என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெற்பயிரில் இலைசுருட்டு, குருத்து பூச்சி தாக்குதல்
- கந்தர்வகோட்டையில் நெற்பயிரில் இலைசுருட்டு, குருத்து பூச்சி தாக்குதல் ஏற்பட தொடங்கி உள்ளது
- உதவி இயக்குனர் தலைமையில் வேளாண் துறையினர் ஆய்வு
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை வட்டா ரத்தில் நடப்பு ஆண்டு சம்பா பருவத்தில் சுமார் 3000 எக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ள பட்டது. தற்போது நிலவி வரும் தட்பவெப்பநிலை காரணமாக நெல்பயிரில் இலைசுருட்டு புழு மற்றும் குருத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை முன்னிட்டு வேளாண்மை உதவி இயக்குநர்அன்பரசன் தலைமையில் வேளாண் துறை களப்பணியாளர்கள் துவார், அக்கச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story






