search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டு விழா"

    • விழாவில் தலைமை விருந்தினராக ஞானதிரவியம் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
    • விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    நாகர்கோவில் :

    நெல்லை மாவட்டம் காவல்கிணறு சந்திப்பில் அமைந்துள்ள சர்தார் ராஜாஸ் நர்சிங் கல்லூரியின் ஆண்டு விழா (Waves 2023) கல்லூரி வெள்ளி விழா கலையரங்கத்தில் வைத்து நடைபெற்றது.

    விழாவில் தலைமை விருந்தினராக ஞானதிரவியம் எம்.பி. கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி தலைவர் டாக்டர் ஜேக்கப் ராஜா தலைமை உரையாற்றினார். கல்லூரி நிர்வாக இயக்குநர் சபீனா ஜேக்கப் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    நாகர்கோவில் பல்கலைக் க ழக பொறியியல் கல்லூரி டீன் டாக்டர் நாகராஜன் கவுரவ விருந்தி னராக கலந்துகொண்டார். கல்லூரி முதல்வர் டாக்டர் விசி மெர்லின் லிஷா கல்லூரி யின் ஆண்டு அறிக்கையை படித்தார். உதவி முதல்வர் பேராசிரியர் தேவ ஜான்சி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவி கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது.

    • உசிலம்பட்டி ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பங்கேற்று பரிசு வழங்கினார்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசி–லம்பட்டி ஆர்.சி. சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 37-வது ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் மெர்ஸி தலைமை–யில் நடைபெற்றது. தொடக் கமாக பள்ளியின் ஆண்ட–றிக்கை வாசிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் மலர், பள்ளி தாளாளர் பானு ஆர்.சி. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் அமுதா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    விழாவில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முதல் மூன்று இடங் கள் பிடித்த மாணவி–களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியம்மாள், மம்மி டாடி நிறுவனர் நிஜாமுதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரசேகர், கட்சி நிர்வாகிகள் பிரபு ஜான்சன், சசிகுமார், அய்யனார்குளம் ஜெயக்குமார், அழகு மாரி, வில்லானி பாண்டி ஆகி–யோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவி–களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • ஓய்வுபெற்ற தொழிலாளர் நல கூடுதல் ஆணையர் இமானுவேல் தங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
    • கல்லூரி மாணவர்க ளுக்கான கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த அருணாசலத்துக்கு ரூ.1,500 பரிசாக வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்த னார் கல்லூரியில் பயின்றோர் கழகத்தின் 54-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப் பட்ட போட்டிகளில் வென்ற வர்களுக்கு பரிச ளிப்பு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார்.

    ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாரா யணராஜன் முன்னிலை வகித்தார். பயின்றோர் கழக துணைத்தலைவர் ஜெயசிங் சாம்ராஜ் வரவேற்று பேசினார்.

    முன்னாள் மாணவரும், ஓய்வுபெற்ற தொழிலாளர் நல கூடுதல் ஆணையருமான இமானுவேல் தங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பயின்றோர் கழக இணை செயலாளர் தர்மபெருமாள் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் பொருளாளர் பகவதி பாண்டியன் வரவு செலவு அறிக்கை வாசித்தார்.

    பணிநிறைவு செய்த பேராசிரியர்கள் ரமேஷ், சுந்தரவடிவேல், கதிரேசன், முனைவர் பட்டம் பெற்ற கோகிலா, திருச்செல்வன், சிறப்பு விருது பெற்ற முனைவர் லிங்கத்துரை ஆகியோர் கவுரவிக்கப்பட்ட னர்.

    பள்ளி மாணவர்க ளுக்கான பேச்சு போட்டி யில் முதலிடம் பிடித்த காயல்பட்டினம் சுபைதா மேல்நிலைப்பள்ளி மாணவி நஜிபா ஹில்மியா வுக்கு ரூ.1,500-ம், 2-வது இடம் பிடித்த பூச்சிக்காடு இந்து உயர்நிலைப்பள்ளி மாணவி ஆனந்தலட்சுமிக்கு ரூ.1,000-ம், 3-வது இடம் பிடித்த காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி முத்து சபுராவுக்கு ரூ.750-ம் பரிசாக வழங்கப்பட்டது.

    கல்லூரி மாணவர்க ளுக்கான கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த அருணாசலத்துக்கு ரூ.1,500-ம், 2-வது இடம் பிடித்த மாணவி வினிஷாவுக்கு ரூ.1,000-ம், 3-வது இடம் பிடித்த மாணவர் தமிழரசுவுக்கு ரூ.750-ம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 24, 27 ஆகிய தேதிகளில் கல்லூரி நிறுவனர் சி.பா.ஆதித்தனார், நிறுவனர் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆகியோர் பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாடுவது. இதனை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, வினாடி-வினா போட்டிகளை நடத்தி பரிசு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில், 'தொழில் முனைவு- ஒரு வெற்றிகர மான தொழில் விருப்பம்' என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது. நெல்லை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன், சேவியர் கல்லூரி பேராசிரியர்கள் முருகேசன், பிரின்ஸ், ஸ்டெல்லா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

    • குத்துவிளக்கினை தாளாளார் பாரதி ராசேந்திரன், இணை இயக்குனர் வருண்பாபு ஆகியோர் குத்து விளக்கினை ஏற்றி வைத்தார்கள்.
    • பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் திருவண்ணாலை -கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் மத்தூர் கலைமகள் கலாலயா கல்வி நிறுவனங்களின் 24-ம் ஆண்டிற்கான ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவினை பள்ளியின் நிறுவனர் ராசேந்திரன் தலைமையேற்று நடத்தி வைத்தார். அனைவரையும் பள்ளியின் இயக்குனர் அமுதினி ராசேந்திரன் வரவேற்றார். குத்துவிளக்கினை தாளாளார் பாரதி ராசேந்திரன், இணை இயக்குனர் வருண்பாபு ஆகியோர் குத்து விளக்கினை ஏற்றி வைத்தார்கள்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பொது பள்ளிக்கான மாநிலமேடை பொதுச்செயலாளார் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மறைமலையாடிகளாரின் கொள்ளு பேத்தியும், புலியூர் கேசிகன் இலக்கிய பேரவையின் நிறுவனரும் உரையாசிரியருமான கலைச்செல்வி புலியூர் கேசிகன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவியரிடம் சிறப்புரையாற்றினார்கள்.

    பின்னர் பத்தாம் வகுப்பு, பணிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். பின்னர் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சியாக ஆடல், பாடல் நடனம், நாடகம், நாட்டியம் யோகா நடைபெற்றது.

    விழாவில் கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் முதல்வர் சூரியமுர்த்தி நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • மதுரை சிந்தாமணி கடம்பவனம் அப்பளம் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • விழா–வுக்கு தலைவர் எம்.இளங்கோ தலைமை தாங்கி–னார்.

    மதுரை

    மதுரை சிந்தாமணி கடம் பவனம் அப்பளம் வியாபாரி–கள் சங்க 3-ம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட் டம் அவனியாபுரத்தில் இன்று நடைபெற்றது. விழா–வுக்கு தலைவர் எம்.இளங்கோ தலைமை தாங்கி–னார். செயல் தலைவர் வி.சி.சீனிவாசன் வரவேற் றார். செயலாளர் எம்.கண்ணன் செயல் விளக்கம் அளித்தார். பொருளாளர் எஸ்.ராமமூர்த்தி நிதி நிலை அறிக்கையினை சமர்ப்பித் தார்.

    விழாவில் உணவுப்பாது–காப்புத்துறை மதுரை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் வி.ஜெயராம–பாண் டியன், மதுரை மாவட்ட தொழில்மைய இணை இயக்குனர் எஸ்.கணேசன், யூனியன் பேங்க் ஆப் இந்தியா மண்டல தலைவர் டி.கே.அபிஜித், ஐ.டி.டி.சி. தொழில் வணிக மேம்பாட்டு மைய சேர்மன் எஸ்.வி.சூரஜ்சுந்தர சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை–யாற்றினர்.

    மேலும் இந்த விழாவில், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம், மதுரை நுகர்பொருள் மற்றும் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் கே.மோகன், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலை–வர் எஸ்.வி.எஸ்.எஸ்.வேல் சங்கர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மண்டல தலைவர் டி.செல்லமுத்து, மடீட்சியா தலைவர் எம்.எஸ்.சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் துணைத்தலைவர் எம்.பாலமுருகன், இணைச் செயலாளர்கள் ஆறுமுகம், பிரதாப் சந்திரன், அர்ஜூன் பாலா, செயற்குழு உறுப்பி–னர்கள் பாலசண்முகநாதன், கருப்பையா, லோகேஸ்வ–ரன், ராஜா, ராஜபாண்டி, பன்னீர்செல்வம், பழனிக் குமார், முத்துவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் உணவு பாதுகாப்பு தொடர் பாக பல்வேறு முக்கிய தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    முடிவில் துணைத்தலை–வர் எம்.பாலமுருகன் நன்றி கூறினார்.

    • தேசிய கல்வி கொள்கை- 2020 அமலாக்கத்தின் 3-வது ஆண்டு நிறைவு விழா நடை பெற்றது.
    • பள்ளியில் மாணவர்களுக்கு புதிய தேசிய கல்வி கொள்கையின் படி கல்வி கற்றுத் தரப்படுகிறது.

    தருமபுரி

    தருமபுரி செட்டிக்கரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேசிய கல்வி கொள்கை- 2020 அமலாக்கத்தின் 3-வது ஆண்டு நிறைவு விழா நடை பெற்றது.

    விழாவுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி தேசிய கல்வி கொள்கை மற்றும் அதன் பயன்கள் பற்றி படக்காட்சி உடன் விளக்கி பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், தற்போது நாடு முழுவதும் 1250 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் வெளிநாடுகளில் மூன்று பள்ளிகள் என மொத்தம் 1253 கேந்திரிய வித்யாலயாக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றன.கடந்த 2022-23 கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு சேர்க்கை வயது 6 ஆக மாற்றியமைக்கப்பட்டது. அடித்தள நிலைகள் பால்வாட்டிகா, முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகள் 5 ஆண்டுகள் ஆகும். 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆயத்த நிலை முன்று வருடமாகவும், 6 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மூன்று வருடமாகவும், 9 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நான்கு வருடம் என 12 வருடங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. தர்மபுரியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுக்கு புதிய தேசிய கல்வி கொள்கையின் படி கல்வி கற்றுத் தரப்படுகிறது.

    மேலும் பள்ளி ஆசிரியகளின் திறமை மேம்பாட்டுக்காக 50 மணி நேர பயிற்சி கொடுக்கபடுகிறது.

    புதிய பாட திட்டத்தை திறம்பட செயல்படுத்த தேவையான அறிவு சார்ந்த பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுகிறது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் படி மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • விழாவில் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ். ராஜன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடம் அணிந்து கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூரில் பாரதியார் மன்றத்தின் சார்பில் 35-வது ஆண்டு விழா கீழப்பாவூரில் உள்ள நாடார் அம்மன் கோவில் மைதானத்தில் நடை பெற்றது.

    முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி. பிரபாகரன் தலைமை தாங்கினார். கீழப்பாவூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கச்சாமி முன்னிலை வகித்தார். இதில் கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் பி.எம்.எஸ். ராஜன் கலந்து கொண்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் மதியழகன் வேட்டி-சேலைகள் வழங்கினார். முன்னதாக நெல்லை அண்ணா தொழிற்சங்க முன்னாள் தலைவர் இளஅரசு, கீழப்பாவூர் பாரதியார் மன்ற கவுரவ ஆலோசகர் கே.எம்.அருள்செல்வன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    நிகழ்ச்சியில் மன்ற செயற்குழு உறுப்பினர் சிங்கக்குட்டி என்கிற குமரேசன், மருதப்பபுரம் வேங்கை சந்திரசேகரன், கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்ற தலைவர் செல்வன், சுரண்டை சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் குற்றாலம் பராசக்தி கல்லூரி உதவி பேராசிரியர் சுதனா பிரபாகரன் பாரதியாரை குறித்து எடுத்து கூறினார்.

    தொடர்ந்து சுரண்டை சேர்மத்தாய் வாசன் பள்ளி, பாவூர்சத்திரம் அன்னை வேளாங்கண்ணி பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்கள் பாரதியார் வேடம் அணிந்து கலந்து கொண்டனர். விழாவில் ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்களின் பெற்றோர் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    மன்ற செயற்குழு உறுப்பினர் பொன் ராஜ கோபால் தொகுத்து வழங்கி னார். ஆசிரியர் சந்தானம், கீழப்பாவூர் மாரியப்பன், கிருஷ்ணமூர்த்தி, சாமி, ராமச்சந்திரன், சுப்பிரமணியன், கவுன்சிலர் பவானி இலக்குமனதங்கம் ஆகியோர் நன்றி கூறினர். இதற்கான ஏற்பாடுகளை கீழப்பாவூர் ஒன்றிய பாரதியார் மன்ற தலைவர் தீப்பொறி அப்பாதுரை, செயற்குழு உறுப்பினர் சுந்தர்ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பாரதத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக தான் வாழ்ந்து வருகிறோம்.
    • ஒரு காலத்தில் இந்தியாவின் பேச்சை மற்ற நாடுகள் கவனிக்காது, ஆனால் இப்போது நமது பிரதமர் பேசும் போது உலகமே உற்றுப் பார்க்கிறது.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்தின் 50-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது.

    இதையொட்டி அங்கு கட்டப்பட்டுள்ள பொன் விழா அரங்கத்தை கவர்னர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு மடத்தின் தலைவர் சுபுதேந்திர தீர்த்தர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என். ரவி பேசியதாவது:-

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் உருவானது. பாரதம் உருவான போதே சனாதன தர்மமும் உருவானது. அது வாழையடி வழையாக ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்படுகிறது. அதன் ஒளியும் தலைமுறைகளுக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    இந்திய அரசியலமைப்பு சட்டத்திலேயே பாரதம் என்றுதான் சொல்லப்பட்டு உள்ளது. இந்த பாரதத்தில் நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பமாக தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால் ஆங்கிலேயர் வருகைக்கு பிறகுதான் ஆங்கிலம்தான் உயர்ந்தது என்றும், அவர்களுடைய கலாச்சாரம்தான் சிறந்தது என்றும் பரப்ப தொடங்கினார்கள்.

    நமது அரசியலமைப்பு வரை படத்தில் கூட குருகுல காட்சிகள்தான் இடம் பெற்று உள்ளன. ஆனால் ஆங்கிலேயர்கள்தான் பிரிவினைவாதங்களை தொடங்கி வைத்தார்கள். 1947-க்கு பிறகு தான் இந்தியாவே உருவானது போல சிலர் சொல்வது நகைப்புக்குரியதாக உள்ளது.

    நமது இந்த புனிதமான மண்ணில் எத்தனையோ மகான்கள் பிறந்து வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார்கள்.

    ராமானுஜர், அரவிந்தர் அந்த வரிசையில் 400 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்த ராகவேந்திரரும் ஒருவர். அந்த மகான்கள் உலகம் ஒரே குடும்பமாக இருக்க வேண்டும் என்று தான் பாடுபட்டார்கள். அதை தான் மக்களிடம் பரப்பினார்கள். பாரதமும், சனாதனதர்மமும் ஒன்றோடு ஒன்று இணைந்தது. அதை பிரிக்க முடியாது.

    பாரதம் உயர்ந்தால் சனாதன தர்மமும் உயரும். தாழ்ந்தாக சனாதன தர்மமும் தாழும். சனாதன தர்மம் என்பது எல்லோரும் சமம் என்பதுதான். இதில் வேற்றுமை கிடையாது.

    எல்லோரையும் ஒரே குடும்பமாகதான் சொல்கிறது. மனிதர்கள் நிறத்தில் மாறுபட்டாலும் மனிதர்கள் என்பதை போலத்தான் சனாதன தர்மமும்.

    பாரதம் வலிமையான நாடாக இருக்க வேண்டும். அதற்காகதான் தயாராகி கொண்டு இருக்கிறோம். ஒரு காலத்தில் இந்தியாவின் பேச்சை மற்ற நாடுகள் கவனிக்காது, ஆனால் இப்போது நமது பிரதமர் பேசும் போது உலகமே உற்றுப் பார்க்கிறது.

    நமது பிரதமர் பாரதத்தின் நாடி துடிப்பை அறிந்து வைத்துள்ளார். அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதாவது சுதந்திரம் கிடைத்து 100 ஆண்டுகளில் இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறார்.

    இதற்கு மடங்கள், மக்கள் எல்லோரது பங்களிப்பும் வேண்டும். ஆன்மீகத்துடன் சேர்ந்தே பாரதம் வளர வேண்டும்.

    தமிழகம் புனிதமான பூமி. சென்னையும் அழகான நகரம். இங்கு ஆங்காங்கே கழிவுநீர் ஓடுகிறது. ஓடைகள் திறந்து கிடக்கிறது. அவைகளையெல்லாம் சீர்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.

    நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான சென்னை கிளை உறுப்பினர் சேகர் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
    • பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ சுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா கல்லூரி செயலாளர் திலீபன்ராஜா தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் மல்லப்பராஜ் வரவேற்று ஆண்டறிக்கையை சமர்பித்தார். சிறப்பு விருந்தி னர், ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப் பாளர் சபரிநாதன் கலந்து கொண்டார்.

    விழாவில் கடந்த ஆண்டு பல்கலைக்கழக தேர்வில் கல்லூரி அளவில் முதலிடம் பெற்ற மாணவி செல்வகுமாரிக்கு கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ரூ. ஆயிரம் ரொக்க பரிசை வழங்கினார். தமிழ் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி சீதாலட்சுமிக்கு கல்லூரியின் முன்னாள் தமிழ் பேராசிரியர் முருகேசபாண்டி சார்பில் பரிசு வழங்கப்பட்டது. வணிகவியல் பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி கலாமணிக்கு கல்லூரியின் முன்னாள் நிர்வாகி ராஜசேகரன் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.

    ஆங்கில பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி கவிஇந்திரா, கணிதப்பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி துர்காதேவி, வரலாற்று பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கனகராஜ், அறிவியல் துறையில் முதலிடம் பெற்ற மாணவி கள் தேவி, ஜனனி, மேனகா தேவி, கணிப்பொறி பாடத்தில் முதலிடம் பெற்ற மாணவி காளீஸ்வரி ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    கலை இலக்கிய மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன. பின்பு கல்லூரி அளவில் சிறந்த மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன் சந்துருவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல போட்டிகளில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற மாணவி அட்சயாவுக்கும் மாணவன் கார்்த்திக்ராஜாவுக்கும் நினைவுப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.

    கல்லூரியில் பணிபுரியும் நிர்வாக அலுவலர், முதல்வர் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் கல்லூரி செயலாளர் நினைவுப்பரிசு வழங்கினார். முடிவில் பேராசிரியை ராமலட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவிகள் மாதேஸ்வரி, முத்துப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

    • விநாயகருக்கு பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையம் ஹாஸ்டல் ரோட்டில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி மற்றும் 9-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

    ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சக்தி விநாயகருக்கு பன்னீர், சந்தனம், இளநீர், தேன், பால் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் குத்து விளக்கேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்
    • ஓமியோபதி மருத்துவம் நோய்களுக்கு நல்ல தீர்வளிக்கும் மருத்துவமாக உள்ளது.

    கன்னியாகுமரி :

    குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவ கல்லூரியின் ஆண்டு விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது.

    இந் நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குத்து விளக்கேற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள், கலை மற்றும் விளையாட்டுப் போட்டி களில் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவியருக்கு பரிசுகள் வழங்கி அமைச்சர் பேசினார்

    ஒரு நாட்டின் வளர்ச்சியின் குறியீடுகள் கல்வி, மருத்துவமும் ஆகும். இதில் குறிப்பாக ஒரு நாட்டின் ஆரோக்கியம் என்பது அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியம் என்பது மிக முக்கிய ஆகும். இன்று மருத்துவத் துறை தற்போது வியக்கத்தக்க வகையில் வளர்ச்சி்க் கண்டு வருகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக் தொழில் நுட்பம் போன்றவை பயன்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கும் முறைகளும் வளர்ந்து வருகின்றன. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவங்கள் புகழ் பெற்றவை. குறிப்பாக மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான ஓமியோபதி மருத்துவம் தற்போது இந்தி யாவில் நூற்றுக்க ணக்கான கல்லூரிகளில் பயிற்று விக்கப்படுகிறது.

    என்னுடைய அனுபவத்தில் ஓமியோபதி மருத்துவம் நோய்களுக்கு நல்ல தீர்வளிக்கும் மருத்துவமாக உள்ளது. தற்போது உணவு தானியங்களை விளை விப்பதற்காக உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவது பெரும் பிரச்சனையாக உரு வெடுத்து வருகிறது. இதில் விவசாயிகளுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படவில்லை. காற்று, தண்ணீர், நிலம் என அனைத்திலும் நாம் நஞ்சைக் கலந்து வருகிறோம். இதனால் மனிதர்களுக்கு பல்வேறு பக்க நோய்கள் ஏற்படுகின்றன. பாரம்பரிய உணவு வகைகளை நாம் மறந்து விட்டோம். குறிப்பாக குமரி மாவட்டத்தில் மர வள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றை நாம் மறந்து வருகிறோம். இது நல்ல ஆரோக்கிய உணவாகும் பிறப்படிப்புகளைப் போன்று மருத்துவப்படிப்பு என்பது ஒரு பட்டப்படிப்பு என்று மருத்துவம் பயிலும் மாணவர்கள் நினைத்து விடக்கூடாது. இது ஒரு அர்ப்பணிப்பான பணியைத் தரும் படிப்பு என்ற எண்ணம் எப்போதும் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். இது மட்டுமன்றி மருத்துவர்களுக்கு பணியின் மீது மிகுந்த ஆர்வமும், இரக்க உணர்வும் எப்போ தும் இருக்க வேண்டும் என்று பேசினார்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் டாக்டர் சி.கே. மோகன் தலைமை வகித் தார். கல்லூரி முதல்வர் டாக்டர் என்.வி. சுகதன் ஆண்டறிக்கை சமர்ப்பித் தார். மாவட்ட அரசு சித்தா மருத்துவ அலுவலர் ராபர்ட் சிங் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு உரை யாற்றினார். கல்லூரி ஒழுங்கு குழு தலைவர் கிருஷ்ணபிரசாத், ஐ.எச்.எம்.ஏ. தலைவர் ஷாஜி குட்டி, ஐ.எச்.கே. செயலாளர் கொச்சுராணி வர்க்கீஸ், பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை துணை மருத்துவ அலுவலர் ருக்குமணி தேவி, முன்னாள் மாணவர் சங்க தலைவர் எபி மோசஸ் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக கல்லூரி முதுநிலை ஒருங்கிணைப்பா ளர் வின்ஸ்டன் வர்க்கீஸ் வரவேற்றார். கல்லூரி பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் அஜெயன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், கல்லூரி

    அறக்கட்டளை நிர்வாகிகள் சந்திரலேகா மோகன், எம்.சி. பவ்யா, மத்திய அரசின் ஓமியோபதி துறை முன்னாள் ஆலோசகர் ரவி எம். நாயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி தின விழா மற்றும் கலைவிழா நாளை 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.
    • மலையாள திரைப்பட நடிகர் சாஜன் பல்லூர்தி கலைவிழா தின சிறப்புரை ஆற்றுகிறார்

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள மரியகிரி மலங்காரா கத்தோலிக்க கல்லூரியின் 24-வது கல்லூரி தின விழா மற்றும் கலைவிழா நாளை 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது.

    நாளை 17-ந் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெறும் கலை விழாவை அருட்தந்தை அஜிஸ்ஜோகன் தொடங்கி வைக்கிறார். மலையாள திரைப்பட நடிகர் சாஜன் பல்லூர்தி கலைவிழா தின சிறப்புரை ஆற்றுகிறார். கல்லூரி பஸ்சார் அருட்தந்தை ராபின்சன் வாழ்த்துரை வழங்குகிறார். விழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்படுகிறது.

    18-ந் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு 24-வது கல்லூரி தின விழா கொண்டாடப்படுகிறது. விழாவில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் அருட்தந்தை அருள் தாஸ் வரவேற்புரை ஆற்றுகிறார். கல்லூரி முதல்வர் தம்பி தங்க குமரன் ஆண்டறிக்கை வாசிக்கிறார். மார்த்தாண்டம் பங்கு மண்டல பிஷப் அருட்தந்தை வின்சன்ட் மார் பால்ஸ் தலைமை உரையாற்றுகிறார். ஓய்வுபெற்ற கேரள போலீஸ் டிஜிபி ஜேக்கப் புன்னோஷா கல்லூரி தின விழா சிறப்புரை ஆற்றுகிறார். மலங்காரா கத்தோலிக்க கல்லூரியின் தாளாளர் பிரேம்குமார் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராஜேஷ் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    மேலும் அருட்தந்தை ஜோஸ்பி ரைட். ஷீபா தேவ் மற்றும் பலர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். முடிவில் கல்லூரி உதவிபேராசிரியர் லெனின் ஜான் நன்றி உரை ஆற்றுகிறார். விழாவில் மாணவ மாணவிகளின் நடன நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழாவில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கல்லூரி தாளாளர் அருட்தந்தை அருள்தாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்

    ×