என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓ.பி.எஸ். அணியினர் மலர்தூவி அஞ்சலி
- காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
- மாணவரணி செயலாளர் கண்ணதாசன், பாசறை செயலாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடி
எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட ஓ.பி.எஸ். அ.தி.மு.க. செயலாளர் கே.ஆர். அசோகன் வழிகாட்டுதலின்படி காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர செயலாளர் பாலா தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் மாநில இளைஞரணி இணைச் செயலாளர் திருஞானம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, முன்னாள் கவுன்சிலர்கள் அங்குராஜ், ரவி, மாவட்ட பிரதிநிதி மகேஷ், நகர மாணவரணி செயலாளர் கண்ணதாசன், பாசறை செயலாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






