search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Usilampatti"

    • உசிலம்பட்டியில் நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு கூட்டம் நடந்தது.
    • இதில் முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாதாந்திர கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பொன் ஆதிசேடன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் முக்கிய 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தமிழ்செல்வி, மாவட்ட செயலாளர் திருலோகநாதன், உசிலம்பட்டி நகர தலைவர் பெரியமாயதேவர், நகர செயலாளர் சுருளி, ஏழுமலை ரத்தினம், சேடப்பட்டி ஒன்றியம் மகளிரணி முத்துலட்சுமி, கல்லுப்பட்டி ஒன்றியம் முருகேசன், மாநில செயற்குழு உறுப்பினர் மதிவாணன், மாயன், மலைச்சாமி, அன்பு, ரவி, முத்துமணி, சுருளிவேல், வினோத், பிரதாப், சித்தன், பாலமுருகன், கலைசெல்வன், தங்கபாண்டியன் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உசிலம்பட்டியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இதற்கான ஏற்பாட்டை உசிலம்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கம் செய்திருந்தார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் பாரம்பரிய உணவு சிறு தானிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் கலந்து கொண்டு பழங்கால சிறுதாணியம் கம்பு கேப்பை, குதிரைவலி, தினை போன்றவற்றை பயன்பாடு பற்றி மாணவர்களுக்கு விளக்கி பேசினார். சிறுதானிய பாரம்பரிய உணவு பேரணியை நகர் மன்ற தலைவி சகுந்தலா கட்டபொம்மன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாட்டை உசிலம்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கம் செய்திருந்தார். முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் பரமசிவம் வரவேற்று பேசினார். இதில் வர்த்தகசங்க நிர்வாகிகள் மாரியப்பன், பொன்ஆதிசேடன், கார்த்திகைசாமி, வேலுச்சாமி, சுரேஷ்பாபு மற்றும் பொதுமக்களும் பேரணியில் கலந்துகொண்டனர்.

    • உசிலம்பட்டி ஆர்.சி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • உசிலம்பட்டி எம்.எல்.ஏ. பங்கேற்று பரிசு வழங்கினார்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசி–லம்பட்டி ஆர்.சி. சிறுமலர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 37-வது ஆண்டு விழா பள்ளி தலைமை ஆசிரியர் மெர்ஸி தலைமை–யில் நடைபெற்றது. தொடக் கமாக பள்ளியின் ஆண்ட–றிக்கை வாசிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் மலர், பள்ளி தாளாளர் பானு ஆர்.சி. தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் அமுதா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

    விழாவில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு முதல் மூன்று இடங் கள் பிடித்த மாணவி–களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியம்மாள், மம்மி டாடி நிறுவனர் நிஜாமுதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சந்திரசேகர், கட்சி நிர்வாகிகள் பிரபு ஜான்சன், சசிகுமார், அய்யனார்குளம் ஜெயக்குமார், அழகு மாரி, வில்லானி பாண்டி ஆகி–யோர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி மாணவி–களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    • உசிலம்பட்டியில் 16-ந் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தும்மக்குண்டு, இடையப்பட்டி, மொண்டிக்குண்டு ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக வருகிற 16-ந் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும். உசிலம்பட்டி நகர், கவண்டன்பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, மு.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, மலைப்பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, சீமானூத்து, கொங்கபட்டி, மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தப்பட்டி, பண்ணைப்பட்டி, சடையாள், கன்னியம்பட்டி.சிந்துபட்டி, தும்மக்குண்டு, பெருமாள்பட்டி, காளப்பன்பட்டி பூசலப்புரம், திடியன், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, அம்பட்டையன்பட்டி, வலங்காகுளம், உச்சப்பட்டி, காங்கேயநத்தம், தங்களாச்சேரி, பொக்கம்பட்டி. மாதரை, தொட்டப்பநாயக்கனூர், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சிபட்டி, செட்டியபட்டி, வில்லாணி.

    உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிபட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானூத்து, துரைசாமிபுரம்புதூர் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    மேற்கண்ட தகவலை உசிலம்பட்டி மின்பகிர்மான செயற்பொறியாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • உசிலம்பட்டி: காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ. அய்யப்பன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அதனைதொடர்ந்து உசிலம்பட்டி-தேனி ரோட்டில் நாடார் உறவின்முறை சார்பாக நடைபெற்ற காமராஜர் பிறந்தநாள் விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு காமராஜரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் உசிலம்பட்டி அ.தி.மு.க. நகர செயலாளர் பூமாராஜா, மாநில பேரவை மாநில துணைச்செயலாளர் துரை தனராஜன், வழக்கறிஞர் பிரிவு லட்சுமணன், கோ.ராமநாதன், அடைக்கலம், அ.தி.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • இளைஞர் பேரவை ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    உசிலம்பட்டி

    மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு கள்ளர் மாணவ-மாணவிகள் விடுதிகளை மிகவும் சிறுபான்மை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் அரசு ஆணை எண் 40-யை ரத்து செய்யக்கோரி தமிழ் மாநில பிரமலைக்கள்ளர் முற்போக்கு இளைஞர் பேரவையினர் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநிலத் தலைவர் ராஜபாண்டியன் தலைமை தாங்கினார்.

    மாநில இணைச் செயலாளர் சவுந்தரபாண்டியன், மாவட்ட தலைவர் பாண்டி, மாவட்ட செயலாளர் அசோக், செல்லம்பட்டி ஒன்றிய தலைவர் மலைச்சாமி, மாணவரணி தினேஷ், நிர்வாகிகள் ஆண்டித்தேவர், சோலை ராஜ், பழனி, கண்ணன் முன்னிலை வகித்தனர்.

    உசிலம்பட்டி அருகே பேராசிரியர் வீட்டில் 11 பவுன் நகையை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் உள்ள ஏ.ராமநாதபுரத்தில் வசிப்பவர் கண்ணாடிச்சாமி. இவரது மகன் கல்யாணசுந்தரம் (வயது 29). இவர் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் உடற் பயிற்சி பேராசிரியராக உள்ளார்.

    கல்யாணசுந்தரத்தின் மனைவி ஜெயபிரதா பிரசவத்திற்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் இரவில் ஆஸ்பத்திரியில் கல்யாணசுந்தரம் தங்கியிருந்தார்.

    இன்று காலை கல்யாண சுந்தரம் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டிற்கு திரும்பினார். அப்போது கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த 2 தங்கச்சங்கிலிகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    11 பவுன் நகைகள் கொள்ளை போயிருப்பதாக கல்யாணசுந்தரம் தெரிவித்த புகாரின் பேரில் கைரேகை நிபுணர்கள் வர வழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    உசிலம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி அருகே உள்ள சடச்சிபட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது தோட்டத்து கிணற்றில் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் விஷால் (வயது15). அவரது நண்பன் ஜெயக்கொடி (13) ஆகியோர் குளித்து கொண்டிருந்தனர்.

    அப்போது விஷால் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். கிணற்றுக்குள் குதித்ததில் ஜெயக்கொடி காயம் அடைந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சம்பவம் குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பி இருந்தாலும் கிராம பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீர்ந்த பாடில்லை.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டி ஊராட்சிக்குட்பட்டது மாருதிநகர், சத்யாநகர். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    கடந்த சில வாரங்களாக இந்த பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட வில்லை. பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. குடிநீருக்காக பெண்கள் நீண்டதூரம் சென்று அலையும் நிலை ஏற்பட்டது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி இன்று காலை அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திடீரென காலிகுடங்களுடன் உசிலம்பட்டி-மதுரை மெயின் ரோட்டில் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் மதுரை-தேனி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டது. கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் தகவல் அறிந்த போலீசார் மற்றும் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வி ஆகியோர் சம்பவ இடம் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    உசிலம்பட்டியில் 16-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி மின் வினியோக செயற்பொறியாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    உசிலம்பட்டி, தும்மக் குண்டு, இடையபட்டி, மொண்டிக்குண்டு, சின்னக் கட்டளை, எழுமலை மின் நிலையங்களில் வருகிற 16-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே அந்த நேரத் தில் உசிலம்பட்டிநகர், நக்கலப்பட்டி, தொட்டப்ப நாயக்கனூர், மேக்கிலார் பட்டி, கீரிபட்டி, சிந்து பட்டி, தும்மக்குண்டு, வேப்ப னூத்து, பூதிப்புரம், வடுக பட்டி, போத்தம்பட்டி, சின்னக்கட்டளை, சேடப் பட்டி, குப்பல்நத்தம், மங்கல் ரேவ், எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, சந்தைப் பட்டி, வகுரணி, அயோத்தி பட்டி, அல்லிகுண்டம், பொம் மனம்பட்டி, கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர், செம் பரணி, சென்னம்பட்டி, பர மன்பட்டி, பெரியகட்டளை, செட்டியபட்டி, ஆவலசேரி, கே.ஆண்டிபட்டி, வீராணம் பட்டி, தொட்டணம்பட்டி, சலுப்பப்பட்டி, குடிசேரி, ஜம்பலபுரம், கேத்துவார் பட்டி, பேரையூர் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    அதேபோல் எழுமலை, சூலப்புரம், உலைப்பட்டி, மள்ளப்புரம், அய்யம்பட்டி, அதிகாரிப்பட்டி, எம்.கல் லுப்பட்டி, துள்ளுக் குட்டிநாயக்கனூர், டி.ராம நாதபுரம், உத்தப்புரம், கோபாலபுரம், பள்ளபட்டி, எஸ்.கோட்டைப்பட்டி, தாடையம்பட்டி, பாறைப் பட்டி, கோடநாயக்கன்பட்டி, ராஜக்காபட்டி, ஜோதில் நாயக்கனூர், எ.பெருமாள் பட்டி, மானூத்து, சாப்டூர், அத்திபட்டி, அணைக் கரைப்பட்டி, மெய்நத்தம் பட்டி, உத்தப்பநாயக்கனூர், உ.வாடிப்பட்டி, குளத்து பட்டி, கல்யாணிபட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொட்டிக் குண்டு, பாப்பா பட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைமலைபட்டி, வையம்பட்டி, லிங்கப்ப நாயக்கனூர், புதுக் கோட்டை, சீமானூத்து, துரைச்சாமிபுரம்புதூர் மற்றும் அதனை சார்ந்த ஊர்களிலும் மின் வினி யோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

    உசிலம்பட்டியில் பெண் துப்புரவு தொழிலாளியிடம் ரூ.1.32 லட்சம் மோசடி செய்த வரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    உசிலம்பட்டி ஆனந்தா நகரைச் சேர்ந்த முனியாண்டி மனைவி நாகம்மாள் (வயது 48). துப்புரவு தொழிலாளி.

    இவரது பக்கத்து ஊரைச் சேர்ந்த விருமாண்டி (59) என்பவரிடம் கடந்த ஆண்டு குடும்ப செலவுக்காக ரூ.1 லட்சம் கடன் கேட்டார். இதற்கு விருமாண்டி தயங்கினார்.

    அப்போது நாகம்மாள் ஏ.டி.எம். கார்டை தருகிறேன். அதில் இருந்து மாதந்தோறும் வட்டிப்பணம் ரூ.5 ஆயிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து விருமாண்டி உசிலம்பட்டி பஸ் நிலையம் வந்து நாகம்மாளிடம் ரூ.1 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு ஏ.டி.எம். கார்டை வாங்கிச் சென்றார்.

    சமீபத்தில் நாகம்மாள் ரூ. 1 லட்சம் அசலை திருப்பி கட்டிவிட்டு ஏ.டி.எம். கார்டை பெற்றார். அதன் பிறகு ஏ.டி.எம். கார்டில் பண இருப்பை சோதித்து பார்த்தபோது விருமாண்டி ரூ.1.32 லட்சம் பணத்தை கூடுதலாக எடுத்தது தெரிய வந்தது.

    இது குறித்து நாகம்மாள் உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி. கல்யாண்குமார் வழக்குப்பதிவு செய்து விருமாண்டியை கைது செய்தார். இதில் தொடர்புடைய அவரது மருமகள் சுபா (35) தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    உசிலம்பட்டி அருகே மகனுக்கு திருமணம் ஆகாத விரக்தியில் 76 வயதான மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பொட்லுபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (வயது76). இவரது மகன் காசி. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்து வந்த காசிக்கு, அன்னக்கொடி பல இடங்களில் பெண் தேடினார். ஆனாலும் திருமணம் நடைபெறுவதில் தடை ஏற்பட்டு கொண்டே இருந்தது.

    இதனால் விரக்தி அடைந்த அன்னக்கொடி தோட்டத்தில் வி‌ஷம் குடித்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அன்னக்கொடியின் மற்றொரு மகன் மனோகரன் உசிலம்பட்டி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
    ×