search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆய்வு"

    • ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜாமைதீன் பத்தே நவாஸ், சூரியகுமாரி, உள்பட பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்டப்பட்ட பெரிய வள்ளிக்குளம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.09 லட்சம் மதிப்பில் 116-வது காலனியில் பேவர்பிளாக் அமைக்கும் பணிகளையும், ரூ.6.18 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவிகளுக்கான கழிவறை கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணி களையும், பெரிய வள்ளி குளம் கிராமத்தில் ரூ.8.47 லட்சம் மதிப்பில் ராமசாமி புரம் ஊரணியில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியி னையும், ரூ.6.09 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட் டார்.

    பாலவநத்தம் கிரா மத்தில், தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.1.57 லட்சம் மதிப்பில் சமுதாய கழிவறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பணியினையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பில் வீடுகட்டும் பணியினையும், மலைப் பட்டி கிராமத்தில், 2020-23 பாரளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் ஊரணிக்கு வடக்கு திசையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி யினையும், ரூ.12.80 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரை வாகவும், தரமாகவும் முடிக்கு மாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காஜாமைதீன் பத்தே நவாஸ், சூரியகுமாரி, உள்பட பலர் உடனிருந்தனர்.

    • ராமநாதபுரத்தில் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தினார்.
    • பொதுப் பணித்துறையின் மூலம் அவ்வப்போது கண் காணித்து தேவையான பணிகளை விரைந்து மேற் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண் டார். இந்த ஆய்வின்போது கலெக்டர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடர் மழையின் காரணமாக தேங்கி உள்ள மழைநீரை உடனடியாக அப்புறப் படுத்தும் பணிகளை மேற் கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டி டங்களை பார்வையிட்டது டன், மருத்துவ பயன் பாட்டிற்கு உள்ள குடிநீர் இணைப்புகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாடு போன்றவற்றை பார்வை யிட்டத்துடன், பொதுப்பணித்துறையின் மூலம் அவ்வப்போது கண் காணித்து தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சியின் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் செந்தில்குமார், கண்காணிப்பு மருத்துவ அலுவலர்கள் மலர்வண்ணன், சிவகுமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • வழிவழி கண்மாய் சுமார் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
    • புளியங்குடி டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா விஸ்வநாதபேரி கிராமம் பாகம் 1-ஐ சேர்ந்த வழிவழி கண்மாய் சுமார் 165 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இக்கண்மாய் மூலம் 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வசதி ஏற்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக கண்மாயில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வெளியே செல்லக்கூடிய கலிங்கல் மடை அருகே 5 அடி ஆழத்தில் மண் திருடப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர், வருவாய் துறையினர், பொதுப்பணி துறையினர், ராஜபாளையம் மேல்வைப்பாறு நீர் நிலை கோட்டம் உதவி பொறியாளர், காவல் துறையினர் ஆகியோருக்கு, வழிவழி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் சார்பாக சங்கத் தலைவர் க.சிவசுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து புளியங்குடி டி.எஸ்.பி. வெங்க டேசன், பொதுப்பணித்துறை சார்பில் இளநிலை பொறியாளர் கண்ணன், வருவாய் துறை சார்பில் சிவகிரி வருவாய் ஆய்வாளர் சுந்தரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து அது சம்பந்தமான அறிக்கையை தங்களுடைய மேலதிகாரி களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    • புதுக்கோட்டையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்
    • எண்ணைய்‌ ஆலை, பண்டகசாலை, அச்சகம்‌ உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடைபெற்றது

    புதுக்கோட்டை, 

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மரு.ந.சுப்பையன் புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூட்டு றவு சங்கங்களில் ஆய்வு செய்தார்.திருமயம் வேளாண்மைஉற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், திருமயம் கூட்டுறவு வேளாண் மற்றும்ஊரக வளர்ச்சி வங்கி, புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி திருமயம்கிளை ஆகிய இடங்களிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் ஆலவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும்அச்சங்கத்தின் பல்நோக்கு சேவை மைய திட்டத்தின் கீழ் செயல்படும் கடலைஎண்ணைய் ஆலை, புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைபண்டகசாலையின் சுய சேவை பிரிவு மற்றும் கிட்டங்கி மற்றும் மாவட்ட கூட்டுறவுஅச்சகம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு சங்கங்களின் செயல்பாடு கள்குறித்து அறிவுரைகள் வழங்கினார்.அதனை தொடர்ந்து வங்கிவாடிக்கையாளர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைமையிடத்தில் டாப்செட்கோ கடன், கைம்பெண்கள் கடன், மகளிர்தொழில்முனைவோர் கடன், வீடடு வசதி கடன், சுய உதவி குழுக் கடன் மற்றும் சிறுவணிககடனாக 61 பயனாளிகளுக்கு ரூ.52.30 லட்சம் அளவிற்கு கடனுதவிவழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டலஇணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், புதுக்கோட்டை மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும் செயலாட்சியருமான தனலெட்சுமி,புதுக்கோட்டை சரகத் துணைப்பதிவாளர் அப்துல் சலீம், அறந்தாங்கிசரகத் துணைப்பதிவாளர் ஆறுமுகப்பெருமாள், துணைப்பதிவாளரும்முதன்மை வருவாய் அலுவலருமான மண்வண்ணன் மற்றும் மொத்த விற்பனைபண்டகசாலையின் கூட்டு றவு சார்பதிவாளரும் செயலாட்சியருமான வினிதாஆகியோர் கலந்துகொண்டனர்.

    • கந்தர்வகோட்டையில் நெற்பயிரில் இலைசுருட்டு, குருத்து பூச்சி தாக்குதல் ஏற்பட தொடங்கி உள்ளது
    • உதவி இயக்குனர் தலைமையில் வேளாண் துறையினர் ஆய்வு

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை வட்டா ரத்தில் நடப்பு ஆண்டு சம்பா பருவத்தில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ள பட்டது. தற்போது நிலவி வரும் தட்பவெப்பநிலை காரணமாக நெல்பயிரில் இலைசுருட்டு புழு மற்றும் குருத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை முன்னிட்டு வேளாண்மை உதவி இயக்குநர்அன்பரசன் தலைமையில் வேளாண் துறை களப்பணியாளர்கள் துவார், அக்கச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    • வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக் காக அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை கலெக்டர் விஷ்ணுசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராமாநாதபுரம் நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவா டானை, திருச்சுழி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளுக்குரிய வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் எந்தி ரங்கள் உள்ளிட்ட மின்னனு வாக்குப்பதிவு கருவிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை மற்றும் வாக்குகள் எண்ணும் அறை ஆகிய வற்றை பார்வையிட்டார்.

    மேலும் வாக்கு எண்ணிக்கை நாளன்று முகவர்கள் வந்து செல்லும் பகுதி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வந்து செல்லும் பகுதி என தனித்தனியே அமைக்கப் பட உள்ள வழித்தடங்களை யும் பார்வையிட்டார்.

    வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

    ஆய்வின்போது பரமக்குடி சார் ஆட்சியர் அப்துல் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதி வேல்மாறன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் முருகே சன் மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பில் அரங்கநாதன் பெயரில் மாதிரி நூலகம் கட்டப்பட்டு வருகிறது.
    • கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.

    சீர்காழி:

    சீர்காழியில் கிளை நூலகம் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மழைக்காலங்களில் வாடகை கட்டிடத்தில் மழைநீர் கசிந்தும், நூலக கட்டடங்கள் இடம் பெயரும் போதும் பல அரிய வகை நூல்கள் கிழிந்தும் சேதம் அடைந்து வந்தன.

    நூலக தந்தை எனப் போற்றப்படும் எஸ்.ஆர்.அரங்கநாதன் பிறந்த சீர்காழியில் அவரது பெயரில் மாதிரி நூலகம் அமைக்க வேண்டும் என பல ஆண்டு களாக வாசகர்கள், பொது மக்கள் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் கேள்வி நேத்தின் போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சீர்காழியில் அரங்கநாதன் பெயரில் புதிய நூலக கட்டடம் கட்டப்படும் என அறிவித்தார்.

    அதன்படி சீர்காழியின் மையப் பகுதியான மணி கூண்டு அருகே ரூ.1 கோடியே 32 லட்சம் செலவில் எஸ் .ஆர் .அரங்கநாதன் பெயரில் மாதிரி நூலகம் கட்டப்பட்டு வருகிறது.

    மாணவர்களுக்கானவசதி, போட்டித் தேர்வுக்கான வசதி, சிறுவர்கள் நூல்கள், மின் நூலகம், பெண்களுக்கான தனிப்பிரிவு என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த மாதிரி நூலகம் கட்டப்பட்டு வருகிறது .

    இதனிடையே இந்த நூலக கட்டடம் கட்டுமான பணியை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ,காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்ய நாதன் உடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கட்டடத்தில் ஒவ்வொரு பகுதியும் பார்வையிட்டு விவரங்களை கேட்டறிந்தார்.

    கட்டடத்தின் அருகில் உள்ள பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை இடமாற்றிவிட்டு அங்கு நூலக தந்தை அரங்கநாதன் சிலை வைத்திட விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார் பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து ஒரு மாத காலத்தில் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு திறக்கவும் அப்போது தெரிவித்தார்.

    ஆய்வின் போது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத்,மாவட்ட கலெக்டர் மகாபாரதி இணை இயக்குனர் அமுதவல்லி, கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செ ல்வம், பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் ,நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன்,துணைத் தலைவர் சுப்பராயன் மாவட்ட பொருளாளர் அலெக்ஸா ண்டர், ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒப்பந்ததாரர் அன்பழகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • ஒவ்வொரு பூத்கமிட்டியிலும் ஆய்வு செய்து புத்தகத்தில் கையெழுத்திட்டனர்
    • சிறப்பாக செயல்பட்ட ஊட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கு பாராட்டு

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் ஊட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி, மகளிர் குழு இளைஞர்-இளம்பெண்கள் பாசறை ஆகிய பணிகள் நிறைவுபெற்றன.

    தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர்.மாவட்ட பூத்கமிட்டி பொறுப்பாளரும், புரட்சித்தலைவிஅம்மா பேரவை மாநில இணை செயலாளருமான பொன்ராஜா தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் முன்னிலை வகித்தார்.தொடர்ந்து அனைத்து ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகி மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒவ்வொரு பூத்கமிட்டியிலும் பொறுப்பாளர் ஆய்வு செய்து புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

    பின்னர் சிறப்பாக செயல்பட்ட ஊட்டி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர்அணி பாலநந்தகுமார், மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தேனாடு லட்சுமணன், மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் டி.கே.தேவராஜு, பாசறை மாவட்ட செயலாளர் அக்கீம்பாபு, ஊட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் பா.குமார், குந்தா மேற்கு ஒன்றிய செயலாளர் சக்சஸ் சந்தின், பேரூராட்சி செயலாளர் கேத்தி கண்ணபிரான், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் எப்பநாடு கண்ணன், மீனவரணி மாவட்ட செயலாளர் விஷாந்த் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    வேலாயுதம்பாளையம் பகுதியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு

    வேலாயுதம்பாளையம் , 

    கரூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்ப டுத்தப்படும் வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் தங்க வேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி மற்றும் கோம்பு பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் ) மாவட்ட கலெக்டர் தங்கவேல் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் மேற்கொ ள்ளப்ப ட்டு வரும் பல்வேறு வ ளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புஞ்சை தோட்டக்குறிச்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைநேய பள்ளி திட்டத்தின் கீழ் ரூ.31.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடப் பணிகளை பார்வையிட்டார். விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    தொடர்ந்து அதே பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை பார்வை யிட்டு நாள்பட்ட முட்டை களை கழிவு செய்து விட வேண்டும். அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்கள் தரம் குறைவாக காணப்ப ட்டால் அலுவலர்களை தொடர்பு கொண்டு உணவுப் பொருட்களில் தரம் குறித்து தெரிவிக்க வேண்டும். என்று தெரிவித்தார்

    அதேபோல் கோம்புபாளையம் ஊரா ட்சிக்கு உட்பட்ட நவலடி நகரில் ரூ.4 லட்சம் மதிப்பீ ட்டில் அமைக்க ப்பட்டுள்ள சிமெ ண்ட் சாலை பணியினை பார்வை யிட்டார்.

    பின்னர் புன்னம் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை பார்வையிட்டு மாணவர்க ளுக்கு உரிய நேரத்தில் உணவினை வழங்கி நல்ல சுவையாகவும் ,தரமாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சண்முக வடிவேல், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) தேன்மொழி, உதவி பொறியா ளர் பூர்ணா தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ண மூர்த்தி, நீலகண்டன், விஜயலெட்சுமி, செல்வி, கோம்புப் பாளையம்ஊ ராட்சி மன்ற தலைவர் பசுபதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சமையல் தயாரிப்பிற்கு பயன்படும் மூலப்பொருட்கள், காய்கறி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.
    • சமைத்த உணவுகள் உணவு மாதிரி எடுத்து வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமையலறையில் உள்ள சுகாதாரக்கேடு தொடர்பாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள சமையல் கூடங்களில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆய்வு நடத்தப்படுகிறது.

    அந்த வகையில், நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சமையல் கூடத்தை, நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.

    சமையலறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா ? உணவு பொருட்கள் இருப்பு வைக்கும் இடம், சமையல் தயாரிப்பிற்கு பயன்படும் மூலப்பொருட்கள், காய்கறி உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது. சமையலர் மற்றும் உதவியாளர்கள் தன்சுத்தத்தை பேணவும், தேவையான அளவு சமைத்த உணவுகள் உணவு மாதிரி எடுத்து வைக்கவும் அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • ஏர்வாடி சமுதாயகூடத்தில் பொதுமக்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் கலந்துரையாடினார்.
    • ஏர்வாடி சமுதாயகூடத்தில் பொதுமக்களுடன் ராமநாதபுரம் கலெக்டர் கலந்துரையாடினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், சின்ன ஏர்வாடி சமுதாயக்கூடத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அடிப்படை வசதிகள் குறித்தும், குடிநீர் சீராகக் கிடைக்கப்படுகிறதா என்பது தொடர்பாகவும், நியாயவிலைக் கடைகளில் உணவுப்பொருட்கள் சீராக கிடைக்கப்பெறுகிறதா என கேட்டறிந்தார்.

    மழைக்காலத்தை கருத்தில் கொண்டு காய்ச்சிய குடிதண்ணீரை பயன்படுத்துவதுடன், காய்ச்சல் போன்ற அறிகுறி கள் இருந்தால் அரசு மருத்துவமனைக்குச் சென்று உரிய மருத்துவ கிச்சை மற்றும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி இருந்திட வேண்டும். அதேபோல் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் உரிய சிகிச்சை பெற்று மழைக்காலத்தில் நோய் தொற்று இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் எனவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமம், பி.எம்.வலசை பகுதியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், படகு சவாரி மேற்கொள்ளும் இடத்தில் அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஏர்வாடி மனநல காப்பகத்தின் செயல்பாடு கள் குறித்தும் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்பின் போது கீழக்கரை வட்டாட்சியர் பழனிகுமார் , கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்ஆனந்த், ஏர்வாடி ஊராட்சி மன்றத்தலைவர் செய்யது அப்பாஸ் உள்பட பலர் இருந்தனர்.

    • கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • மழை நீரால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு, மழைநீரினை முழுவதும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    வேலாயுதம்பாளையம்

    கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக புகழூர் நகராட்சி 19-வது வார்டுக்கு உட்பட்ட வள்ளுவர் நகர் தெற்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் மழைக்காலங்களில் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. மழை நீரால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு, மழைநீரினை முழுவதும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணியை புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர் என்கிற குணசேகரன் நேரில் ஆய்வு செய்து பணியினை துரிதப்படுத்தி முடிக்க கூறினார். ஆய்வின் போது நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    ×