search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உசிலம்பட்டி ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
    X

    உசிலம்பட்டி ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

    • உசிலம்பட்டி ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பங்கேற்று பரிசு வழங்கினார்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசி–லம்பட்டி ஆர்.சி. சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 37-வது ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் மெர்ஸி தலைமை–யில் நடைபெற்றது. தொடக் கமாக பள்ளியின் ஆண்ட–றிக்கை வாசிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் மலர், பள்ளி தாளாளர் பானு ஆர்.சி. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் அமுதா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    விழாவில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முதல் மூன்று இடங் கள் பிடித்த மாணவி–களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியம்மாள், மம்மி டாடி நிறுவனர் நிஜாமுதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரசேகர், கட்சி நிர்வாகிகள் பிரபு ஜான்சன், சசிகுமார், அய்யனார்குளம் ஜெயக்குமார், அழகு மாரி, வில்லானி பாண்டி ஆகி–யோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவி–களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    Next Story
    ×