search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்எஸ்எஸ்"

    • சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம்
    • அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்

    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியபோது கூறியதாவது:-

    சமூக அமைப்பில் சக மனிதர்களை நாம் பின்தங்க வைத்துள்ளோம். 2000 ஆண்டுகளாகத் இந்த நிலை தொடர்கிறது. நாம் அவர்களுக்கு சமத்துவத்தை வழங்கும்வரை, ஒதுக்கீடு போன்ற சில சிறப்பு சலுகைகள் வழங்க வேண்டும்.

    எனவே, இத்தகைய பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியலமைப்பு சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இதனை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • திரும்பி வந்ததில் மகிழ்ச்சி, ஆனால் உம்மன் சாண்டியை இங்கு காணவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
    • வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீட்டின் சாவிகளை ராகுல்காந்தி வழங்கி ஆறுதல் கூறினார்.

    திருவனந்தபுரம்:

    மோடி சமுதாயம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து எம்.பி. பதவியை மீண்டும் பெற்ற அவர், நேற்று தனது தொகுதியான கேரள மாநிலம் வயநாடுக்கு வந்தார். அவருக்கு தொகுதி மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    பின்னர் கல்பெட்டா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சகோதர, சகோதரிகளே என்று தனது உரையை தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    4 மாதங்களுக்கு பிறகு இங்கு வந்துள்ளேன்... உங்கள் எம்.பி.யாக வயநாடுக்கு வந்துள்ளேன். திரும்பி வந்ததில் மகிழ்ச்சி, ஆனால் உம்மன் சாண்டியை இங்கு காணவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அவர் கேரளாவின் தலைவராக இருந்தவர். அவரது இறுதி ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றது அவர் மீது கொண்டிருந்த அன்பையும் மரியாதையையும் காட்டியது. கேரளா வுக்காக அவர் செய்ததற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.

    என்னை தகுதி நீக்கம் செய்ய பாரதிய ஜனதா 100 முறை முயன்றாலும், மோடி மற்றும் அவரது கூட்டாளிகளின் திட்டம் பலிக்காது. இந்தியாவின் நோக்கமே மக்களிடம் அமைதியை நிலைநாட்டுவது தான். வன்முறையும் வெறுப்பும் இருந்தால் அது இந்தியா அல்ல.

    பாராளுமன்றத்தில் அவர் (மோடி) 2 மணி 13 நிமிடங்கள் பேசினார். சிரித்தார்...கேலி செய்தார்.... அவரது அமைச்சரவை சிரித்தது.. ஆனால் அதில் மணிப்பூர் பற்றி பேசியது 2 நிமிடங்கள் தான். மணிப்பூரில் பாரதிய ஜனதாவும் அதன் தலைமையிலான அரசும் இந்தியா என்ற எண்ணத்தை கொன்றுவிட்டன.

    ஆயிரக்கணக்கான குடும்பங்களை அழித்துவிட்டீர்கள். ஆயிரக்கணக்கான பெண்களை பாலியல் செய்ய அனுமதித்தீர்கள். அங்கு அப்படி நடந்த பிறகு நாட்டின் பிரதமராக நீங்கள் சிரிக்கிறீர்களா?

    இந்தியா என்ற கருத்தை கொலை செய்யும் எவரும் தேசியவாதியாக இருக்க முடியாது. பாரத மாதா கொலையை பற்றி 2 நிமிடம் பேசினீர்கள். இந்தியா என்ற எண்ணத்தை எப்படி நிராகரிக்க முடியும்?.

    மணிப்பூருக்கு நான் சென்ற போது, எங்கும் ரத்தம்..., எங்கும் கொலை ..., எங்கும் பாலியல் பலாத்காரங்கள் என மக்கள் கூறினர். இது தான் மணிப்பூரின் நிலவரம்.

    கடந்த 4 மாதங்களாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ஏன் மணிப்பூர் செல்லவில்லை? ஏன் வன்முறையைத் தடுக்க முயற்சிக்கவில்லை? ஏனென்றால் நீங்கள் ஒரு தேசியவாதி இல்லை. இந்தியா என்ற எண்ணத்தை கொலை செய்யும் எவரும் தேசியவாதியாக முடியாது.

    வயநாட்டுக்கு நான் வந்திருக்கிறேன். இப்போது நான் என் குடும்பத்திற்கு வந்திருக்கிறேன். யாரோ ஒருவர் நம் குடும்ப உறுப்பினர்களை பிரிக்க முயற்சிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், யாரோ ஒருவர் இரண்டு சகோதரர்களை ஒருவரையொருவர் பிரிக்க முயற்சிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், யாரோ ஒரு தந்தையை தனது மகளிடமிருந்து பிரிக்க முயற்சிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், யாராவது ஒரு குடும்பத்தை பிரிக்க முயன்றால், குடும்பம் வலுவடைகிறது; ஒருவன் தந்தையையும், மகனையும் பிரிக்க முயன்றால், தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான உறவு வலுவடைகிறது... தந்தைக்கும், மகனுக்கும் இடையிலான அன்பு வலுவடைகிறது." பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்கு குடும்பம் என்றால் என்ன என்று புரியவில்லை. நாட்டை அழிப்பதே அவர்களது நோக்கம்.

    இந்தியா ஒரு குடும்பம்.. பிரித்தெடுக்க நினைக்கிறார்கள்; மணிப்பூர் ஒரு குடும்பமாக இருந்தது. அதை அழிக்க முயன்றார்கள்.. மணிப்பூரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பா.ஜ.க.வின் கொள்கை களால் அழிக்கப்பட்டுள்ளன. அதனால், அவர்கள் அழிக்கிறார்கள். குடும்பங் கள், அவை மக்களிடையேயான உறவை அழிக்கின்றன, நாங்கள் மக்களை ஒன்றிணைக்கிறோம், குடும்பங்களை பலப்படுத்துகிறோம், மக்களிடையேயான உறவை பலப்படுத்துகிறோம்.

    உங்களையும் என்னையும் எவ்வளவு அதிகமாக பிரிக்க முயல்கிறார்களோ, அவ்வளவு நெருக்கமாகி விடுவோம் என்று அவர்களுக்கு புரியவில்லை. அவர்கள் நினைக்கிறார்கள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தால், வயநாட்டுடனான அவரது உறவு முறிந்துவிடும். இல்லை! நீங்கள் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்தால், அவருடைய உறவு. வயநாடு மேலும் வலுவடையும், வயநாட்டு மக்கள் மீதான அவரது அன்பு மேலும் வலுவடையும், மேலும் வயநாட்டு மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மேலும் வலுவடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக வெள்ளத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீட்டின் சாவிகளை ராகுல்காந்தி வழங்கினார்.

    • பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது.
    • விழாவில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சூலூர்:

    அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இன்று கோவைக்கு வருகை தந்தார். கோவையில் நடந்த விழாவில் மோகன் பகவத் பேசியதாவது:-

    இந்துக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது.

    உலகில் எல்லா பக்கங்களிலும் இந்து கோவில்கள் உள்ளன. இது நமது கருத்துகளை மதத்தின் சாரத்தை அங்குள்ள மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.

    தமிழகத்தின் ராஜ ராஜா சோழன் கடல் கடந்து சென்று கோவில்களை நிர்மாணம் செய்தான். அதன் மூலம் அங்கெல்லாம் நமது கருத்துகள் பரவி உள்ளது. யாரையும் வெற்றி கொள்ள வேண்டியதில்லை. மாறாக நமது கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மேகாலயா முன்னாள் கவர்னர் சண்முகநாதன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சுப்பிரமணியம், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • நாம் அனைவரும் இந்திய குடிமக்கள்.
    • இந்தியாவை மதவாத நாடாக மாற்ற நினைக்கிறார்கள்.

    திருவனந்தபுரம் :

    பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவின்போது நடந்த நிகழ்வுகள் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் முயற்சியின் வெளிப்பாடு என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நாம் அனைவரும் இந்திய குடிமக்கள். மதத்தின் அடிப்படையில் நமக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. ஏனெனில் இந்தியாவில் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படாது. ஆனால், நம் நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அனைத்து கொள்கைகளையும் தூக்கி எறிந்து, ஒருவரின் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டது என்பதை நிறுவுவதற்காகத்தான் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. அதை (குடியுரிமை திருத்த சட்டம்) இங்கு அமல்படுத்த மாட்டோம் என்று கேரளா உடனடியாக அறிவித்தது. நாங்கள் இன்னும் அதில் உறுதியாக நிற்கிறோம். மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிராக கேரளா எப்போதும் உறுதியாக உள்ளது.

    இந்தியா மதச்சார்பற்ற குடியரசு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை என்பது நாம் பொதுவாக ஏற்றுக்கொண்டது. ஆனால் பாராளுமன்ற திறப்பு விழா என்ற பெயரில் நடத்தப்படும் செயல்பாடுகளை மக்கள் மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

    இது முற்றிலும் மத அடிப்படையிலான விழா. இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இந்தியாவை மதவாத நாடாக மாற்ற நினைக்கிறார்கள். அதுதான் திறப்பு விழா அன்று பாராளுமன்றத்தின் உள்ளே நடந்த நிகழ்வுகளில் தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
    • இப்போது அரசின் நிதி நிலை குறித்து மந்திரிகள் பேசுகிறார்கள்.

    பெங்களூரு:

    பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    துணை முதல்-மந்திரி பதவி அரசியல் சாசன பதவி அல்ல. கட்சிகள் தான் இந்த பதவியை வழங்குகின்றன. அரசு ஆலோசனை கூட்டங்களில் முதல்-மந்திரி பேசுவதற்கு முன்னரே துணை முதல்-மந்திரி பேசுகிறார். புதிய அரசு வரும்போது, முதல்-மந்திரி அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து பேசுவது வழக்கம். ஆனால் புதிய ஆட்சியில் முதல்-மந்திரி அமைதியாக உள்ளார். துணை முதல்-மந்திரி ஆவேசமாக பேசுகிறார்.

    அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கு அவர் மிரட்டல் விடுக்கிறார். மிரட்டுவது என்பது அவரது வழக்கம். காங்கிரஸ் 5 உத்தரவாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதை நிறைவேற்றவில்லை. இது கர்நாடக மக்களுக்கு செய்த மிகப்பெரிய அவமானம். காங்கிரஸ் அரசு அமைந்து 24 மணி நேரத்தில் உத்தரவாத வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக காங்கிரஸ் தலைவர்கள் உறுதியளித்தனர்.

    ஆனால் 240 மணி நேரம் ஆகியும் அந்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இலாகா உத்தரவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். வழியில் செல்பவர்களுக்கு எல்லாம் உத்தரவாத வாக்குறுதிகளை கொடுக்க முடியுமா? என்று மந்திரிகள் சொல்கிறார்கள். இது மக்களுக்கு இழைக்கப்படும் அவமானம் இல்லையா?.

    அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் என்று டி.கே.சிவக்குமார் கூறினார். ஆனால் இப்போது அரசின் நிதி நிலை குறித்து மந்திரிகள் பேசுகிறார்கள். 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்த சித்தராமையாவுக்கு இதுகுறித்து முன்பே ஞானம் இருக்கவில்லையா?. இதை பார்த்து மக்கள் சிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்குவதாக காங்கிரஸ் கூறியது. இப்போது அதற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதாக சொல்கிறார்கள்.

    இந்த விஷயத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப மந்திரி பிரியங்க் கார்கே, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிப்பதாக சொல்கிறார். இதை யாராலும் செய்ய முடியாது. தைரியம் இருந்தால் அந்த அமைப்புக்கு தடை விதியுங்கள் பார்க்கலாம். புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் முன்னாள் பிரதமர் தேவகவுடா கலந்து கொள்வது வரவேற்புக்குரியது. ஊழல் வழக்குகளில் ஜாமீனில் இருப்பவர்கள் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசுகிறார்கள்.

    இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்து கோவில்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
    • மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் உள்ள இந்து கோவில்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதனை அனுமதிக்க கூடாது என்று ஒரு தரப்பினர் கூறிவந்தனர்.

    இந்நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டின் கீழ் உள்ள கோவில்களில் இனி ஆர்.எஸ்.எஸ். கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறி செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    • கோவை மாநகரில் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது.
    • கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணியில் கோர்ட்டு நிபந்தனைகளை மீறி சிலம்பாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் நேற்று கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்பட 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடந்தது.

    கோவை மாநகரில் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது. இந்த பேரணியில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு சீருடை அணிந்தபடி ஊர்வலமாக சென்றனர்.

    பொன்னைய ராஜபுரத்தில் தொடங்கிய இந்த பேரணியானது ஆர்.எஸ்.புரம், சுக்கிரவார்பேட்டை, தெலுங்குவீதி, ராஜவீதி வழியாக தேர்நிலைத் திடல் சென்று நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடந்தது.

    ஆர்.எஸ்.எஸ். பேரணியையொட்டி கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தமிழகத்தில் நடந்த ஆர்.எஸ். பேரணிக்கு கோர்ட்டு பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருந்தது. அதன்படியே தமிழகத்தில் பேரணியும் நடந்தது.

    இந்த நிலையில் கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பேரணியில் கோர்ட்டு நிபந்தனைகளை மீறி சிலம்பாட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோர்ட்டு நிபந்தனைகளை மீறியதாக கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுகுமார், மாவட்ட செயலாளர் முருகன், இணை செயலாளர் குமார் ஆகிய 3 பேர் மீது வெரைட்டிஹால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாட்டை யும் ஆயர் கீவர்க்கீஸ் பாராட்டி உள்ளார்.
    • பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் தீண்டதகாத கட்சி இல்லை, என்றும் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எம்.எல்.ஏ.க்களோ எம்.பி.க்களோ இல்லை. ஆனால் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் கணக்கை தொடங்க பாரதிய ஜனதா கட்சி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் கட்சி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கேரளாவில் பாரதிய ஜனதா விரைவில் ஆட்சி அமைக்கும் என்று கூறினார்.

    அதற்கேற்ப கேரளாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சியினர் அங்கு பெரும்பான்மையான கிறிஸ்தவர்களின் வாக்கு வங்கியை குறிவைத்து தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். அதன்படி கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது அவர்கள் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

    பாரதிய ஜனதாவின் செயல்பாடுகளை தற்போது கிறிஸ்தவ ஆயர்கள் பாராட்டி வருகிறார்கள். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரப்பருக்கு உரிய விலை கொடுத்தால் கேரளாவில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒரு எம்.பி. பதவி கிடைக்கும் என்று கத்தோலிக்க பேராயர் ஒருவர் கூறினார்.

    இப்போது மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரியன் தேவாலய ஆயர் கீவர்க்கீஸ், பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளை பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்த ப்படுகிறார்கள் என்று சர்வதேச அளவில் சிலர் தேவையற்ற பிரசாரங்களை மேற்கொள்கிறார்கள். இது இந்தியாவை அவமதிப்பது போல் உள்ளது.

    இந்தியா மிகப்பெரிய நாடு. ஆங்காங்கே மனக்கசப்பை ஏற்படுத்தும் சில சம்பவங்கள் நடைபெறலாம். அதனை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும், எனக்கூறியிருந்தார்.

    இதுபோல ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்பாட்டை யும் ஆயர் கீவர்க்கீஸ் பாராட்டி உள்ளார். ஆர்.எஸ்.எஸ்.சில் பல நல்ல விசயங்கள் உள்ளன. உடற்பயிற்சி என்பது தற்காப்புக்காக மேற்கொள்வது. மேலும் பாரதிய ஜனதா கட்சி ஒன்றும் தீண்டதகாத கட்சி இல்லை, என்றும் கூறியுள்ளார்.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் கத்தோலிக்க ஆயர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு அடுத்தடுத்து பாராட்டு தெரிவித்து வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் லெட்டர்பேடில் எழுதப்பட்டது போன்ற கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
    • கடிதம் முற்றிலும் போலியானது என்று ஆர்.எஸ்.எஸ். ஊடக தொடர்பு பிரிவு தலைவர் சுனில் அம்பேத்கர் விளக்கம் அளித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் லெட்டர்பேடில் எழுதப்பட்டது போன்ற 2 பக்க கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பஜ்ரங்தள், இந்து சேனா உள்ளிட்ட அமைப்புகளுக்கு எழுதப்பட்ட கடிதம் போல் அது காட்சி அளிக்கிறது.

    அதில், ''முஸ்லிம் இளம்பெண்களை வலையில் வீழ்த்தி, அவர்களை இந்து மதத்துக்கு கொண்டு வாருங்கள்'' என்று இந்துக்களுக்கு அழைப்பு விடுப்பதுபோல் கூறப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, அந்த கடிதம் முற்றிலும் போலியானது என்று ஆர்.எஸ்.எஸ். ஊடக தொடர்பு பிரிவு தலைவர் சுனில் அம்பேத்கர் விளக்கம் அளித்துள்ளார். அந்த கடிதம் மீது 'போலி' என்று முத்திரையிட்டு, அதை தனது 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    • 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்த ஆண்டு குறிப்பிட்ட சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன.
    • பாடப்புத்தகங்களை திருத்தி மாற்றியமைக்கப்பட்ட நடவடிக்கை கடந்த ஆண்டுதான் நடைபெற்றது.

    புதுடெல்லி:

    என்.சி.இ.ஆர்.டி. என்று அழைக்கப்படுகிற தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தில், 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் இந்த ஆண்டு குறிப்பிட்ட சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில வரிகள் வருமாறு:-

    * காந்திஜியின் மரணம், நாட்டின் வகுப்புவாத சூழ்நிலையில், மாயாஜால விளைவுகளை ஏற்படுத்தியது.

    * இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கான காந்தியின் நாட்டம், வகுப்புவாத இந்துக்களைத் தூண்டிவிட்டது.

    * ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் சில காலம் தடை செய்யப்பட்டன.

    இந்த வரிகள் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

    ஏனென்றால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக மாணவர்களின் பாடச்சுமையைக் குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தின் பாடப்புத்தகங்களில் நீக்கங்கள் செய்யப்பட்டன.

    அந்த வகையில், அப்போது 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் செய்யப்பட்ட அதிகாரபூர்வ மாற்றத்தில், மேற்கண்ட வரிகள் நீக்கம் இடம் பெறவில்லை.

    கடந்த ஆண்டு திருத்தம் செய்தபோது, குஜராத் கலவரங்கள், முகலாய அரசசபைகள் (தர்பார்கள்), நெருக்கடி நிலை, பனிப்போர், நக்சலைட்டுகள் இயக்கம் உள்ளிட்டவை நீக்கப்பட்டிருந்தன.

    தற்போது மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய வரிகள் உள்ளிட்ட நீக்கப்பட்ட பகுதிகள் பற்றி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இயக்குனர் தினேஷ் சக்லானி கருத்து தெரிவிக்கையில், "பாடப்புத்தகங்களை திருத்தி மாற்றியமைக்கப்பட்ட நடவடிக்கை கடந்த ஆண்டுதான் நடைபெற்றது. இந்த ஆண்டில் புதிதாக எதுவும் நடைபெறவில்லை" என தெரிவித்தார்.

    அதே நேரத்தில், அப்போது அறிவிக்கப்பட்ட நீக்கங்கள் குறித்த பட்டியலில் இடம்பெற்றிராத வரிகள், தற்போது நீக்கப்பட்டிருப்பது பற்றி அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    • ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
    • எனது கட்சியினரோ, குடும்பத்தினரோ ஒருபோதும் பா.ஜ.க.வுக்கு பணிய மாட்டோம் என்றார்.

    பாட்னா:

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த, 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாகப் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த வாரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கில் லாலு பிரசாத், அவரது மகன் மற்றும் துணை முதல் மந்திரியான தேஜஸ்வி பிரசாத் யாதவ் மற்றும் 3 மகள்களுடன் தொடர்புடைய நாடு முழுவதும் உள்ள 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.55 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள், 540 கிராம் தங்கம் மற்றும் 1.5 கிலோவுக்கு கூடுதலான தங்க நகைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    இதுவரை நடந்த சோதனை முடிவில் லாலு பிரசாத் குடும்பத்துடன் தொடர்புடைய வழக்கில் ஏறக்குறைய ரூ.600 கோடி அளவுக்கு பணமோசடி குற்றங்கள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், எனது கட்சியினரோ, குடும்பத்தினரோ ஒருபோதும் அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா) பணிய மாட்டார்கள் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அவசரநிலைக் காலத்தின் இருண்ட பகுதியையே பார்த்தவர்கள் நாங்கள். அப்போதும் நாங்கள் போராடியிருக்கிறோம். இன்று எனது மகள்கள், பேத்திகள், கர்ப்பிணி மருமகள் ஆதாரமில்லாத பழிவாங்கும் நோக்கிலான வழக்குகளுக்காக 15 மணிநேரத்திற்கும் மேலாக காக்க வைக்கப்பட்டுள்ளனர். எங்களுடனான அரசியல் ரீதியிலான சண்டைக்காக பா.ஜ.க. இவ்வளவு கீழ்த்தரமான அளவிற்கு இறங்குமா? என்றும், மற்றொரு டுவிட்டர் பதிவில், "எனக்கு ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வுடன் கருத்தியல் ரீதியிலான போராட்டம் இருந்து வருகிறது. அது தொடரும். நான் அவர்கள் முன் ஒருபோதும் பணிந்தது இல்லை. என்னுடைய குடும்பத்தினரோ, கட்சியினரே யாரும் அவர்களின் அரசியலுக்கு முன்பு பணியமாட்டார்கள்" என தெரிவித்துள்ளார்.

    • எனது தந்தையின் பாரம்பரியத்தை சுரண்டுவதற்காக அவர்கள் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர்.
    • அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்ற நேதாஜியின் கருத்தை பிரதிபலிக்கவில்லை,

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் நாளை மறுநாள் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு ஆர்எஸ்எஸ் ஏற்பாடுகளை செய்துள்ளது. சாகித் மினார் மைதானத்தில் நடைபெறும் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்ற உள்ளார்.

    ஆனால் நேதாஜியின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஆர்எஸ்எஸ் திட்டத்திற்கு நேதாஜியின் மகள் அனிதா போஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜியின் மகள் அனிதா போஸ் இதுபற்றி கூறியதாவது:-

    ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தமும், தேசியவாதத் தலைவரான நேதாஜியின் மதச்சார்பின்மை மற்றும் உள்ளடக்கிய கருத்துக்களும் எதிரெதிர் துருவங்களே தவிர, அவை ஒத்துப்போவதில்லை. என் தந்தையின் பெருமையை சுரண்டுவதற்காக அவர்கள் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர்.

    அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்ற நேதாஜியின் கருத்தை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரதிபலிக்கவில்லை, நேதாஜி ஒரு பக்தியுள்ள இந்துவாக இருந்தார், ஆனால் மற்ற மதங்களை மதிக்க வேண்டும் என்றார். பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கிடையில் ஒத்துழைப்புக்கு அவர் ஆதரவாக இருந்தார்.

    இந்த அணுகுமுறையை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரதிபலிக்க வேண்டிய அவசியமில்லை. எளிதாக சொல்லவேண்டுமானால் அவர்கள் வலதுசாரிகள், நேதாஜி ஒரு இடதுசாரி.

    நேதாஜியை கவுரவிக்க பாஜக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எந்த ஒரு அரசியல்வாதியாக இருந்தாலும், முதலில் அவர்களின் ஆர்வத்தைப் பார்க்க அனுமதிக்க வேண்டும். நேதாஜி இன்று உயிருடன் இருந்து, அரசாங்கத்தின் பார்வையில் இருந்து மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தால், பாஜக அவரைக் கவுரவித்திருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×