search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுமுறை தினம்"

    • இன்று காலை 11 மணி வரை படகு போக்குவரத்து இயக்கப்பட வில்லை
    • சுற்றுலா பயணிகள் படகு துறையில் காத்திருந்தனர்.

    கன்னியாகுமரி :

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரிக்கு கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர். கடல் நீர்மட்டம் தாழ்வு காரணமாக கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 11 மணி வரை படகு போக்குவரத்து இயக்கப்பட வில்லை இதனால் சுற்றுலா பயணிகள் படகு துறையில் காத்திருந்தனர். கடல் சகஜநிலைக்கு திரும்பிய பிறகு படகு போக்குவரத்து தொடங்கியதை தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று பார்த்தனர். இதனால் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை உள்பட அனைத்து சுற்றுலா தளங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் வருகை "திடீர்"என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
    • கடல் நீர் மட்டும் தாழ்வு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 10 மணிக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பள்ளிகூடங்கள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு குறைந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர். திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி முஸ்லிம் தெருவில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று தொழுகை நடத்தினர்.

    கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடல் நீர் மட்டும் தாழ்வு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 10 மணிக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திரக்கண்காட்சி கூடம், பாரதமாதாகோவில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    வட்ட கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செய்தனர். மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களைகட்டி உள்ளது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டியது.
    • கவதி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

    தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியலிட்ட அவர்கள் பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடா ஜலபதி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.

    கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகா னந்தர் நினைவு மண்ட பத்தைபார்வையிட காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் பயணம் செய்து விவே கானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

    மேலும்சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டியது. இங்கு இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மாத்தூர் தொட்டி பாலம், குளச்சல் கடற்கரை, சொத்தவிளை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.

    ×