search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஓஎஸ்"

    இன்ஸ்டாகிராம் செயலியில் அடாப்டிவ் ஐகான் அம்சம் ஒருவழியாக சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அம்சம் குறித்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம். #instagram



    இன்ஸ்டாகிராம் சேவையை உலகம் முழுக்க சுமார் 80 கோடி பயனர்களுடன் உலகின் இரண்டாவது பெரிய சமூக வலைத்தளமாக இருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 270 கோடி பயனர்களுடன் ஃபேஸ்புக் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

    சீரான இடைவெளியில் புதுப்புது அம்சங்களை வழங்கி வரும் இன்ஸ்டாகிராம் சமீபத்தில் ஸ்டிக்கர் மூலம் கேள்விகளை ஸ்டோரியில் கேட்கும் வசதியை அறிமுகம் செய்திருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புதிய அப்டேட் இல் அந்நிறுவனம் அடாப்டிவ் ஐகான் அம்சத்தை சேர்த்து இருக்கிறது. 

    இத்துடன் இன்ஸ்டா அக்கவுன்ட்களை மிக எளிமையாக வெரிஃபை செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவித்துள்ளது. மேலும் வெரிஃபிகேஷன் செய்வதற்கான விண்ணப்பம் செயலியிலேயே வழங்கி இருக்கிறது.

    ஆல்ஃபா ஆன்ட்ராய்டு அப்டேட் 55.0.0.0.33 மூலம் இன்ஸ்டாகிராம் செயலியில் அடாப்டிவ் ஐகான்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் உங்களது சாதனம் வழங்கும் சப்போர்ட்-க்கு ஏற்ப ஐகான் வடிவம் மாறும். முன்னதாக இன்ஸ்டாகிராம் ஐகான் சாதனம் எவ்வித சப்போர்ட் வழங்கினாலும் சதுரங்க வடிவிலேயே இருந்தது. தற்சமயம் அடாப்டிவ் ஐகான் வசதி வழங்கப்பட்டு இருப்பதால், ஒவ்வொரு சாதனத்திற்கும் ஏற்ப இன்ஸ்டா ஐகான் வடிவம் மாறும்.



    அனைத்து சாதனங்களிலும் புதிய அப்டேட் கிடைக்க சில காலம் ஆகும், எனினும் பயனர்கள் ஏ.பி.கே. மிரர் (APK Mirror) மூலம் முன்கூட்டியே டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பொது மக்களும் வெரிஃபிகேஷன் பேட்ஜ் பெற விண்ணப்பிக்க எளிமையான வழிமுறையை இன்ஸ்டாகிராம் உருவாக்கி வருவாதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய அம்சம் உருவாக்கப்படுவதை இன்ஸ்டாகிராம் உறுதி செய்திருப்பதாகவும், "இந்த அம்சம் மூலம் இன்ஸ்டா வாசிகள் தங்களுக்கான வெரிஃபிகேஷனை அவர்களாகவே விண்ணப்பிக்க முடியும் என்றும், இன்ஸ்டாவில் வெரிஃபைடு பெறும் வழிமுறையை புரிந்து கொள்ள முடியும். பொது மக்களுக்கு வெரிஃபிகேஷன் வழங்குவதன் மூலம் இன்ஸ்டாவாசிகளை பாதுகாக்க முடியும்." என இன்ஸ்டா செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது

    இன்ஸ்டாகிராம் செட்டிங்ஸ் ஆப்ஷனில் வெரிஃபிகேஷன் பெற விண்ணப்பிக்கும் படிவம் சேர்க்கப்படுவதாகவும், இந்த படிவம் ஆஸ்திரேலியாவில் ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கும், மேலும் சில பெயர் தெரிவிக்கப்படாத நாடுகளில் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. புதிய அம்சம் வரும் வாரங்களில் மற்ற பகுதிகளில் உள்ள ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #instagram #InstaStories

    புகைப்படம்: நன்றி Android Police
    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் அம்சம் ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது.




    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வழங்குவதற்கான சோதனை ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் மேற்கொள்ளப்படுகிறது.

    சமீபத்திய வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.189 அல்லது v2.18.192 பதிப்புகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா மற்றும் சில ஐஓஎஸ் பயனர்களுக்கு க்ரூப் காலிங் வசதி மே மாத வாக்கில் ஐஓஎஸ்-இல் v2.18.52  மற்றும் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.145 வெர்ஷன்களிலும் சோதனை செய்யப்பட்டது.

    இத்துடன் விண்டோஸ் தளங்களிலும் க்ரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும் வரும் வாரங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    புகைப்படம்: நன்றி WABetaInfo

    மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு பீட்டா பதிப்புகளில் க்ரூப் காலிங் வசதி சோதனை செய்யப்படுகிறது. இம்முறை இந்த அம்சம் அனைத்து சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்த முதலில் வீடியோ அல்லது வாய்ஸ் கால் மேற்கொள்ள வேண்டும். பின் அழைப்பு இணைக்கப்பட்டதும், திரையில் ஆட் பெர்சன் (Add Person) ஐகான் வலதுபுறம் காணப்படும். இதை க்ளிக் செய்தால் பெயர் பட்டியல் தெரியும். 

    இனி நீங்கள் தேர்வு செய்யும் மூன்றாவது நபர் உங்களின் அழைப்பினை ஏற்கும் பட்சத்தில் இரண்டு பெயர்களும் திரையில் தோன்றும். உடனடியாக க்ரூப் ஆடியோ மற்றும் வீடியோ கால் பயன்படுத்த கூகுள் பிளே வாட்ஸ்அப் பீட்டா பதிப்புக்கு பதிவு செய்வது அவசியமாகும்.

    ஐபோனிலும் க்ரூப் கால்களை பெறவும், அழைக்கவும் முடியும். ஐஓஎஸ் தளத்தில் சரவர் சார்ந்த அப்டேட் முறையில் வழங்கப்படுகிறது. இதனால் இந்த அம்சம் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் இந்த அம்சம் முதல்முறையாக கண்டறியப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஃபேஸ்புக் எஃப்8 டெவலப்பர் நிகழ்வில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஃபேஸ்புக் மூலம் வெளியிடப்பட்டது.
    இன்ஸ்டாகிராம் நிறுவனத்தன் ஐஜிடிவி ஆப் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஜிடிவி (IGTV) என அழைக்கப்படும் புதிய செயலியில் நீண்ட நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பார்க்க முடியும். 

    வழக்கமான இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் ஓடும் வீடியோக்கள் சிறிய திரையில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு புதிய செயலி முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும். ஐஜிடிவி செயலியில் வீடியோக்கள் செங்குத்தாகவும், திரை முழுக்க ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஐஜிடிவி செயலியை திறந்ததும் பெரிய வீடியோக்களை பார்க்க முடியும், இதனால் இன்ஸ்டாவில் நீங்கள் பின்தொடர்வோரின் வீடியோக்களை பார்க்க பிரத்யேகமாக தேட வேண்டிய அவசியம் கிடையாது. இதே திரையில் இருந்த படி மேல்புறமாக ஸ்வைப் செய்தால் மேலும் புதிய தரவு வழங்குவோரின் வீடியோக்களை பார்க்க முடியும். 



    இதில் ஃபார் யூ, ஃபாலோவிங், பாப்புலர் மற்றும் கன்டியூ வாட்சிங் (“For You,” “Following,” “Popular” மற்றும் “Continue Watching”) போன்ற ஆப்ஷன்களை பார்க்க முடியும். இத்துடன் லைக், கமென்ட் செய்வதுடன் வீடியோக்களை நண்பர்களுக்கு நேரடியாக அனுப்பவும் முடியும். ஐஜிடிவி செயலியில் அதிகபட்சம் ஒரு மணி நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம்.

    ஐஜிடிவியில் சேனல்களும் இருப்பதால், கிரியேட்டர்களே சேனல்களாக செயல்படுகின்றனர். இன்ஸ்டாகிராமில் கிரியேட்டர் ஒருவரை பின்தொடரும் போது, அவரது ஐஜிடிவி சேனல் உங்களுது திரையில் பார்க்க முடியும். அதிக நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை யார் வேண்டுமானாலும் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய முடியும். 

    உலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐஜிடிவி ஆப் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களின் பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது.
    ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான ஜிமெயில் செயலியின் புதிய அப்டேட் பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன்களை அதன் முக்கியத்துவம் பார்த்து, அதன்பின் வழங்குகிறது.


    ஐஓஎஸ் இயங்குதளத்துக்கான ஜிமெயில் செயலியில் கூகுள் புதிய அப்டேட் வழங்கியுள்ளது. புதிய அப்டேட் பயனர்களுக்கு நோட்டிஃபிகேஷன்களை அனுப்பும் வழிமுறையை மாற்றியிருக்கிறது.

    ஜிமெயில் இன்பாக்ஸ்-இல் முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை பெறும் போது, அதனை செயலி சரியாக கண்டறிந்து கொள்ளும். ஜிமெயிலின் மெஷின் லெர்னிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நீங்கள் முதலில் படிக்க விரும்பும் மின்னஞ்சல்களை கண்டறியும்.

    புதிய அம்சத்தை செயல்படுத்த ஐஓஎஸ் தளத்தின் ஜிமெயில் செயலியின் செட்டிங்ஸ் மெனு -- நோட்டிஃபிகேஷன் -- ஹை ப்ரியாரிட்டி ஒன்லி (ஏettings menu -- Notifications -- High priority only) ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். 



    முதற்கட்டமாக இந்த அம்சம் ஐஓஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. எனினும், விரைவில் ஆன்ட்ராய்டு தளத்திலும் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது டீஃபால்ட் அம்சம் கிடையாது என்பதால், பயனர்கள் இதனை செட்டிங்ஸ் மெனு சென்று தேர்வு செய்ய வேண்டும். அனைத்து ஐஓஎஸ் பயனர்களுக்கும் இந்த அம்சம் இன்னும் சில தினங்களில் வழங்கப்பட்டு விடும் என கூகுள் தெரிவித்துள்ளது.
    கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் புதிய தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் ஆஃப்லைன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    கூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் நியூரல் மெஷின் லெர்னிங் தொழில்நுட்பம் சார்ந்த ஆஃப்லைன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் சாதனத்தில் மொழிமாற்றம் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.

    புதிய தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டு இருப்பதால், ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் தளங்களில் கூகுள் டிரான்ஸ்லேட் செயலியால் அதிக தரமுள்ள மொழிமாற்றங்களை இணைய வசதி இல்லாதபோதும் மேற்கொள்ள முடியும்.

    செயலியில் சேர்க்கப்பட்டு இருக்கும் நியூரல் சிஸ்டம் ஒவ்வொரு வார்த்தையாக மொழிமாற்றம் செய்யாமல், ஒட்டுமொத்த வாக்கியத்தையும் மொழிமாற்றம் செய்யும் என கூகுள் தெரிவித்துள்ளது. மிகவும் நேர்த்தியான மொழிமாற்றம் செய்ய பல்வேறு அம்சங்களை கணக்கில் கொண்டு, அவற்றில் பொருத்தமானவற்றை, கிட்டத்தட்ட மனித குரலிலேயே வழங்கும். 



    மொழி தெரியாத, டேட்டா கனெக்டிவிட்டி பெற சிக்கலாக இருக்கும் வெளிநாட்டு பயணங்களின் போது ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு மொழியும் 35 முதல் 45 எம்பி அளவு கொண்டிருப்பதால், மொபைலில் அதிக ஸ்டோரேஜ் எடுத்துக் கொள்ளாது.

    ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலிகளில் நியூரல் மெஷின் டிரான்ஸ்லேஷன் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆஃப்லைன் டிராஸ்லேஷன் அம்சம் பயன்படுத்தியிருந்தால், ஹோம் ஸ்கிரீனிலேயே பேனர் ஒன்று காட்சியளிக்கும், இதை க்ளிக் செய்ததும் உங்களின் ஆஃப்லைன் ஃபைல்களை அப்டேட் செய்யும். 

    ஒருவேளை பயன்படுத்தவில்லை எனில் ஆஃப்லைன் டிரான்ஸ்லேஷன் செட்டிங்ஸ் சென்று, ஆஃப்லைனில் பயன்படுத்த வேண்டிய மொழியை டவுன்லோடு செய்யலாம். அடுத்த சில நாட்களில் ஆஃப்லைன் வசதி கூகுள் டிரான்ஸ்லேட் செயலியின் 59 மொழிகளில் சேர்க்கப்படுகிறது.
    பாஸ்போர்ட் விண்ணப்பம் சார்ந்த அனைத்து சேவைகளை வழங்கும் செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    ஆமதாபாத்:

    பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் புதிய மொபைல் ஆப் வெளியிடப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க முடியும். 

    இத்துடன் ஏற்கனவே பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்து இருந்தால், அதன் ஃபைல் நம்பர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டவற்றை கொண்டு விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ள முடியும். தபால் மூலம் அனுப்பப்பட்ட பாஸ்போர்ட் டெலிவரி சார்ந்த விவரங்களை இந்த செயலி மூலம் டிராக் செய்ய முடியும்.



    பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை மிக எளிமையாக மாற்றும் திட்டத்தின் முதல் படியாக இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கும் செயலியை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்க முடியும். என ஆமதாபாத் வட்டார பாஸ்போர்ட் அலுவலர் நீலம் ரானி தெரிவித்தார்.

    இதனால் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வழிமுறைகளில் ஏஜென்டுகள் மற்றும் தரகர்களின் உதவியை நாட வேண்டிய அவசியமின்றி நேரடியாக விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம். என அவர் மேலும் தெரிவித்தார்.

    இந்த செயலியை கொண்டு பாஸ்போர்ட் சேவா கேந்ரா அல்லது வட்டார பாஸ்போர் மையத்தையும் தேட முடியும்.
    ஆப்பிள் நிறுவனத்தின் 2018 டெவலப்பர் நிகழ்வு இன்று துவங்க இருக்கும் நிலையில், நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் தனது மென்பொருள் அப்டேட் சார்ந்த முக்கிய அறிவிப்புகளை டெவலப்பர் நிகழ்வில் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் 2018 டெவலப்பர் நிகழ்வு இன்று (ஜூன் 4) துவங்குகிறது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் அந்நாட்டு நேரப்படி காலை 10.00 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) துவங்குகிறது. ஆப்பிள் 2018 டெவலப்பர் நிகழ்வு ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    ஆப்பிள் டெவலப்பர் நிகழ்வு 2018

    ஆப்பிள் நிறுவனம் இம்முறை அதிக அம்சங்களை அறிமுகம் செய்வதை காட்டிலும் பிழை திருத்தங்களில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் புதிய அம்சங்களை விட பிழைகளை சரிசெய்வதில் அதிக முக்கியத்துவம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் இந்த ஆண்டு ஐபோன் மற்றும் ஆப்பிள் வாட்ச்களில் என்எஃப்சி சிப்களை திறக்கலாம் என கூறப்படுகிறது. இதை கொண்டு ஆப்பிள் பே சேவையை தவிர அக்சஸ் கார்டுகளை போன்று கதவுகளை திறக்க பயன்படுத்த முடியும்.



    ஐஓஎஸ் 12

    ஐஓஎஸ் 12 இயங்குதளத்தில நோட்டிஃபிகேஷன் சென்டரை மாற்றுவதை பெரும்பாலானோர் எதிர்பார்க்கின்றனர். சமீப காலங்களில் நோட்டிஃபிகேஷன்களை ஐபோன் இயக்கும் விதம் கவலை கொள்ளும் வகையில் இருக்கிறது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது ஐஓஎஸ்-இல் நோட்டிஃபிகேஷன் சென்டர் மோசமாக இயங்குவதாக பலரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இத்துடன் புதிய இயங்குதளத்தில் உடல்நலம் சார்ந்த அம்சங்களில் அதிக கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    வாட்ச் ஓஎஸ் 5

    வாட்ச் ஓஎஸ் 5 இயங்குதளத்தில் உடல்நலம் மற்றும் ஆக்டிவிட்டி சார்ந்த புதிய அம்சங்கள் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஆப்பிள் வாட்ச் சாதனத்தை உடல்நலத்தை மேம்படுத்த ஏதுவான சாதனமாக விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்முறை உடற்பயிற்சி சார்ந்த அம்சங்களும், டிராக் செய்ய புதிய வசதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

    இத்துடன் உறக்கத்தை டிராக் செய்யும் அம்சம் வாட்ச் ஓஎஸ் இயங்குதளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு உறக்கத்தை டிராக் செய்யும் பெடிட் நிறுவனத்தை கைப்பற்றிய நிலையில், புதிய வாட்ச் ஓஎஸ் இயங்குதளத்தில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதவிர ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் மூன்றாம் தரப்பு ஃபேஸ்களை இன்ஸ்டால் செய்யும் வசதி அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ச் ஓஎஸ் 4.3 தளத்தில் இருக்கும் மறைக்கப்பட்ட குறியீட்டில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என்றே தெரிகிறது.



    மேக் ஓஎஸ் 10.14

    மேக் சாதனங்களில் ஐஓஎஸ் செயலிகள் வேலை செய்வது சார்ந்த தகவல் சமீபத்தில் வெளியான நிலையில், இந்த அம்சம் 2019 ஆண்டில் தான் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மற்ற அம்சங்களை காட்டிலும், இந்த அம்சம் மேக் ஓஎஸ் தளத்தில் பலரும் விரும்பும் அம்சமாக இருக்கும்.

    ஐஓஎஸ் இயங்குதளத்துடன் ஒப்பிடும் போது மேக் ஆப் ஸ்டோரில் அதிகளவு செயலிகள் இல்லாததே இதற்கு முக்கிய காரணமாக கூறமுடியும்.  மேலும் நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், கானா, சாவன் மற்றும் யூடியூப் போன்ற செயலிகள் மேக் ஆப் ஸ்டோரில் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

    ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும் செயலிகளை மேக் சாதனத்தில் பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் பட்சத்தில் பாடல்கள், வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியும்.


    டிவி ஓஎஸ் 12

    ஆப்பிள் டிவி பெட்டியை இயக்கும் டிவி ஓஎஸ் 12 இயங்குதளம் மற்ற தளங்களுடன் ஒப்பிடும் போது வேகம் குறைவாக அப்டேட்களை வழஹ்குகிறது. முந்தைய டிவி ஓஎஸ் தளத்தில் சில அம்சங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு மேலும் புதிய அம்சங்களை பயனர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த பட்டியலில் முதன்மையானதாக இருப்பது பிக்சர்-இன்-பிக்சர் மோட் எனலாம், இந்த அம்சம் ஒரே சமயத்தில் இரு அளவுகளில் இருவேறு வீடியோக்களை  பிளே செய்யும். ஒரு வீடியோ அளவில் சிறியதாகவும், மற்றொன்று பின்னணியிலும் ஓடிக்கொண்டிருக்கும்.

    இதேபோன்று பிரத்யேக ஹோம் ஆப் அதிகம் எதிர்பார்க்கப்படும் அம்சமாக இருக்கிறது. டிவி ஓஎஸ் பயனர்கள் ஆப்பிள் நியூஸ் செயலியின் வீடியோ-சென்ட்ரிக் பதிப்பையும் பயனர்கள் நிச்சயம் விரும்புவர். இத்துடன் டால்பி அட்மோஸ் வசதி, டிவி செயலியில் நெட்ஃப்ளிக்ஸ் இன்டகிரேஷன், மேம்படுத்தப்பட்ட ரிமோட் ஆப் உள்ளிட்டவை அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. 
    வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக பதாஞ்சலி அறிமுகம் செய்த கிம்போ செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாபா ராம்தேவின் பதாஞ்சலி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் கிம்போ எனும் குறுந்தகவல் செயலியை வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாக வெளியிட்டது. 

    ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் வெளியான சில மணி நேரங்களில் செயலியின் பாதுகாப்பு குறித்து பலரும் குற்றஞ்சாட்டினர். பாதுகாப்பு வல்லுநர்கள் செயலியின் பாதுகாப்பு குறித்த விமர்சனங்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் வெளியான ஒரே நாளில் கிம்போ செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டதோடு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளது.

    செயலி நீக்கப்பட்டதை ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருக்கும் கிம்போ பிளே ஸ்டோர்களில் கிம்போ பெயரில் இருக்கும் மற்ற போலி செயலிகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக செயலியை நீக்கியதற்கு அதிகப்படியான வரவேற்பு தான் முக்கிய காரணம் என கிம்போ சார்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும் பாதுகாப்பு வல்லுநர்கள் இந்த காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற வாக்கில் தகவல் தெரிவித்துள்ளனர்.



    பிளே ஸ்டோரில் கிம்போ ஆப் என டைப் செய்தாலே, ஒரே பெயரில் சில எழுத்து மாற்றங்களுடன் பல செயலிகள் வெவ்வேறு டெவலப்பர்களின் பெயரில் இடம்பெற்றிருக்கின்றன. நாளுக்கு நாள் கிம்போ பெயரில் கிடைக்கும் போலி செயலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பதால் வாடிக்கையாளர்கள் இவற்றை டவுன்லோடு செய்யாமல் இருப்பது நல்லது. 

    ஏற்கனவே குறிப்பிடப்பட்டதை போன்று அதிகாரப்பூர்வ கிம்போ ஆப் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டது. எனினும் பதாஞ்சலி சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்களில் இந்த செயலி விரைவில் மீண்டும் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கூகுள் மேப்ஸ் செயலியில் இதுவரை வழிகாட்டி வந்த நீல நிற நேவிகேஷன் அம்பு நீக்கப்பட்டு அனிமேஷன் வாகனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
    புதுடெல்லி:

    கூகுள் மேப்ஸ் செயலியில் சத்தமில்லாமல் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கமாக கூகுள் மேப்ஸ் சேவைகளில் நமக்கு வழி காட்டி வந்த நீல நிற நேவிகேஷன் அம்பு நீக்கப்பட்டு விட்டது.

    கவலை வேண்டாம், அம்பு குறிக்கு மாற்றாக அழகிய கார் பொம்மைகளை வழங்கியுள்ளது. புதிய பொம்மை கார் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்து செல்லும். உங்களது விருப்பத்திற்கு ஏற்ப அதிவேக எஸ்யுவி அல்லது பிக்கப் டிரக் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.



    புதிய அம்சம் வெளியாக எவ்வித காரணமும் அறிவிக்கப்படாத நிலையில், இதன் மூலம் நேவிகேஷன் அனுபவம் முன்பை விட வித்தியாசமானதாக இருக்கும். ஸ்வாப் செய்ய பயணத்தின் போது டிரைவிங் நேவிகேஷன் மோடில் உள்ள அம்பு குறியை தட்டி, உங்களுக்கு விருப்பமான வாகனத்தை தேர்வு செய்ய செய்யலாம். 

    இந்த அம்சம் முதற்கட்டமாக கூகுள் மேப்ஸ் சேவையின் ஐஓஎஸ் பதிப்பில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இதற்கான அப்டேட் வழங்குவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. எனினும் இந்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், அசிஸ்டண்ட் உள்ளிட்ட சில அம்சங்களில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அந்த வகையில் புதிய அம்சங்கள் அவ்வப்போது சிறிய அப்டேட்கள் மூலம் வழங்கப்படுகின்றன.
    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் செய்யும் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது.
    கலிஃபோர்னியா:

    வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்ரூப் வீடியோ காலிங் வசதி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் வழங்கப்படுகிறது.

    புதிய அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் க்ரூப் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். பிப்ரவரி மாத வாக்கில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.39 ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதி வழங்கப்படுவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. 

    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ காலிங் வசதியில் க்ரூப்களில் இருக்கும் அதிகபட்சம் நான்கு பேருடன் வீடியோ கால் ஒரே சமயத்தில் பேச முடியும். புதிய அம்சம் ஏற்கனவே  2.18.145 பதிப்பில் வழங்கப்படுகிறது. புதிய அப்டேட் பெற்றவர்கள் மட்டுமின்றி இந்த அம்சத்தை பெற அதிர்ஷ்டம் இருக்க வேண்டும்.


    புகைப்படம்: நன்றி WABetaInfo

    க்ரூப் வீடியோ கால் அம்சம் தற்சமயம் சர்வெர் சார்ந்த அப்டேட் மூலம் வெளியிடப்பட்டு இருப்பதால் அனைவருக்கும் இந்த அம்சம் வழங்கப்படாமல் சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் புதிய அம்சத்தை குறைந்தளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

    வாட்ஸ்அப் சோதனை செய்து வரும் மற்ற அம்சங்களை போன்று இல்லாமல் புதிய வசதியை இன்வைட் மூலமாக ஆக்டிவேட் செய்ய முடியாது. இதே நிலை ஐஓஎஸ் தளத்துக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் தளத்தில் வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.52 க்ரூப் வீடியோ காலிங் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

    புதிய க்ரூப் காலிங் செய்ய வாட்ஸ்அப் செயலியில் நீங்கள் வீடியோ கால் செய்ய வேணடிய கான்டாக்ட்-ஐ தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது புதிய க்ரூப் காலிங் வசதி உங்களுக்கு வழங்கப்பட்டு இருந்தால், Add participant என்ற பட்டன் திரையில் தெரியும், இந்த பட்டன் தெரியாதபட்சத்தில் வீடியோ காலிங் செய்ய முடியாது.
    இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இன்ஸ்டாகிராம் செயலியில் ஃபீட் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களில் ஷேர் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    புதிய அப்டேட் மூலம் பயனரின் ஃபீடில் வரும் போஸ்ட்களை நேரடியாக ஸ்டோரீக்களாக ஷேர் செய்ய முடியும். இனி ஃபீட் போஸ்ட்களை ஸ்டோரீக்களில் ஷேர் செய்ய போஸ்ட்-இன் கீ்ழ் காணப்படும் பேபர் ஏர்பிளேன் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் புதிய ஸ்டோரீயை உருவாக்குவதற்கான ஆப்ஷன் தெரியும். 



    இன்ஸ்டாகிராமில் பீட் போஸ்ட்-ஐ ஸ்டிக்கர் வடிவில் பிரத்யேக பேக்கிரவுன்டுடன் ஷேர் செய்ய தயார் நிலையில் இருக்கும். இதனை ஷேர் செய்யும் முன் ஸ்டிக்கரை ஸ்கேல் செய்யும் ஆப்ஷன்களை இயக்கலாம். இன்ஸ்டாகிராம் ஃபீட்களில் இருந்து ஷேர் செய்யப்படும் ஸ்டோரீக்களில் குறிப்பிட்ட போஸ்ட்-ஐ உண்மையில் பதிவிட்டவரின் யூசர்நேம் இடம்பெற்றிருக்கும்.

    நீங்கள் பதிவிடும் போஸ்ட்களை மற்றவர்கள் ஸ்டோரீக்களாக ஷேர் செய்யாமல் இருக்க ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய வசதிக்கான அப்டேட்கள் முதற்கட்டமாக ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வழங்கப்பட இருக்கிறது.
    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சங்களை வழங்குகிறது.
    புதுடெல்லி:

    ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப் க்ரூப்களுக்கு அதிக வசதிகளை வழங்குகிறது. ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. 

    வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய வசதிகள் முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய அப்டேட் இன்ஸ்டால் செய்தவர்கள் வாட்ஸ்அப் க்ரூப்களில் டிஸ்க்ரிப்ஷன் சேர்க்க முடியும், க்ரூப் அட்மின்களுக்கு கூடுதலாக புதிய வசதிகள், மென்ஷன்ஸ் அம்சம் மற்றும் க்ரூப்களில் உள்ளவர்களை தேடும் அம்சம் வழங்குகிறது.



    இந்த வசதிகள் அனைத்தும் பழைய க்ரூப்களுக்கும், புதிதாய் உருவாக்கப்படும் க்ரூப்களிலும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ரூப்களை உருவாக்கும் போது க்ரூப் குறித்த விவரங்களை க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் பகுதியில் எழுத முடியும். இதனை க்ரூப்-இல் உள்ளவர்கள் மற்றும் புதிதாய் இணைபவர்களும் பார்க்க முடியும். 

    க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்களை க்ரூப் அட்மின்கள் மற்றும் க்ரூப்-இல் இருப்பவர்களும் மாற்றியமைக்க முடியும். மற்றவர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம் என நினைக்கும் க்ரூப் அட்மின்கள் இதற்கான வசதியை முடக்க முடியும். இதே போன்று க்ரூப் சப்ஜக்ட் மற்றும் ஐகானினை யார் மாற்ற வேண்டும் என்பதை க்ரூப் அட்மின்கள் முடிவு செய்ய முடியும். 

    இத்துடன் க்ரூப் அட்மின்கள் மற்ற க்ரூப்களில் இருப்பவர்களின் அட்மின் அனுமதிகளை திரும்ப பெற முடியும். மேலும் க்ரூப் உருவாக்குபவரை இனி க்ரூப்-ஐ விட்டு வெளியேற்ற முடியாது. வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் க்ரூப்களில் மென்ஷன்ஸ் எனும் புதிய வசதியை பயன்படுத்த முடியும். 



    இதேபோன்று க்ரூப் கேட்ச் அப் அம்சம் கொண்டு பயனர்கள் மென்ஷன் செய்யப்பட்டு இருக்கும் மெசேஜ்களை கண்டறிந்து அவற்றுக்கு பதில் அனுப்ப முடியும். இந்த அம்சத்தை இயக்க க்ரூப் பயனர்கள் @ பட்டனை க்ளிக் செய்தால் சாட் ஸ்கிரீனின் கீழே வலதுபுறமாக மென்ஷன் செய்யப்பட்ட மெசேஜ்களை பார்க்க முடியும்.

    வாட்ஸ்அப் க்ரூப்களில் உள்ளவர்களை ஸ்கிரால்-டவுன் செய்து தேடாமல், நேரடியாக சர்ச் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. க்ரூப்களில் இருப்பவர்களை தேட க்ரூப் இன்ஃபோ பகுதியில் உள்ள சர்ச் ஐகானை க்ளிக் செய்தாலே போதும். 

    க்ரூப் இன்விடேஷன்களில் ஸ்பேம் அளவை குறைக்கும் நோக்கில் க்ரூப்களில் இருந்து வெளியேறியவர்களை மீண்டும் சேர்ப்பது கடினமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×