search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு
    X

    கூட்டுறவு சங்கங்களில் ஆய்வு

    • புதுக்கோட்டையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்
    • எண்ணைய்‌ ஆலை, பண்டகசாலை, அச்சகம்‌ உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடைபெற்றது

    புதுக்கோட்டை,

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மரு.ந.சுப்பையன் புதுக்கோட்டை மண்டலத்தில் உள்ள பல்வேறு கூட்டு றவு சங்கங்களில் ஆய்வு செய்தார்.திருமயம் வேளாண்மைஉற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், திருமயம் கூட்டுறவு வேளாண் மற்றும்ஊரக வளர்ச்சி வங்கி, புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி திருமயம்கிளை ஆகிய இடங்களிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் ஆலவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும்அச்சங்கத்தின் பல்நோக்கு சேவை மைய திட்டத்தின் கீழ் செயல்படும் கடலைஎண்ணைய் ஆலை, புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைபண்டகசாலையின் சுய சேவை பிரிவு மற்றும் கிட்டங்கி மற்றும் மாவட்ட கூட்டுறவுஅச்சகம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு சங்கங்களின் செயல்பாடு கள்குறித்து அறிவுரைகள் வழங்கினார்.அதனை தொடர்ந்து வங்கிவாடிக்கையாளர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிதலைமையிடத்தில் டாப்செட்கோ கடன், கைம்பெண்கள் கடன், மகளிர்தொழில்முனைவோர் கடன், வீடடு வசதி கடன், சுய உதவி குழுக் கடன் மற்றும் சிறுவணிககடனாக 61 பயனாளிகளுக்கு ரூ.52.30 லட்சம் அளவிற்கு கடனுதவிவழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டலஇணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், புதுக்கோட்டை மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளரும் செயலாட்சியருமான தனலெட்சுமி,புதுக்கோட்டை சரகத் துணைப்பதிவாளர் அப்துல் சலீம், அறந்தாங்கிசரகத் துணைப்பதிவாளர் ஆறுமுகப்பெருமாள், துணைப்பதிவாளரும்முதன்மை வருவாய் அலுவலருமான மண்வண்ணன் மற்றும் மொத்த விற்பனைபண்டகசாலையின் கூட்டு றவு சார்பதிவாளரும் செயலாட்சியருமான வினிதாஆகியோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×