search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இன்று"

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்
    • ஏற்கனவே முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியிலும் போலீசார் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போலீசாரிடம் விளை யாட்டை ஊக்குவிக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஏற்கனவே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கிரிக்கெட், வாலிபால், கபடி, கோ-கோ, பேட்மின்டன் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி இன்று சாமிதோப்பு அருகே வடக்கு தாமரை குளத்தில் நடந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து போலீசருக்கான சீருடைகளை அவர் அறிமுகம் செய்தார். ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், ராஜா மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் இதில் கலந்து கொண்டனர். தக்கலை, நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் சப்-டிவிசனில் இருந்து 100-க்கு மேற்பட்ட போலீசார் தொடக்க விழா நிகழ்ச் சியில் பங்கேற்றனர்.

    முதலில் நடந்த கிரிக்கெட் போட்டியில் தக்கலை சப்-டிவிசன் மற்றும் நாகர்கோவில் சப்-டிவி சனைச் சேர்ந்த போலீ சார் விளையாடினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி சப்- டிவிசன் மற்றும் குளச்சல் சப்-டிவிசனை சேர்ந்த போலீசார் 2-வது போட்டி யில் கலந்து கொண்டு விளையாடினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், போலீசாரிடம் விளையாட்டை ஊக்கு விக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.ஏற்கனவே முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியிலும் போலீசார் கலந்து கொண்டனர்.தற்பொழுது கிரிக்கெட், வாலிபால், கபடி, கோகோ, பேட்மிட்டன் போட்டிகள் நடக்கிறது என்றார்.

    வாலிபால், கபடி, கோகோ, பேட்மின்டன் போட்டிகளை படிப்படியாக நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடத்த போலீ சார் நடவடிக்கை மேற் கொண்டு உள்ளனர்.

    • 20 சதவீத தள்ளுபடியில் விற்பனை
    • சப்பல்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற நியூ ஜனதா புட்வேர்ஸ் நிறுவனம் ஐ.எஸ்.ஓ. 9001-2015 தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம் ஆகும். நாகர்கோவில் மற்றும் குழித்துறையில் செயல் பட்டு வரும் இந்த நிறுவனத்தில் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் 5 முதல் 30 சதவீதம் வரை தள்ளு படி வழங்கப்படுகிறது.

    நியூ ஜனதா புட்வேர்ஸ், தனது 3-வது புதிய ஷோரூமை குளச்சல் காந்தி ஜங்சன் அருகே அமைத்து உள்ளது. இதன் திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர் புதிய ஷோரூமை திறந்து வைத்தார். இதில் ஏராளமான வாடிக்கை யாளர்கள் கலந்து கொண்ட னர்.

    விழாவுக்கு வந்தவர்களை நிறுவன உரிமையாளர் கமல் நாசர் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர். திறப்பு விழாவை முன்னிட்டு 20 சதவீத தள்ளுபடி வழங்கப்பட்டது.

    நியூ ஜனதா புட்வேர்சில் அனைத்து வகையான உயர்தர சப்பல்கள், ஷூக்கள் 20 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவி களுக்கான ஷூக்கள், ஷாக்ஸ், வாட்டர் பாட்டில், லஞ்ச் பேக் அனைத்தும் 20 சதவீதம் வரை தள்ளு படியில் விற்பனை செய் யப்படுகிறது.

    மேலும், இங்கு மண மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சப்பல்களும், கால்வலி, மூட்டுவலி ஆர்த்தோ சப் பல்களும் கிடைக்கும்.

    விகேசி, வாக்கரூ, ஏரோ வாக், இந்துஸ், பாரகான், ஸ்மார்ஸ், நெக்ஸோ போன்ற கம்பெனி சப்பல்களுக்கு 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படு கிறது. இதுபோல் சில கம்பெனி பேன்சி சப்பல்க ளுக்கு தள்ளுபடி வழங்க ப்படுகிறது.

    எங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப் பது உங்கள் வருகையே. புதிய ஷோரூமிலும் உங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என நியூ ஜனதா புட்வேர் உரிமையாளர் கமல் நாசர் தெரிவித்துள்ளார்.

    • விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல படகு துறையில் 2 மணி நேரம் காத்திருப்பு
    • திற்பரப்பு அருவியிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் இன்றுஅதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.கன்னியாகுமரி கடலில்இன்றுஅதிகாலை யில் சூரியன் உதயமான காட்சி தெளிவாகத் தெரிந்தது.

    சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமான இந்த அற்புத காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதன்பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள்கூட்டம்அலை மோதியது.கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    சுற்றுலா பயணிகள் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    இதே போல் திற்பரப்பு அருவியிலும் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

    • சவேரியார் ஆலயம் - செட்டிகுளம் சாலை; கோட்டார் சாலை இருவழி பாதையாக மாற்றம்
    • செட்டிகுளத்தில் இருந்து நேராக சவேரியார் ஆலயத்திற்கு வாகனங்கள் விடப்பட்டது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச்ரோட் டில் இருந்து செட்டிகுளம் வரும் சாலையில் பாதாள சாக்கடை பணி கள் நடைபெறுகிறது. இதையடுத்து அந்த சாலை மூடப்பட்டு உள்ளது. அந்த வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் பீச்ரோட்டில் இருந்து ஆயுதப்படை மைதான ரோடு, பொன்னப்ப நாடார் காலனி, ராமன்புதூர் வழியாக செட்டிகுளத்திற்கு இயக்கப்பட்டது.

    நேற்று முதல் போக்கு வரத்து மாற்றப்பட்டுள்ள நிலையில் ராமன்புதூர் பொன்னப்ப நாடார் காலனி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் அதை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். எனினும் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே அதற்கு மாற்றாக பஸ்களை எப்படி இயக்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இன்று காலை முதல் பஸ் போக்குவரத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது. கோட்டார் நாராயண குரு மண்டபத்திலிருந்து சவேரியார் ஆலயம் வரும் சாலை ஒருவழிப்பாதையாக இருந்த நிலையில் இன்று முதல் அந்த சாலை இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அனைத்து பஸ்களும் நாராயணகுரு மண்டபத்தில் இருந்து கம்பளம் சந்திப்பு வழியாக சவேரியார் ஆலய சந்திப்பு வழியாக செட்டிகுளம் வந்தது.

    இதே போல செட்டிகுளத்தில் இருந்து சவேரியார் ஆலயம் செல்லும் சாலை ஒரு வழி பாதையாக இருந்த நிலையில் அந்த சாலையும் இருவழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் அனைத்தும் செட்டிகுள த்தில் இருந்து அண்ணா பஸ் நிலையம் வழியாக சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது செட்டிகுளத்தில் இருந்து நேராக சவேரியார் ஆலயத்திற்கு வாகனங்கள் விடப்பட்டது.

    போக்குவரத்து மாற்றப் பட்டதால் சவேரியார் ஆலய சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, நாராயண குரு மண்டபம் பகுதிகளில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த 2 சாலைகளும் இரு வழியாக சாலையாக மாற்றப்பட்டதையடுத்து நாகர்கோவில் நகருக்கு வரும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமின்றி எளிதாக வந்தனர். வழக்கமாக கோட்டார் நாராயண குரு மண்டபத்திலிருந்து பீச்ரோடு வழியாக சுற்றி வரவேண்டிய நிலை இருந்தது. தற்பொழுது பாதாள சாக்கடை வேலை நடைபெற்று வரும் நிலையில் நாராயண குரு மண்டபத்தில் இருந்து சவேரியார் ஆலயம் வழியாக பஸ்கள் மற்றும் 4 சக்கர, இரு சக்கர வாகனங்கள் இயக்கப்படுவதால் சுற்றி செல்லாமல் நேராக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கு அனைத்து வாகன ஓட்டிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாதாள சாக்கடை பணிகள் முடிந்தாலும் வாகனங்களை இதே போல் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் நுகர்வோர் அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரி வித்துள்ளது.

    இந்த இரு சாலைகளும் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி சங்க தலைவர் ஸ்ரீராம் கலெக்டர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    • கலெக்டர்-மேயர் வழங்கினர்
    • இந்த மாத்திரையை உட்கொள்வதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.

    நாகர்கோவில்:

    பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கப்பட்டது.

    நாகர்கோவில் செட்டி குளம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி யில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, ஆணை யாளர் ஆனந்த மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்கு னர் மீனாட்சி, துணை மேயர் மேரி பிரின்சி லதா, தி.மு.க. மாநகர செய லாளர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாணவ- மாணவிகளுடன் குடற்புழு நீக்க நாள் உறுதி மொழியை கலெக்டர் மற்றும் அதிகாரி கள் எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    வளரும் குழந்தைகளுக்கு குடற்புழு இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதை தடுக்க குடற்புழு தடுப்பு மாத்தி ரைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

    பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்க ளில் இந்த மாத்திரைகள் வழங்கப்படு கிறது. மாணவ- மாணவிகள் அனைவரும் இந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.

    20 முதல் 30 வயதுக்குட் பட்ட பெண்களுக்கு குடற்புழு இருந்தால் ரத்த சோகை ஏற்பட்டு எடை குறைவான குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகை யில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் செய்யப்படுகிறது.

    குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 5 லட்சத்து 58 ஆயிரத்து 76 பேருக்கும், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 75 ஆயிரத்து 43 பேருக்கும் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது.

    இந்த மாத்திரையை உட்கொள்வதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. எனவே பெற்றோர் தங்களது குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டியது.
    • கவதி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

    தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியலிட்ட அவர்கள் பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடா ஜலபதி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.

    கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகா னந்தர் நினைவு மண்ட பத்தைபார்வையிட காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் பயணம் செய்து விவே கானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

    மேலும்சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டியது. இங்கு இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மாத்தூர் தொட்டி பாலம், குளச்சல் கடற்கரை, சொத்தவிளை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5½ ஏக்கர் பரப்பில் ரூ. 22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபி ஷேகம் நடந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து 4-வது ஆண்டு வருஷா பிஷேக விழா இன்று நடந்தது. இதையொட்டி கலசா பிஷேக பூஜை, யாக சாலை, அபிஷேக ஆரா தனைகள் போன்றவை நடந்தன.

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை அர்ச்சகர் வேணு கோபால் தீட்சிதர் தலைமையில் அர்ச்சகர்கள் முரளி கிருஷ்ணா, கிரண் குமார், ரிக்வித், சசி மற்றும் கன்னியாகுமரி ஸ்ரீவெங்க டேஸ்வரா சுவாமி கோவில் அர்ச்சகர்கள் நடத்தி னார்கள்.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருஷாபிஷேக நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    • புதிய ஆலயத்தை சி.எஸ்.ஐ. பேராயர் செல்லையா திறந்து வைத்தார்.
    • விழாவிற்கு திட்டுவிளை சேகரத்து போதகர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்‌.

    நாகர்கோவில்:

    தென்னிந்திய திருச்சபை கன்னியாகுமரி பேராயம் திட்டுவிளை சேகரத்துக்கு உட்பட்ட எட்டா மடையில் புதிதாக சி.எஸ்.ஐ. ஆலயம் கட்டப்பட்டது.

    புதிய ஆலய அர்ப்பணம் விழா இன்று நடந்தது. விழாவிற்கு திட்டுவிளை சேகரத்து போதகர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சபை போதகர் பிரைட் ஜெப நேசஸ் முன்னிலை வகித்தார். புதிய ஆலயத்தை சி.எஸ்.ஐ. பேராயர் செல்லையா திறந்து வைத்தார்.

    விழாவில் பேராய மாமன்ற உறுப்பினரும் தி.மு.க. மாவட்ட பொருளா ளருமான கேட்சன், சபைச் செயலாளரும் நாகர்கோ வில் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளருமான ஜெயஷீலா கேட்சன், சபை பொருளாளர் சாம் செல்வராஜ், சபை கணக்கர் ஐசக், உறுப்பினர் ஜெகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து விருந்து நிகழ்ச்சியும் நடந்தது.

    • பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி
    • மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சளித் தொல்லையால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. நேற்று இரவு கடுமையான பனிபொழிவு இருந்த நிலையில் அது இன்று காலை வரை நீடித்தது. அதிகாலை 8 மணி வரை பனிப்பொழிவு காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    அதிகாலை நேரங்களில் வேலைக்கு செல்ல தயாரான பொதுமக்கள் சிரமப்பட்டனர்.அரசு பஸ்களில் டிரைவர்கள் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனம் ஒட்டி சென்றனர். எதிரே வந்த வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் குளிரில் நடுங்கினர். குறிப்பாக கிராமப்புறங்களில் பனிபொழிவு அதிகமாக காணப்பட்டது.

    வயல்வெளி பகுதி களிலும் பனிபடர்ந்து இருந்தது. தேரூர், அரும நல்லூர், பூதப்பாண்டி, சுசீந்திரம், பொற்றையடி, அஞ்சுகிராமம் பகுதிகளில் பனிபொழிவு அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு குளிர் காற்று வீசியது. அதிகாலையில் பனிபொழிவு ஒருபுறம் இருக்க மதியம் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது.

    இந்த சீதோஷ்ண நிலை மாற்றத்தின் காரணமாக பொதுமக்கள் சளி தொல்லையால் அவதிப்பட்டு வருகிறார்கள். சளி தொல்லையின் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். சளி தொல்லை அதிகமாக இருப்பதால் வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வழக்கத்தை விட புறநோயாளிகளின் வருகை அதிகமாக உள்ளது .மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் சளித் தொல்லையால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    • பணியாளர்களுக்கு ரூ.21 ஆயிரத்துக்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும்
    • சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ரூ.6 ஆயிரத்துக்கு குறையாமல் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    நாகர்கோவில்:

    பணியாளர்களுக்கு ரூ.21 ஆயிரத்துக்கு குறையாமல் ஊதியம் வழங்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் ரூ.6 ஆயிரத்துக்கு குறையாமல் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்.

    நலவாரிய பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும் மற்றும் 240 நாட்கள் பணிபுரிந்த தொழிலா ளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை குமரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க குழு வலியுறுத்தி வந்தது.

    இந்த நிலையில் கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அனில் குமார் தலைமை தாங்கினார்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ், கல்யாணசுந்தரம், இசக்கி முத்து, நாராயணசாமி, அருணாச்சலம், சுரேஷ் மேசியாதாஸ் உள்பட பலர் மறியலில் கலந்து கொண்ட னர். அவர்கள் சாலையில் அமர்ந்து கோஷமிட்ட தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மறியல் போராட்டம் காரணமாக நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பி ரண்டு நவீன் குமார் தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சுமார் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

    • தக்கலை தீயணைப்பு துறையினரும், இரணியல் காவல் துறையினரும் உடலை மீட்டனர்
    • இவரது மனைவி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே உள்ள நெட்டாங்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 43) பெயிண்டர். இவரது நண்பர் ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. இதை கொண்டாட நண்பர்களுடன் நேற்று வில்லுக்குறி மாம்பழத்துறையாறு அணை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு நண்பர்களுடன் சமைத்து சாப்பிட்டுவிட்டு மதியம் அணையில் குளித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஆழப்பகுதிக்குச் சென்ற சுரேஷ் தண்ணீரில் தத்தளித்துள்ளார். அவரை நண்பர்கள் மீட்க முயன்றனர். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் சுரேஷ் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இது குறித்து தக்கலை தீயணைப்பு துறைக்கும், இரணியல் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்கள் தண்ணீரில் இறங்கி பல மணி நேரம் தேடி சுரேஷின் உடலை மீட்டனர். இரணியல் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தண்ணீரில் மூழ்கி பலியான சுரேஷிற்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கான உணவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நேற்று காலை உறவினர்கள் கூறியுள்ளனர். நண்பர்களுடன் வில்லுக்குறி சென்று விட்டு உடனடியாக வந்து மருத்துவமனைக்கு செல்வதாக சுரேஷ் கூறிச் சென்றுள்ளார். ஆனால் குளிக்கும் போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியாகி விட்டார்.

    • சூரியன் உதயமான காட்சியைகாண கடற்கரையில் திரண்டனர்
    • கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்துசெல்கிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர். முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    அதன்பிறகு கன்னி யாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    மேலும் கன்னியா குமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்குபூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, மியூசியம், அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தளங்கள்களை கட்டியது. கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    ×