search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுதானிய விழிப்புணர்வு பேரணி
    X

    சிறுதானிய விழிப்புணர்வு பேரணி

    • உசிலம்பட்டியில் சிறுதானிய விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • இதற்கான ஏற்பாட்டை உசிலம்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கம் செய்திருந்தார்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் பாரம்பரிய உணவு சிறு தானிய விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் ஜெயராமபாண்டியன் கலந்து கொண்டு பழங்கால சிறுதாணியம் கம்பு கேப்பை, குதிரைவலி, தினை போன்றவற்றை பயன்பாடு பற்றி மாணவர்களுக்கு விளக்கி பேசினார். சிறுதானிய பாரம்பரிய உணவு பேரணியை நகர் மன்ற தலைவி சகுந்தலா கட்டபொம்மன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாட்டை உசிலம்பட்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கம் செய்திருந்தார். முன்னதாக பள்ளியின் தலைமையாசிரியர் பரமசிவம் வரவேற்று பேசினார். இதில் வர்த்தகசங்க நிர்வாகிகள் மாரியப்பன், பொன்ஆதிசேடன், கார்த்திகைசாமி, வேலுச்சாமி, சுரேஷ்பாபு மற்றும் பொதுமக்களும் பேரணியில் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×