கன்னியாகுமரியில் இன்று பாராளுமன்ற குழு ரெயில் நிலையத்தில் ஆய்வு

ரூ.67 கோடி செலவில் நவீன மயமாகும் ரெயில் நிலைய விரிவாக்க திட்ட பணிகளை அவர்கள் பார்வையிட்டனர்.முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த எம்.பி.க்கள் குழுவினரை படத்தில் காணலாம் 
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த எம்.பி.க்கள் குழுவினரை படத்தில் காணலாம் 
Published on

கன்னியாகுமரி:

இந்திய ரெயில்வே பாராளுமன்ற நிலைக்குழு அதன் தலைவர் ராதா மோகன்சிங் தலைமையில் கன்னியாகுமரி வந்தது. இந்த குழுவில் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, கொடிக்கு ன்னில் சுரேஷ், சந்திராணி முர்மு, முகேஷ் ராஜ்புட், ரமேஷ் சந்தர், கோபால் ஜி தாகூர், சுமேர் சிங் சோலங்கி, கிருமேக்ட்டோ உள்பட 12 எம்.பி.க்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்று இருந்தனர்.

இந்த எம்.பி.க்கள் குழு வினர் இன்று அதிகாலை முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கி லித் துறையில் சூரியன் உதய மாகும் காட்சியை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர்.

பின்னர் கன்னியாகுமரி ரெயில் நிலையம் சென்று ஆய்வு செய்தனர். அங்கு ரூ.67 கோடி செலவில் நவீன மயமாகும் ரெயில் நிலைய விரிவாக்க திட்ட பணிகளை அவர்கள் பார்வையிட்டனர்.

மேலும் அங்கு நடை பெற்று வரும் கூடுதல் ரெயில் பாதை அமைக்கும் பணி, கூடுதல் பிளாட்பாரம் அமைக்கும் பணி, மற்றும் இரட்டைரெயில்பாதை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து ரெயில்வே உயர் அதிகாரிகளுடன் எம்.பி.க்கள் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

அதன் பிறகு எம்.பி.க்கள் குழு, விவேகானந்தர்நினைவு மண்டபத்துக்கு தனிபடகில் சென்றனர். அங்கு அவர்களை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறு ப்பாளர் ஆர். சி. தாணு, மக்கள் தொடர்புஅதிகாரி அவினாஷ், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் செல்லப்பா, துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன் ஆகி யோர் வரவேற்றனர். பின்னர் எம்.பி.க்கள் குழு வினர் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிபார்வை யிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com