search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா
    X

    சான்றிதழ்களுடன் மாணவ-மாணவிகள்

    பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா

    • பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.
    • தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    பாவூர்சத்திரம்:

    பாவூர்சத்திரம் எஸ்.எஸ்.கிட்ஸ் பிளே பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. கீழப்பாவூர் தமிழ் இலக்கிய மன்ற தலைவர் செல்வன் தலைமை தாங்கினார். வக்கீல் அருள், பால்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் முப்புடாதிதேவி வரவேற்றார். ஆசிரியை பேச்சியம்மாள் ஆண்டறிக்கை வாசித்தார். கவுரவ விருந்தினராக பொன்கணேசன் பங்கேற்றார்.

    சிறப்பு விருந்தினராக பழனிநாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கி பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருக்குறள், பழமொழிகள், ஆத்திச்சூடி ஆகியனவற்றை மழலை குழந்தைகள் ஒப்புவித்தனர்.யோகா நிகழ்ச்சிகள் ஆசிரியர் குமார் முன்னிலையில் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆசிரியைகள் சந்தியா, தேவி, பொன்மலர், மகாலட்சுமி, மாரிச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்

    Next Story
    ×