search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saint Saviyar"

    • இத்திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.
    • தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, திருப்பலிஉள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடு துறை மறைவட்ட அதிபர் பேரருட் தார்சிஸ் ராஜ் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. உதவி பங்குத்தந்தை மைக்கில் டைசன் அடிகளார் கொடி பவனியை வழிநடத்தினார்.

    வேளாங்கண்ணி திருத்தல பேராலய அதிபர் பேரருட் இருதயராஜ் அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித சவேரியாரின் திருஉருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, ஆலயத்தில் சிறப்புதிருப்பலி நடை பெற்றது. அறுவடை மிகுதி வேலையாட்களோ குறைவு என்ற இறைவார்த்தையை மையமாக வைத்து நடைபெற்ற முதல் நாள் திருவிழா திருப்பலியை புனித மரியாயின் மாசற்ற இருதய சபை கன்னியர்கள், புனித பவுல் தொடக்கப்பள்ளி, புனித பவுல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியினர், பங்கு மக்களோடு இணைந்து சிறப்பித்தனர்.

    இத்திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும், கொரோனா நோய் தொற்று முற்றிலும் ஒழிந்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.

    இதில் அருட்தந்தை யர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், வின்சென்ட் தே பவுல் சபையினர், இளையோர் இயக்கத்தினர், மரியாயின் சேனையினர், அன்பிய குழுவினர், பாடகற் குழுவினர், இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கொடியேற்றத்துடன் தொடங்கிய புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டு மாலை, திருப்பலிஉள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகி ன்றன.

    வருகின்ற டிசம்பர் 2-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது.

    டிசம்பர் 3ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவு ள்ளது.

    விழாவிற்கான ஏற்பா டுகளை மயிலாடுதுறை மறை வட்ட அதிபர் பங்குத்தந்தை பேரருட் தார்சிஸ் அடிகளார் தலைமையில் விழாக்கு ழுவினர் மற்றும்பங்கு மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    ×