search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுமுறை தினமான இன்று குமரி சுற்றுலா தலங்களில் கூட்டம் அலை மோதியது
    X

    கன்னியாகுமரி கடற்கரையில் இன்று காலை குவிந்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

    விடுமுறை தினமான இன்று குமரி சுற்றுலா தலங்களில் கூட்டம் அலை மோதியது

    • திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டியது.
    • கவதி அம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.

    தொடர்ந்து முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியலிட்ட அவர்கள் பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடா ஜலபதி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தனர்.

    கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகா னந்தர் நினைவு மண்ட பத்தைபார்வையிட காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கிய பிறகு அவர்கள் படகில் பயணம் செய்து விவே கானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

    மேலும்சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், கலங்கரை விளக்கம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரைபகுதி, அரசுஅருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது.

    திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டியது. இங்கு இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். மாத்தூர் தொட்டி பாலம், குளச்சல் கடற்கரை, சொத்தவிளை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது.

    Next Story
    ×