search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்ஸ்"

    • சந்தா முறையை எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் கொண்டுவந்தார்.
    • முன்னணி சமூக வலைதள நிறுவனங்களும் பின்பற்ற துவங்கின.

    டுவிட்டர் தளத்தை வாங்கி அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஏராளமான மாற்றங்களை கொண்டு வந்தவர் எலான் மஸ்க். இதில் பிரபல சமூக வலைதளத்தை எக்ஸ் என பெயர் மாற்றம் செய்ததும் அடங்கும். பெயர் மாற்றத்தோடு கட்டண முறையில் பயனர்களுக்கு விசேஷ அம்சங்களை வழங்கும் சந்தா முறையை எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் கொண்டுவந்தார்.

    பிறகு, இதேபோன்ற திட்டத்தை மற்ற முன்னணி சமூக வலைதள நிறுவனங்களும் பின்பற்ற துவங்கின. இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரீமியம் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்க எலான் மஸ்க் முடிவு செய்திருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிட்டார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "எக்ஸ் தளத்தில் 2500-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாளோவர்களாக கொண்டிருக்கும் அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படும். மேலும் 5000-க்கும் அதிக வெரிஃபைடு சந்தாதாரர்களை ஃபாளோவர்களாக கொண்ட அக்கவுண்ட்களுக்கு பிரீமியம் பிளஸ் சந்தா இலவசமாக வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இலவச பிரீமியம் சந்தா பெறுவது எப்படி?

    எலான் மஸ்க்-இன் புதிய அறிவிப்பின் படி எக்ஸ் தளத்தில் 2500 ஃபாளோவர்களை வைத்திருப்போருக்கு பிரீமியம் சந்தா இலவசமாக வழங்கப்படாது. மாறாக 2500 ஃபாளோவர்கள் இருப்பின் அவர்கள் எக்ஸ் தளத்தின் பேசிக், பிரீமியம் அல்லது பிரீமியம் பிளஸ் சந்தாக்களில் எதையேனும் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

    இதே போன்று பிரீமியம் பிளஸ் சந்தாவை இலவசமாக பெற, குறிப்பிட்ட எக்ஸ் அக்கவுண்ட்-ஐ குறைந்தபட்சம் 5000 ஃபாளோவர்கள் இந்த சந்தாக்களில் எதையேனும் வாங்கியிருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

    • 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.
    • யு.பி.ஐ. பேமண்ட் கடந்த 2020 ஆண்டு அறிமுகம்.

    வாட்ஸ்அப் நிறுவனம் சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியை இந்திய பயனர்களுக்கு வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக வெளியான ஸ்கிரீன்ஷாட்களில் புது வசதி யு.பி.ஐ. செட்டிங்ஸ் (UPI Settings) பகுதியில் இன்டர்நேஷனல் பேமண்ட்ஸ் (International Payments) ஆப்ஷனில் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.

    இதனை தேர்வு செய்யும் போது, சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் ஆப்ஷனை ஆக்டிவேட் செய்து, எவ்வளவு காலம் இது செயல்படுத்த வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். யு.பி.ஐ. பேமண்ட் வசதியை வழங்கும் போன்பே (PhonePe) மற்றும் ஜிபே (GPay) உள்ளிட்டவைகளில் இந்த வசதி ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    அந்த வரிசையில் தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப்-இல் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. பேமண்ட் சேவை கடந்த 2020 நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 140-க்கும் அதிக வங்கிகளை பயன்படுத்த முடியும்.

    சர்வதேச யு.பி.ஐ. பேமண்ட் மேற்கொள்ளும் வசதி தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போதைக்கு இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இதர விவரங்கள் மற்றும் வெளியீட்டு அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    • ஆப்பிள் மீமோஜி மற்றும் ஸ்னாப்சாட்-இன் பிட்மோஜி போன்றதாகும்.
    • ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்களை நகைப்பூட்டும் வகையில் வெளிப்படுத்திக் கொள்ள செய்யும் விதமாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் தான் அவதார்ஸ். இதை கொண்டு பயனர்கள் தங்களை வெளிப்படுத்தும் உருவங்களை வாட்ஸ்அப் செயலியிலேயே உருவாக்கிக் கொள்ளலாம். இந்த வசதி ஆப்பிள் மீமோஜி மற்றும் ஸ்னாப்சாட்-இன் பிட்மோஜி போன்றதாகும்.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் உள்ள அவதார்ஸ்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.6.8 வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது.

     


    இந்த அம்சத்தின் படி பயனர்கள் தங்களின் அவதார்ஸ்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை- காண்டாக்ட் (My Contacts), தேர்ந்தெடுக்கப்பட்ட காண்டாக்ட்கள் (Selected Contacts) அல்லது யாருக்கும் வேண்டாம் (Nobody) என மூன்று ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

    நீங்களும், நீங்கள் தேர்வு செய்யும் காண்டாக்ட்-ம் இந்த அம்சத்தை ஒருவருக்கொருவர் தேர்வு செய்யும் பட்சத்தில் இருவரின் ஸ்டிக்கர்களும் அவரவர் சாட்களில் காணப்படும். புதிய அம்சம் மூலம் பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும்.

    இது ஒருவரின் ஸ்டிக்கர்களை அவர்களுக்கு அறிமுகமில்லாதவர்கள் பார்ப்பதையும், பயன்படுத்துவதையும் தவிர்க்க செய்கிறது. இந்த அம்சம் தற்போது டெஸ்டிங்கில் உள்ள நிலையில், அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    • அதிக கட்டுப்பாடுகளை வழங்கும் வகையில் புதிய அப்டேட் உருவாக்கப்பட்டுள்ளது.
    • நடவடிக்கை எடுக்க செய்யும் விதமாக புதிய அம்சம் வழங்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் ஸ்பேம்-ஐ (Spam) லாக் ஸ்கிரீனில் இருந்தே பிளாக் செய்யும் புதிய வசதி வழங்கப்பட இருக்கிறது. ஸ்பேம் எனப்படும் தேவையற்ற குறுந்தகவல்கள் தொடர்ச்சியாக அதிகளவில் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இதனை எதிர்கொள்ளும் வகையிலும் பயனர்களுக்கு மெசேஜிங் அனுபவத்தில் அதிக கட்டுப்பாடுகளை வழங்கும் வகையிலும் இந்த அப்டேட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பயனர்களை ஏமாற்றும் தகவல்கள் அடங்கிய ஸ்பேம் மெசேஜ்கள் வாட்ஸ்அப்-இல் அதிகளவில் அனுப்பப்பட்டு வருவது பயனர்களிடையே கவலையை ஏற்படுத்தி வந்தது. அந்த வகையில், பயனர்கள் இவற்றுக்கு லாக் ஸ்கிரீனில் இருந்தபடியே நடவடிக்கை எடுக்க செய்யும் விதமாக புதிய அம்சம் வழங்கப்படுகிறது.

     


    இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்தும் மற்றும்ஓர் முயற்சியாக புதிய அம்சம் அமைந்துள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யாமல், நேரடியாக லாக் ஸ்கிரீனில் இருந்தபடி ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்ய முடியும். இதற்கு ஸ்பேம் நோட்டிஃபிகேஷனை அழுத்திப்பிடித்து பிறகு திரையில் தெரியும் பல்வேறு ஆப்ஷன்களில் பிளாக் செய்யக் கோரும் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

    ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்வதோடு அவற்றை ரிபோர்ட் செய்யும் ஆப்ஷனும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய வசதி தவிர பயனர்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- பிரைவசி -- பிளாக்டு கான்டாக்ட்ஸ் -- ஆட் போன்ற ஆப்ஷன்களுக்கு சென்று பிளாக் செய்ய வேண்டிய கான்டாக்ட்-ஐ சேர்க்க முடியும்.

    • வாட்ஸ்அப்-இல் ஒருங்கிணைந்து வேலை செய்ய அனுமதிக்கும்.
    • வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் அம்சம் இடம்பெற்றுள்ளது.

    வாட்ஸ்அப் செயலியில் மூன்றாம் தரப்பு சாட்களுக்கான வசதி விரைவில் வழங்கப்படும் என தெரிகிறது. ஐரோப்பிய யூனியனின் டிஜிட்டல் மார்கெட்ஸ் விதியை ஏற்கும் வகையில் இந்த வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் மூன்றாம் தரப்பு செயலிகள் வாட்ஸ்அப்-இல் ஒருங்கிணைந்து வேலை செய்ய அனுமதிக்கும்.

    புதிய வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா வெர்ஷனில் இதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இதே அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 24.2.10.72 வெர்ஷனில் இந்த அம்சம் இடம்பெற்று இருக்கிறது. இதனை wabetainfo கண்டறிந்து தெரிவித்து இருக்கிறது.

     


    இது தொடர்பாக வெளியிடப்பட்டு இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் "Third-Party Chats" (மூன்றாம் தரப்பு சாட்கள்) பெயரில் தனி ஃபோல்டர் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஃபோல்டரில் மற்ற செயலிகளின் சாட்களை பார்க்க முடியும் என்று தெரிகிறது. இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பது பற்றி அதிக தகவல்கள் இல்லை. மேலும், இதில் எந்தெந்த செயலிகள் இயங்கும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்த அம்சம் வழங்கப்பட்டதும், வாட்ஸ்அப் பயனர்கள் மற்ற குறுந்தகவல் செயலிகளை பயன்படுத்துவோரிடமும் சாட் செய்ய அனுமதிக்கும். வாட்ஸ்அப்-இல் மற்ற கான்டாக்ட்களுக்கு சாட் செய்வதை போன்றே, இதர செயலிகளை பயன்படுத்துவோரிடமும் சாட் செய்ய முடியும்.

    புதிய அம்சம் பற்றி அதிக தகவல்கள் இடம்பெறவில்லை. எனினும், வாட்ஸ்அப் இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களில் வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவது மட்டும் தற்போதைக்கு உறுதியாகி இருக்கிறது.

    • மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார்.
    • சாட் மற்றும் க்ரூப்களில் இதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் உள்ள பிராட்காஸ்டிங் அம்சம் சேனல்ஸ்-இல் புதிய வசதிகள் வழங்கப்பட்டு உள்ளன. பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் அதன் ஃபாளோயர்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்யும் நோக்கில் வழங்கப்பட்டுள்ள அம்சம் தான் வாட்ஸ்அப் சேனல். இதில் தற்போது கூடுதலாக புதிய வசதிகள் வழங்குவதை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்து இருக்கிறார்.

    அதன்படி வாட்ஸ்அப் சேனலலில் வாக்களிக்கும் வசதி வழங்கப்படுகிறது. அதன்படி வாட்ஸ்அப் சேனல் வைத்திருப்பவர்கள் தங்களின் உறுப்பினர்கள் இடையே கருத்து கேட்க வாக்கெடுப்பு நடத்த முடியும். ஏற்கனவே வாட்ஸ்அப் சாட் மற்றும் க்ரூப்களில் இதற்கான வசதி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

     


    இத்துடன் வாட்ஸ்அப் சேனல் அப்டேட்களை ஸ்டேட்டஸ் ஆக வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. ஒரே சேனலில் பலரை அட்மின்களாக வைத்துக் கொள்ளும் வசதியும் புதிய அப்டேட் மூலம் வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் சேனல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்தே, அதில் பல்வேறு புதிய வசதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
    • அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றி தெரியவந்துள்ளது.

    உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்வதில் அதிவேகமாக முடிவெடுக்கின்றனர். செயலிகள் எந்த அளவுக்கு பிரபலமாக உள்ளது என்பதை பொருத்தும், பயனர் தேவைகளை எந்த அளவுக்கு பூர்த்தி செய்கிறது என்பதை பொருத்தும் செயலி ஸ்மார்ட்போனில் வைத்துக் கொள்ளப்படும் காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

    அந்த வகையில், டி.ஆர்.ஜி. டேட்டா செண்டர்ஸ் வழங்கியிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஸ்மார்ட்போன் பயனர்கள் செயலிகளை அன்-இன்ஸ்டால் செய்யும் வழக்கம் பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் பயனர்கள் எந்த அளவுக்கு செயலிகளை இன்ஸ்டால் மற்றும் அன்-இன்ஸ்டால் செய்கின்றனர் என்ற வழக்கம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது.

     


    இந்த அறிக்கையின் படி, உலகளவில் 480 கோடி பேர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இது சர்வதேச மக்கள் தொகையில் 59.9 சதவீதமும், ஒட்டுமொத்த இண்டர்நெட் பயனர்கள் எண்ணிக்கையில் 92.7 சதவீதம் ஆகும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் ஒவ்வொரு மாதமும் 6.7 வெவ்வேறு நெட்வொர்க்குகளை பயன்படுத்துகின்றனர். தினமும், 2 மணி 24 நிமிடங்கள் வரை சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர்.

    சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் "இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும்" என்று தொடர்ச்சியாக இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

     


    உலகளவில் ஒரு லட்சம் பேரில் 12 ஆயிரத்து 500 பேர் வரை இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது தொடர்பான இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர். சமூக வலைதள உலகில் முன்னணி தளமாக இன்ஸ்டாகிராம் தொடர்ந்து நீடிக்கிறது. உலகளவில் சுமார் 240 கோடி பேர் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    இன்ஸ்டாகிராமை தொடர்ந்து ஸ்னாப்சாட் தளத்தை பயன்படுத்துவோரில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்களது ஸ்னாப்சாட் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும் என்று இணையத்தில் தேடியுள்ளனர். இது இன்ஸ்டாகிராமுடன் ஒப்பிடும் போது குறைவு ஆகும். 

    • வாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் அம்சம் கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படுகிறது.
    • வாய்ஸ் மெசேஜ்களும் எண்ட்-டு-எண்ட் முறையில் என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் குறுந்தகவல்களை ஒரு முறை மட்டுமே பார்க்க செய்யும் "வியூ ஒன்ஸ்" எனும் அம்சம் கடந்த 2021 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த அம்சம் செயலியின் வாய்ஸ் மெசேஜஸ் ஆப்ஷனிலும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த வசதியை செயல்படுத்தினால், பயனர்கள் வாய்ஸ் மெசேஜ்களை ஒருமுறை மட்டுமே கேட்க முடியும். அதன் பிறகு, வாய்ஸ் மெசேஜ் சாட்-இல் இருந்து காணாமல் போகிடும்.

     


    வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ் அனுப்புவது எப்படி?

    சாட் அல்லது க்ரூப் சாட் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

    மைக்ரோபோன் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

    இனி மேல்புறமாக ஸ்வைப் செய்து ரெக்கார்டிங்-ஐ க்ளிக் செய்ய வேண்டும்

    ரெக்கார்டு ஆப்ஷனை அழுத்திப்பிடித்து ரெக்கார்டு செய்ய வேண்டும்

    இனி 1 ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

    1 ஐகான் பச்சை நிறத்திற்கு மாறியதும் அது வியூ ஒன்ஸ் மோடில் இருப்பதாக அர்த்தம்

    இனி குறுந்தகவலை அனுப்ப செய்யும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்

    வியூ ஒன்ஸ் ஆப்ஷனில் அனுப்பப்பட்ட குறுந்தகவல், மீடியா அல்லது வாய்ஸ் மெசேஜ்களில் நீங்கள் அவற்றை பார்த்துவிட்டதை குறிக்கும் ரிசீப்ட் காணப்படும். இவ்வாறு காண்பிக்கப்பட்டதும், அந்த தகவல்களை மீண்டும் பார்க்க முடியாது.

    இந்த மெசேஜ்கள் எதுவும் சேமிக்கப்படாது. வாட்ஸ்அப் செயலியில் மற்ற மெசேஜ்களை போன்றே வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ்களும் எண்ட்-டு-எண்ட் முறையில் என்க்ரிப்ட் செய்யப்படும் என வாட்ஸ்அப் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் வியூ ஒன்ஸ் வாய்ஸ் மெசேஜ் அம்சம் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வரும் நாட்களில் இந்த அம்சம் அனைவருக்குமான ஸ்டேபில் அப்டேட்டில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

    • மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
    • டவுன்லோட் செய்யப்படுவதை தடுக்கும் வசதியும் உள்ளது.

    இன்ஸ்டாகிராம் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் ரீல்ஸ்-ஐ நேரடியாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். அந்த வகையில், பயனர்கள் இனிமேல் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    இந்த அம்சம் தற்போதைக்கு பப்ளிக் அக்கவுண்ட்-களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பயனர்கள் விரும்பினால் ரீல்ஸ் டவுன்லோட் செய்யப்படுவதை தடுக்கும் வசதியும் வழங்கப்பட்டு உள்ளது.

    ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்யும் புதிய அம்சம் குறித்த தகவலை இன்ஸ்டாகிராம் செயலிக்கான தலைவர் ஆடம் மொசெரி தனது சேனலில் தெரிவித்தார். ஏற்கனவே இந்த அம்சம் அமெரிக்க பயனர்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது உலகளவில் பயனர்கள் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்யும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த அம்சம் பயனர்கள் பப்ளிக் அக்கவுண்ட்களில் இருந்து ரீல்ஸ்-ஐ சேவ் செய்து கொள்ள அனுமதிக்கிறது. இவ்வாறு டவுன்லோட் செய்யப்படும் ரீல்களில், அதனை உருவாக்கிய இன்ஸ்டாகிராம் அக்கவுண்டின் லோகோ வாட்டர்மார்க் (ரீல்ஸ் பின்னணியில் காட்சி குறியீடு) செய்யப்பட்டு இருக்கும்.

    இன்ஸ்டா ரீல்ஸ் டவுன்லோட் செய்வது எப்படி?

    புதிய அப்டேட் மூலம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்-ஐ டவுன்லோட் செய்ய, குறிப்பிட்ட ரீல்ஸ்-இல் இருந்த படி ஷேர் செய்யக் கோரும் பேப்பர் ஏர்பிளேன் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பிறகு, டவுன்லோட் செய்வதற்கான ஆப்ஷனை பார்க்க முடியும். அதனை க்ளிக் செய்ததும் ரீல்ஸ் சாதனத்தில் டவுன்லோட் செய்யப்பட்டு விடும்.

    • கூகுள் மெசேஜஸ் செயலியில் புதிய அம்சம்.
    • புதிய அம்சம் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ளது.

    கூகுள் நிறுவனம் தனது மெசேஜஸ் ஆப்-ஐ வாட்ஸ்அப், சிக்னல் போன்ற குறுந்தகவல் செயலிகளுக்கு போட்டியாக மாற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கூகுளின் மெசேஜஸ் செயலியில் ஆர்.சி.எஸ். எனப்படும் ரிச் கம்யூனிகேஷன் சர்வீசஸ் வசதி உள்ளது. மற்ற குறுந்தகவல் செயலிகளுடனான போட்டியை வலுப்படுத்தும் நோக்கில் கூகுள் நிறுவனம் மெசேஜஸ் செயலியில் புதிய வசதியை வழங்கி உள்ளது.

    மெசேஜஸ் செயலியில் எமோஜி ரியாக்ஷன்ஸ் அம்சம், யூடியூப் வீடியோக்களை மெசேஜஸ் செயலியில் இருந்தபடி பார்க்கும் வசதி என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வரிசையில் மெசேஜஸ் செயலியில் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் "வாய்ஸ் நோட்ஸ்" (Voice Notes) அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

    கோப்புப்படம்

    கோப்புப்படம்

    இந்த அம்சம் கொண்டு பயனர்கள் சிறிய வாய்ஸ் நோட்-ஐ ரெக்கார்டு செய்து அதனை மெசேஜஸ் ஆப் மூலம் மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். தற்போது வெளியாகி இருக்கும் புதிய அம்சம் கொண்டு பயனர்கள் வாய்ஸ் நோட் ரெக்கார்டு செய்யும் போது வெளிப்புற சத்தத்தை தவிர்க்க முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி கூகுள் மெசேஜஸ் செயலியின் வாய்ஸ் நோட் அம்சத்தில் நாய்ஸ் கேன்சலேஷன் (Noise Cancellation) வசதி சேர்க்கப்படுகிறது. முதற்கட்டமாக இந்த வசதி கூகுள் மெசேஜஸ் செயலியின் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக செயலியில் நாய்ஸ் கேன்சலேஷன் பெயரில் பிரத்யேக பட்டன் வழங்கப்பட்டுள்ளது.

    இதை பயன்படுத்தும் போது வாய்ஸ் நோட்-களில் வெளிப்புற சத்தம் எதுவும் பதிவாகாது. வாய்ஸ் நோட்-இல் வழங்கப்படும் புதிய நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் தற்போது டெஸ்டிங் கட்டத்திலேயே உள்ளது. அந்த வகையில், இந்த அம்சம் செயலியின் எதிர்கால அப்டேட்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

    • லாக்டு சாட்களை மறைத்து வைத்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.
    • பிரைவசி செட்டிங்களில் இருந்து லாக்டு சாட்களை அழிக்க முடியும்.

    வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் தான் "சாட் லாக்" (Chat Lock) என்ற பெயரில் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. இது பயனரின் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது பயனர் தனியுரிமையை பாதுகாக்கும் கூடுதல் அம்சத்தினை வாட்ஸ்அப் அறிமுகம் செய்து இருக்கிறது.

    "சீக்ரெட் கோட்" (Secret Code) என்று அழைக்கப்படும் புதிய அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய சீக்ரெட் கோட் அம்சம் கொண்டு பயனர்கள் லாக்டு சாட்களை மறைத்து வைத்துக் கொள்ளும் வசதியை வழங்குகிறது.

    வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.24.20 வெர்ஷனை அப்டேட் செய்த பிறகு, பயனர்கள் லாக்டு சாட்களில் புதிதாக செட்டிங்ஸ் ஆப்ஷனை பார்க்க முடியும். இந்த பகுதியில் லாக்டு சாட்களை இயக்க அனுமதிக்கும் என்ட்ரி பாயின்ட்-ஐ மறைத்து வைத்துக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. சீக்ரெட் கோட் செட்டப் செய்து முடித்ததும், லாக்டு சாட்-இல் என்ட்ரி பாயின்ட் சாட் லிஸ்ட்-இல் இடம்பெற்று இருக்காது.

    மாறாக பயனர்கள் சாட் டேப்-இல் உள்ள சர்ச் பாரில் சீக்ரெட் கோடை பதிவிட்டு, லாக்டு சாட்-ஐ இயக்க முடியும். ஒருவளை சீக்ரெட் கோட்-ஐ பயனர்கள் மறந்து போகும் பட்சத்தில், சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் பிரைவசி செட்டிங்களில் இருந்து லாக்டு சாட்களை அழிக்கும் வசதி வழங்கப்படுகிறது. தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம் விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம்.

    Photo Courtesy: WABetaInfo

    • கூகுள் அக்கவுண்ட் மற்றும் அதன் தரவுகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு விடும்.
    • இந்த அக்கவுண்ட்கள் எளிதில் ஹேக் செய்யப்படலாம்.

    ஜிமெயில் சேவையை நீண்ட காலமாக பயன்படுத்தாமல் இருப்பவர்கள் தங்களின், அக்கவுண்ட்-ஐ இழக்கும் வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களை செயலிழக்க செய்யும் நடவடிக்கையாக, டிசம்பர் 2023 மாதத்தில் லட்சக்கணக்கான ஜிமெயில் அக்கவுண்ட்கள் அழிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.

    இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் அக்கவுண்ட்களை, டிசம்பர் மாதத்தில் இருந்து அழிக்கும் வகையில், நடைமுறை மாற்றங்களை கூகுள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பயன்படுத்தாமல் இருக்கும் கூகுள் அக்கவுண்ட், அதன் தரவுகள் கூகுள் வொர்க்ஸ்பேஸ்-இன் கீழ் உள்ள ஜிமெயில், டாக்ஸ், டிரைவ், மீட், காலண்டர் உள்ளிட்டவைகளும், கூகுள் போட்டோஸ் உள்ளிட்டவை அழிக்கப்பட்டு விடும் என்று கூகுள் நிறுவனத்தின் பிராடக்ட் மேனேஜ்மெண்ட் பிரிவு துணை தலைவர் ரூத் ரிச்செலி தெரிவித்துள்ளார்.

    "எங்களது மதிப்பீடுகளின் படி, தொடர்ந்து பயன்படுத்தும் அக்கவுண்ட்களுடன் ஒப்பிடும் போது பயன்படுத்தாமல் இருக்கும் அக்கவுண்ட்களில் டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செயல்படுத்தப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் 10 சதவீதத்திற்கும் குறைவு என தெரியவந்துள்ளது. இந்த அக்கவுண்ட்கள் எளிதில் ஹேக் செய்யப்படலாம். அதன்பிறகு, இதனை எந்த விதமான தீய செயல்களுக்கும் எளிதில் பயன்படுத்த முடியும்," என்று இது தொடர்பான வலைதள பதிவில் ரூத் ரிச்செலி குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நடவடிக்கையின் கீழ் ஜிமெயில் அக்கவுண்ட்-ஐ இரண்டு ஆண்டுகள் வரை திறக்காமல் இருக்கும் தனிப்பட்ட கூகுள் அக்கவுண்ட்கள் மட்டுமே பாதிக்கப்படும். இதன் காரணமாக நிர்வாகங்களான பள்ளி மற்றும் வியாபாரங்கள் பயன்படுத்தும் அக்கவுண்ட்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    கூகுள் அக்கவுண்ட்-ஐ பாதுகாப்பது எப்படி?

    கூகுள் அக்கவுண்ட் அழிக்கப்படுவதை தவிர்க்க, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையேனும் அதனை சைன்-இன் செய்ய வேண்டும். சமீபத்தில் ஏதேனும் கூகுள் சேவையை பயன்படுத்துவதற்கு கூகுள் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தி இருந்தாலும், அக்கவுண்ட் ஆக்டிவ் நிலையில் இருப்பதாக கருத்தில் கொள்ளப்படும்.

    ×