search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்று"

    • சூரியன் உதயமான காட்சியைகாண கடற்கரையில் திரண்டனர்
    • கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துசெல்கிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதன்பிறகு கன்னி யாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தளங்கள்களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    • நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
    • குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    நாகர்கோவில்:

    பொதுவுடமை வீரர் ஜீவானந்தம் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில் கலெக்டர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், துணை மேயர் மேரி பிரின்சிலதா, மண்டல தலைவர் ஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மாநில போலிங் பூத் தலைவர் ராதாகிருஷ்ணன், மண்டல தலைவர்கள் சிவ பிரபு, செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மோகன் தலைமையில் அகமது உசேன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மாலை
    • அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்பு

    நாகர்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையடுத்து கன்னியா குமரி மாவட்ட அ.தி.மு.க.சார்பில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங் கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் பச்சைமால், மாவட்ட பொருளாளர் ஆர்.ஜே.கே. திலக், தொழிற் சங்க செயலாளர் சுகுமா ரன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதி யப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், முன்னாள் மாநகர செயலாளர் சந்துரு, மாநகராட்சி கவுன்சிலர் அக் ஷயாகண்ணன், விவசாய அணி தலைவர் வடிவை மாகதேவன், முன்னாள் நகர செயலாளர் சந்திரன், பகுதி செயலாளர்கள் ஜெவின் விசு, முருகேஸ்வரன், ஜெயகோபால், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் ெரயிலடி மாதவன், சகாயராஜ், ரபீக், வெங்கடேஷ், ராஜாராம், கோட்டார் கிருஷ்ணன், கே.சி.யூ.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் எம்.ஜி.ஆர். படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. படத்திற்கு நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தி னார்கள். கிழக்கு மாவட்டத் திற்குட்பட்ட பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி னார்கள்.

    • வாரந்தோறும் புதன்கிழமை பொதுமக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • இன்று 100 பேரிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அலுவலகத்தில் தினமும் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெறப்படுகின்றன. மேலும் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பொதுமக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வரு கிறது. இந்த முகாமில் ஏற்க னவே போலீஸ் நிலை யத்தில் மனு அளித்து விசாரணையில் திருப்தி அடையாத பொதுமக்கள் கலந்துகொண்டு மீண்டும் மனு அளிப்பது வழக்கம். அந்த வகையில் நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொது மக்களிடம் மனு வாங்கும் சிறப்பு முகாம் இன்று நடந்தது.

    முகாமை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அந்த வகையில் 100 பேரிடம் இருந்து மனுக்கள் வாங்கப்பட்டது. அந்த மனுக்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறினார்.

    மேலும் மனு அளிப்ப தற்காக மாற்றுத்திறனாளி களும் வந்திருந்தனர். அவர்களை போலீசார் நாற்காலியில் அமர வைத்து தூக்கிச் சென்று லிப்ட் மூலமாக கூட்ட ரங்கிற்கு கொண்டு சென்ற னர். அங்கு மாற்றுத் திறனாளிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மனு வாங்கினார். அதோடு அவர்கள் அருகில் அமர்ந்து குறைகளையும் கேட்டறிந்தார்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து
    • சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க போலீசார் தடை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இவற்றை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. 3 படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கன்னியாகுமரி கடலில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் கடல் கொந்தளிப்பாகவும் சீற்றமாகவும் காணப்பட்டது. மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துள்ள வங்க கடல் பகுதியில் கடல் நீர் மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. அதேசமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. இதனால் இந்த பகுதியில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் ஆக்ரோமாக எழும்பி வீசின.

    இதனால் இன்று காலை காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடியே விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்த தோடு மட்டுமின்றி தங்களது செல்போன் களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாவும் கொந்தளிப்பாகவும் காணப்பட்டது. கன்னியாகுமரி கடலில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    • சரக்கு ரெயிலில் வந்த பச்சரிசியை ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
    • கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்படும் ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்படும் ரேசன் அரிசி மற்றும் பொருட்கள் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சரக்கு ரெயில் மூலமாக கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக தினமும் சரக்கு ரெயில் மூலமாக ரேசன் அரிசி நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலையில் காசி நாடாவில் இருந்து 21 பெட்டிகளில் 1300 டன் பச்சரிசி வந்தது. சரக்கு ரெயில் வந்த பச்சரிசியை ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைத்தனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்படும் ரேஷன் அரிசியை ரேஷன் கடை களுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கலெக்டர்-மேயர் பங்கேற்று ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கினர்
    • ஏழை,எளிய மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும்

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, ரூ.ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

    இதையடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் மூல மாக கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கப் பட்டது. தொடர்ந்து இன்று முதல் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்க ப்படுகிறது.

    நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.மாநகராட்சி மேயர் மகேஷ் பொங்கல் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட வழங்கல் அதிகாரி விமலா ராணி, அகஸ்தீஸ்வரம் வழங்கல் அதிகாரி ஜெகதா, கவுன்சிலர்கள் சோபி, நவீன்குமார், சிஜி, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திர சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் மேயர் மகேஷ் பேசுகையில், ஏழை,எளிய மக்கள் அனைவரும்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகை அறிவித்து உள்ளார். ரூ.ஆயிரம் ரொக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும்.முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏராளமான மக்கள் திட்ட ங்களை செயல்படுத்தி வருகிறார்.

    தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து உள்ளது என்றார்.

    கலெக்டர் அரவிந்த் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 5 லட்சத்து 74 ஆயிரத்து 675 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 774 ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தினமும் காலையில் 100 பேருக்கும் மாலையில் 100 பேருக்கும் என பொங்கல் பரிசு தொகை வழங்க ஏற்கனவே டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

    டோக்கன் அடிப்படையில் பொதுமக்கள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம் என்றார்.

    பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டதையடுத்து ரேஷன் கடைகளில் இன்று காலையிலேயே கூட்டம் அலைமோதியது. ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பரிசு தொகையை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.

    • விவேகானந்தர்மண்டபத்துக்கு படகில் செல்ல நீண்ட வரிசையில் நின்றனர்
    • சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

    கன்னியாகுமரி:

    உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    இaந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர். அந்த அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை விடு முறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயி ரக்கணக்கான சுற்றுலா பயணிகளும், அய்யப்ப பக்தர்களும் வந்து குவிந்த னர்.

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதி யில் இன்று அதிகாலை யில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலை யில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணி களும் அய்யப்ப பக்தர்களும் பார்த்து ரசித்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர்.

    காலை 8 மணிக்குபடகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வை யிட்டு வந்தனர்.சுற்றுலா பயணிகளும் அய்யப்ப பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்தி ருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வை யிட்டனர்.

    மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காம ராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள்கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ரூ.67 கோடி செலவில் நவீன மயமாகும் ரெயில் நிலைய விரிவாக்க திட்ட பணிகளை அவர்கள் பார்வையிட்டனர்.
    • முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

    கன்னியாகுமரி:

    இந்திய ரெயில்வே பாராளுமன்ற நிலைக்குழு அதன் தலைவர் ராதா மோகன்சிங் தலைமையில் கன்னியாகுமரி வந்தது. இந்த குழுவில் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, கொடிக்கு ன்னில் சுரேஷ், சந்திராணி முர்மு, முகேஷ் ராஜ்புட், ரமேஷ் சந்தர், கோபால் ஜி தாகூர், சுமேர் சிங் சோலங்கி, கிருமேக்ட்டோ உள்பட 12 எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த எம்.பி.க்கள் குழு வினர் இன்று அதிகாலை முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித் துறையில் சூரியன் உதய மாகும் காட்சியை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர்.

    பின்னர் கன்னியாகுமரி ரெயில் நிலையம் சென்று ஆய்வு செய்தனர். அங்கு ரூ.67 கோடி செலவில் நவீன மயமாகும் ரெயில் நிலைய விரிவாக்க திட்ட பணிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

    மேலும் அங்கு நடை பெற்று வரும் கூடுதல் ரெயில் பாதை அமைக்கும் பணி, கூடுதல் பிளாட்பாரம் அமைக்கும் பணி, மற்றும் இரட்டைரெயில்பாதை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து ரெயில்வே உயர் அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    அதன் பிறகு எம்.பி.க்கள் குழு, விவேகானந்தர்நினைவு மண்டபத்துக்கு தனிபடகில் சென்றனர். அங்கு அவர்களை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறு ப்பாளர் ஆர். சி. தாணு, மக்கள் தொடர்புஅதிகாரி அவினாஷ், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் செல்லப்பா, துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன் ஆகி யோர் வரவேற்றனர். பின்னர் எம்.பி.க்கள் குழு வினர் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிபார்வை யிட்டனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
    • 5-ந்தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி யது. 3-ம் திருவிழாவன்று இரவு 10.30 மணிக்கு கோட் டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமா ரசுவாமி ஆகியோர் தமது தாய், தந்தையருக்கு நடக் கும் திருவிழாவில் பங்கேற்க வந்த 'மக்கள்மார் சந்திப்பு' நிகழ்ச்சி நடந்தது.

    திருவிழாவின் 5-ம் நாளான நேற்று முன்தினம் (1-ந்தேதி) காலை கருட தரிசனம் நடந்தது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு ரிஷப கருட அன்னவாகனத் தில் சுவாமி திருவீதி உலா, பஞ்சமூர்த்தி தரிசனம் நடந் தது. பின்னர் தாணுமாலய சுவாமி, அம்பாள், பெரு மாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீர மார்த்தாண்ஆயிரக்கணக்கான பக்தர் கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் கோவில் முன் கிழக்கு திசை நோக்கி எழுந்தருளினர்.

    அதனை தொடர்ந்து காலை 6.30 மணியளவில் சுவாமிகளையும், கோவில் ராஜகோபுரத்தையும் கருடன் சுற்றி வந்த 'கருட தரிசனம்' நடந்தது. இதைக்கண்ட ஆயிரக்கணக்கான பக்தர் கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை உஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் நடந்தது.

    6-ம் திருவிழாவான நேற்று காலை பூங்கோ யில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, இரவு இந்திர வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. 7ம் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு பல்லக்கில் சுவாமி, அம் பாள், பெருமாள் அலங்கார கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. மாலை 4.30 மணிக்கு நடராஜ சுவா மிக்கு திருச்சாந்து சாற்று தல், 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு மண்டகப்படி, இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வதம் வாகனத்தில் சுவாமி திரு வீதி உலா நடக்கிறது.

    8-ம் திருவிழாவான நாளை (4-ந்தேதி) காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா, காலை 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு நடராஜ பெருமாளுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் அலங்கார மண்டபத்தில் அஷ்டாபிஷேகம், இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா நடக்கிறது.

    9-ம் திருவிழாவான 5-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடன ராக திருவீதி உலா நடக் கிறது. காலை 8 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரில் விநாயக ரும், சுவாமி தேரில் சுவாமி மற்றும் அம்பாளும், அம்மன் தேரில் அம்பாளும் அலங் காரகோலத்தில் எழுந்தருளி திருத்தேரோட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மண் டகப்படிக்கு தங்க பல்லக்கில் சுவாமி எழுந்தருளல், இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத் தில் சுவாமி திருவீதி உலா, 12 மணிக்கு தாய், தந்தையரின் விழாவில் பங்கெடுக்க வந்த கோட்டாறு வலம்புரி விநாய கர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமார சுவாமி ஆகியோர் விடை பெறும் சப்தாவர்ண காட்சி நடக்கிறது.

    10-ம் நாள் நிறைவு விழா வில் காலை 10 மணிக்கு ஆருத்ரா தரிசனம், அஷ்டா பிஷேகம், மாலை 5 மணிக்கு நடராஜர் திருவீதி உலா, இரவு 9 மணிக்கு ஆராட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • 1 முதல் 5-ம் வகுப்பு வரை வருகிற 5-ந் தேதி தொடக்கம்
    • தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும்

    நாகர்கோவில்:

    தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் 1 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவ தேர்வுகள் கடந்த டிசம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடந்து முடிந்தது. பின்னர் 24-ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் 3-ம் கட்ட பயிற்சி இன்று (2-ந்தேதி) முதல் 4 -ந்தேதி வரை நடத்தப்படுகிறது. இதன் காரணமாக 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை ஜனவரி 4-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் 5-ந்தேதி திறக்கப்படும். மேலும் இந்த நாட்களில் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் இடம்பெறாதவர்கள் பள்ளிகளில் உள்ள அலுவல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். விடுமுறை நீட்டிப்பு மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே வேளையில் 6 முதல் பிளஸ்-2 வரை வகுப்புகளுக்கான விடுமுறையில் மாற்றம் செய்யப்படவில்லை. எனவே இன்று (2-ந்தேதி) அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 6 முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்ததால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.

    • போலீசார் கடும் கட்டுப்பாடு
    • குத்தாட்டம், ஆடல் பாடலுடன் நடக்கிறது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் புத்தாண்டு கொண்டாட் டத்துக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி கன்னியாகுமரியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மின்விளக்கு அலங்காரங்கள் செய்யப் பட்டுவருகிறது. இரவு 7 மணிமுதல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான நிகழ்ச்சிகள் தொடங்குகிறது.

    நாதஸ்வர கச்சேரி நிகழ்ச்சியுடன் தொடங்கும் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆடல்- பாடல், குத்தாட்டம், பரதநாட்டியம், நடனநிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள், மெல்லிசை கச்சேரி, மேஜிக் ஷோ, குலுக்கள் முறையில் அதிர்ஷ்டசாலிகள்தேர்வு, சிறந்த தம்பதிகள்தேர்வு, வான வேடிக்கை, குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மேலும் நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் போது அதிர் வேட்டுகள் முழங்க பலூன்கள் பறக்கவிடப் பட்டு கேக்வெட்டிபுத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரியில் நடக் கும் இந்தபுத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக வெளி நாடுகளில் உள்ள சுற்றுலாபயணிகள் நேற்று முதலே வந்து குவிந்த வண்ணமாக இருக்கிறார்கள்.புத்தாண்டு பிறக்கும் போது வெளிநாட்டு சுற்றுலா சுற்றுலாபயணிகள் ஒரு வரை ஒருவர் கட்டித்தழுவி முத்தமிட்டு தங்களது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள்.

    ஒரு தம்பதிக்கு ரூ.6ஆயிரம் வீதமும் தனிநபர் ஒருவருக்கு ரூ.3ஆயிரம் வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளது. புத்தாண்டு கொண் டாட்டத்தை யொட்டி கன்னி யாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு போலீசார் கடும் கட்டுப்பாடு விதித்துஉள்ளனர். கன்னியாகுமரி கடற்கரை யில் புத்தாண்டு கொண்டாட போலீசார் தடைவித்து உள்ளனர். நட்சத்திரஓட்டல்களில் ஆபாச நடனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. நீச்சல்குளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டம் நடத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.

    மேலும் கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல குடிபோதையில் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ×