search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்கு மையம்"

    • வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக் காக அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களை கலெக்டர் விஷ்ணுசந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராமாநாதபுரம் நாடாளு மன்ற தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவா டானை, திருச்சுழி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்ட மன்ற தொகுதிகளுக்குரிய வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் எந்தி ரங்கள் உள்ளிட்ட மின்னனு வாக்குப்பதிவு கருவிகள் வைக்கப்படும் பாதுகாப்பு அறை மற்றும் வாக்குகள் எண்ணும் அறை ஆகிய வற்றை பார்வையிட்டார்.

    மேலும் வாக்கு எண்ணிக்கை நாளன்று முகவர்கள் வந்து செல்லும் பகுதி, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வந்து செல்லும் பகுதி என தனித்தனியே அமைக்கப் பட உள்ள வழித்தடங்களை யும் பார்வையிட்டார்.

    வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு தேவையான பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரையுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.

    ஆய்வின்போது பரமக்குடி சார் ஆட்சியர் அப்துல் ரசூல், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் குருதி வேல்மாறன், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் முருகே சன் மற்றும் அரசு அலுவ லர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.
    • துணை ஆட்சியா்கள் திவ்யபிரியதா்ஷனி, தா்மராஜ், குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபி செட்டிபாளையம், திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் மையங்கள், தோ்தல் மேற்பாா்வையாளா்கள் அறை ஆகியன திருப்பூா் எல்.ஆா்.ஜி.மகளிா் கல்லூரியில் அமைக்கப்படவுள்ளன.இந்நிலையில் இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.

    இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாநகர துணை காவல் ஆணையா் வனிதா, திருப்பூா் சாா் ஆட்சியா் (பொறுப்பு) ராம்குமாா், துணை ஆட்சியா்கள் திவ்யபிரியதா்ஷனி, தா்மராஜ், குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    ×