என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Google Maps"
- விதிமுறை தமிழகத்திலும் சமீபத்தில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
- போக்குவரத்து காவல் துறையினர் சலானை அனுப்பி வருகின்றனர்.
வாகனங்களில் செல்வோரின் பாதுகாப்பு காரணங்களுக்காக நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களிலும் வேகக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தை மீறி செல்லும் போது அபராதம் செலுத்த வேண்டும். இதே போன்ற விதிமுறை தமிழகத்திலும் சமீபத்தில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.
அதன்படி சென்னையில் வேகமாக செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் அபராதம் செலுத்துவதற்கான சலானை அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், பயனர்கள் சலான் செலுத்துவதை தவிர்க்க செய்யும் நோக்கில், கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் சேவையில் புதிய வசதியை கொண்டுவந்து இருக்கிறது.
இதற்காக கூகுள் மேப்ஸ் சேவையில் எந்தெந்த பகுதிகளில் வேகக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருக்கின்றன என்ற விவரங்களை உலகளவில் வழங்கிவருகிறது. அதன்படி உள்ளூர் சாலை ஒன்றில் செல்லும் போது வேகக்கட்டுபாடுகளுக்கு ஏற்ப சலான் பெறுவதை தவிர்க்க செய்யும் கூகுள் மேப்ஸ் அம்சத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
- ஸ்மார்ட்போனில் கூகுள் மேப்ஸ் செயலியை லான்ச் செய்யுங்கள்
- அக்கவுண்ட் செட்டிங்ஸ் (Account Settings) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- பிறகு செட்டிங்ஸ் (Settings) ஆப்ஷனில் உள்ள நேவிகேஷன் செட்டிங்ஸ் (Navigation Settings) ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்
- நேவிகேஷன் செட்டிங்ஸ் (Navigation Settings) ஆப்ஷனில் உள்ள டிரைவிங் ஆப்ஷன்ஸ் (Driving Options) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
- டிரைவிங் ஆப்ஷன்ஸ் (Driving Options) ஆப்ஷனில் உள்ள ஸ்பீடோமீட்டர் (Speedometer) ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- ஸ்பீடோமீட்டர் ஆப்ஷனை கிளிக் செய்ததும் கூகுள் மேப்ஸ் கொண்டு நேவிகேட் செய்யும் போது ஜி.பி.எஸ். வேகம் காண்பிக்கப்படும். இந்த அம்சம் வேகம் அதிகரிக்கும் போது நிறம் மாறி எச்சரிக்கை விடுக்கும்.
ஸ்பீடோமீட்டர் எப்படி வேலை செய்யும் என்பது பற்றி கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்து இருக்கிறது. அதன்படி ஏ.ஐ. தொழில்நுட்பம், ஸ்டிரீட் வியூ படங்கள் மற்றும் மூன்றாம் தரப்பு படங்களை பயன்படுத்தி கூகுள் மேப்ஸ் வேகக்கட்டுப்பாடு பற்றிய எச்சரிக்கையை கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக உலகம் முழுக்க நூற்றுக்கும் அதிகமான அடையாள குறியீடுகளில் சோதனை செய்யப்பட்டது.
இவ்வாறு கூகுள் மேப்ஸ்-இல் உள்ள ஏ.ஐ. மாடல் ஒரு எச்சரிக்கை குறியீடை கண்டறிந்தால். உடனே ஜி.பி.எஸ். விவரங்களை கொண்டு அதில் உள்ள ஒற்றுமையை உறுதிப்படுத்தி அதற்கு ஏற்ப வேகக்கட்டுப்பாடு விதிகளை அப்டேட் செய்து கொள்ளும். இதோடு போக்குவரத்து முறைகளை கொண்டு வேகத்தில் மாற்றங்களை மேற்கொள்ளும்.
- கூகுள் நிறுவனத்தின் சர்ச், மேப்ஸ், டிரைவ் என ஏராளமான சேவைகளை மக்கள் பயன்படுத்தாத நிலை ஏற்பட்டது.
- இதற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
கூகுள் சர்ச் சேவை இன்று காலை உலகின் பெரும்பாலான பகுதிகளில் சீராக இயங்கவில்லை என பலர் ட்விட்டரில் குற்றம்சாட்டி வந்தனர். மேலும் அவுடேஜ் டிராகிங் வலைதளமான டவுன்டிடெக்டர் கூகுள் சேவைகள் முடங்கியதை உறுதிப்படுத்தி இருக்கிறது. கூகுள் சர்ச் தொடர்பாக சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு இருப்பதாக டவுன்டிடெக்டர் தெரிவித்து உள்ளது.
சர்வெர்களில் ஏற்பட்ட தற்காலிக பிரச்சினை காரணமாக உங்கள் கோரிக்கையை இப்போதைக்கு நிறைவு செய்ய முடியாது என்ற தகவலே கூகுள் சர்ச் செய்த போது காண்பித்தது. இது தவிர, உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முயன்ற போது ஏதோ தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டு விட்டது என்ற தகவலும் காண்பிக்கப்பட்டது.
கூகுள் சர்ச் மட்டுமின்றி கூகுள் டிரெண்ட்ஸ், கூகுள் மேப்ஸ், கூகுள் டிரைவ் மற்றும் யூடியூப் என மற்ற சேவைகளிலும் இதே பிரச்சினை நீடித்தது. கூகுள் பயனர்களில் பெரும்பாலானோர் இந்த குறைபாடு பற்றி ட்விட் செய்து வந்தனர்.
- கூகுள் ஸ்டிரீட் வியூ அம்சம் தற்போது முதற்கட்டமாக 10 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
- இரு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம்.
கூகுள் மேப் செயலியில் உள்ள ஸ்டிரீட் வியூ அம்சம் தற்போது இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. பாதுகாப்பு காரணமாக நீண்ட நாட்களாக செயல்படுத்தப்படாமல் இருந்த இந்த அம்சம் தற்போது முதற்கட்டமாக 10 முக்கிய நகரங்களுக்கு மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கூகுள் மேப் செயலியை வைத்து இருபிடத்தின் புகைப்படங்களை 360 டிகிரியில் தெளிவாக காண முடியும்.
வெளிநாடுகளில் இந்த அம்சம் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகம் ஆகிவிட்ட போதும் இந்தியாவில் தற்போது தான் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இரு தனியார் நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். இந்த அம்சம் மூலம் உள்ளூர் சாலை அமைப்புகள் மற்றும் போக்குவரத்து தடங்கள் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள முடியும்.
முதற்கட்டமாக இந்தியாவில் உள்ள சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத், புனே, நாசிக், அமிர்தசரஸ், வதோதரா, அகமத்நகர் ஆகிய 10 நகரங்களில் இந்த ஸ்டிரீட் வியூ அம்சம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேற்கண்ட நகரங்களில் உள்ள சுமார் 1.5 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை இந்த ஸ்டிரீட் வியூ அம்சம் மூலம் புகைப்படங்களாக பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- புதிய அப்டேட்டை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம்.
- விரைவில் இதர நாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்பட உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்புகளுள் ஒன்று கூகுள் மேப். கையில் இது இருந்தால் போது தெரியாத ஊருக்கு கூட சுலபமாக சென்றுவிட்டு வரலாம். அந்த அளவுக்கு பயனர்கள் பயன்படுத்த எளிமையாகவும், புரியும்படியும் அமைக்கப்பட்டு உள்ளது இந்த கூகுள் மேப் சேவை. மேப் சேவைகளை வழங்க பல்வேறு ஆப்புகள் இருந்தாலும் கூகுள் மேப்பை போன்ற துள்ளியம் பிறவற்றில் இல்லை.
அதனால் இதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வழிகளை காட்டுவது மட்டுமின்றி எண்ணற்ற அம்சங்கள் இந்த கூகுள் மேப் செயலியில் உள்ளது. செல்லும் வழியில் ஏதேனும் சாலை வேலை நடந்தாலோ, டிராபிக் அதிகமாக இருந்தாலோ அதனை உட்கார்ந்த இடத்தில் இருந்தே அறிந்துகொள்ளலாம். இதுதவிர ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள், ஏடிஎம்கள், மருத்துவமனை போன்றவற்றை அறிந்துகொள்ள சிறப்பு குறியீடுகளும் அதில் வழங்கப்பட்டிருக்கும்.
இவ்வாறு எண்ணற்ற அம்சங்களை கொண்ட கூகுள் மேப் செயலி, தற்போது மேலும் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை முன்கூட்டிய தெரிந்து கொள்ளும் வசதியை கூகுள் நிறுவனம் புது அப்டேட்டாக வெளியிட்டுள்ளது.
இதுதவிர சுங்கச்சாவடிகளை தவிர்க்க விரும்புவோர்க்கு வேறு பாதையை காட்டும் புதிய அம்சமும் தற்போதைய அப்டேட்டில் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய அப்டேட்டை அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தி உள்ளது கூகுள் நிறுவனம். விரைவில் இதர நாடுகளுக்கும் இந்த சேவை வழங்கப்பட உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்