search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இன்று வருஷாபிஷேக விழா
    X

    கோப்பு படம் 

    கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இன்று வருஷாபிஷேக விழா

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் விவேகானந்தா கேந்திர வளாகத்தில் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5½ ஏக்கர் பரப்பில் ரூ. 22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.

    இந்த கோவிலில் கும்பாபி ஷேகம் நடந்து 3 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து 4-வது ஆண்டு வருஷா பிஷேக விழா இன்று நடந்தது. இதையொட்டி கலசா பிஷேக பூஜை, யாக சாலை, அபிஷேக ஆரா தனைகள் போன்றவை நடந்தன.

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை அர்ச்சகர் வேணு கோபால் தீட்சிதர் தலைமையில் அர்ச்சகர்கள் முரளி கிருஷ்ணா, கிரண் குமார், ரிக்வித், சசி மற்றும் கன்னியாகுமரி ஸ்ரீவெங்க டேஸ்வரா சுவாமி கோவில் அர்ச்சகர்கள் நடத்தி னார்கள்.

    பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருஷாபிஷேக நிகழ்ச்சியில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×