search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாமி"

    • கந்த சஷ்டி விழா நடந்தது.
    • சுப்பிரமணிய சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கியது. தினமும் இரவு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. 6-ம் நாளான நேற்று மாலை கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூர சம்கார நிகழ்ச்சி நடை பெற்றது.

    முன்னதாக வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றனர். அங்கு முருகனுக்கு பாலபிஷேகம் முடிந்த பின், ஜெயந்திநாதர் அலங்காரத்தில் முத்தா லம்மன் திடலில் எழுந்த ருளிய அவரை பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்றனர். அங்கு பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சூர பத்மனை முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சுவாமி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், கமுதி வீரபத்திர இந்துமதி ஆகியோர் செய்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு பாலம் அருகே சக்தி பாபா கோவில் உள்ளது. இங்கு ஆதிவராஹி அம்மன், நரசிம்மர் நூதன விக்கிரக பிரதிஷ்டை விழா நடந்தது.

    முன்னதாக கணபதி நவக்கிரக ேஹாமம், வாஸ்து சாந்தி, 2-ம் கால பூஜை, பூர்ணாகுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து ஆதிவராகி அம்மன், நரசிம்மருக்கு சிறப்பு கும்ப நீர் அபிஷேகம் மற்றும் பால், தயிர். சந்தனம் இளநீர் பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. கமுதி, கோட்டைமேடு, கண்ணார்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள், கமுதி வீரபத்திர இந்துமதி ஆகியோர் செய்தனர்.

    • 1982-ம் ஆண்டு மண்டைக்காட்டில் ஏற்பட்ட கலவரம் மதத்தின் அடிப்படையில் ஏற்பட்டது அல்ல.
    • 8-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார்.

    நாகர்கோவில்:

    தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர் கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தா மகராஜ் மண்டைக்காடு கோவிலில் நடைபெறுகின்ற சமய சொற்பொழி தொடர் பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். அவருக்கு எனது கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறேன். 1982-ம் ஆண்டு மண்டைக் காட்டில் ஏற்பட்ட கலவரம் மதத்தின் அடிப்படையில் ஏற்பட்டது அல்ல. அது ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டது. இப்போது கன்னியாகுமரி மாவட்டம் அமைதி பூங்காவாக உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 20 மாதத் தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வழிகாட்டுதலின் பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் குடமுழுக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதிக நிதியை தமிழக முதல்வர் குமரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.

    இந்து சேவா சங்கம் என்ற பெயரில் அறநிலை யத்துறை கோவில்க ளில் உள்ள கட்டிடங் களை கையகப்படுத்தி கோவிலில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் இந்து சேவா சங்கம் நடத் தியது என கூறி வந்தனர். புகாரின் பேரில் தமிழக முதல்வர் நிகழ்ச்சிகளை அறநிலையத்துறை நடத்தும் என அறிவித்துள்ளார்.

    மண்டைக்காட்டில் ஹைந்தவ சேவா சங்கம் நடத்தும் சமய மாநாட்டில் உள்ள போஸ்டரில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் பெயரை போட்டுள்ளனர். இதனால் இந்து சமய மாநாடா? அரசியல் மாநாடா? என்று தெரிந்து கொள்ள வேண் டும். மார்ச் 5-ந் தேதி மாசி கொடைவிழா சிறப்பாக நடக்கும்.

    நிகழ்ச்சிக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தருகிறார். அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடக்கும். 8-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார். உங்கள் பேச்சை குறைத் துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
    • 5-ந்தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி யது. 3-ம் திருவிழாவன்று இரவு 10.30 மணிக்கு கோட் டாறு வலம்புரி விநாயகர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமா ரசுவாமி ஆகியோர் தமது தாய், தந்தையருக்கு நடக் கும் திருவிழாவில் பங்கேற்க வந்த 'மக்கள்மார் சந்திப்பு' நிகழ்ச்சி நடந்தது.

    திருவிழாவின் 5-ம் நாளான நேற்று முன்தினம் (1-ந்தேதி) காலை கருட தரிசனம் நடந்தது. முன்னதாக அதிகாலை 5 மணிக்கு ரிஷப கருட அன்னவாகனத் தில் சுவாமி திருவீதி உலா, பஞ்சமூர்த்தி தரிசனம் நடந் தது. பின்னர் தாணுமாலய சுவாமி, அம்பாள், பெரு மாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீர மார்த்தாண்ஆயிரக்கணக்கான பக்தர் கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். விநாயகர் கோவில் முன் கிழக்கு திசை நோக்கி எழுந்தருளினர்.

    அதனை தொடர்ந்து காலை 6.30 மணியளவில் சுவாமிகளையும், கோவில் ராஜகோபுரத்தையும் கருடன் சுற்றி வந்த 'கருட தரிசனம்' நடந்தது. இதைக்கண்ட ஆயிரக்கணக்கான பக்தர் கள் பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை உஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு அஷ்டாபிஷேகம், இரவு 10 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருதல் நடந்தது.

    6-ம் திருவிழாவான நேற்று காலை பூங்கோ யில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, இரவு இந்திர வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. 7ம் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு பல்லக்கில் சுவாமி, அம் பாள், பெருமாள் அலங்கார கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. மாலை 4.30 மணிக்கு நடராஜ சுவா மிக்கு திருச்சாந்து சாற்று தல், 5 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமிக்கு மண்டகப்படி, இரவு 10.30 மணிக்கு கைலாச பர்வதம் வாகனத்தில் சுவாமி திரு வீதி உலா நடக்கிறது.

    8-ம் திருவிழாவான நாளை (4-ந்தேதி) காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா, காலை 10 மணி மற்றும் மாலை 4 மணிக்கு நடராஜ பெருமாளுக்கும், சிவகாமி அம்பாளுக்கும் அலங்கார மண்டபத்தில் அஷ்டாபிஷேகம், இரவு 8 மணிக்கு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா நடக்கிறது.

    9-ம் திருவிழாவான 5-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்சாடன ராக திருவீதி உலா நடக் கிறது. காலை 8 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரில் விநாயக ரும், சுவாமி தேரில் சுவாமி மற்றும் அம்பாளும், அம்மன் தேரில் அம்பாளும் அலங் காரகோலத்தில் எழுந்தருளி திருத்தேரோட்டம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு மண் டகப்படிக்கு தங்க பல்லக்கில் சுவாமி எழுந்தருளல், இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத் தில் சுவாமி திருவீதி உலா, 12 மணிக்கு தாய், தந்தையரின் விழாவில் பங்கெடுக்க வந்த கோட்டாறு வலம்புரி விநாய கர், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி, வேளிமலை குமார சுவாமி ஆகியோர் விடை பெறும் சப்தாவர்ண காட்சி நடக்கிறது.

    10-ம் நாள் நிறைவு விழா வில் காலை 10 மணிக்கு ஆருத்ரா தரிசனம், அஷ்டா பிஷேகம், மாலை 5 மணிக்கு நடராஜர் திருவீதி உலா, இரவு 9 மணிக்கு ஆராட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர், கண்காணிப்பாளர் ஆனந்த், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகளும் கிருஷ்ணசாமி பக்தர்கள் சேவா சங்கத்தினரும் செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமாரி:

    தோவாளை கிருஷ்ண சுவாமி கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் உறியடி திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    சிறப்பு நிகழ்ச்சியாக 7-ம் திருவிழா அன்று கண்கவர் அலங்காரத்தோடு மலர் மாலையோடு ஸ்ரீ விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்திலும், முருகர் மயில் வாகனத்திலும், அம்மையப்பர் ரிஷப வாகனத்திலும், கிருஷ்ண சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் பல்லக்கில் பக்தர்களோடு மேளதாளத்தோடு வீதி உலா வருதல் நடைபெற்றது.

    நாளை (27-ந் தேதி)செண்டை மேளம் முழங்க உறியடி மகா உற்சவமும்,10-ம் திருவிழா அன்று மணிதட்டு வாக னத்தில் விநாயகர், முருகர், அம்மையப்பர், கிருஷ்ண சாமி ஆராட்டுக்கு எழுந்தரு ளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடு களை அறநிலையத் துறை அதிகாரிகளும் கிருஷ்ண சாமி பக்தர்கள் சேவா சங்கத்தினரும் செய்து வருகின்றனர்.

    • அருப்புக்கோட்டை பாலையம்பட்டி வேணுகோபால கோவில் 2-ம் நாள் திருவிழாவில் சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார்.
    • வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    பாலையம்பட்டி,

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெற உள்ள திருவிழாவில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண நிகழ்ச்சி வருகிற 9-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. மேலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

    திருவிழாவின் 2-ம் நாள் மண்டகப்படியான இன்று வேணுகோபால சுவாமி சிம்ம வாகனத்தில் வீதி உலாவாக சென்றார்.

    மேள தாளங்கள் முழங்க பக்தர்கள் வேணுகோபால சுவாமியை வரவேற்றனர். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வேணுகோபால சுவாமியை வழியெங்கிலும் திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    ×