search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை
    X

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை

    • அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா

    தென்தாமரைகுளம் :

    அ.தி.மு.க 52-வது ஆண்டு தொடக்க விழாவினை கொண்டாடும் விதமாக நேற்று தென்தாமரைகுளத்தில் பேரூர் அ.தி.மு.க. சார்பில் பேரூர் செயலாளர் டேனியல் தேவசுதன் தலைமையில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அவைத்தலைவர் தம்பிதங்கம், வடக்கு தாமரைக்குளம் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலையில் அகஸ்தீஸ்வரம் (தெ) ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் தென்தாமரை குளம் பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சாமிதோப்பு குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி தலைவர் பார்த்தசாரதி தலைமை வகித்தார். சாமிதோப்பு பஞ்சாயத்து தலைவர் மதிவாணன், ஒன்றிய அவைத்தலைவர் தம்பி தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு மதிய உணவினை வழங்கினார்.

    இதில் அ.தி.மு.க. கிளைச் செயலாளர்கள் வைகுண்ட பிரபு, செல்வராணி, சீதாலட்சுமி, தனுஜா, நிர்வாகிகள் வக்கீல் பாலன், முகுந்தன், செந்தில்குமார், பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதையும் செலுத்தப்பட்டது.

    Next Story
    ×