search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவிப்பு
    X

    மேலூரில் அ.தி.மு.க.வினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவிப்பு

    • எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது.
    • எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம்.



    அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியினர் எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்தனர்.

    மேலூர்

    எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு மேலூர் பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க. சார்பில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நகர் இணை செயலாளர் சரவணகுமார் தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் சாகுல் ஹமீது, முன்னாள் நகர் செயலாளர் நாகசுப்பிரமணியன், கச்சிராயன்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், முன்னாள் கவுன்சிலர் தம்பிதுரை மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி செயலாளர் கே.முருகேசன் தலைமையில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் துதி திருநாவுக்கரசு, மாவட்ட துணைச் செயலாளர் பூமி நாதன், கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவ சன்மார்க்கம், இணைச் செயலாளர் தன பாக்கியம், பொதுக்குழு உறுப்பினர் சோனியா காந்தி, தொகுதி செயலாளர் மொண்டி, துணைச் செயலாளர் சின்னக் கருப்பன், மேலூர் நகர் செயலாளர் தங்க சாமி, மேலூர் ஒன்றிய செயலாளர்கள் (கிழக்கு) ராகவன், (மேற்கு) ஜெயராமன், (தெற்கு) ராஜன், (வடக்கு) வக்கீல் பிரேம்குமார், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வடக்கு பாரதி, அ.வல்லாள பட்டி பேரூர் செயலாளர் கார்த்திக், கரந்த பாண்டி, அட்டப்பட்டி பாலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×