search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Police murder"

    ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீஸ்காரர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது40).

    இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். அந்த பகுதியிலேயே அறை எடுத்து தங்கி இருந்தார். இவர் பணியில் சேர்ந்து 1 வாரமே ஆகிறது.

    இந்த நிலையில் சுங்குவார் சத்திரம் திருமங்கலம் கருப்புகை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் போலீஸ்காரர் மோகன்ராஜ் பிணமாக கிடந்தார்.

    அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. அவரை மர்ம ஆசாமிகள் தலையில் அடித்தும் மதுபாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தியும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. (பொறுப்பு) பஞ்சாட்சரம், இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீஸ்காரர் மோகன் ராஜை யார் கொலை செய்தது என்பது தெரியவில்லை. மது குடித்தபோது ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையுண்ட போலீஸ்காரர் மோகன்ராஜுக்கு அன்பு ரோஜா என்ற மனைவியும், அஸ்வின் என்ற மகனும், அவினாசி, அஜயா என்ற மகள்களும் உள்ளனர். #tamilnews
    ×