search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Youth arrest"

    • புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.
    • ஸ்ரீதர் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் வாவு யூவியாஸ் பாக்மி (வயது 47).

    இவரது மூத்த மருமகன் ஜின்னா என்பவரின் செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்பில் கடந்த அக்டோபர் மாதம் ஒரு செல்போன் எண்ணில் இருந்து பகுதி நேர வேலை சம்பந்தமாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

    இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி அந்த மர்மநபரிடம் வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டு அதில் அவர் அனுப்பிய 'லிங்க்' மூலம் டெலிகிராம் குரூப்பில் இணைந்து, வேலை செய்வதற்கு அவர் அனுப்பிய மற்றொரு லிங்க் மூலம் பதிவும் செய்துள்ளார்.

    பின்னர் அந்த மர்மநபர் தூண்டுதலின்பேரில் வாவு யூவியாஸ் பாக்மி அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தனது மருமகன் ஜின்னாவின் வங்கி கணக்கில் இருந்து பல்வேறு வங்கி கணக்கிற்கு மொத்தம் ரூ. 11 லட்சத்து 72 ஆயிரம் பணத்தை செலுத்தி உள்ளார். அதன் பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த நவம்பர் 22-ந்தேதி அந்த மர்மநபர், ஜின்னாவின் வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனது பெயர் ஸ்ரீதர் என்றும் நான் தங்களுடைய பணத்தை எடுத்ததற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்றும் கூறி கூகுல்பே மூலமாக ஜின்னாவின் வங்கி கணக்கிற்கு ரூ. 20 ஆயிரம் பணமும், அதனைத் தொடர்ந்து ரூ. 30 ஆயிரமும், அதற்கு மறுநாள் ரூ 9 ஆயிரமும் அனுப்பியுள்ளார்.

    இதனையடுத்து ஸ்ரீதர் ஜின்னாவின் செல்போன் எண் மூலம் வாவு யூவியாஸ் பாக்மியை தொடர்பு கொண்டு அவர்களுடைய குடும்ப விபரங்களை பற்றி கூறி, வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து பல்வேறு இன்ஸ்டாகிராம் கணக்குகளில் பதிவு செய்துள்ளார். பின்னர் கடந்த டிசம்பர் 20-ந் தேதி முதல் வாட்ஸ்அப்பில் வாவு யூவியாஸ் பாக்மியின் குடும்பத்தினருக்கும் மற்றும் அவரது மூத்த மருமகன் ஜின்னாவின் குடும்பத்தினருக்கும் ஆபாச வார்த்தைகள் மற்றும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி ஸ்ரீதர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதனையடுத்து வாவு யூவியாஸ் பாக்மி தாங்கள் மோசடி செய்யப்பட்டது மற்றும் சமூக வலைதளத்தில் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் விடுத்தது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் பதிவு செய்துள்ளார்.

    அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மதுரை வடக்கு தாலுகா தத்தனேரி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் (36) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 20-ந்தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற தீபிகா மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
    • தீபிகாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களை பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், பாண்டவபூர் மாணிக்யன ஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ் (35) . இவரது மனைவி தீபிகா (28). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    தீபிகா மேலுகோடு என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். மேலும் தீபிகா நேரம் கிடைக்கும்போதெல்லாம் ரீல்ஸ் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இவரது வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 20-ந்தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற தீபிகா மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தொடர்ப்பு கொள்ள முயன்றனர்.

    ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் தீபிகா மாயமானதாக மேலுகோட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதற்கிடையே மேலுகோட் யோக நரசிம்ம சுவாமி கோவிலின் மலை அடிவாரத்தில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் பாதி அழுகிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக மீட்கப்பட்டது மாயமான ஆசிரியை தீபிகா என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். குடும்பத்தினர் விரைந்து வந்து பிணமாக கிடந்தது தீபிகா தான் என்பதை உறுதி செய்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கொலை செய்து புதைத்தது யார் என்று போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    தீபிகா ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்ததால், அதன்மூலம் பழக்கமானவர்கள் யாராவது கொலை செய்தனரா என்ற, கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அப்போது தீபிகா உடல் மீட்கப்பட்ட பகுதியில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோவில் பகுதியில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சம்பவத்தன்று ஒரு பெண்ணும் ஒரு வாலிபரும் சண்டை போட்டுக்கொண்டிருந்ததும் அதை கோவிலுக்கு வந்த சிலர் வீடியோ எடுத்து வைத்து இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீடியோவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அந்த வீடியோவில் இருப்பது கொலை செய்யப்பட்ட ஆசிரியை தீபிகா என்பது தெரியவந்தது. அவரிடம் ஒரு வாலிபர் கடுமையாக சண்டை போடும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தது. எனவே அந்த வாலிபர்தான் தீபிகாவை கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகித்தனர். அதன் அடிப்படையில் தீபிகாவுடன் சண்டை போட்ட அந்த வாலிபர் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் மாணிக்யனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ் (22), என்பது தெரிந்தது. ஏற்கனவே தீபிகாவின் குடும்பத்தினரும், நிதிஷ் மீது கொலை குற்றச்சாட்டு கூறி இருந்தனர். கடைசியாக அவர் தான், தீபிகாவிடம் மொபைல் போனில் பேசியதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நிதிஷை தேடி வந்தனர். அப்போது விஜயநகரா ஹொஸ்பேட்டில் தலைமறைவாக இருந்த வாலிபர் நிதிஷை, மேலுகோட் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் முதலில் தீபிகாவை கொலை செய்யவில்லை என்று கூறியவர், பின்னர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் விசாரணையில் வெளியான தகவல்கள் வருமாறு:-

    தீபிகாவும், நிதிஷும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதாலும், தீபிகாவின் ரீல்ஸ் வீடியோ மூலமும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    இருவரும் அக்கா, தம்பி போன்று பழகி வந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையில் ஏதாவது தவறான உறவு இருக்கலாம் என்று குடும்பத்தினர் சந்தேகித்து உள்ளனர். இதனால் நிதிஷுடன் பேசுவதைத் தவிர்க்கும்படி, தீபிகாவுக்கு குடும்பத்தினர் அறிவுரை கூறினர். இதனால் நிதிஷுடன் பேசுவதை தீபிகா தவிர்த்தார். ஆனால் தன்னுடன் பேசும்படி, நிதிஷ் தொல்லை கொடுத்து வந்து உள்ளார். இதற்கு சம்மதிக்காததால் தீபிகாவை கொலை செய்ய நிதிஷ் முடிவு செய்தார்.

    அதன்படி கடந்த 20-ந்தேதி நிதிஷுக்கு பிறந்தநாள். இதையடுத்து அவர் தீபிகாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு உங்களை பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

    பிறந்தநாள் என்பதால் நிதிஷுக்கு சர்ட் எடுத்துக் கொண்டு, அவரை சந்திக்க தீபிகா யோக நரசிம்ம சுவாமி கோவில் மலை அடிவாரத்திற்கு சென்றுள்ளார். அங்கு வைத்து நிதிஷுக்கும், தீபிகாவுக்கும் இடையில், தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் ஆத்திரமடைந்த நிதிஷ், தீபிகாவின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில், புதைத்துவிட்டு தப்பி உள்ளார்.

    தீபிகாவை காணவில்லை என்று கணவரும், பெற்றோரும் தேடியபோது, தீபிகாவின் தந்தைக்கு, நிதிஷ் அடிக்கடி போன் செய்து, அக்கா வந்து விட்டாரா?' என்று கேட்டு நாடகம் ஆடியதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • பள்ளி செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளை வீரன் நிறுத்தினார்.
    • சிறுமியை கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தார்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தில் உள்ள பள்ளியில் 9 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இச்சிறுமி நேற்று மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே அதே ஊரைச் சேர்ந்த வீரன் (30) மோட்டார் சைக்கிளில் வந்தார். சாலையில் நடந்து சென்ற சிறுமியை ஏன் நடந்து செல்கிறாய். மோட்டார் சைக்கிளில் உட்கார், பள்ளியில் விடுகிறேன் என்று கூறினார். இதனை நம்பி அச்சிறுமி மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தார்.

    பள்ளி செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளை வீரன் நிறுத்தினார். சிறுமியை கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தார். இதில் அச்சிறுமி கூச்சலிட்டார். அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தனர்.

    கரும்புதோட்டத்தில் வீரனிடம் சிக்கியிருந்த சிறுமியை மீட்டனர். வீரனுக்கு தர்மஅடி கொடுத்து, கடலூர் மாவட்ட சிறார் உதவி மையத்தை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினர். அவர்கள் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அங்கு பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வீரனை கைது செய்து போக்சோ வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை அவளது பெற்றோருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • டாக்டர் சுப்பிரமணி இதுகுறித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • அசர் பாட்ஷாவை கைது செய்து வேலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். மேலும் பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

    இந்த மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் எந்திரம் வாங்குவதற்காக சுப்பிரமணி பெங்களூரு ஜெய் நகரைச் சேர்ந்த அசர் பாட்சா (32) என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளாக தவணை முறையில் ரூ.30 லட்சம் வரை கொடுத்ததாக தெரிகிறது.

    ஆனால் அசர் பாட்சா சி.டி.ஸ்கேன் எந்திரத்தை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்படுவதை அறிந்த டாக்டர் சுப்பிரமணி இதுகுறித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி உத்தரவின்பேரில் வேலூர் போலீசார் பெங்களூருவுக்கு சென்று அங்கிருந்த அசர் பாட்ஷாவை கைது செய்து வேலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடியில் டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • விசாரணையில் விக்னேஸ்வரன் என்ற விக்கி விற்பனைக்காக காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி யில் ஊரக உட்கோட்ட டி.எஸ்.பி. சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தூத்துக்குடி ராஜகோபால்நகர் பகுதியில் காருடன் சந்தே கத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் என்ற விக்கி (வயது 33) என்பதும், அவர் விற்பனைக்காக காரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா பதுக்கிய காரையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பாக விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் 6 பவுன் தங்க செயின் திருடியது தெரியவந்தது.
    • சென்னை, செங்கல்பட்டு போன்ற இடங்களில் உள்ள பல்வேறு வீடுகளில் திருடியதும், அந்த பணத்தை வைத்து பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் தாலுக்கா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதில் சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்த கிஷோர் (வயது 27) என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக விழுப்புரம் பெரியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் 6 பவுன் தங்க செயின் திருடியது தெரியவந்தது.

    மேலும் இவர் சென்னை, செங்கல்பட்டு போன்ற இடங்களில் உள்ள பல்வேறு வீடுகளில் திருடியதும், அந்த பணத்தை வைத்து பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விழுப்புரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், கிஷோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

    • திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது வாலிபர் பள்ளி மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார்.
    • பஸ் பயணிகள் வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது 18) என்பவர் தினமும் மாணவி பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து வீடு திரும்பும் போதும் பின் தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தி டார்ச்சர் செய்துள்ளார்.

    நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அந்த வாலிபர் பள்ளி மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அந்த மாணவி காதலை ஏற்க மறுத்ததோடு வாலிபரை திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் பள்ளி மாணவியை பொது இடத்தில் வைத்து தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த பஸ் பயணிகள் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.

    • வாடகைக்கு எடுத்து சென்ற 521 “லேப்டாப்” களையும் தினேஷ் வேறு ஒரு நிறுவனத்திடம் ரூ.80 லட்சத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது தெரிந்து பிரேமலதா அதிர்ச்சி அடைந்தார்.
    • நேரில் சென்று கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசிய தினேஷ், பிரேமலதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    போரூர்:

    சென்னை நொளம்பூர், பகுதியை சேர்ந்தவர் பிரேமலதா. இவர் விருகம்பாக்கம் பகுதியில் லேப்டாப், கம்ப்யூட்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை மாத வாடகைக்கு கொடுத்து வரும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    இவருக்கு பம்மல் சங்கர் நகரை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரி தினேஷ் லிங்கம் (27) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகமானார். மேலும் மாத வாடகைக்கு "லேப்டாப்"களை எடுத்து சென்று முறையாக வாடகையும் செலுத்தி வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ3.5 கோடி மதிப்புள்ள 521 "லேப்டாப்"களை தினேஷ் மாத வாடகைக்கு எடுத்து சென்றார். ஆனால் நீண்ட நாட்களாகியும் அவர் "லேப்டாப்"களை திரும்ப ஒப்படைக்கவில்லை. அவரது செல்போனும் "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது.

    இதற்கிடையில் தன்னிடம் வாடகைக்கு எடுத்து சென்ற 521 "லேப்டாப்" களையும் தினேஷ் வேறு ஒரு நிறுவனத்திடம் ரூ.80 லட்சத்துக்கு விற்று மோசடியில் ஈடுபட்டது தெரிந்து பிரேமலதா அதிர்ச்சி அடைந்தார்.

    இது பற்றி நேரில் சென்று கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசிய தினேஷ், பிரேமலதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து பிரேமலதா விருகம்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். உதவி கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை போலீசார் தினேஷ் லிங்கத்தை கைது செய்தனர். அவர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி, ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • பெற்றோருடன் சென்று கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி திருமணம் செய்ய மறுத்து விட்டார்.
    • வாலிபரை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    நான் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். கல்லூரியில் படிக்கும் போது எனக்கு நெய்வேலியை சேர்ந்த புவன் கிருஷ்ணன் (வயது 24) என்ற வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. நாங்கள் 2 பேரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தோம். அப்போது புவன் கிருஷ்ணன் என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றார்.

    அவர் என்னிடம் திருமணம் செய்வதாக உறுதியளித்து என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பின்னர் என்னை அவர் திருமணம் செய்ய மறுத்தார். பின்னர் புவன் கிருஷ்ணன் என்னிடம் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

    இது குறித்து நான் செப்டம்பர் மாதம் 17-ந்தேதி ஏற்கனவே புகார் அளித்தேன். புகாரின் பேரில் போலீசார் அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர் என்னை திருமணம் செய்வதாக போலீசாரிடம் கூறினார். ஆனால் தற்போது வரை அவர் என்னை திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார். இது குறித்து நான் எனது பெற்றோருடன் சென்று கேட்ட போது தகாத வார்த்தைகளால் பேசி திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

    எனவே திருமணம் செய்வதாக உறுதியளித்து என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த புவன் கிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த புவன் கிருஷ்ணனை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • அழைப்பு மணியை அடித்து வீட்டில் இருந்து பெண்கள் வெளியே வந்தால் உடனடியாக தலை முடியை பிடித்து கொள்வான்.
    • வீட்டில் இருக்கும் நகை, பணம், விலை உயர்ந்த பொருட்கள் எதன் மீதும் ஆசை கிடையாது.

    தாம்பரம்:

    பெண்களின் உள்ளத்தை திருடும் இளைஞர்களை கேள்விப்பட்டு இருப்போம். உள்ளாடைகளை திருடும் இளைஞர்களை பார்த்து இருப்போமா? இப்படியும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    தாம்பரத்தை அடுத்த சேலையூர் எம்.இ.சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் கத்திமுனையில் பாலியல் சீண்டல்களில் ஒரு மர்ம மனிதன் ஈடுபட்டு வருவதாக சேலையூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

    அவமானம் என நினைத்து புகார் கொடுக்க எந்த பெண்ணும் முன் வரவில்லை. ஆனாலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து தேடிக்கொண்டிருந்தனர்.

    இதற்கிடையில் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ளவர்களும் இரவு நேரத்தில் ரகசியமாக கண்காணித்து கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் சந்தேகப்படும்படி அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த ஒரு வாலிபரை பார்த்ததும் அவரை பிடித்து விசாரித்துள்ளனர். அவன் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவனை வெளுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அவனிடம் விசாரித்த போது அந்த நள்ளிரவு ரோமியோ அவன்தான் என்பது தெரியவந்தது. அவனது பெயர் தமிழ் பிரபு (28). கார் டிரைவராக வேலை பார்க்கிறான். சொந்த ஊர் தஞ்சாவூர். சேலையூரில் தான் வாடகை வீட்டில் தங்கி உள்ளான். இவருக்கு ஒரு வினோதமான ஆசை. பெண்களின் உள்ளாடைகளை திருடி தனது அறைக்கு கொண்டு சென்று தன் அருகே வைத்து கொண்டு தூங்குவான். மறுநாள் அதை குப்பையில் வீசி விடுவான்.

    மீண்டும் அதே போல் திருடுவான். ஒரு கட்டத்தில் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டி பார்க்க ஆசைப்பட்டுள்ளான். அதற்காக அவர் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை தேட தொடங்கி இருக்கிறான்.

    இரவில் தெருவில் சாதாரணமாக நடந்து செல்வது போல் செல்வான். அப்போது பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிடுவான். அந்த வீட்டின் முன்பு பெண்கள் செருப்பு மட்டும் கிடந்தால் பெண்கள்தான் தனியாக இருக்கிறார்கள் என்று உறுதி செய்வான்.

    பின்னர் அழைப்பு மணியை அடித்து வீட்டில் இருந்து பெண்கள் வெளியே வந்தால் உடனடியாக தலை முடியை பிடித்து கொள்வான். சத்தம் போடாமல் இருப்பதற்காக தயாராக இருக்கும் கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து கொள்வான். அப்படியே வீட்டுக்குள் தள்ளி சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவான். வேறு அந்த வீட்டில் இருக்கும் நகை, பணம், விலை உயர்ந்த பொருட்கள் எதன் மீதும் அவருக்கு ஆசை கிடையாது. சத்தமின்றி தனது ஆசை தீர சில்மிஷம் செய்து விட்டு சத்தமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி விடுவான்.

    இப்படி பத்துக்கும் மேற்பட்ட பெண்களிடம் நடந்துள்ளதாக கூறியிருக்கிறார். ஆனால் இதுவரை போலீஸ் கையில் சிக்கியது இல்லை. அதற்கு முக்கிய காரணம் பெண்கள் புகார் கொடுக்க முன் வராததுதான். இப்போதுதான் முதல் முறையாக போலீசிடம் சிக்கி இருக்கிறார்.

    தமிழ்பிரபுவை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.
    • டெலிகிராம் மூலம் அறிமுகமான மும்பையை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டியுள்ளனர்.

    செந்துறை:

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகமது தன்வீர்(வயது 35). இவர் தற்போது அரியலூர் ஜெஜெ நகரில் வசித்து வருகிறார்.

    இவரது செல்போனுக்கு வாட்ஸ்அப்பில் பகுதி நேர வேலை தொடர்பாக குறுஞ்செய்தி வந்தது. இதை பார்த்து, அவர் அதில் உள்ள டெலிகிராம் குரூப்பை தொடர்பு கொண்டார். அப்போது, அதில் பேசிய நபர் தன்னிடம் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறினார்.

    இதை நம்பி, முகமது தன்வீர் பல்வேறு டாஸ்க்களை முடிப்பதற்காக பல்வேறு தவணைகளாக ரூ.12 லட்சத்து 47 ஆயிரம் செலுத்தினார். ஆனால் அவருக்கு லாப தொகை எதுவும் வழங்கப்படவில்லை.

    இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமது தன்வீர் இது குறித்து தன்வீர் அரியலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மர்ம கும்பல் இணையம் வழியாக இதுபோன்று பலரிடம் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் இந்த கும்பல் கோடிக்கணக்கில் பணம் சுருட்டியுள்ளது. இதை தொடர்ந்து கொள்ளையர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளில் இருந்த ரூ.78 லட்சத்து 54 ஆயிரத்து 56 யை போலீசார் முடக்கம் செய்தனர். வங்கி பண பரிவர்த்தனைகள் மற்றும் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில் இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரிய வந்தது.

    அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிவனேசன் சுரேஷ்பாபு, சுரேஷ், ரஞ்சித் குமார் வசந்தி உள்ளிட்ட 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

    அப்போது தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், முஸ்லிம் தெருவில் பதுங்கி இருந்த மாலிக் (35). என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    மாலிக் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் பகுதியில் ஆல்பா 3 ஐ இன்போ டெக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதில் போதிய லாபம் கிடைக்காததால், ஆன்லைனில் அதிகளவில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார்.

    இதற்காக டெலிகிராம் மூலம் அறிமுகமான மும்பையை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து பல்வேறு சதி திட்டங்களை தீட்டியுள்ளனர். இதற்காக கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, அதில் சிலரை வேலைக்கு சேர்த்தனர்.

    அவர்களை ஏமாற்றி பல்வேறு காரணங்கள் கூறி அவர்களுடைய பெயரில் நடப்பு வங்கி கணக்குகள் தொடங்கினர். மேலும் புதிய சிம் கார்டுகளை வாங்கி மோசடி பண பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தி உள்ளனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மாலிக்கிடம் இருந்து ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்திய 4 செல்போன்கள், 15 சிம்கார்டுகள்,8 ஏ.டி.எம். கார்டுகள், ஒரு காசோலை புத்தகம், இருசக்கர வாகனம் மற்றும் ரூ.2,50,000 ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ள மும்பையை சேர்ந்து க்ளோன் உள்ளிட்ட சிலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • குமார் மீது கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு இருப்பது தெரியவந்தது.
    • குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கே.கே. நகர்:

    சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஸ்கூட் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பட்டத்தி காடு கிராமத்தைச் சேர்ந்த குமார் (வயது 40 ) என்ற பயணியின் பாஸ்போர்ட்டை இமிக்ரிவேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அவர் மீது கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குமாரை ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ஏர்போர்ட் போலீசார் கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் குமார் ஒப்படைக்கப்பட்டார்.

    குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×