.

    பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், அவர்கள் அறிவித்த வேடப்ளர் தென்னரசு பெயரை மட்டும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று கூறியிருப்பது சரியல்ல. வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும். அப்படியிருக்கையில், முன்கூட்டியே ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார் என்றால், அவர்கள் முன்கூட்டியே வந்துவிட்டு கருத்து கேட்டிருக்கிறார்கள். இது வேட்பாளர் தேர்வு கிடையாது, பொது வாக்கெடுப்பு முறையாகும்.

    அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளார். தேர்தல் முறை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டவிரோத செயலுக்கு தங்களின் ஆதரவு இருக்காது என்றும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

    • வேட்பாளரை இறுதி செய்ய பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும்.
    • இருவரும் இணைந்து தீர்வு காண்பது சாத்தியமற்றதாக இருக்கிறது.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா (வயது 46) திடீர் மறைவால், ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

    இதனால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சுறுசுறுப்பாகி உள்ளது. இந்தத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ந் தேதி தொடங்கி விட்டது.

    இந்தத் தொகுதி கடந்த முறையைப்போலவே இந்த முறையும் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. திருமகன் ஈவெராவின் தந்தை, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.

    இந்தத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ். தென்னரசு போட்டியிடுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதே நேரத்தில் ஓ. பன்னீர் செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்தது.

    இதற்கு மத்தியில் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த 30-ந் தேதி மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி, ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இரட்டை இலை சின்னம் ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று முறையிட்டார். தொடர்ந்து இடையீட்டு மனு தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அந்த மனுவில், "நான் கையெழுத்திட்ட வேட்பாளருக்குத்தான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் " என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.

    இதில் தேர்தல் கமிஷனும், ஓ.பன்னீர் செல்வமும் 3 நாளில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. வழக்கு விசாரணை 3-ந் தேதிக்கு (நேற்று) ஒத்தி வைக்கப்பட்டது.

    இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் பதில் மனு தாக்கல் செய்தது. அதில், "இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு முடிவை ஏற்கவில்லை. இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதுபற்றி தற்போது எந்த முடிவும் எடுக்க இயலாது" என கூறப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் வழக்குசுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. கோர்ட்டு தீர்ப்புக்கு காத்திருப்போம். அதை ஏற்று நடப்போம்" என கூறினார்.

    அதற்கு நீதிபதிகள், "தேர்தல் கமிஷன் பதில் மனுவை நாங்கள் படித்து பார்த்து விட்டோம். குறிப்பிட்ட அரசியல் கட்சி போட்டியிட அனுமதிப்பதா, இல்லையா என்பதையும், அ.தி.மு.க. பொதுக்குழு விவகாரத்திலும் தேர்தல் கமிஷன்தான் முடிவு எடுக்க வேண்டும் " என கூறினர்.

    தொடர்ந்து தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வக்கீல், "வழக்கு கோர்ட்டில் உள்ளதால், ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு தீர்மானத்தை பதிவேற்றம் செய்ய இயலவில்லை" என கூறவே, நீதிபதிகள், "பொதுக்குழு விவகாரத்தில் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறீர்களா? பதிவேற்ற முடியாது என்றால் அதற்கு மாற்று என்ன? " என கேள்வி எழுப்பினர். அத்துடன், " இந்த விவகாரத்தில் பிறப்பிக்கும் எந்த உத்தரவும் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது" எனவும் கூறினர்.

    அதற்கு தேர்தல் கமிஷன் தரப்பில் பதில் அளிக்கையில், "கோர்ட்டை நிர்ப்பந்திக்கவில்லை, இது தொடர்பாக ஆலோசனை நடத்தி, 7-ந் தேதிக்குள் பதில் அளிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் நீதிபதிகள் கூறும்போது, " ஈரோடு கிழக்கு தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்ய 7-ந் தேதி கடைசி நாள் என்கிறபோது, என்ன முடிவு எடுப்பது? அங்கு அ.தி.மு.க. போட்டியிடாத நிலை வந்து விடக்கூடாது " என கூறினர்.

    "இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளதா?" என்ற நீதிபதிகளின் கேள்விக்கு , "முடக்கப்படவில்லை. இந்த சின்னத்தை பயன்படுத்தி வேட்பாளர் போட்டியிடலாம்" என தேர்தல் கமிஷன் தரப்பு பதில் அளித்தது.

    ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான வக்கீல், "ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்து போட தயார். இதை ஏற்க எடப்பாடி பழனிசாமி மறுக்கிறார். இந்த விவகாரத்தில் ஈகோ இல்லை " என்றார்.

    இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பு கருத்தைக் கேட்டு விட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:-

    இருவரும் இணைந்து தீர்வு காண்பது சாத்தியமற்றதாக இருக்கிறது. இருவரும் இணைந்து தீர்வு காணும்போது என்ன பிரச்சினை? அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும். எங்களது பரிந்துரையை ஏற்காவிட்டால், நாங்கள் உத்தரவு போட நேரிடும்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரை இறுதி செய்ய பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் மற்றும்3 உறுப்பினர்கள் ஓட்டு போட அனுமதி அளிக்கப்படுகிறது.

    பொதுக்குழு முடிவினை தேர்தல் கமிஷனிடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவிக்க வேண்டும். அதை தேர்தல் கமிஷன் ஏற்க வேண்டும். இந்த உத்தரவு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்.

    இந்த இடைக்கால ஏற்பாடு, ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ள தீர்ப்பில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உரிமை அளிக்கவில்லை என்பதையும், அவர்களின் உரிமை பறிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.

    எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனுக்கள் முடித்துவைக்கப்படுகின்றன. பொதுக்குழு மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    • சட்டசபை உறுப்பினர் இறந்த 15 நாட்களில் அவசரம் அவசரமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களில், நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை. முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளோம். குறிப்பாக 6 பூத்களில் உள்ள முறைகேடுகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஈரோடு வீரப்பன்சத்திரம் காவிரி ரோட்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 50 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக எதிர் அணியில் இருப்பவர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 936 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி மாவட்ட கலெக்டரால் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் இருக்கிறார்கள். சுமார் 60 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எனவே போலி வாக்காளர்கள் சேர்க்கப்படவில்லை. இந்த தேர்தல் என்பது நேர்மையாகவும், நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடந்து வருகிறது என தெரிவித்தார்.

    • எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது இன்று நீதிபதிகள் உத்தரவு வழங்கினர்.
    • ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்று உத்தரவு

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுத்து ஒப்புதல் வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் கூறினர்.

    ஆனால் குறைந்த கால அவசாசமே உள்ளதால் பொதுக்குழுவை கூட்டாமலேயே பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சுற்றறிக்கை மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • சட்டமன்ற உறுப்பினர் இறந்த 15 நாட்களில் அவசரம் அவசரமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளதாக சிவி சண்முகம் தகவல்

    புதுடெல்லி:

    எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களில், நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை.

    தொகுதியில் உள்ள 238 பூத்களுக்கும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளோம். குறிப்பாக 6 பூத்களில் உள்ள முறைகேடுகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.

    சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பின் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தலாம் என கால அவகாசம் இருந்தும் அவர் இறந்த 15 நாட்களில் அவசரம் அவசரமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை முறையாக பார்க்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இடையீட்டு மனு தாக்கல்
    • நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுத்து ஒப்புதல் வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் பொதுக்குழுவில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் கூறினர்.

    இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே என்றும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக இந்த தீர்ப்பை வழங்குவதாகவும் நீதிபதிகள் கூறினர். 

    • கோவிலை இடிப்பதை பெருமையாக எம்.பி. டிஆர் பாலு பேசியிருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
    • பாஜக தலைவர்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் வீடியோவை கொடுக்க உள்ளனர்.

    கோவை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி. பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி. சந்தேகம் இருப்பின், இந்த காணொளியை பார்க்கவும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் அமைச்சர் கே.என்.நேருவும், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் பேசிக்கொள்வது போல் இருக்கிறது. ஒருபுறம் அமைச்சர் எ.வ.வேலு மைக்கில் ஏதோ பேசிக்கொண்டிருக்க, பின்னணியில் நேருவின் குரல் மெதுவாக கேட்கிறது. தொகுதியில் பணப்பட்டுவாடா பற்றி பேசுவதுபோல் அந்த வீடியோவில் இருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பாஜக, திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

    அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள அமைச்சர் எ.வ.வேலு, சில விஷமிகளால் வீடியோ திரித்து எடிட் செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்

    இந்நிலையில் கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு அமைச்சர், சேர் வருவதற்கு தாமதம் ஆனதால் தொண்டர்கள் மீது கல் எடுத்து எறிகிறார். அவர் இன்னும் பதவியில் இருக்கிறார். இரண்டு நாள் கழித்து மற்றொரு அமைச்சர் மேடையில் தொண்டரை அடிக்கிறார். இதை தமிழ்நாடே பார்த்தது. அதன்பிறகு தமிழக பாஜக நேற்று 2 வீடியோக்களை வெளியிட்டது.

    அதில், ஒரு வீடியோ அண்ணன் டி.ஆர்.பாலு அவர்கள் சேதுசமுத்திர திட்டம் தொடர்பான திமுக விளக்கக் கூட்டத்தில் பேசும்போது எடுக்கப்பட்டது. அந்த வீடியோயை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். இது தொடர்பாக இளங்கோவன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அவர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். அந்த வீடியோ கட் செய்து எடிட் செய்யப்படாத வீடியோ, இடையில் எதுவும் எடிட் செய்யப்படவில்லை.

    அந்த வீடியோவில், ஒரு கோவிலை இடிப்பதை பெருமையாக எம்.பி. டிஆர் பாலு பேசினார். கோவிலை இடித்தால் ஓட்டு போடமாட்டார்கள் என்று சொன்னார்கள், எப்படி ஓட்டு வாங்குவது என்பது எனக்கு தெரியும் என அவர் பேசியிருக்கிறார். தனது பேச்சு தவறு என உணர்ந்து, கடைசியில் பேச்சை முடிக்கும்போது நான் பெரிய கோவிலை கட்டியும் கொடுத்தேன் என்கிறார்.

    அவர் கோவிலை கட்டி கொடுத்தது முக்கிய அம்சம் கிடையாது. ஒரு கட்சியின் மூத்த தலைவர், எம்.பி.யாக இருப்பவர் கோவிலை இடிப்பதை பெருமையாக பேசியதை மக்கள் பார்த்தார்கள்.

    நேற்று ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வேலை செய்வதற்காக சென்ற அமைச்சர்கள் பேசியதை வீடியோவில் பார்த்தோம். மார்பிங் செய்து எடிட் பண்ணி வீடியோவை போட்டதாக அமைச்சர் எ.வ.வேலு சொல்லியிருக்கிறார். அவருக்கு சவால் விடுகிறேன்.

    ஒரிஜினல் வீடியோவை அமைச்சர் எ.வ.வேலு எங்கே கொடுக்க சொல்கிறாரோ அங்கே கொடுக்கிறோம். அவர் சொல்லும் தமிழ்நாடு காவல்துறையிடமே கொடுக்கிறோம். அந்த வீடியோவை தடயவியல் ஆய்வுக்கு முதலமைச்சர் உட்படுத்தவேண்டும். அதற்கு பாஜக தயாராக இருக்கிறது.

    அந்த வீடியோவில், 31ம் தேதிக்குள் பணம் கொடுக்க வேண்டும் என அமைச்சர் பேசுகிறார். எந்தெந்த அமைச்சரால் பணம் கொடுக்க முடியும், எந்தெந்த அமைச்சரால் பணம் கொடுக்க முடியாது என பேசுகிறார். நீலகிரியின் பொறுப்பு அமைச்சரை மிகமிக தவறாக ஒரு கீழ்த்தரமான வார்த்தையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார்.

    இது தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பது பற்றிய விஷயம் மட்டுமல்லாமல், திமுக தனது சகாக்களை எப்படி பார்க்கிறது?, ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து அமைச்சராக ஒருவர் வந்தால் கே.என்.நேரு எப்படிப்பட்ட வார்த்தையால் அந்த அமைச்சரை பேசுகிறார்? என்பதை காட்டுகிறது. இவர்கள் சமூக நீதியைப்பற்றி நமக்கு பாடம் எடுக்கிறார்கள்.

    நாளை காலை பாஜக தலைவர்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் இந்த வீடியோவை கொடுக்க உள்ளனர். அதை தேர்தல் ஆணையம் பார்த்துவிட்டு, மாநில டிஜிபிக்கு அதை அனுப்பலாம், தமிழ்நாடு தடயவியல் ஆய்வகத்தில் ஆய்வு செய்யலாம். எ.வ.வேலு அவர்கள் அந்த டேப்பை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக நான் தயார்.

    கே.என்.நேரு பேசியதை அப்படியே போட்டிருக்கிறேன். அது உண்மையான ஆடியோ என்பது உறுதி செய்யப்ட்டால் முதலமைச்சர், தமிழக மக்களிடம் பகிரங்கமாக பொதுமன்னிப்பு கேட்கவேண்டும்.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • அமமுக சார்பில் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாத் போட்டியிடுவார்
    • 290க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன், கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவ பிரசாத் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

    'தேர்தல் பணிகளை கவனிப்பதற்கு 290க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசிவருகிறோம். அதுகுறித்து விரைவில் அறிவிப்போம்' என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

    • உண்மையான உழைப்பு, வாக்குறுதிகளை வழங்கி நேர்மையான முறையில் தேர்தலை சந்திப்போம்.
    • விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா கூறியதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளது. ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் வேட்பாளராக களமிறங்குகிறார். உண்மையான உழைப்பு, வாக்குறுதிகளை வழங்கி நேர்மையான முறையில் தேர்தலை சந்திப்போம். தேமுதிக வேட்பாளர் எப்போது வேட்புமனு தாக்கல் செய்வார் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

    ஒட்டுமொத்த கழகத்தின் ஒப்புதலுடன் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு கழக வேட்பாளரின் வெற்றிக்காக உழைப்போம். தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

    தற்போதைய சூழ்நிலையில் தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி ஏற்கனவே 2021ல் எங்கள் கட்சி வென்ற தொகுதி.

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு இன்றைய கூட்டத்தில் இரங்கல் தெரிவித்துள்ளோம். ஈவிகேஎஸ் இளங்கோவன் கேப்டனின் நல்ல நண்பர். அவரது புதல்வர் இன்று நம்மிடையே இல்லை.

    இடைத்தேர்தலை இவ்வளவு அவசரமாக அறிவித்ததில் எங்களுக்கு மனவருத்தம் உள்ளது. அவர் இறந்த சுவடே இன்னும் மறையவில்லை. அதற்குள் அடுத்து அங்கு வெற்றி பெறுவது யார்? என்ற பரபரப்பை கொண்டு வந்ததில் எங்களுக்கு மனவருத்தம். மனிதாபிமான அடிப்படையில் குறைந்தது 3 மாதம் கழித்து இடைத்தேர்தல் கொண்டு வந்திருக்கலாம். இப்போது தேர்தலை அறிவித்துவிட்டார்கள். அறிவித்தது அறிவித்ததுதான். எனவே, அரசியலில் இதையெல்லாம் சந்தித்துதான் ஆகவேண்டும். எனவே, தேமுதிக தனியாக களம்காண்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறுகிறது.
    • இந்த இடைத்தேர்தலுக்காக 32 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை தி.மு.க. அறிவித்துள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா எதிர்பாராத வகையில் திடீர் மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்குகிறது.

    முதல் முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டது.

    இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை அறிவித்து காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு வெளியிட்டது.

    இந்நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக 32 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை தி.மு.க. அறிவித்துள்ளது. இந்த தேர்தல் பணிக்குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, செந்தில்பாலாஜி, நாசர், சக்கரபாணி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்க ஈ.பி.எஸ். அணியினர் கோரினர்.
    • இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பதாக ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளனர். அவ்வகையில், பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் இன்று பிற்பகல் சந்தித்தனர்.

    இதற்காக சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், இந்த சந்திப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்க ஈ.பி.எஸ் அணியினர் கோரினர்.

    அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கமலாலயம் வந்து அண்ணாமலையை சந்தித்து பேசினர். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு கேட்டிருக்கலாம் என தெரிகிறது. பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பதாக ஓபிஎஸ் கூறியிருக்கிறார்.

    அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து நடந்த இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக பாஜகவின் நிலைப்பாட்டைப் பொருத்தே அடுத்தகட்ட நகர்வு இருக்கும். 

    ×