search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annual Festival"

    • கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பூ அலங்காரம் செய்து வழிபாடு

    ஜோலார் பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த அம்மையப்பன் நகரில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. கடந்த வருடம் இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனால் ஒரு ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்று முடிந்த நிலையில் நேற்று வருட பூர்த்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு வீர ஆஞ்சநேயருக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் பூ அலங்காரமும் செய்தனர்.

    இதனை தொடர்ந்து காலை 7 மணியளவில் கோ பூஜை தேவதா அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, நடந்தது. 8.30 மணிக்கு மகா பூர்ணாஹீதி, தீபாராதனையும் வெற்றி விநாயகர், காசி விசாலாட்சி, காசி விஸ்வநாதர், கலசாபிஷேகமும், இதனையடுத்து ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் மகா அபிஷேகமும் நடைபெற்றது.

    விழாவில் ஜோலார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி எக்ஸெல் ஜி. குமரேசன், கிளாசிக் கோவை அன்பு மற்றும் கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • மாரியம்மனுக்கு தினசரி பூஜைகளும் வழிபாடு நடந்தது.
    • அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தில் அமைந்துள்ளது நாட்டு மடம் மாரியம்மன் கோவில்.

    இந்த மாரியம்மனை திருவிளையாடற்புராணம் எழுதிய பரஞ்சோதி முனிவர் ஒரு மடம் அமைத்து அதில் இந்த மாரியம்மனை வைத்து வழிபாடு செய்ததாக வரலாறு.

    அதனால் இந்த மாரியம்மனுக்கு நாட்டு மடம் மாரியம்மன் என பெயர்.

    இந்த மாரியம்மனுக்கு தினசரி பூஜைகளும், ஞாயிறு, வெ்ளளி, செவ்வாய் கிழமைகளில் வழிபாடும் நடைபெறும்.

    ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாள் விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா 29-ந்தேதி அன்று தொடங்கியது.

    இதையொட்டி வேதாரண்யேஸ்வரர் கோவிலிலிருந்து அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வந்தடைந்து காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.

    நான்காம் நாள் மண்டகபடியான திங்கள் கிழமை இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, வண்ண மலர்களால், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூத வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதியுலா காட்சி நடந்தது.

    இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்தும், மாவிளக்கு போட்டும் அம்மனை வழிபட்டனர்.

    பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடு களை அர்ச்சரக்கட்டளை கிராமவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • மதுரை சிந்தாமணி கடம்பவனம் அப்பளம் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
    • விழா–வுக்கு தலைவர் எம்.இளங்கோ தலைமை தாங்கி–னார்.

    மதுரை

    மதுரை சிந்தாமணி கடம் பவனம் அப்பளம் வியாபாரி–கள் சங்க 3-ம் ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட் டம் அவனியாபுரத்தில் இன்று நடைபெற்றது. விழா–வுக்கு தலைவர் எம்.இளங்கோ தலைமை தாங்கி–னார். செயல் தலைவர் வி.சி.சீனிவாசன் வரவேற் றார். செயலாளர் எம்.கண்ணன் செயல் விளக்கம் அளித்தார். பொருளாளர் எஸ்.ராமமூர்த்தி நிதி நிலை அறிக்கையினை சமர்ப்பித் தார்.

    விழாவில் உணவுப்பாது–காப்புத்துறை மதுரை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் வி.ஜெயராம–பாண் டியன், மதுரை மாவட்ட தொழில்மைய இணை இயக்குனர் எஸ்.கணேசன், யூனியன் பேங்க் ஆப் இந்தியா மண்டல தலைவர் டி.கே.அபிஜித், ஐ.டி.டி.சி. தொழில் வணிக மேம்பாட்டு மைய சேர்மன் எஸ்.வி.சூரஜ்சுந்தர சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை–யாற்றினர்.

    மேலும் இந்த விழாவில், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம், மதுரை நுகர்பொருள் மற்றும் ஷாப் மொத்த வியாபாரிகள் சங்க செயலாளர் கே.மோகன், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க தலை–வர் எஸ்.வி.எஸ்.எஸ்.வேல் சங்கர், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மதுரை மண்டல தலைவர் டி.செல்லமுத்து, மடீட்சியா தலைவர் எம்.எஸ்.சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இதில் துணைத்தலைவர் எம்.பாலமுருகன், இணைச் செயலாளர்கள் ஆறுமுகம், பிரதாப் சந்திரன், அர்ஜூன் பாலா, செயற்குழு உறுப்பி–னர்கள் பாலசண்முகநாதன், கருப்பையா, லோகேஸ்வ–ரன், ராஜா, ராஜபாண்டி, பன்னீர்செல்வம், பழனிக் குமார், முத்துவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் உணவு பாதுகாப்பு தொடர் பாக பல்வேறு முக்கிய தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    முடிவில் துணைத்தலை–வர் எம்.பாலமுருகன் நன்றி கூறினார்.

    • விநாயகருக்கு பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பல்லடம் :

    பல்லடம் வடுகபாளையம் ஹாஸ்டல் ரோட்டில் அமைந்துள்ள சக்தி விநாயகர் திருக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி மற்றும் 9-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.

    ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சக்தி விநாயகருக்கு பன்னீர், சந்தனம், இளநீர், தேன், பால் உள்ளிட்ட 18 வகை திரவியங்களால் சிறப்பு அபிசேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சக்தி விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • காரைக்குடி சரஸ்வதி ஆரம்ப பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • ஆசிரியைகள் தமிழ்செல்வி, ஹேமலதா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    காரைக்குடி

    காரைக்குடி முத்துப் பட்டினம் சரஸ்வதி ஆரம்பப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஆசிரியை ஜானகி தேவி வரவேற்றார். தலைமை ஆசிரியை மீனாள் தலைமை தாங்கினார்.

    பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் பிரீத்தா, துணை தலைவர் அஜீஸா முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட அளவிலான ரீடிங் மராத்தான் போட்டியில் முதலிடம் பெற்ற இந்த பள்ளியின் முன்னாள் மாணவி மதிசாய்ஸ்ரீ பங்கேற்று பேசினார். இவர் மத்திய அரசின் என்.எம்.எம்.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று கல்வி ஊக்கத்தொகை ரூ.48ஆயிரம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    விழாவில் மாணவ மாணவிகளின் நடனம், மாறுவேடப் போட்டி உள்பட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியைகள் தமிழ்செல்வி, ஹேமலதா ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • வாடிப்பட்டியில் உள்ள காந்திஜி அரசு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
    • போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் ஸ்ரீதர் ரங்கராஜன் பரிசு வழங்கினார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சி பொட்டுலுப்பட்டி அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளியின் 70-வது ஆண்டு விழா நடந்தது. செயலாளர் நாகேசுவரன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான், வட்டார வளமைய (பொறுப்பு) மேற்பார்வை யாளர் தமிழ்செல்வி, பேரூராட்சி கவுன்சிலர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வி குழு தலைவர் தனபால் வரவேற்றார். தலைமை ஆசிரியர் வேங்கடலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். தேர்வு மற்றும் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் ஸ்ரீதர் ரங்கராஜன் பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் ஆசிர்வாதம் பீட்டர், எஸ்தர்டார்த்தி மற்றும் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆனந்தி நன்றி கூறினார்.

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • ஆண்டு விழா மகா கணபதி யாகத்துடன் தொடங்கியது..

     ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமாதேஸ்வர் கோவிலில் ஆண்டு திருவிழா வெகு கோலகலமாக நடைபெற்றது.

    சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆண்டு விழா மகா கணபதி யாகத்துடன் தொடங்கியது. வாத்திய முழக்கங்களுடன் கோழிகண்டியில் தொடங்கி மாதேஸ்வரர் கோவிலில் முடிவடைந்தது.

    3 நாட்கள் நடைபெற்ற ஆண்டு விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா குழு தலைவர் கே.கே.கங்காதரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    • கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
    • ஆசிரியை ராமஜோதி ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லபுத்தூர் அருகேயுள்ள கொங்கலா புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா தலைமை ஆசிரியை மேரி தலைமை யில் நடைபெற்றது.

    டி.மானகசேரி ஊராட்சி மன்றத்தலைவி சுபிதா மாயக்கண்ணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணித பட்டதாரி ஆசிரியர் கார்த்தி கேயன் வரவேற்றார். ஆசிரியை ஆனந்தவல்லி ஆண்டறிக்கை வாசித்தார்.

    மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. மேலும் மாநில தலைமை கராத்தே பயிற்சி யாளர் சென்சாய் செபஸ்தி யான் தலைமையி்ல் மாணவிகள் கராத்தே சாகச நிகழ்ச்சி நடத்திக்காட்டினர்.

    கல்வி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.

    விழாவில் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ், தன்னார்வலர்கள் வளர்மதி, வேல்துரைச்சி, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்ட னர். ஆசிரியை ராமஜோதி ஆவுடையம்மாள் நன்றி கூறினார்.

    • தொண்டி அருகே பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • பெற்றோர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள சித்தூர் வாடி ஆர்.சி. தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வின்சென்ட் அன்பரசு தலைமையில் நடந்தது.

    தலைமை ஆசிரியர் சுசைராஜ் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். தாளாளர் கிளமெண்ட் ராசா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

    மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை பைலோன் மேரி நன்றி கூறினார்.பெற்றோர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

    • சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
    • 3 நாட்கள் நடைபெற்ற ஆண்டு விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் கூடலூர் மண்வயல் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமாதேஸ்வர் கோவிலில் ஆண்டு திருவிழா வெகு கோலகலமாக நடைபெற்றது

    சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆண்டு விழா மகா கணபதி யாகத்துடன் தொடங்கியது. வாத்திய முழக்கங்களுடன் கோழிகண்டியில் தொடங்கி மாதேஸ்வரர் கோவிலில் முடிவடைந்தது.

    3 நாட்கள் நடைபெற்ற ஆண்டு விழாவில் தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழா குழு தலைவர் கே.கே.கங்காதரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற ஆண்டு விழாவில் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர்

    • பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
    • தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    பாவூர்சத்திரம்:

    பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்ற தலைவர் செல்வன் தலைமை தாங்கினார். வக்கீல் அருள், பால்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் முப்புடாதிதேவி வரவேற்றார். ஆசிரியை பேச்சியம்மாள் ஆண்டறிக்கை வாசித்தார். கவுரவ விருந்தினராக பொன்கணேசன் பங்கேற்றார்.

    சிறப்பு விருந்தினராக பழனிநாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருக்குறள், பழமொழிகள், ஆத்திச்சூடி ஆகியனவற்றை மழலை குழந்தைகள் ஒப்புவித்தனர்.யோகா நிகழ்ச்சிகள் ஆசிரியர் குமார் முன்னிலையில் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆசிரியைகள் சந்தியா, தேவி, பொன்மலர், மகாலட்சுமி, மாரிச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்

    • அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • ஆசிரியை புஷ்பா நன்றி கூறினார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியின் 85-வது ஆண்டு விழா வட்டாரக் கல்வி அலுவலர் புல்லாணி தலைமையில் நடந்தது. யூனியன் சேர்மன் முகமது முக்தார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், பேரூராட்சி சேர்மன் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மஹ்ஜபின் சல்மா, சமீமா பானு, கவுன்சிலர்கள் தாஸ், பெரியசாமி, ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, இந்து பரிபாலன சபை தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை சுபஸ்ரீ வரவேற்றார்.

    தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பாடல், பட்டிமன்றம், கரகாட்டம், எண்ணும், எழுத்தும் உள்பட பல நிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஜெயந்தன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை புஷ்பா நன்றி கூறினார்.

    ×