search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடக்கு தாமரைகுளம்"

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடங்கி வைத்தார்
    • ஏற்கனவே முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியிலும் போலீசார் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போலீசாரிடம் விளை யாட்டை ஊக்குவிக்க மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஏற்கனவே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கிரிக்கெட், வாலிபால், கபடி, கோ-கோ, பேட்மின்டன் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி இன்று சாமிதோப்பு அருகே வடக்கு தாமரை குளத்தில் நடந்தது.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதை தொடர்ந்து போலீசருக்கான சீருடைகளை அவர் அறிமுகம் செய்தார். ஏ.டி.எஸ்.பி. ஈஸ்வரன், டி.எஸ்.பி.க்கள் நவீன்குமார், ராஜா மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் இதில் கலந்து கொண்டனர். தக்கலை, நாகர்கோவில், கன்னியாகுமரி, குளச்சல் சப்-டிவிசனில் இருந்து 100-க்கு மேற்பட்ட போலீசார் தொடக்க விழா நிகழ்ச் சியில் பங்கேற்றனர்.

    முதலில் நடந்த கிரிக்கெட் போட்டியில் தக்கலை சப்-டிவிசன் மற்றும் நாகர்கோவில் சப்-டிவி சனைச் சேர்ந்த போலீ சார் விளையாடினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி சப்- டிவிசன் மற்றும் குளச்சல் சப்-டிவிசனை சேர்ந்த போலீசார் 2-வது போட்டி யில் கலந்து கொண்டு விளையாடினார்கள். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறுகையில், போலீசாரிடம் விளையாட்டை ஊக்கு விக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.ஏற்கனவே முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியிலும் போலீசார் கலந்து கொண்டனர்.தற்பொழுது கிரிக்கெட், வாலிபால், கபடி, கோகோ, பேட்மிட்டன் போட்டிகள் நடக்கிறது என்றார்.

    வாலிபால், கபடி, கோகோ, பேட்மின்டன் போட்டிகளை படிப்படியாக நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடத்த போலீ சார் நடவடிக்கை மேற் கொண்டு உள்ளனர்.

    ×