search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆன்ட்ராய்டு"

    இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோரின் கான்டாக்ட்களில் தானாக ஆதார் சேவை மைய உதவி எண் தானாக சேமிக்கப்பட்டதற்கு கூகுள் பொறுப்பேற்றுக் கொண்டது. #UIDAIMystery #Google


    இந்தியா முழுக்க மொபைல் போன் பயன்படுத்துவோரின் கான்டாக்ட்களில் ஆதார் சேவை மையத்திற்கான (UIDAI) இலவச அழைப்பு எண் தானாக சேமிக்கப்பட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாக பலர் குற்றஞ்சாட்டி வந்தனர். மர்ம முறையில் ஆதார் சேவை உதவி எண் சேமிக்கப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஆதார் சேவை மையம் உடனடியாக பதில் அளித்திருந்தது. 

    அதில் மொபைல் போன் பயன்படுத்துவோர் கான்டாக்ட்-இல் தானாக சேமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் ‘18003001947’ பழைய எண், இந்த இலவச எண் செயலற்று கிடக்கிறது என தெரிவித்தது. மத்திய அரசின் ஆதார் மையம் இவ்வாறு செய்யவில்லை எனில், பயனற்ற நம்பரை யார் பதிவு செய்தார்கள் என்ற குழப்பத்திற்கு கூகுள் பதில் அளித்துள்ளது.

    இதுகுறித்து கூகுள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஆதார் சேவை மைய இலவச அழைப்பு எண் மொபைல் போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆன்ட்ராய்டு செட்டப் விசார்டில் தவறுதலாக கோடிங் செயய்ப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட ஆன்ட்ராய்டு செட்டப் அன்று முதல் தளத்தில் இருந்ததோடு, புதிய சாதனங்களிலும் அப்டேட் ஆகியிருக்கிறது.

    சில ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கும் ஆதார் சேவை மைய இலவச அழைப்பு எண் தங்களது போன்புக்-இல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் ஆன்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாறும் போது சின்க் செய்யப்பட்டு இருக்கலாம். இது ஆன்ட்ராய்டு சாதனங்களில் முறையற்ற பயன்பாடு கிடையாது என கூகுள் உறுதியாக தெரிவித்துள்ளது. 

    எனினும், இந்த பிழையை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் மொபைல் போன் உற்பத்தியாளர்களுக்கு இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. #UIDAIMystery #Google
    கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் ஆன்ட்ராய்டு தளத்தில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது. #Gmail


    ஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதியை வழங்க இருக்கிறது. இதுவரை பயனர்கள் மின்னஞ்சல் ஷெட்யூல் செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வரும் நிலையில் புதிய அம்சம் பலருக்கு பயன்தரும் வகையில் இருக்கும்.

    மொபைலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்பட இருப்பதால், இதே அம்சம் இணையத்திற்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிமெயில் மொபைல் செயலியின் கம்போஸ் ஆப்ஷனின் அருகில் உள்ள ஷெட்யூல் சென்ட் எனும் அம்சம் புதிதாக சேர்க்கப்படுகிறது.

    ஷெட்யூல் செய்யும் அம்சம் மொபைல் மற்றும் இணைய பதிப்புகளுக்கு ஒரே சமயத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கு எவ்வித ஆதாரமும் இதுவரை வெளியாகவில்லை. ஷெட்யூல் இ-மெயில் அம்சம் மின்னஞ்சல்களை டைப் செய்து, அதன் பின் நீங்கள் விரும்பும் நேரத்தில் அவை தானாக செல்லும் படி இருக்கும்.

    ஜிமெயிலின் புதிய செயலியை ஏ.பி.கே. வடிவில் டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். அவசரம் இல்லை என்பவர்கள் பிளே ஸ்டோரில் அப்டேட் கிடைக்கும் வரை காத்திருக்கலாம். #Gmail #Apps
    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் சஸ்பீஷியஸ் லின்க் அம்சம் பெருமளவு பயனர்களுக்கு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsApp

    வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கவும், ஃபிஷிங், ஸ்பேம் போன்ற தொல்லைகளை தடுக்கவும் புதிய அம்சத்திற்கான சோதனையை வாட்ஸ்அப் சமீபத்தில் துவங்கியது.

    அதன்படி செயலியில் பரப்பப்படும் வலைதள முகவரி போலியானதாக இருப்பின், அதனை வாட்ஸ்அப் சஸ்பீஷியஸ் லின்க் என அடையாளப்படுத்தும். முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.204 பதிப்பில் மிக குறைந்த அளவு பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த அம்சம் வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.221 வெர்ஷனில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படுகிறது. இத்துடன் இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பதையும் வாட்ஸ்அப் FAQ பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.221 வெர்ஷனில் சஸ்பீஷியஸ் லின்க் எனும் அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் உங்களுக்கு யாரேனும் போலி வலைதள முகவரிகளை பகிர்ந்தால் சஸ்பீஷியஸ் லின்க் என அடையாளப்படுத்தும். இதனால் பயனர்கள் குறிப்பிட்ட முகவரியை (லின்க்-ஐ) க்ளிக் செய்யாமலேயே அறிந்து கொள்ள முடியும். தொடர்ந்து இதனை க்ளிக் செய்யும் பட்சத்தில் ஓபன் லின்க் மற்றும் கோ பேக் இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    சஸ்பீஷியஸ் (suspicious) வார்த்தை டையலாக் பாக்ஸ் வடிவில் அடையாளப்படுத்தப்படுகிறது. புதிய சஸ்பீஷியஸ் லின்க் டிடெக்ஷன் அம்சம் ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் தளங்களில் இதுவரை வழங்கப்படவில்லை. எனினும் இனி வரும் அப்டேட்களில் இந்த அம்சம் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.



    "இந்த இன்டிகேட்டர் ஏதேனும் லின்க் விசித்திரமான குறியீடுகளை கொண்டிருக்கும் பட்சத்தில் வெளிப்படும். ஸ்பேமர்கள் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, பயனர்களை க்ளிக் செய்ய தூண்டி உண்மையான வலைதளம் போன்ற தோற்றத்தை உருவாக்கி மால்வேர் நிறைந்த வலைதளத்துக்கு எடுத்து செல்லாம்." என வாட்ஸ்அப் FAQ பக்கத்தில் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

    மேலும் இந்த லின்க்கள் தானாக சரிபார்க்கப்பட்டு, இந்த தகவல் யவராலும் பார்க்க முடியாதபடி முழுமையாக என்க்ரிப்ஷன் செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது. புதிய அம்சம் ஃபிஷிங், ஸ்பூஃபிங் மற்றும் ஸ்பேம் உள்ளிட்டவற்றை தடுக்கும் என்றாலும் போலி செய்திகளை குறைக்க முடியாது. வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளின் தொந்தரவு சமீப காலங்களில் அதிகரித்து விட்டது.

    பெரும்பாலான வலைதளங்களில் எவ்வித விசித்திரமான குறியீடுகளும் தனது இணைய முகவிரகளில் (லின்க்) கொண்டிருக்கவில்லை, எனினும் இவை போலி செய்திகளை உண்மையானதாகவே வெளியிட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை குறைக்கும் வகையில் ஃபார்வேர்டு செய்யப்படும் மெசேஜ்களின் எண்ணிக்கையை 5-ஆக குறைத்தும் க்விக் ஃபார்வேர்டு பட்டன் நீக்க வாட்ஸ்அப் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.  #WhatsApp #Apps

    புகைப்படம்: நன்றி WABetaInfo
    இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபாளோவர்களை நீக்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #instagram



    இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக இரண்டு அம்சம்ங்களை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய இரண்டடுக்கு ஆத்தென்டிகேஷன் மற்றும் பொது அக்கவுன்ட்கள் அவர்களின் ஃபாளோவர்களை நீக்கும் அம்சம் சோதனை செய்யப்படுகிறது.

    நீண்ட காலமாக பிரைவேட் அக்கவுன்ட் வைத்திருப்போருக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பப்ளிக் அக்கவுன்ட் பயன்படுத்துவோருக்கு இந்த அம்சம் வழங்கப்பட இருக்கிறது. தற்சமயம் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதால், ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகிறது.



    புதிய அம்சம் சோதனை செய்யப்படுவதை இன்ஸ்டாகிராம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கிறது, எனினும் இதன் முழுமையான வெளியீடு குறித்து எவ்வித தகவலையும் வழங்கவில்லை. மேலும் ஃபாளோவர்களை நீக்கும் போது அவர்களுக்கு எவ்வித நோட்டிஃபிகேஷனும் அனுப்பப்படாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    முன்னதாக மே மாதத்தில் இன்ஸ்டாகிராம் செயலியில் மியூட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை கொண்டு ஒருவரை பின்தொடரும் போது அவர்களது போஸ்ட் மற்றும் ஸ்டோரிக்களை முழுமையாக தவிர்க்க முடியும். புதிய அம்சம் மூலம் இன்ஸ்டாகிராமில் உங்களை பின்தொடர்வோரை முழுமையாக இயக்க முடியும்.

    இந்த அம்சம் உங்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதை தெரிந்து கொள்ள, உங்களது ஃபாளோவர்களை க்ளிக் செய்ய வேண்டும். இனி செங்குத்தாக இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்தால், குறிப்பிட்ட நபரை நீக்குவதற்கான அம்சம் இடம்பெற்றிருக்கும். #instagram #Apps
    இன்ஸ்டாகிராம் செயலியில் அடாப்டிவ் ஐகான் அம்சம் ஒருவழியாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #instagram



    இன்ஸ்டாகிராம் சேவையை உலகம் முழுக்க சுமார் 80 கோடி பயனர்களுடன் உலகின் இரண்டாவது பெரிய சமூக வலைத்தளமாக இருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 270 கோடி பயனர்களுடன் ஃபேஸ்புக் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

    சீரான இடைவெளியில் புதுப்புது அம்சங்களை வழங்கி வரும் இன்ஸ்டாகிராம் சமீபத்தில் ஸ்டிக்கர் மூலம் கேள்விகளை ஸ்டோரியில் கேட்கும் வசதியை அறிமுகம் செய்திருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய அப்டேட் இல் அந்நிறுவனம் அடாப்டிவ் ஐகான் அம்சத்தை சேர்த்து இருக்கிறது. 

    இத்துடன் இன்ஸ்டா அக்கவுன்ட்களை மிக எளிமையாக வெரிஃபை செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் வெரிஃபிகேஷன் செய்வதற்கான விண்ணப்பம் செயலியிலேயே வழங்கி இருக்கிறது.

    ஆல்ஃபா ஆன்ட்ராய்டு அப்டேட் 55.0.0.0.33 மூலம் இன்ஸ்டாகிராம் செயலியில் அடாப்டிவ் ஐகான்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் உங்களது சாதனம் வழங்கும் சப்போர்ட்-க்கு ஏற்ப ஐகான் வடிவம் மாறும். முன்னதாக இன்ஸ்டாகிராம் ஐகான் சாதனம் எவ்வித சப்போர்ட் வழங்கினாலும் சதுரங்க வடிவிலேயே இருந்தது. தற்சமயம் அடாப்டிவ் ஐகான் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், ஒவ்வொரு சாதனத்திற்கும் ஏற்ப இன்ஸ்டா ஐகான் வடிவம் மாறும்.



    அனைத்து சாதனங்களிலும் புதிய அப்டேட் கிடைக்க சில காலம் ஆகும், எனினும் பயனர்கள் ஏ.பி.கே. மிரர் (APK Mirror) மூலம் முன்கூட்டியே டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பொது மக்களும் வெரிஃபிகேஷன் பேட்ஜ் பெற விண்ணப்பிக்க எளிமையான வழிமுறையை இன்ஸ்டாகிராம் உருவாக்கி வருவாதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய அம்சம் உருவாக்கப்படுவதை இன்ஸ்டாகிராம் உறுதி செய்திருப்பதாகவும், "இந்த அம்சம் மூலம் இன்ஸ்டா வாசிகள் தங்களுக்கான வெரிஃபிகேஷனை அவர்களாகவே விண்ணப்பிக்க முடியும் என்றும், இன்ஸ்டாவில் வெரிஃபைடு பெறும் வழிமுறையை புரிந்து கொள்ள முடியும். பொது மக்களுக்கு வெரிஃபிகேஷன் வழங்குவதன் மூலம் இன்ஸ்டாவாசிகளை பாதுகாக்க முடியும்." என இன்ஸ்டா செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது

    இன்ஸ்டாகிராம் செட்டிங்ஸ் ஆப்ஷனில் வெரிஃபிகேஷன் பெற விண்ணப்பிக்கும் படிவம் சேர்க்கப்படுவதாகவும், இந்த படிவம் ஆஸ்திரேலியாவில் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கும், மேலும் சில பெயர் தெரிவிக்கப்படாத நாடுகளில் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய அம்சம் வரும் வாரங்களில் மற்ற பகுதிகளில் உள்ள ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #instagram #InstaStories

    புகைப்படம்: நன்றி Android Police
    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் வழங்க புதிய அம்சம் உருவாக்கப்படுவது இணையத்தில் லீக் ஆகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது. #WhatsApp



    வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீடடா செயலியில் அந்நிறுவனம் புதிய அம்சத்தை சோதனை செய்வது தெரியவந்துள்ளது. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியின் நோட்டிஃபிகேஷன் சென்டரில் மார்க் ஆஸ் ரீட் (mark as read) என்ற ஆப்ஷன் வழங்கப்பட இருக்கிறது.

    தற்சமயம் உருவாக்கப்படும் இந்த அம்சம் இதுவரை வழங்கப்படவில்லை. வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு மெசேஜ் வரும் போது, நோட்டிஃபிகேஷன் சென்டரில் அதற்கு பதில் அளிக்க கோரும் ரிப்ளை (Reply) ஆப்ஷன் மட்டுமே தற்சமயம் காணப்படுகிறது. 



    புதிய அம்சம் வழங்கப்படும் பட்சத்தில் உங்களுக்கு வரும் வாட்ஸ்அப் மெசேஜ் நோட்டிஃபிகேஷன்களில் ரிப்ளை ஆப்ஷனுடன் மார்க் ஆஸ் ரீட் ஆப்ஷன் வழங்கப்பட இருக்கிறது. பெயருக்கு ஏற்றார்போல் புதிய அம்சம் கொண்டு குறுந்தகவலை நோட்டிஃபிகேஷன் சென்டரிலேயே படித்ததாக மார்க் செய்ய முடியும்.

    இதுவரை இந்த அம்சம் வழங்கப்படாத நிலையில், நோட்டிஃபிகேஷன் சென்டரில் புதிய மியூட் பட்டன் வழங்கப்பட இருக்கிறது. இதை கொண்டு நோட்டிஃபிகேஷன் சென்டரில் இருந்தபடியே சாட்களை மியூட் செய்ய முடியும். எனினும் புதிய ஆப்ஷன்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்பது குறித்து எவ்வித தகவலும், படமும் இல்லை.  #WhatsApp #Apps

    புகைப்படம்: நன்றி WABetaInfo
    இன்ஸ்டாகிராம் செயலியில் புதிதாக இன்டராக்டிவ் ஸ்டிக்கர் சேர்க்கும் புதிய வசதி ஸ்டோரிக்களில் அறிமுகம் செய்துள்ளது.



    இன்ஸ்டாகிராம் செயலியில் கேள்விகளை புதுவிதமாக ஸ்டிக்கர் வடிவில் கேட்கச் செய்யும் அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு இன்ஸ்டா ஸ்டோரிக்களில் ஸ்டிக்கர் வடிவில் கேள்விகளை கேட்க முடியும்.

    புதிய அம்சம் கொண்டு இன்ஸ்டா வாசிகள் தங்களை பின்தொடர்வோரிடம் மிக எளிமையாக உரையாட முடியும். முன்னதாக மே மாதத்தில் இன்டராக்டிவ் எமோஜி ஸ்லைடரை ஸ்டிக்கரில் கருத்து கணிப்பு வடிவில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.

    இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டோ அல்லது வீடியோவை எடுத்ததும் ஸ்டிக்கரில் உங்களது கேள்வியை சேர்க்க வேண்டும். இனி கேள்வியை புகைப்படம் அல்லது வீடியோவின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும். 

    அடுத்து உங்களை பின்தொடர்வோர், நண்பர்கள் பட்டியலில் இருப்பவர்கள் உங்களது ஸ்டோரியை பார்த்து அவற்றுக்கு பதில் அனுப்ப முடியும். ஒரு கேள்விக்கு அவர்களால் எத்தனை முறை வேண்டுமானாலும் பதில் அனுப்ப முடியும். 



    பின்தொடர்வோர் உங்களுக்கு அனுப்பும் பதில்களை ஸ்டோரி வியூவரில் பார்க்க முடியும். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அனுப்ப, குறிப்பிட்ட கேள்வியை க்ளிக் செய்ய வேண்டும். பதில் அனுப்பும் பட்சத்தில் உங்களது பதில் ஸ்டோரி பகுதியில் இடம்பெறும். 

    உங்களின் பதில்களை கேள்வி கேட்டிருப்போரின் வியூவர் பட்டியலில் அனுப்ப முடியும் என்றாலும், இதனை ஸ்டோரியில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. இவ்வாறு ஸ்டோரியில் பகிர்ந்து கொள்ளப்படும் போது உங்களது நண்பரின் புகைப்படம் மற்றும் யூசர்நேம் தெரியாது.

    இன்ஸ்டாகிராம் புதிய அம்சம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்பட்டுள்ளது. பயனர்கள் தங்களது செயலியை அப்டேட் செய்து புதிய அம்சத்தை பயன்படுத்தலாம்.
    ஆப்பிள் ஐபோன் X ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை 'ஓவர்டேக்' செய்யும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டு இருக்கிறது.




    ஸ்மார்ட்போன்களில் புதிய தொழில்நுட்பங்கள் சேர்ப்பதில் விவோ தனது வழக்கமாக்கி வருகிறது.

    விவோ சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களில் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார், பாப்-அப் கேமரா போன்ற அம்சங்களை வழங்கியுள்ளது. 

    ஷாங்காய் நகரில் துவங்கியிருக்கும் மொபைல் காங்கிரஸ் விழாவில் ஆப்பிள் நிறுவனத்துக்கு நேரடி போட்டியாக புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கிறது. ஃபேஸ் ஐடி போன்று வேலை செய்யும் புதிய அம்சம் ஐபோன் X-ஐ விட சிறப்பாகவும், மிக துல்லியமாக வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.



    விவோ அறிமுகம் செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்தில் உள்ள 3D டெப்த் சென்சிங் சிஸ்டம் 3,00,000 சென்சார் பாயின்ட்களை கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவில் உள்ள டைம் ஆஃப் ஃப்ளைட்' (Tof) அம்சத்தை பயன்படுத்தி இந்த அம்சம் வேலை செய்கிறது. 

    தி வெர்ஜ் வெளியிட்டிருக்கும் தகவல்களில் விவோவின் புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் இருந்து முகம் 3 மீட்டர் தொலைவில் இருந்தாலும் சீராக வேலை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம் ஆஃப் ஃப்ளைட் 3D சென்சிங் தொழில்நுட்பத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைத்து, எதிர்காலத்தில் புதிய அம்சங்களை கண்டறிவதாக விவோ தெரிவித்துள்ளது.

    எதிர்கால ஸ்மார்ட்போன்களில் ஜெஸ்ட்யூர் மற்றும் மோஷன் ரெகஃனீஷன்களில் புதிய சென்சார் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் கான்செப்ட் கிடையாது என்றும் இதனை அதிகளவு தயாரிக்க தயார் நிலையில் இருப்பதாக விவோ தெரிவித்துள்ளது.
    சீனாவை சேர்ந்த ஆல்காடெல் நிறுவனம் மலிவு விலையில் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளது.




    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆல்காடெல் புதிதாய் ஆன்ட்ராய்டு கோ ஸ்மார்ட்போன்களை வெளி்யிட திட்டமிட்டுள்ளது. ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போன் ஆன்ச்ராய்டு கோ சீரிஸ்-இல் விலை குறைந்த மாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆன்ட்ராய்டு கோ அல்லது ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) என்பது விலை குறைந்த என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களுக்கான தளம் ஆகும். ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போன் சமீபத்தில் ரஷ்யாவில் லீக் ஆன நிலையில், இதன் விலை மற்றும் விற்பனை குறித்த விவரங்கள் அறியப்படாமல் உள்ளது.



    ஆல்காடெல் 1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 480x960 பிக்சல், 18:9 ரக டிஸ்ப்ளே
    - 1.3 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6739 பிராசஸர்
    - 1 ஜிபி ரேம்
    - 8 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - டூயல் சிம் எல்டிஇ
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
    - 5 எம்பி பிரைமரி கேமரா
    - 2 எம்பி செல்ஃபி கேமரா
    - 2000 எம்ஏஹெச் பேட்டரி

    ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போன் கோல்டு, புளு மற்றும் பிளாக் என மூன்று நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூகுள் க்ரோம் புதிய அப்டேட் மூலம் சேர்க்கப்பட்டிருக்கும் வசதியை கொண்டு பயனர்கள் இன்டர்நெட் இன்றி செய்திகளை படிக்க முடியும்.



     
    ஸ்மார்ட்போனில் இணைய சேவையை மொபைல் டேட்டா மூலம் பயன்படுத்துவது எல்லா நேரங்களிலும் சிறப்பான அனுபவமாக இருப்பதில்லை. 

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4ஜி நெட்வொர்க் பரப்பளவு தினந்தோரும் நீட்டிக்கப்பட்டு இருக்கும் நிலையிலும், அதிவேக இணைய இணைப்பு பரவலாக கிடைப்பதில்லை. தினசரி டேட்டாவை கொண்டு பிரவுசிங் செய்ய நினைத்தால், டேட்டா வேகம்நம் அமைதிக்கு ஆப்பு வைக்கிறது.

    இதுபோன்ற பிரச்சனைகளை சரியாக புரிந்து வைத்திருக்கும் கூகுள், தனது க்ரோம் செயலியில் புதிய சேவையை சேர்த்திருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துக்கான க்ரோம் செயலி நீங்கள் வைபை நெட்வொர்க் பயன்படுத்தும் போது, உங்களுக்கு பயன்தரும் செய்திகள் மற்றும் தானாக டவுன்லோடு செய்து வைக்கும். இவற்றை இன்டர்நெட் இல்லாத நேரங்களில் பயன்படுத்த முடியும். இதனால் டேட்டா இணைப்பு சீராக இல்லாத சமயங்களிலும் பயனுள்ள செய்திகளை படிக்க முடியும்.



    மூன்றாம் தரப்பு செயலிகளின் மூலம் சில இணையப்பக்கங்களை ஆஃப்லைனில் சேமித்துக் கொள்ளும் வசதி வழங்கப்படும் நிலையில், இவற்றை பயன்படுத்த செய்திகளை பயனர் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். கூகுள் க்ரோமின் புதிய அப்டேட் பயனர் வசிக்கும் இடம் மற்றும் விருப்பங்களை புரிந்து கொண்டு தானாக செய்திகளை டவுன்லோடு செய்யும்.

    கூகுள் உங்களுக்கென தேர்வு செய்யும் செய்திகள் எல்லா நேரங்களிலும் உங்களுக்கு விருப்பமானதாக இருக்காது என்றாலும், பல முறை இவை உங்களுக்கு பயன்தரும் ஒன்றாக இருக்கும். எனினும் இந்த சேவை தானாக இயங்கும் என்பதால் ஆஃப்லைனில் இருக்கும் போதோ அல்லது பயணங்களின் போதோ செய்திகளை வாசிக்க நினைப்போருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    இணைய இணைப்பு குறைவாக இருக்கும் பகுதிகள் மற்றும் சீரற்ற இணைய வசதி கொண்ட சந்தைகளில் வழங்க ஏதுவாக இந்த அம்சத்தை கூகுள் அறிமுகம் செய்திருக்கிறது. முதற்கட்டமாக இந்தியா, நைஜீரியா, இந்தோனேஷியா, பிரேசில் உள்ளிட்ட 100 நாடுகளில் வழங்கப்படுகிறது.
    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் அம்சம் ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது.




    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வழங்குவதற்கான சோதனை ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் மேற்கொள்ளப்படுகிறது.

    சமீபத்திய வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.189 அல்லது v2.18.192 பதிப்புகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா மற்றும் சில ஐஓஎஸ் பயனர்களுக்கு க்ரூப் காலிங் வசதி மே மாத வாக்கில் ஐஓஎஸ்-இல் v2.18.52  மற்றும் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.145 வெர்ஷன்களிலும் சோதனை செய்யப்பட்டது.

    இத்துடன் விண்டோஸ் தளங்களிலும் க்ரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும் வரும் வாரங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    புகைப்படம்: நன்றி WABetaInfo

    மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு பீட்டா பதிப்புகளில் க்ரூப் காலிங் வசதி சோதனை செய்யப்படுகிறது. இம்முறை இந்த அம்சம் அனைத்து சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்த முதலில் வீடியோ அல்லது வாய்ஸ் கால் மேற்கொள்ள வேண்டும். பின் அழைப்பு இணைக்கப்பட்டதும், திரையில் ஆட் பெர்சன் (Add Person) ஐகான் வலதுபுறம் காணப்படும். இதை க்ளிக் செய்தால் பெயர் பட்டியல் தெரியும். 

    இனி நீங்கள் தேர்வு செய்யும் மூன்றாவது நபர் உங்களின் அழைப்பினை ஏற்கும் பட்சத்தில் இரண்டு பெயர்களும் திரையில் தோன்றும். உடனடியாக க்ரூப் ஆடியோ மற்றும் வீடியோ கால் பயன்படுத்த கூகுள் பிளே வாட்ஸ்அப் பீட்டா பதிப்புக்கு பதிவு செய்வது அவசியமாகும்.

    ஐபோனிலும் க்ரூப் கால்களை பெறவும், அழைக்கவும் முடியும். ஐஓஎஸ் தளத்தில் சரவர் சார்ந்த அப்டேட் முறையில் வழங்கப்படுகிறது. இதனால் இந்த அம்சம் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் இந்த அம்சம் முதல்முறையாக கண்டறியப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஃபேஸ்புக் எஃப்8 டெவலப்பர் நிகழ்வில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஃபேஸ்புக் மூலம் வெளியிடப்பட்டது.
    இன்ஸ்டாகிராம் நிறுவனத்தன் ஐஜிடிவி ஆப் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஜிடிவி (IGTV) என அழைக்கப்படும் புதிய செயலியில் நீண்ட நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பார்க்க முடியும். 

    வழக்கமான இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் ஓடும் வீடியோக்கள் சிறிய திரையில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு புதிய செயலி முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும். ஐஜிடிவி செயலியில் வீடியோக்கள் செங்குத்தாகவும், திரை முழுக்க ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஐஜிடிவி செயலியை திறந்ததும் பெரிய வீடியோக்களை பார்க்க முடியும், இதனால் இன்ஸ்டாவில் நீங்கள் பின்தொடர்வோரின் வீடியோக்களை பார்க்க பிரத்யேகமாக தேட வேண்டிய அவசியம் கிடையாது. இதே திரையில் இருந்த படி மேல்புறமாக ஸ்வைப் செய்தால் மேலும் புதிய தரவு வழங்குவோரின் வீடியோக்களை பார்க்க முடியும். 



    இதில் ஃபார் யூ, ஃபாலோவிங், பாப்புலர் மற்றும் கன்டியூ வாட்சிங் (“For You,” “Following,” “Popular” மற்றும் “Continue Watching”) போன்ற ஆப்ஷன்களை பார்க்க முடியும். இத்துடன் லைக், கமென்ட் செய்வதுடன் வீடியோக்களை நண்பர்களுக்கு நேரடியாக அனுப்பவும் முடியும். ஐஜிடிவி செயலியில் அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம்.

    ஐஜிடிவியில் சேனல்களும் இருப்பதால், கிரியேட்டர்களே சேனல்களாக செயல்படுகின்றனர். இன்ஸ்டாகிராமில் கிரியேட்டர் ஒருவரை பின்தொடரும் போது, அவரது ஐஜிடிவி சேனல் உங்களுது திரையில் பார்க்க முடியும். அதிக நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை யார் வேண்டுமானாலும் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய முடியும். 

    உலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐஜிடிவி ஆப் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களின் பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது.
    ×