search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாராளுமன்ற  தோ்தல் வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு
    X

    வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு செய்த காட்சி. 

    பாராளுமன்ற தோ்தல் வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு

    • பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.
    • துணை ஆட்சியா்கள் திவ்யபிரியதா்ஷனி, தா்மராஜ், குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபி செட்டிபாளையம், திருப்பூா் தெற்கு, திருப்பூா் வடக்கு ஆகிய சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் மையங்கள், தோ்தல் மேற்பாா்வையாளா்கள் அறை ஆகியன திருப்பூா் எல்.ஆா்.ஜி.மகளிா் கல்லூரியில் அமைக்கப்படவுள்ளன.இந்நிலையில் இந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் குறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தாா்.

    இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மாநகர துணை காவல் ஆணையா் வனிதா, திருப்பூா் சாா் ஆட்சியா் (பொறுப்பு) ராம்குமாா், துணை ஆட்சியா்கள் திவ்யபிரியதா்ஷனி, தா்மராஜ், குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×