கந்த சஷ்டி விழா

கந்த சஷ்டி விழா நடந்தது. சுப்பிரமணிய சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.
கந்த சஷ்டி விழா
Published on

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு காசி விஸ்வநாதர் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 13-ந்தேதி கொடி யேற்றத்து டன் தொடங்கியது. தினமும் இரவு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. 6-ம் நாளான நேற்று மாலை கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூர சம்கார நிகழ்ச்சி நடை பெற்றது.

முன்னதாக வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றனர். அங்கு முருகனுக்கு பாலபிஷேகம் முடிந்த பின், ஜெயந்திநாதர் அலங்காரத்தில் முத்தா லம்மன் திடலில் எழுந்த ருளிய அவரை பக்தர்கள் எதிர்சேவை செய்து வரவேற்றனர். அங்கு பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்க சூர பத்மனை முருகப்பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com