என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
டாக்டரிடம் ரூ.30 லட்சம் மோசடி- வாலிபர் கைது
- டாக்டர் சுப்பிரமணி இதுகுறித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
- அசர் பாட்ஷாவை கைது செய்து வேலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பாண்டமங்கலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 45). இவர் பிலிக்கல்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். மேலும் பரமத்திவேலூர் அருகே பொத்தனூரில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
இந்த மருத்துவமனைக்கு சி.டி.ஸ்கேன் எந்திரம் வாங்குவதற்காக சுப்பிரமணி பெங்களூரு ஜெய் நகரைச் சேர்ந்த அசர் பாட்சா (32) என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளாக தவணை முறையில் ரூ.30 லட்சம் வரை கொடுத்ததாக தெரிகிறது.
ஆனால் அசர் பாட்சா சி.டி.ஸ்கேன் எந்திரத்தை வாங்கி தராமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் ஏமாற்றப்படுவதை அறிந்த டாக்டர் சுப்பிரமணி இதுகுறித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி உத்தரவின்பேரில் வேலூர் போலீசார் பெங்களூருவுக்கு சென்று அங்கிருந்த அசர் பாட்ஷாவை கைது செய்து வேலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்