என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Yuvraj Singh"
- டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை ஸ்டாய்னிஸ் படைத்துள்ளார்.
- 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
டி20 உலகக்கோப்பை 19-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் ஆசிய சாம்பியன் இலங்கையும் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது.
ஸ்டாய்னிசின் அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவரிலேயே ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஸ்டாய்னிஸ் தேர்வு செய்யப்பட்டார். இப்போட்டியில் 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
1. மார்கஸ் ஸ்டாய்னிஸ்: 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. டேவிட் வார்னர்: 18, பந்துகள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2010
2. கிளன் மேக்ஸ்வெல் : 18 பந்துகள் பாகிஸ்தானுக்கு எதிராக, 2014
அத்துடன் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த ஒட்டுமொத்த பட்டியலில் 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
1. யுவராஜ் சிங் : 12 பந்துகள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007
2. மார்கஸ் ஸ்டோனிஸ் : 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. ஸ்டீபன் மைபர்க் : 17, அயர்லாந்துக்கு எதிராக, 2014
3. கிளென் மேக்ஸ்வெல் : 18, பாகிஸ்தானுக்கு எதிராக, 2014
3. கேஎல் ராகுல் : 18, ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021
மேலும் இப்போட்டியில் 327.78 என்ற ஸ்டிரைக் ரேட்டில் இலங்கையை அடித்து நொறுக்கிய அவர் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 300+ ஸ்ட்ரைக் ரேட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற யுவராஜ் சிங் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார்.
1. மார்கஸ் ஸ்டாய்னிஸ் : 59* ரன்கள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. யுவராஜ் சிங் : 58 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007
- இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியின் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா சமன் செய்துள்ளார்.
- இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்த்திக் பாண்ட்யா ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த போட்டியில் ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் பேட்டிங்கில் 33 ரன்கள் எடுத்திருந்தார்.
இதன் மூலம் ஹர்த்திக் பாண்ட்யா ஒரு போட்டியில் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை ஹர்த்திக் பாண்ட்யா தகர்த்துள்ளார்.
ஹர்திக் பாண்டியா மூன்று முறையும், யுவராஜ் 2 முறையும் 30-க்கு அதிகமான ரன்கள் மற்றும் 3 விக்கெட்களை எடுத்துள்ளனர்.
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி கட்ட ஓவர்களில் (16 - 20) அதிக சிக்சர்களை அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற டோனியின் சாதனையையும் இவர் சமன் செய்துள்ளார்.
அந்தப் பட்டியலில் ஹர்திக் பாண்டியா (34*) இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனி (34) இவர்களுக்கு அடுத்தப்படியாக யுவராஜ் சிங் (31) உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் சரியாக ஆடாததால் 2017-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு அணியில் இருந்து நிரந்தரமாக ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடுகிறார்.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல்தர போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யுவராஜ்சிங் சிந்தித்து கொண்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேச விரும்புகிறார். கனடாவில் நடக்கும் குளோபல் லீக் மற்றும் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, நெதர்லாந்தில் நடக்கும் 20 ஓவர் போட்டிகளில் ஆடுவதற்கு அவருக்கு அழைப்பு வந்துள்ளது. இதற்கு கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை கோருகிறார்’ என்றார்.
37 வயதான யுவராஜ்சிங் 2011-ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்ல பக்கபலமாக இருந்தார். அந்த உலக கோப்பையில் 362 ரன்களுடன், 15 விக்கெட்டும் எடுத்து தொடர் நாயகன் விருதை பெற்றது நினைவு கூரத்தக்கது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் யுவராஜ்சிங் அடித்த அரைசதம் (35 பந்துகளில் 53 ரன்கள்) ஆறுதல் அளித்ததே தவிர, அணியின் வெற்றிக்கு உதவவில்லை. போட்டிக்கு பிறகு யுவராஜ்சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் ரிஷாப் பான்டுக்கு இடம் கிடைக்குமா? என்பது எனக்கு தெரியாது. இந்த போட்டியில் அவரது ஆட்டம் அற்புதமாக இருந்தது. கடந்த ஆண்டும் அவர் சிறப்பாக செயல்பட்டார். அவர் வெளிநாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இளம் வயதிலேயே இரண்டு சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார். அவர் வருங்காலத்தில் மிகச் சிறந்த வீரராக உருவெடுப்பார். அவரை கவனமாக வழிநடத்த வேண்டியது முக்கியமானதாகும். கடந்த 2 வருடங்களாக எனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறேன். இதனால் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து நான் இன்னும் உறுதியான முடிவு எடுக்கவில்லை. அதற்கான நேரம் வரும் போது முதல் நபராக ஓய்வு முடிவை அறிவிப்பேன். கிரிக்கெட்டை இளம் வயது முதலே அனுபவித்து ஆடுவதால் நான் தொடர்ந்து விளையாடி வருகிறேன். எனது ஓய்வு குறித்து குழப்பமான சூழ்நிலை ஏற்பட்ட போது தெண்டுல்கருடன் கலந்து ஆலோசித்தேன். அதில் எனக்கு நல்ல தெளிவு கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
கிரிக்கெட் வீரர் டோனி மோட்டார்சைக்கிள்கள் மீது அதிக பிரியம் கொண்டவர்.
அவரிடம் சுமார் 20 அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றன. கிரிக்கெட் போட்டி இல்லாத நாட்களில் மோட்டார் சைக்கிளில் உலாவருவது அவருக்கு பிடித்த பொழுது போக்காக உள்ளது.
டோனி போலவே மேலும் சில கிரிக்கெட் வீரர்களும் மோட்டார்சைக்கிள்கள் மீது ஆர்வத்துடன் உள்ளனர். கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கடந்த ஆண்டு பி.எம்.டபிள்யூ ரக மோட்டார்சைக்கிளை வாங்கினார்.
அந்த மோட்டார்சைக்கிளின் விலை சுமார் ரூ.3 லட்சம் ஆகும். 3 ஆண்டுகள் வாரண்டி கொண்ட அந்த மோட்டார்சைக்கிள் அதி நவீன வசதிகள் கொண்டவையாகும்.
தற்போது முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கங்குலியும் இதே ரக புதிய மோட்டார்சைக்கிள் வாங்கி உள்ளார். இந்த மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ.3 லட்சத்து 49 ஆயிரம் ஆகும்.
313 சி.சி. சக்தி கொண்ட இந்த மோட்டார்சைக்கிள் அதிநவீன வசதிகள் கொண்டது. பி.எம்.டபிள்யூ மோட்டார் சைக்கிள்கள் ஜெர்மனி, தாய்லாந்து, பிரேசில் நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Yuvrajsingh #SouravGanguly #MSDhoni
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் டோனி இடம் பெறுவது குறித்து யுவராஜ்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
டோனிக்கு சிறந்த கிரிக்கெட் அறிவு இருக்கிறது. விக்கெட் கீப்பராக இருப்பதால் ஆட்டத்தின் போக்கை நன்கு கணிக்கக்கூடியவர். அந்த பணியை அவர் பல வருடங்களாக தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார்.
அவர் ஒரு சிறந்த கேப்டனாகவும் இருந்து இருக்கிறார். இளம்வீரர்களை மட்டுமல்லாமல் கேப்டன் விராட்கோலியையும் அனைத்து தருணங்களிலும் வழிகாட்டி வருகிறார். இதனால் முடிவு எடுக்கும் பணிகளுக்காகவே டோனி உலக கோப்பை அணியில் முக்கிய இடம் பெற வேண்டும்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் அவருக்கு சிறப்பானதாக அமைந்திருக்கிறது. வழக்கமான அவரது ஷாட்களை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் டோனியின் பங்களிப்பு முக்கிய இடமாக இருக்கும். அவர் எந்த இடத்தில் களம் இறங்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அவர் தான் பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. #YuvrajSingh #MSDhoni #WorldCup2019
12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரூ.1 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள ஆல்-ரவுண்டர் 37 வயதான யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
கிரிக்கெட் மீதான எனது வேட்கை இன்னும் குறையவில்லை. அதனால் தான் விளையாடிக்கொண்டு இருக்கிறேன். இந்த சீசனில் நிச்சயம் அசத்துவேன் என்று நம்புகிறேன். ஐ.பி.எல். ஏலத்தில் முதல் ரவுண்டிலேயே என்னை எந்த அணியாவது தேர்வு செய்யும் என்று நினைக்கவில்லை. அதனால் இதில் எனக்கு ஏமாற்றம் ஏதும் இல்லை. ஒரு ஐ.பி.எல். அணியாக, இளம் வீரர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நானோ கிட்டத்தட்ட எனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி பகுதியில் இருக்கிறேன். ஆனால் அடுத்த ரவுண்டில் என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்தேன். அதன்படியே நடந்தது.
மும்பை அணியில் எனக்கு உகந்த சூழல் இருக்கும். அந்த அணியில் ஜாகீர்கான் (கிரிக்கெட் இயக்குனர்), சச்சின் டெண்டுல்கர் (ஆலோசகர்), ரோகித் சர்மா (கேப்டன்) ஆகியோர் உள்ளனர். இவர்களுடன் நான் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். அவர்களுடன் மறுபடியும் கைகோர்த்து விளையாட ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். அணியில் உங்களுக்கு ஆதரவு இருக்கும் போது, அது நன்றாக ஆடுவதற்கு ஊக்கமாக அமையும். இதன் மூலம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.
கடந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணிக்காக (6 இன்னிங்சில் 65 ரன்) நான் சரியாக ஆடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் 4-5 ஆட்டங்களில் வெவ்வேறு பேட்டிங் வரிசையில் இறக்கப்பட்டேன். குறிப்பிட்ட ஒரே வரிசையில் தொடர்ந்து ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள ஆர்வமாக உள்ளேன்.
இவ்வாறு யுவராஜ்சிங் கூறினார். #YuvrajSingh #IPLCricket
12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடக்கிறது.
இதையொட்டி வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு, பரிமாற்றம் உள்ளிட்ட பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டது. எஞ்சியுள்ள வீரர்களுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது.
இதற்கான ஏலப்பட்டியலில் மொத்தம் 356 வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். 5 வீரர்கள் கடைசி நேரத்தில் பட்டியலில் இடம் பெற்றனர்.
இதில் 60 வீரர்கள் மட்டுமே ஏலம் போனார்கள் 8 அணிகளும் சேர்த்து இதற்காக மொத்தம் ரூ.106.80 கோடி செலவழித்தது.
இந்திய அணியில் இருந்து ஒரங்கட்டப்பட்ட முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ்சிங்கின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது.
அவருக்கான அடிப்படை விலை ரூ.1 கோடியாகும். முதல் சுற்றில் யுவராஜ்சிங்கை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதனால் அவர் ஏலம் போகமாட்டார் என்று கருதப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் 2-வது சுற்றில் அவரை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கே எடுத்துக்கொண்டது.
இதன்மூலம் யுவராஜ்சிங்கின் மதிப்பு 94 சதவீதம் சரிந்துள்ளது. அவர் 2015-ம் ஆண்டில் அதிகமாக ரூ.16 கோடிக்கு ஏலம் போனார். டெல்லி டேர்டெவில்ஸ் வாங்கியது. 2014-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.14 கோடிக்கு எடுத்து இருந்தது.
2016-ல் இருந்து அவருக்கான விலை சரிய தொடங்கியது. அந்த ஆண்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரூ.7 கோடிக்கு வாங்கி இருந்தது. கடந்த ஆண்டு ரூ.2 கோடிக்கு (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) விலை போனார். தற்போது அவரது விலை ரூ.1 கோடியாக குறைந்துள்ளது.
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.5 கோடி கொடுத்து வேகப்பந்து வீரர் மொகித்சர்மாவை மீண்டும் ஏலத்தில் எடுத்தது. இதேபோல ருதுராஜ் கெய்க்வாட்டை ரூ.20 லட்சத்துக்கு எடுத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் பெரும்பாலான வீரர்களை தக்க வைத்துக்கொண்டதால் 2 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்தது. #IPLAuction2019 #YuvrajSingh
ஸ்டெயின், மெக்கல்லம் போன்ற முன்னணி வீரர்கள் ஏலம் போகவில்லை. யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை ஒரு கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. முதல் சுற்றில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. விலைபோகாத வீரர்கள் 2-வது சுற்றில் ஏலம் விடப்பட்டார்கள். அப்போது மும்பை இந்தியன்ஸ் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கே ஏலம் எடுத்தது.
அதேபோல் நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேஎல் ராகுல், கருண் நாயர், கேப்டன் அஸ்வின் உள்பட 9 பேரை தக்க வைத்துள்ளது. 11 வீரர்களை விடுவித்துள்ளது. ஒரு வீரரை மற்ற அணியில் இருந்து வாங்கியுள்ளது.
வெளிநாட்டு வீரர்களான சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான், அண்ட்ரிவ் டை, கிறிஸ் கெய்ல், டேவிட் மில்லரை தக்கவைத்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விடுவித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஆரோன் பிஞ்ச், 2. அக்சார் பட்டேல், 3. மோகித் சர்மா, 4. யுவராஜ் சிங், 5. பரிந்தர் ஸ்ரன், 6. பென் டிவார்ஷுயிஸ், 7. மனோஜ் திவாரி, 8. அக்தீப் நாத், 9. பர்தீப் சாகு, 10 மயாங்க் டாகர், 11. மன்சூர் டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்