search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.ஜி.ஆர்."

    • அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா

    தென்தாமரைகுளம் :

    அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழாவினை கொண்டாடும் விதமாக நேற்று தென்தாமரைகுளத்தில் பேரூர் அ.தி.மு.க. சார்பில் பேரூர் செயலாளர் டேனியல் தேவசுதன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அவைத்தலைவர் தம்பிதங்கம், வடக்கு தாமரைக்குளம் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையில் அகஸ்தீஸ்வரம் (தெ) ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் தென்தாமரை குளம் பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சாமிதோப்பு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். சாமிதோப்பு பஞ்சாயத்து தலைவர் மதிவாணன், ஒன்றிய அவைத்தலைவர் தம்பி தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மதிய உணவினை வழங்கினார்.

    இதில் அ.தி.மு.க. கிளைச் செயலாளர்கள் வைகுண்ட பிரபு, செல்வராணி, சீதாலட்சுமி, தனுஜா, நிர்வாகிகள் வக்கீல் பாலன், முகுந்தன், செந்தில்குமார், பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதையும் செலுத்தப்பட்டது.

    • மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
    • அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா

    நாகர்கோவில் :

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பிற்கி ணங்க, அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எனது (தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.) தலை மையில் வருகிற 17-ந்தேதி காலை 10.30 மணிக்கு நாகர்கோவில், வடசேரியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படு கிறது.

    இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள், பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா நடந்தது.
    • சங்க துணை தலைவர் செய்யது காதர் முன்னிலை வகித்தனர் .

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மற்றும் சாயல்குடியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. கடலாடியில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த தின நிகழ்ச்சிக்கு கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா, ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், சேது பாண்டியன், ஞானம்மாள் மோகன், ஊராட்சித் தலைவர்கள் கடுகு சந்தை காளிமுத்து, கடலாடி ராஜமாணிக்கம் லிங்கம், மேலச்செல்வனூர் மகரஜோதி கோபாலகிருஷ்ணன், முன்னிலை வகித்தனர்.

    கடலாடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் கொடி ஏற்றி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதில் மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், நகர் செயலாளர் முருகேஷ் பாண்டியன், கிளைச் செயலாளர் கிழவன், அங்குசாமி, மாரிமுத்து, வில்வத்துரை, சண்முகராஜா, வீராசாமி, லிங்கம், பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதேபோல் சாயல்குடி யில் அ.தி.மு.க. சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த தின நிகழ்ச்சிக்கு சாயல்குடி ஒன்றிய செயலாளர் அந்தோணி ராஜ், நகர் செயலாளர் ஜெயபாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட பிரதிநிதி அமிர்த பாண்டியன், செவல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பால்பாண்டியன், பிள்ளையார்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் கதிரேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரன், முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க துணை தலைவர் செய்யது காதர் முன்னிலை வகித்தனர் .

    சாயல்குடியில் எம்ஜிஆர் படத்திற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி ராஜ் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் அதிபன் சக்கரவர்த்தி நிர்வாகிகள் மதி, அசோக், சவுந்தர்ராஜ், சண்முகராஜ், செல்வவேல், மாரியப்பன், ராஜகோபால், செல்லத்துரை, ஜெயசீலன் புல்லந்தை செந்தூர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மாலை
    • அ.தி.மு.க.வினர் திரளாக பங்கேற்பு

    நாகர்கோவில்:

    முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

    இதையடுத்து கன்னியா குமரி மாவட்ட அ.தி.மு.க.சார்பில் வடசேரியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதைத் தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங் கப்பட்டது.

    நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் பச்சைமால், மாவட்ட பொருளாளர் ஆர்.ஜே.கே. திலக், தொழிற் சங்க செயலாளர் சுகுமா ரன், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதி யப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், முன்னாள் மாநகர செயலாளர் சந்துரு, மாநகராட்சி கவுன்சிலர் அக் ஷயாகண்ணன், விவசாய அணி தலைவர் வடிவை மாகதேவன், முன்னாள் நகர செயலாளர் சந்திரன், பகுதி செயலாளர்கள் ஜெவின் விசு, முருகேஸ்வரன், ஜெயகோபால், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் ெரயிலடி மாதவன், சகாயராஜ், ரபீக், வெங்கடேஷ், ராஜாராம், கோட்டார் கிருஷ்ணன், கே.சி.யூ.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட 52 வார்டுகளிலும் எம்.ஜி.ஆர். படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. படத்திற்கு நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தி னார்கள். கிழக்கு மாவட்டத் திற்குட்பட்ட பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் எம்.ஜி.ஆர். படத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி னார்கள்.

    • எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே எம்.ஜி.ஆரின் 35-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் பிஆர். செந்தில்நாதன் முன்னிலையில் நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் மற்றும் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

    இதில் நகர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ், நகரச் செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் தசரதன், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
    • மாணவரணி செயலாளர் கண்ணதாசன், பாசறை செயலாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட ஓ.பி.எஸ். அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர். அசோகன் வழிகாட்டுதலின்படி காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர செயலாளர் பாலா தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் திருஞானம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் அங்குராஜ், ரவி, மாவட்ட பிரதிநிதி மகேஷ், நகர மாணவரணி செயலாளர் கண்ணதாசன், பாசறை செயலாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆர். படத்துக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.
    • முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம்.



    ஓ.பி.எஸ். அணி ஒன்றிய செயலாளர் முத்து முருகன் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

     ராமநாதபுரம்

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமை யில் நகர் சார்பில் செயலாளர் பொறியாளர் பால் பாண்டியன் ஏற்பாட்டில் அரண்மனை முன்பு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் ரத்தினம், மாவட்ட அவைத் தலைவர் சாமிநாதன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து துறை துணைச் செயலாளர் ரத்தினம், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அசோக் குமார், நகர அவை தலைவர் ராமமூர்த்தி, வட்ட செயலாளர் ராம சேது, சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சரவணகுமார் (தகவல் தொழில்நுட்ப பிரிவு), சேது பாலசிங்கம் (பேரவை), ஸ்டாலின் என்ற ஜெயசந்திரன் (இளை ஞரணி), செந்தில்குமார் (மாணவரணி), நகர் துணைச் செயலாளர் ஆரிப்ராஜா, இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் மாவட்ட ஓ.பி.எஸ். அணி செயலாளர் தர்மர் வழிகாட்டுதலின்படி எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு நாள் ராமநாதபுரம் நகர செயலாளர் பாலசுப்பி ரமணியன் தலைமையில் நடந்தது.

    நகர் இளைஞர் பாசறை செயலாளர் பார்த்தசாரதி, ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் முத்து முருகன், கோட்டைசாமி, நிர்வாகிகள் முனிய சாமி, கோவிந்தராஜ், ராஜ்கு மார், செல்வம், சேகர், அறிவழகன், கணேசன், ஸ்ரீபாகன் மணிகண்டன், முத்துகிருஷ்ணன், அழகம்மாள், பிரியா, தொகுதி நிர்வாகி முத்துப் பாண்டி, மாவட்ட விவசாய பிரிவு மாரிமுத்து, மூத்த நிர்வாகி முத்துகிருஷ்ணன் உள்பட பலர் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் முத்து முருகன் தலைமையில், ராமநாதபுரம் பாரதி நகரில் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட அவைத் தலைவரும், ஒன்றிய முன்னாள் தலைவருமான ராஜேந் திரன், நாரணமங்கலம் ஊராட்சி செயலாளர் சுரேஷ், ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோட்டைச்சாமி, ராமநாத புரம் நகர் செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள் கழுகூரணி பூபதி, புத்தேந்தல் கல்யாணி, காருகுடி முத்துராமலிங்கம், சுப்புத்தேவன் வலசை ஊராட்சி செயலாளர் சோம சுந்தரம், தூளிவலசை கிளை செயலாளர் திருமுருகன், சக்கரக்கோட்டை ஊராட்சி உறுப்பினர் நல்லதம்பி உள்பட பலர் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    • எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம்.



    அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்தனர்.

    மேலூர்

    எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு மேலூர் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நகர் இணை செயலாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் சாகுல் ஹமீது, முன்னாள் நகர் செயலாளர் நாகசுப்பிரமணியன், கச்சிராயன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், முன்னாள் கவுன்சிலர் தம்பிதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி செயலாளர் கே.முருகேசன் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் துதி திருநாவுக்கரசு, மாவட்ட துணைச் செயலாளர் பூமி நாதன், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவ சன்மார்க்கம், இணைச் செயலாளர் தன பாக்கியம், பொதுக்குழு உறுப்பினர் சோனியா காந்தி, தொகுதி செயலாளர் மொண்டி, துணைச் செயலாளர் சின்னக் கருப்பன், மேலூர் நகர் செயலாளர் தங்க சாமி, மேலூர் ஒன்றிய செயலாளர்கள் (கிழக்கு) ராகவன், (மேற்கு) ஜெயராமன், (தெற்கு) ராஜன், (வடக்கு) வக்கீல் பிரேம்குமார், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வடக்கு பாரதி, அ.வல்லாள பட்டி பேரூர் செயலாளர் கார்த்திக், கரந்த பாண்டி, அட்டப்பட்டி பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பணியிலிருந்து ஓய்வு பெற்று, 15 ஆண்டு ஆகிறது.
    • போலீசில் புகார் மனு கொடுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்.

    திருப்பூர் :

    பொங்கலூர் ஒன்றியம், கேத்தனூர் - எட்டமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன், (வயது 73).பல்லடம் தாலுகா அலுவலகத்துக்கு தள்ளாடியபடி வந்த இவர் எனது பட்டாவை மீட்டு தாருங்கள் என அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

    இது குறித்து ஈஸ்வரன் கூறியதாவது:-

    ஈரோடு ரெயில் நிலையத்தில் கொடி அசைக்கும் வேலை பார்த்து வந்தேன். பணியிலிருந்து ஓய்வு பெற்று, 15 ஆண்டு ஆகிறது. மகள் திருமணமாகி தனியாக உள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., இருந்தபோது, எனக்கு கேத்தனூரில்15 சென்ட் இடம் கொடுத்தார்.அந்த இடத்தின் பட்டா எனது பெயரில் உள்ளது.

    மனைவியும் இல்லாததால் தனியாக வீடு கட்டி வசித்து வருவதை அறிந்த சிலர் இரண்டு ஆண்டுக்கு முன் எனது வீட்டில் புகுந்து பட்டா சான்றிதழை பறித்துகொண்டு, விரட்டி அடித்து விட்டனர். அதில் முறைகேடாக அவர்களது பெயரை சேர்த்துள்ளனர்.தற்போது வீடும் இல்லாமல், ஓய்வூதியத்தை கொண்டுஒரு நேரம் மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். எம்.ஜி.ஆர்., கொடுத்த பட்டாவை எனக்கு மீட்டு தாருங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.முதியவரிடம் விசாரித்த அதிகாரிகள், இது குறித்து போலீசில் புகார் மனு கொடுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்என கூறி அனுப்பி வைத்தனர்.

    ×